Thursday, March 16, 2006

கொதித்துப் போயுள்ள முஸ்லிம் சமுதாயம்:

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதைப் போலவே, தமிழக முஸ்லிம்கள் மத்தியிலும் கொதிப்புடன் ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. இது நேரடி அரசியல் நிகழ்வாக இல்லாவிட்டாலும், சமுதாய சிந்தனையில் கலந்து விட்ட அரசியல் பற்றியது என்பதால், அதன் பின்னணியை அறிந்த முஸ்லிம்கள் கொதித்துப் போயுள்ளார்கள்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக தனக்கென ஒரு அமைப்பை ஜனாப் ஜெயினுலாபிதீன் ஆரம்பித்த பொழுதே அரசல், புரசலாக ஆங்காங்கே பேசப்பட்டு வந்த விஷயம் தற்சமயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. புதிய அமைப்பு கண்ட பொழுது, அது தனக்கு மகுடம் சூட்டிக் கொள்வதற்காக அல்ல, மாறாக நலிந்து விட்ட ஏகத்துவ பிரச்சாரத்தை முடுக்கி விடுவதற்காக என அறிவித்த காரணத்தால், அவரது பிரச்சாரத்தால் கவரப்பட்டோர் அவரது பின்னால் அணி வகுத்தனர். ஆனால் அன்றே சிலர், இவர் ஜெயலலிதாவிடம் விலைபோய் விட்டதாக குற்றம் சாட்டினர். இக்குற்றச்சாட்டை அவர் மறுத்து வந்தாலும் அவரது சமீபகால செயல்பாடுகள் அதனை மெய்ப்படுத்தியே வகிகின்றன. புதிய அமைப்புக்கு மொம்மை தலைவரை நியமித்தவர், ஆறே மாதத்தில் அவரை கழற்றிவிட்டு தானே தலைவராகிக் கொண்டார்.

ஆந்திர அரசு அறிவித்த முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு சட்டத்தை விமர்சித்த ஜெயலலிதாவை எதிர்த்து தமுமுக முதல்வர் வீட்டு முற்றகை போராட்டம் நடத்திய பொழுது, அதனை இழிவுபடுத்தி பேசினார். அதில் கலந்து கொண்ட பெரும் திரளான மக்களை தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளும் வெளியிட்ட பொழுது அவர் கையகப்படுத்திய உணர்வு பத்திரிக்கையில் அப்போராட்டத்தையே கொச்சைப் படுத்தி எழுதி தனது ஜெயலலிதா விசுவாசத்தை வெளிச்சம் போட்டு காட்டினார். கோவை சிறையில் அப்பாவி முஸ்லிம்கள் அடைபட்டு, வதைபட்டு வாழ வழியில்லாமல் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் விடுதலைக்காக முயற்சிக்காதது மட்டுமல்லாமல் அவர்கள் வெளியாகி விடக்கூடாது என்பதற்காக அரசு சாட்சியாக மாறி சாட்சியமளித்துள்ளார். ஆனால் இன்று சிறைவாசிகளுக்காக அனுதாபப்படுவது போல் ஆக்ட் கொடுக்கிறார்.

இதெல்லாம் பரவலாக யாருக்கும் தெரியாமல் நடந்தவைகளாகும்.ஆனால் தனது நடிப்பின் உச்சகட்டமாக மேடத்திற்கு முன்னால் விசுவாசத்தை காட்டப்போக அது தற்சமயம் வெளியாகி சந்தி சிரித்துக் கொண்டுள்ளது. இச்சம்பவமும் கூட மறுமையை நம்பக்கூடிய ஒருவர் உடனிருந்ததால் அறைக்கு வெளியே விண்டிவி கேமராவைக் கண்டவுடன் பீஜே நடித்த நடிப்பைக் கண்டு மனம் பொறுக்காமல் உண்மையைப் போட்டு உடைத்ததால் இன்று சமூகம் ஒரு தவ்ஹீது வேடதாரியை முழுவதுமாக அடையாளம் காண முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

