Monday, March 06, 2006

கமிஷன் - அரசு ஆணை:

அன்புச் சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தமிழகமெங்கும் பரபரப்பாக வைகோவின் அணிமாற்றம் குறித்து பேசப்பட்டு வரும் வேளையில், முஸ்லிம்கள் மத்தியில் அதைவிட பரபரப்பாகவும், குதூகலத்தோடும் பேசப்படுகின்ற விஷயம் - இட ஒதுக்கீட்டிற்கான அரசு ஆணை.

இந்த அரசு ஆணை - முஸ்லிம்கள் சிலர் கொண்டாடுவது போல் பயனளிக்கக்கூடிய ஒன்றா? இதனை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழ் முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.

முதலில் இந்த ஆணை செல்லுபடியானது தானா?

முஸ்லிம்கள் மற்றும் கிருத்தவர்கள் சமூக பொருளாதார நிலை குறித்து ஆராய கமிஷன் அமைத்து ஜெயலலிதா (ததஜ தலைவர் மற்றும் செயலாளரிடம் கையளிக்கப்பட்டதாக அவர்கள் கூற்றுப் படி) அரசு ஆணை வெளியிடப்பட்டது மார்ச் 01, 2006

மே 8, 2006ல் தமிழக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததும் இதே மார்ச் 01, 2006இல் தான்.

தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட பின் வெளியாகும் அரசு அணைகள், சலுகைகள் செல்லுபடியாகாது என்பது ஊரறிந்த உண்மை.

எனவே இந்த ஆணையால் மகிழ்ந்து போகிறவர்கள், மகுடிக்கு மயங்கும் பாம்புகள் அன்றி சிந்திக்கும் திறன் படைத்தவர்களல்லர்.

அரசு ஆணையில் அமையவிருக்கும் கமிஷனின் பணி:

ஜெயலலிதா அமைத்திருக்கும் இந்த கமிஷனின் செயல்பாடுகள் என்னவென்று அறியாததும் சிலரின் கொண்டாட்டத்திற்கு காரணமாகும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில், பிற்படுத்தப்பட்டவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்கள் சமூக பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை பதிவு செய்வது தான் இந்த கமிஷனின் பணியாகும். முஸ்லிம்கள் போராடி வரும் இட ஒதுக்கீடு விஷயத்தில் இக்கமிஷனின் பங்களிப்பு முக்கியமானது அல்லவா என்றும் சிலர் எண்ணிக் கொண்டுள்ளனர். அவர்கள் அரசியல் நிலையறியாத அப்பாவிகள். தமிழகத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட பட்டியலில் தான் இடம் பெற்றுள்ளனர். எனவே இப்படியொரு கமிஷன் அமைக்காமலேயே முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிலிருந்து உள் ஒதுக்கீடாக தனி இட ஒதுக்கீடு தர முடியும்.


இப்படியொரு தனிஇடஒதுக்கீடு கேட்டு தமுமுக பல்வேறு போராட்டங்களையும் மாநில மாநாடுகளையும் நடத்தி வருகிறது. அதைப் போல்தான் ததஜவும் போராடுவதாகவும் சொல்லிக் கொண்டது. ஆனால் இப்போது வெளியான கண்துடைப்பு கமிஷன் பற்றிய அரசு ஆணையை தங்களது வெற்றியாக ததஜவினர் பரைசாற்றுவதைப் பார்த்தால் அவர்கள் அதிமுகவிடம் 'பெட்டி' வாங்கியதாக பலர் பேசிக் கொள்வது உண்மையாக இருக்குமோ என்று கருத வேண்டியுள்ளது.

தவிர, தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட பின் இந்த அரசு ஆணை வெளியிடப்பட்டிருப்பதால் இது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவித்துள்ளார்.

ஆக, அவசியமில்லாத செல்லுபடியாகாத விதிமுறைகளுக்கு மாறாக அமைக்கப்பட்டுள்ள ஒரு கமிஷனைக் கண்டு களியாட்டம் போடுபவர்கள் கமிஷன் (கைக்கூலி) பெற்றிருப்பார்கள் என்பதே கலப்பற்ற உண்மையாகும்.

அன்புச் சகோதர சகோதரிகளே!

இத்தகைய கைக்கூலிகளை (கோவை விஷயத்தில்) காட்டிக் கொடுக்கும் கயவர்களை, சமுதாயத்தை அடகுவைக்கும் சுயநலவாதிகளை இன்னுமா நம்பப் போகிறீர்கள்?

அரசு அமைத்துள்ள கமிஷன் போலியானது எனப் புரிந்து, இந்த அரசு ஆணையைக்காட்டி ஏமாற்றும் சமுதாயப் புல்லுருவிகளை புறம் தள்ள நாம் தயாராக வேண்டும். இல்லையேல் ததஜ தலைமை நம் சமுதாயத்தை தலைகுனிய வைத்துவிடும்.

வல்ல அல்லாஹ் இத்தகைய ஷைத்தான்களின் சூழ்ச்சிகளிலிருந்து என்னையும் உங்களையும் நம் சமுதாய மக்கள் அனைவரையும் பாதுகாப்பானாக!

வஸ்ஸலாம்
அபூஇஸ்மத் 06.03.2006

0 Comments:

Post a Comment

<< Home