Monday, June 23, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 29

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். என்ன இப்பல்லாம் மாசம் ஒரு வாட்டி தான் நம்மளத் தேடி வர்றீங்க.

என்ன செய்யுறது அஹமது. நம்ம ஆளுங்க டிவில அடிக்கிற கூத்து நாளுக்கு நாளு படுகேவலமாப் போவுது.

நாந்தான் டிவி பாக்குறதில்லையே. நீங்க சொன்னாத்தான் வெவரம் தெரியுது. சொல்லுங்களேன்.

எல்லாம் வல்லத்தோட பிற்சேர்க்கை தான். வல்லத்துல வாங்குன அடிக்கு, மாவுக்கட்டு போடுற வேல தான் டிவியில நடக்குது.

என்னன்னு தெளிவாத்தான் சொல்லுங்களேன்.

அதாவது, வல்லத்துல தடம் புரண்டவர்கள்னு ஒரு லிஸ்ட் வச்சுருந்தாங்கள்ள, அதப்பாத்த ஒருத்தரு, ததஜவுல இல்லங்குறதுக்காக ஏன் மத்தவங்கள இப்புடிச் சொல்லணும்னு சாந்தமா ஒரு கேள்விய கேட்டுப்புட்டாரு.

அடடே.. .. அதக்கேட்ட நம்ம நந்தினி பாக்கரு கொதிச்சு எந்திருச்சிட்டாரோ.. .. ..

அது சாதாரணமா நடக்குறது தான். ஆனா அன்னைக்கு இந்த கேள்விக்கு பதில் சொன்னது ஒரு புதுமுகம். இப்பெல்லாம் புதுமுக நாயகர்கள் வச்சுத் தான படத்த ஓட்ட வேண்டியிருக்கு. அவரு சொன்ன பதில்ல இருந்தே அவருக்கும், தவ்ஹீதுக்கும் சம்பந்தமில்லன்னு நிரூபிச்சுட்டாரு.

அதுசரி. இந்த இலட்சணத்துல மத்தவங்கள தவ்ஹீதுல இருந்து தடம் புரண்டவங்கன்னு கூசாம சொல்றாங்களோ!. ஆமா என்ன சொன்னாருன்னு சொல்லவேயில்லியே.

வர்றேன். பொறுங்க. குர்ஆனும் ஹதீஸும் தான் தவ்ஹீதாம். ஆனா இந்த ஜாக்கு காரங்க ஸஹாபாக்களையும் சேர்த்துக்கிட்டதுனால அவங்க தவ்ஹீதுல இருந்து தடம் புரண்டுட்டாங்களாம்.

அட மடையர்களா. ஸஹாபாக்கள் இல்லைன்னா, குர்ஆனும் ஹதீஸும் நமக்கு கெடச்சிருக்குமா. இல்ல குர்ஆனும் ஹதீஸும் ஸஹாபாக்கள் பத்தி சொல்லாம இருக்கா. என்ன கூத்து இது. உண்மையில இவுங்க தான் இப்போ தடம் புரண்டுட்டா மாதிரி தெரியுது.

என்ன செய்யுறது அஹமது. இந்த பதில உக்காந்து சொல்லிக்கிட்டிருக்குற அல்தாபிக்கு, 1985 இல பிஜே, காயல்பட்டிணத்துல என்ன பேசுனாருங்குறது தெரிஞ்சுருக்காது தான. அப்போ அவருக்கு கூட யாருல்லாம் இருந்தாங்களோ, அவுங்க வேணா, இப்புடி ஒரு பதிலச் சொல்ல கொஞ்சம் யோசிக்கலாம். அதுனால தான் இப்பல்லாம் புதுமுகங்கள களத்துல எறக்குறாங்க.

சே.. .. .. இந்த அளவுக்கு கேவலமாப் போவாங்கன்னு கொஞ்சம் கூட நெனக்கலியே ஒமர் பாய்.

இப்ப நொந்து என்ன பண்றது அஹமது. கூத்து இன்னமும் இருக்கு.

சொல்லுங்க கேட்போம். பாக்குறததான் நிறுத்திட்டேன். ஒங்கள்ட்ட இருந்து கேக்கலண்ணா நாட்டு நடப்பே தெரியாதவனா ஆயிடுவேன். அதுனால சொல்லுங்க கேப்போம்.