முதலமைச்சர் சந்திப்பு நடந்த அறையில் நடந்தது என்ன?
இட ஒதுக்கீட்டுக்காக கமிஷன் அமைத்த ஜெயலலிதாவை பாராட்ட சென்றதாக ஜெயினுலாபிதீன் கூறுகிறார். ஆனால் அவருடன் சென்ற காஸிமியோ, முதல்வரிடம் முஸ்லிம்களின் பிரச்சனைகள் பற்றி பேசலாம் வாருங்கள் என அழைத்ததால் சென்றேன் எனக் கூறுகிறார். நடந்த நிகழ்வுகளை நிதானமாக ஆராய்ந்தால் காஸிமி சொல்வதில் உண்மை இருக்கிறது என உணர முடிகிறது. ஏனெனில் இவர்கள் அனைவரும் கூடி முதல்வரை சந்திப்பதற்கு முன் இப்படி ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக எங்கும் எதிலும் செய்தி இல்லை.

பீஜே உடன் சென்றவர்களும் கூட ஆஹா சீட் கேட்டு வந்த இடத்தில் சுவீட் கிடைக்கிறதே என்று அந்த நிமிடம் இன்ப அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். அதனை வாங்கிப் படித்தவர்கள், இது போலி, எதற்கும் உதவாத முன்தேதியிட்ட மறுசீரமைப்பு ஆணை என அறிந்து உண்மையாகவே அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் ஆன்மீக அரசியல்வாதி பீஜே மட்டும், ஆஹா, இதனை வைத்தே தனது ரசிகர்களை குஷப்படுத்தி விடலாம் என திட்டமிட்டுள்ளார். அதனால் தான் நாலாவது வரை மட்டுமே படித்த பீ.ஜெயினுலாபிதீன் ஆங்கிலத்தில் இருந்த அரசாணையை ஒழுங்காக படிக்காமல், புரியாமல் அதற்கென எந்த முயற்சியும் எடுக்காமல் தடாலடியாக தனது கைத்தடி விண் டிவிஐ கண்டவுடன் முந்திரிக் கொட்டையாய் முந்திக் கொண்டு பொய் செய்தியை பரப்பி விட்டார். தனது தவறுகளை என்றுமே ஒத்துக் கொள்ள துணிவில்லாத பீஜேதனது டிவிபேட்டியை நிலை நிறுத்துவதற்காக மேலும் மேலும் பொய்யான பல செட்டப்களை செய்து வருகிறார்.அடுத்தவர்களை யெல்லாம் அரசியல்வாதியின் பின்னால் அலைவதாக குறைகூறி வந்த பீஜெயின் புதிய கூட்டாளி தேசிய லீக் தலைவர் கோனிகா பஷீர் மே 8, 2006 வரை இவர்களது கூட்டு தொடரும். தேர்தல் முடிந்தவுடன் இதுவரை பீஜெ உடன் இருந்து வெளியேறிய பலரைப் போல் இவரும் வெருண்டோடுவார்.

இதை நாம் சொன்னதும் விபரமறியாத ததஜவினர், 'இல்லையே அவருடைய பழைய நண்பர்கள் பாக்கர் அலாவுதீன் போன்றோர் இப்பொழுதும் கூடவே தானே இருக்கிறார்கள். அவர் மீது நீங்கள் அவதூறு பேசுகிறீர்கள் என வெகுண்டெழுவார்கள்.உண்மைதான், இவர்கள் இன்றும் அவருடன் தான் இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களைப் போல அல்லர். ஏனென்றால் இவர்கள் இலாபத்திலும், இப்பொழுது சம்பாதிக்கும் பாவத்திலும் பங்காளிகள். ஜெயலலிதாவிடம் பெற்ற 4 கோடியை பிரித்துக் கொள்வதில் சச்சரவு ஏற்பட்டாலொழிய மற்றபடி இதுபோன்ற சமுதாய பிரச்சனைகளுக்காகவோ, அல்லது ஏகத்துவ கொள்கையில் அவர் எடுக்கும் குழப்ப முடிவுகளுக்காகவோ அவரை விட்டு விலக மாட்டார்கள், இது திண்ணம்.

