Wednesday, March 28, 2007

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் தேர்வு

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக செ. ஹைதர் அலி தேர்வு


தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக தமுமுக பொதுச்செயலாளர் செ. ஹைதர் அலி 27/03/2007 அன்று ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை அடையாறில் உள்ள வக்ஃப் வாரிய தலைமையகத்தில் மார்ச் 27 அன்று முறைப்படி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக் கப்பட்டதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

51 வயதாகும் செ. ஹைதர் அலி இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர். 1996 முதல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வரும் செ. ஹைதர் அலி, முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைப் போராட் டங்களுக்காக பலமுறை சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

0 Comments:

Post a Comment

<< Home