2006 ல கும்பகோணம் குலுங்குனதுனால தான பிஜே ஹஜ்ஜு பண்ணலியாம். தெரியுமா ஒங்களுக்கு.

அட இது என்ன புதுக்கதையா இருக்கு.. .. வெவரமாச் சொல்லுங்க.

சொல்றேன்.. .. .. அந்த கேள்வி நேரம் நிகழ்ச்சில .. .. ஒருத்தரு கேக்குறாரு.. .. .. அண்ணன் எங்கெங்ல்லாமோ போயி சத்தியத்த எத்தி வச்சிருக்காங்கல்ல, அதப்போல சவுதிக்கு ஏன் வரக்கூடாது. வந்து இங்க இருக்குற உலமாக்களோட ஒரு விவாதம் ஏற்பாடு பண்ணி தராவீஹ் 20 ரக்அத் இல்ல 8 ரக்அத் தான்னு நிரூபிக்கலாமே.. .. அப்புடீன்னு ஒரு கேள்விய கேட்டாரு.

என்ன இவரு அடிமடியிலேயே கைய வக்கிறாரே.. .. .. சவுதிக்குப் போயி அண்ணன் என்னா தமிழ்ல்லயா விவாதம் நடத்த முடியும்.

அது வேற கத. ஆனா இதுக்கு அந்த புதுமுகம் அல்தாபி என்ன சொன்னாரு தெரியுமா. சவுதி கவர்ண்மென்ட் யாரையாவது கண்ணியப்படுத்தணும்னு நெனச்சா, அவுங்கள ஹஜ்ஜுக்கு அழச்சு கவுரவிப்பாங்க. அந்த அடிப்படைல அண்ணன 2 வருசத்துக்கு முன்னால ஹஜ்ஜுக்கு அளச்சாங்க. ஆனா ஹஜ்ஜுக்கு நெருக்கமான நேரத்துல கூப்பிட்டதுனால போக முடியாமப் போச்சு – அப்படீன்னு அவுத்து வுட்டாரு பாருங்க.

ஸ்டாப். ஸ்டாப். 2 வருஷத்துக்கு முன்னால ஹஜ்ஜுக்கு அளச்சும் இப்ப வர ஹஜ்ஜு பண்ணாம இருக்காரா. என்ன கொடும ஒமர் பாய் இது.

இருங்க. அதவிட முக்கியமானதெல்லாம் இருக்கு. அல்தாபி இப்புடி சொல்லிக்கிட்டு இருக்கும் போதே நம்ம பக்க வாத்தியம் பாக்கரு இருக்காரே, அவரு சொல்றாரு.. .. .. அதவிட அப்போ கும்பகோண கூட்டம் ஏற்பாடு ஆகி கிட்டு இருந்ததுனால போவ முடியலன்னு சொல்றாரு.

ஹாய். பக்கவாத்தியம் பாக்கரு – ம். இது கூட நல்லாத்தான் இருக்கு. அது கெடக்கட்டும். கும்பகோணம் மீட்டிங்குக்கு ஹஜ்ஜ முடிச்சுட்டே வந்திருக்கலாமே.

அட என்ன அஹமது, நீங்களும் வெவரமில்லாம பேசுறீங்க. சவுதில இருந்து இவர கூப்புட்டது ஓசில ஹஜ்ஜு பண்ணிட்டு போங்கண்ணு சொல்றதுக்கா?.

அப்புடி கூப்புட்டதாத்தான அல்தாஃபி சொன்னதா, நீங்க இப்போ சொன்னீங்க.

வாஸ்தவம் தான் அஹமது. டிவி நிகழ்ச்சில பிரதானமா இப்புடி பொய்யச் சொல்லித்தான் காலத்த ஓட்டுறாங்கங் குறதுக்காகத் தான் இதச் சொன்னேன்.

அப்ப உண்மையான நெலவரம் என்னன்னு தான் சொல்லுங்களேன்.

அதாவது அஹமது, நம்மாளு பிஜேவின் திருக்குர்ஆன் விரிவுரைன்னு ஒரு புக்கு போட்டாரே.

என்ன ஒமர் பாய் இப்புடிச் சொல்லிட்டீங்க. அது தஃப்ஸீர் டைப்ல வந்த தர்ஜமாவுல.