இந்த கோனிகா பஷீரை இதற்கு முன் பலமுறை கேவலமாக பீஜே விமர்சித்திருந்தாலும் பெட்டி வாங்கும் அளவுக்கு இன்றைய தேதியில் முதல்வருக்கு இண்க்கமானவராக பீஜே இருப்பதால் அவருடன் ஒட்டிக் கொண்டு தனக்கு சீட் வாங்கலாம் என்று தான் பஷீர் பீஜேயின் தாளத்திற்கு தப்பாட்டம் ஆடி வருகிறார். தேர்தல் முடிந்தும் கூத்தும் முடியும், அவருடனான கூட்டும் முறியும்.
அரசாணை விஷயத்தில் இன்று வரை அது கெஸட்டிலோ, அரசாங்க வெப்தளத்திலோ வெளியிடப்படாதது மட்டுமல்லாமல், முதல்வரோ அவரது அமைச்சரவை சகாக்களோ ஏன் அடுத்த மூன்றாம் கட்ட அதிமுக பேச்சாளர்களோ கூட இதுவரை வெளிப்படையாக அரசின் சாதனையாக இதனை குறிப்பிட்ட எந்த ஒரு செய்தியும் இல்லை. இது ஒரு டம்மி பேப்பர் என்பதற்கு இதற்கு மேல் ஒருவருக்கு ஆதாரம் அவசியமில்லை.
முதல்வருடனான சந்திப்பிற்கு ததஜ தலைமையில் 12 அமைப்புகள் சென்றதாக மற்றொரு தகவல். இதுவும் உண்மைக்கு மாற்றமான செய்தி என்பதற்கு பீஜே மற்றும் பாக்கரே சாட்சி. சென்றது ததஜ, இவிக. இதேலீ ஆகிய மூன்று அமைப்புகளும் சில பிரமுகர்களும் தான் என பீஜெ பாக்கர் தொலைக்காட்சி பேட்டி மூலமாக அம்பலமாகியுள்ளது. அப்படியானால் 12 அமைப்பினர் என பிலட்அப் செய்தது ஏன்? முதலாவது அப்படிபிலட் அப் செய்தால்தான் முதல்வரிடம் சந்திப்புக்கு அனுமதி கிடைக்கும்.

இரண்டாவது சமுதாய மக்கள் மத்தியில் ததஜ அனைவரையும் ஒற்றுமைபடுத்தியது என படம் காட்ட முடியும்.அந்தோ பரிதாபம் அவர்களின் டிவி பேட்டி மூலமாக இந்த பிலட் அப் சிதைந்து சுக்கு நூறாகிப் போனது. சமுதாய மக்களிடம் இவர்களது நாணயம் சந்தி சிரிக்கிறது.
அடுத்ததாக குலுங்கிய கும்பகோணம் விஷயமாக முதல்வர் முன் நடந்த உரையாடல். முதல்வரின் அறைக்கு வெளியே டிவிகளில், பத்திரிக்கைகளில், இமெயில்களில் அவர்களது இணைய வலைகளில் இறுமாப்போடு 10 லட்சத்திற்கும் மேல் என பறை சாற்றியவர்கள் அறைக்குள்ளே முதல்வரின் முன்னிலையில் சுமார் ஒரு லட்சம் என சுருக்கிக் கொண்டது ஏன்?

