Monday, March 06, 2006

தனி இட ஒதுக்கீடு வழங்க முதல் கட்ட நடவடிக்கை?

கல்வி வேலை வாய்ப்பில் முஸ்­லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க முதல் கட்ட நடவடிக்கை எடுத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது!


இப்படியொரு செய்தியை பரவலாக பரப்பி வருகிறார்கள். இது என்ன என்பதை இப்போது விளங்கிக் கொள்வது அவசியத்திலும் அவசியம்.

எதற்காக கமிஷன்? இது தனி இட ஒதுக்கீட்டுக்கான முதல் கட்ட நடவடிக்கையா?

தமிழக அரசு முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காகவும் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காகவும் ஒரு கமிஷனை நியமித்துள்ளது.

முஸ்லிம்கள் உண்மையில் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்து அரசுக்கு அந்த கமிஷன் தெரியப்படுத்தவே கமிஷன் அமைக்கப்படுகிறது.

தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் போது எதற்காக இந்த கமிஷன்?

இதைக் காரணம் காட்டி அந்தக் கட்சியை வரும் தேர்தலில் ஆதரிக்கப் போவதாக கூறியிருப்பது மிகப்பெரிய முட்டாள்தனமும், மக்களை மடையர்களாக்கும் செயலுமாகும்.

இடஒதுக்கீடு தருபவர்களுக்கு தான் எங்கள் ஆதரவு என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் சுருதி குறைந்து ஒன்றும் இல்லாத கமிஷன் அமைக்கிறோம் என்று சொன்னதற்காக எங்கள் ஆதரவு என்று சொன்னால் அதன் பின்னணியில் ஏதோ காரணம் இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

முஸ்லிம்கள் இப்படிப்பட்ட நயவஞ்சகர்களின் வலையில் சிக்காமல் தூரமாகிக் கொள்ள வேண்டும்.

அபூஅன்சாரி

0 Comments:

Post a Comment

<< Home