சரிதான். ஆனா இதயும் நம்மாளு அவரோட மத்த புத்தகங்க ரேஞ்சுக்கு அவரோட கற்பனய கலந்து கட்டி எழுதியிருந்ததுனால, சவுதி கவர்ண்மென்ட் அவர அங்க கூப்பிட்டு விசாரிக்கணும்னு தான் ஹஜ்ஜுக்கு ஏற்பாடு பண்ணுனாங்க. ஆனா அங்க போனா தன்னோட சாயம் வெளுத்துரும், அதோட சிலோன், துபாய், மலேசியாவுல இருந்து தப்புச்சு வந்த மாதிரில்லாம் வர முடியாதுங்குறதுனால இவரு போகவே இல்லை.

அடக் கண்றாவியே. இதுல இவ்வளவு வெஷயம் இருக்கா. அத மறச்சுத்தான் கும்பமேளாவ வச்சு நந்தினி பாக்கரு கத வுட்டாரா.. .. ..

அதுமட்டுமில்ல அஹமது. சிலோன்ல இருந்து கூட அழைப்பு வந்துச்சு ஆனா வல்லத்துல (பள்ளம் தோண்டுற??!) வேல இருந்ததுனால போக முடியலன்டும் பக்கவாத்தியம் பாக்கரு உட்டு அடிச்சாரு பாருங்க. . . அது ஒரு தனி காமெடி.

என்னது இது ஒமர் பாய். உண்மையாவே அப்புடி ஏதாச்சும் வந்திருச்சுன்னா ஒடனடியா பத்திரிக்கைலயும் டிவிலயும் ஃபிளாஷ் போட்டிருப்பாங்களே. அட அந்த மீட்டிங்குல பேசுறப்பயாவது இதப் பத்தி சொல்லியிருப்பாங்களே. அப்பல்லாம் சொல்லாம இருந்துட்டு இப்போ சொலறதுல இருந்தே இது பொய் தான்னு ஈஸியா வெளங்கும்.

அப்புடியும் வெளங்காம பல பேரு கொடி புடிக்கிறதுனால தான அஹமது, பிஜேபி (B-BAQER, PJ-PJAINULABIDEEN) இரண்டு பேரும் வசூல வாரி சுருட்டிகிட்டு இருக்காங்க. இப்புடி ஒரு பதில எப்போ சொல்றாருன்னா, ஒருத்தரு சிங்கப்பூர்ல இருந்து ஃபோனப் போட்டு, அண்ணன் மலேசியாவுல பேச முடியாம திரும்பிப் போயிட்டாரே அவரு மறுபடியும் எப்போ அங்க வந்து பேசுவாருன்னு கேட்டாரு.

அடடா. அவரு இனி மலேஷியாவுக்கு திரும்ப போகவே முடியாதுங்குற வெஷயம் அவருக்குத் தெரியல போல..

அதே தான். அப்புடி வெவரங்கெட்டதனமா கொஞ்ச பேரு இருக்குறதுனால, அவங்கள கூடக் கொஞ்சம் குஷி ஏத்துறதுக்காகத்தான் நம்ம பாக்கரு சிலோன்ல இருந்து கூப்புட்டாங்க, போவ முடியல. அதமாதிரி சிங்கப்பூர் மலேசியாவுல இருந்தும் கண்டிப்பா கூப்புடுவாங்க. அப்போ அவசியம் வருவாருன்னு சொன்னாரு.

அடப்போங்க ஒமர் பாய். இன்னும் 10 நாள் களிச்சு துபாய்ல்ல இருந்து கூட கூப்புட்டாங்க. அதுவும் அவ்காஃப்ல இருந்தே கூப்புட்டாங்க. ஆனா பாருங்க அந்த நேரத்துல கடலூர் மகளிர் அணி மாநில மாநாடு நடந்துச்சா அதான் போவ முடியலன்னு கூடச் சொல்வாங்க போல.