இப்படி ஒரு செய்தி வெளியே கசிந்து விடும் என கற்பனை பண்ணாதவர்கள், இந்த கேள்வி முன் வைக்கப்பட்டவுடன் தடுமாறி வழக்கம் போல் சமாளிக்க முயற்சிக்கின்றனர். முதல்வர் முன்னிலையில் ஒரு லட்சம் என சொல்லப்பட்டதாக கூறப்படுவது அபாண்டம் இலட்சக்கணக்கான மக்கள் என்று தான் சொல்லப்பட்டது என் புது கதை (கரடி?!) விட்டு வருகின்றனர்.நமது கேள்வி: உண்மையில் 10 லட்சத்திற்கு மேல் கூடியிருந்தால், அதனை முதல்வரிடம் சொல்வதற்கு ஏன் பயப்பட வேண்டும். அல்லது முதல்வரிடம் கூறியது போல் சுமார் ஒரு லட்சம் தான் எனில் சமுதாய மக்களிடம் கூற ஏன் வெட்கப்பட வேண்டும்.
உண்மையைச் சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும். சுய இலாபம் காண திட்டம் வகுப்பவர்கள் என்றுமே உண்மையாளர்களாக இருக்க மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.சுமார் ஒரு லட்சம்தான் கூடினார்கள் என சமுதாய மக்களிடம் ஒப்புக் கொண்டால் இதற்காகவா இத்தனை ஆடம்பரம் , இத்தனை விளம்பரங்கள், இத்தனை டிஜிட்டல் பேனர்கள் இத்தியாதி இத்தியாதி என கொதிக்க ஆரம்பித்து விடுவார்கள். 10 இலட்சம் என்ற பரபரப்பான பிலட் அப் பில் மயங்கி இலட்சம் இலட்சமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து பணம் அனுப்பியவர்கள் கழுத்தை நெரிக்க வந்து விடுவார்கள் என்ற பயம். அதேபோல் முதல்வரிடம் 10 லட்சம் என்று சொல்லி விட்டால் உளவுத்துறை மூலம் 50,000 பேர்தான் திரண்டனர் என்ற செய்தியை அறிந்து வைத்திருக்கும் ஜெயலலிதா தன்னை ஒதுக்கி விடுவார் என அவருக்குத் தெரியும்.

அதனால் தான் ஜெயலலிதாவிடம் ஒரு லட்சம் பேர் என்றும், சமுதாய மக்களிடம் 10 லட்சம்பேர் என்று (அவரது ரசிகர்கள் அதற்கும் மேலான தொகையை) சொல்லிக் கொண்டு திரிகின்றனர். இந்த இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்ததால் தற்சமயம் இலட்சக்கணக்கான என திருத்திக் கொண்டுள்ளனர். அமெரிக்க என் ஆர் ஐ களை ராமர் பெயரால் இன்னமும் சுரண்டிக் கொழுக்கும் பிஜேபி க்கும் ஏகத்துவம், இடஒதுக்கீடு என்ற பெயரில் வளைகுடா மற்றம் ஐரோப்பிய வாழ் இஸ்லாமிய சமூகத்தினரை ஏமாற்றி பணம் பிடுங்கும் பீஜே வகையராவிற்கும் வேறுபாடு இல்லை, என்று தான் முஸ்லிம்கள் அனைவரும் தற்சமயம் எண்ணுகின்றனர்.
இந்நிலை மாற வேண்டுமானால்....

மக்களுக்கு அஞ்சி தனது வார்த்தைகளை திருத்திக் கொளபவர்கள், அல்லாஹ்விற்கு அஞ்சி தனது செயல்கள் அனைத்தையும் திருத்திக் கொள்வதுடன் இதுவரை செய்த அனைத்து அத்துமீறலுக்காவும் பரப்பிய அபாண்டங்களுக்காகவும் இறைவனிடமும் சம்பந்தப்பட்டவாகளிடமும் மன்னிப்பு கோர முன்வர வேண்டும். அவ்வாறு முன்வந்தால் அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும். செய்வார்களா???
அபூஇஸ்மத் 16.03.2006

1 Comments:

At 2:07 AM, Blogger Engr.Noushad said...

Dear Brother My Name is Noushad ali from Parangipettai,
Now iam working in Saudi arabia as civil engineer,
We know the prblems between the two groups PJ and Jawaharullah,

What is the benifit to commend on the personel,,
We have to find one solution to get the reserve seats for all our families

This is the best way to find one proper achieve ment for our community, Even in my place the same differance of openion is running, We cant solve by blamming the leaders,
Parangi pettai was one the heart for PJ before now it is split to many,

Actually iam writing this for our community only sorry dont mis understood to write this letter in muthupettai.com

I know muthupettai i been to there in kalkeni street Janab Yacob Money exchanger house Jahir Hussain is my Class met in Al ameen school Kumbakonam...

So please find a right idea to get our rights and we have throw the comments of our leaders because they are not in stable .

If there is any mistake in my letter please forgive me for the sac of allah condition...Wassalm NOUSHAD ALI..AL KHOBAR

 

Post a Comment

<< Home