அஹமது. வரவர ஒங்க நக்களு கூடிப்போச்சு. ஆனா உண்மைக்கே நீங்க சொல்றாப்புல நடந்தாலும் ஆச்சரியப்படுறதுகில்ல. ஏன்னா அங்க இருக்குறவங்களுக்கு அந்த மாநாடு எந்த கட்சி நடத்துச்சுண்டு கூடத் தெரியாது. ஜாக் (JAQH)குக்கும் எம்.ஹெச்.ஜே (MHJ)க்கும் கூட வித்தியாசம் தெரியலையாமுல்ல.

ஆமா ஒமர் பாய். நானுந்தான் கேள்விப்பட்டேன். வல்லம் மாநாட்டுல அமர்வு தலைவர்களா இருந்தவங்க 2004க்கு அப்புறமா தவ்ஹீதுக்குள்ள வந்தவங்களாமே!.

இருக்கும் இருக்கும். 1985 ல இருந்தே பிஜேவுக்கு வாள்போல சுத்திக்கிட்டு இருந்தவங்கள எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு, வசூல்ல முந்துறவங்களுக்குத்தான் இப்போ மொதலிடம்.

பொத்தம் பொதுவாச் சொல்லாம அப்புடி யார தூக்கி எறிஞ்சாங்கண்ணு சொல்லுங்களேன்.

ஒண்ணா, ரெண்டா அஹமது. இவரு ஆட்டி வச்சா மாதிரி எல்லாம் ஆடி கடைசில வெக்கத்த விட்டு வெரைல அடிவாங்கி சாவக் கெடக்குறேன்னு டிராமப் போட்டாரே அந்த அலாவுதீன் எங்க.???

அட ஆமா. அவரு ஏன் வல்லத்துக்கு வரலியாம்.. .. ..

அவராவது பரவாயில்லை. போட்ட வேஷத்துக்கு கொறயில்லாத வகையில, பினாமியா பினாங்குலயோ, சிங்கப்பூர்லயோ செட்டில் ஆயிட்டாரு. ஆனா இந்த தளபதி குத்புதீன் மாதிரி எத்தனையோ பேரு இருந்தும், மாநாட்டு மேடைல வசூல் ராஜாக்களத்தான கவுரவிச்சாங்க.

ஆமாங்க ஒமர் பாய். இந்த தளபதி குத்புதீனாவது யோசிச்சு பாக்க வேணாமா. இவரும் சவுதில தான இருந்தாரு. அவரு இருந்தப்ப எத்தன தவ்ஹீத் மீட்டிங்குகள்ள கலந்திருப்பாரு. எத்தன பேர்கிட்ட பிஜேவோட ஆடியோவையும் வீடியோவையும் தூக்கிக் கொண்டு போயி குடுத்து பார்க்க வச்சுருப்பாரு. அப்புடி ஒருத்தரக் கூட பாக்காதவர மேடைல அமர்வு தலைவரா தூக்கி வச்சிருந்ததப் பாத்தப்ப எப்புடி துடிச்சிருப்பாரு.

என்ன.. .. .. தவ்ஹீத் வாடையே இல்லாத கோட்டூர் ரபீக்க, மாவட்ட ததஜ தலைவரா சம்சுல்லுஹா ரஹ்மானியும், தென்காசி சுலைமானும், கடையநல்லூர் ஸைபுல்லாஹ்வும் ஏத்துக்கிடலையா அதுமாதிரி, ததஜவுல இதுலாம் சகஜமப்பான்னு தட்டி வுட்டுட்டு போயிருப்பாரு.

சே.. .. .. தவ்ஹீதுங்குற ஒரே கொள்கைக்காக பல கஷ்டங்கள ஏத்துகிட்ட சகோதரர்கள் இன்னக்கு பொறக்கணிக்கப்பட்டு, அரபு சல்லி சேர்த்துக் குடுக்குற ஏஜெண்டுகள்ளாம் ஏத்தம் பெற்றாங்கண்ணா ததஜ ஏகத்துவ பாதையிலிருந்து ஏகத்துக்கும் வெலகிப் போயிடுச்சுன்னு டிக்ளேர் பண்றதாத்தான் அர்த்தம்.

சரி அஹமது. ஓவரா கவலப்பட்டு ஒடம்ப கெடுத்துக்காதீங்க. இன்னைக்கு இவ்வளவு போதும். நான் பெறகு வர்றேன். வரட்டா.

வஸ்ஸலாம்

முல்லா 24.06.2008

0 Comments:

Post a Comment

<< Home