Wednesday, April 09, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 26

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க. வாங்க ஒமர் பாய். சவுக்கியமா?

அல்லாஹ்வோட கிருபைல சவுக்கியமாத்தான் இருக்கேன் அஹமது. ஆனா நம்மாளு நடந்துக்கிறத நெனச்சாத்தான் ஒரே கவலையா இருக்கு.

கவலய பங்கு வச்சாத்தான் பாரம் கொறயும். நம்ம கிட்ட கொஞ்சம் ஒதுக்குங்க.

கரெக்ட் தான். வெஷயமும் எட ஒதுக்கீடு பத்தித்தான்.

என்ன சொல்றீங்க ஒமர் பாய். எட ஒதுக்கீடு கெடக்கிறதுக்கு முயற்சி செஞ்சத விட இப்பத்தான் ததஜ மும்முரமா அதப்பத்தி பேசுறாங்க.

அதுல தான் வில்லங்கமே இருக்கு, அஹமது.. .. ..இந்த எட ஒதுக்கீடு கெடக்கிறதுக்காக தமுமுக ஒற்றைக் கோரிக்கை, இரட்டைக் கோரிக்கை, மாவட்ட மாநாடுகள், வாழ்வுரிமை மாநாடு, இடஒதுக்கீடு கோரி பேரணி – சென்னை, தஞ்சை, புதுவை, டெல்லின்னு வரிசையா நடத்தி அரசு எந்திரத்த அசச்சுப் பாத்தாங்க.

அது தான் எல்லாருக்கும் தெரியுமே ஒமர் பாய். முத்தாய்ப்பா நன்றி அறிவிப்பு மாநாடு கூட நடத்தி, எட ஒதுக்கீடுக்கு அதிகம் பாடுபட்டது தமுமுக தான்னு நிரூபிச்சாங்களே.

அதுல தான் வில்லங்கமே. இப்புடி எல்லா தரப்புலயும் தமுமுக வால தான் எடஒதுக்கீடு கெடச்சதுங்குறது பதிவாகிப் போனதால் அதுல உள்ள கொறைகள வச்சு நம்மாளு அரசியல் பண்ண ஆரம்புச்சுட்டாரு.

எந்த வெஷயத்தையும் அரசியலாக்குறதுங்குறது தான் நம்ம தலைவரு பீஜேவுக்கு கை வந்த கலையாச்சே.

கரெக்ட். எட ஒதுக்கீடு அறிவிப்பு வந்ததும் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி இடிஞ்சி போயி மூலைல உக்காந்து இருந்தவரு, தமுமுக நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப் போவுதுன்னு தெரிஞ்சு இனியும் சும்மா இருந்தா நம்மள தொலச்சுப்புடுவாங்கன்னு அவசர அவசரமா போயி கலைஞர சந்திச்சு அடிம சாசனம் எளுதி குடுத்துட்டு வந்தாரு.

ஒமர் பாய். பளய வெஷயத்தச் சொல்லி ஏன் வளவளன்னு இளுக்குறீங்க. இப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க.

இல்ல அஹமது. பளசெல்லாம் மறந்திருப்போம்னு தான அவரு இப்போ புதுசா பேசிக்கிட்டிருக்காரு. அதுனால தான் சொன்னேன். அப்புடி அடிம சாசனம் எளுதிக் குடுத்தவரு டிஎன்பிஎஸ்சி வெளம்பரத்த வச்சுக்கிட்டு தெரு முனைல பொத்தாம் பொதுவா எட ஒதுக்கீடு கெடய்க்கலன்ன ஆவேசமா மொழங்குனாரு.

ஆனா தமுமுக தான் டிஎன்பிஎஸ்சி வெளம்பரம் வந்ததும் யாரப் பாத்து கேக்கனுமோ அவுங்கள்ட்ட போயி நோட்டீஸே குடுத்துட்டு வந்தாங்களே.

என்ன செய்யுறது அஹமது. அறிவுப்பூர்வமா அணுகுறத விட உணர்ச்சிபூர்வமா அணுகுறதுதான அரசியல்வாதிகளோட பாணி. அதத்தான் அண்ணன் பீஜே செஞ்சாரு. தமுமுக காரங்க போயி அதிகாரிகளோட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்குறப்போ இவரு மக்களக் கூட்டி பொத்தம் பொதுவா ஒண்ணுமே கெடக்கலன்னு புலம்பி தள்ளிட்டாரு.

தமுமுக தான், TNPSC வெளம்பரம் வந்ததுல இருந்து என்னென்ன நடந்துச்சுன்னு வெளக்கமா அவுங்க பத்திரிக்கைல எளுதுனாங்களே.

வாஸ்தவம் தான். அவுங்க எளுதுனத எடுத்துப் போட்டுத்தான் இப்போ நம்மாளு குட்டய கொளப்பிக்கிட்டு இருக்காரு.

இவருக்கு ஏன் ஒமர் பாய் இந்த வேல. போன வாரம் கூட ஒருத்தரு வந்து, ஏம்பா ஒங்களுக்கு பத்திரிக்கய்ல போட சேதி இல்லங்குறதுக்காக ஒரு ஈ மெயில்ல வந்தத எல்லாம் போட்டு பக்கத்த நெரப்பணுமான்னு கேட்டாரு. நாந்தான் அந்த பத்திரிக்கயே படிக்கிறதில்லையே. இருந்தாலும் அவரு கிட்ட சிரிச்சு சமாளிச்சு அனுப்புச்சுட்டேன்.

அது மாதிரி தான் இப்போ மக்கள் உரிமைல வந்த வெஷயங்கள எடுத்துப் போட்டு பக்கத்த நெரப்ப முயற்சி பண்ணியிருக்காரு.

அவுங்க பத்திரிக்கைல வந்திருந்த செய்திகள்னா அப்புடி கொளப்புறமாதிரி எதுவும் இருக்காதே. நம்மாளு தான் பஸ்ஸுல உரசிக்கிட்டுப் போனதுனால தவ்ஹீத்வாதி இல்லைன்னு எழுதுவாரு, பொறவு இல்ல இல்ல அது இன்னாரு இன்னாருட்டச் சொல்லி இன்னாரு எங்கிட்ட சொன்னதத்தான் யாஅல்லாஹ் நான் சொன்னேன்கிறத நீயே அறிஞ்சவன். அதுனால நானா சொன்னதா இவுங்க சொல்றது பச்சப் பொய்யின்னு எம்ஜிஆர் அண்ணாயிசத்துக்கு சொன்ன வெளக்கம் மாதிரி உளறுவாரு.

கரெக்டா சொன்னீங்க அஹமது. தவ்ஹீது கொள்கையவே சமரசம் பண்ணக்கூடிய இவரு, டிஎன்பிஎஸ்சி வெஷயத்துல தமுமுக அரசு அதிகாரிகளப் பாத்துட்டு வந்து சொன்னதயும் அப்புறமா கமிட்டி அமச்சு அதனொடய முடிவுகள வச்சு மொதல்வர்ட்ட பேசுன சேதிகளையும் போட்டு தமுமுக அன்னைக்கு முட்டுக் கொடுத்தாங்க அதுக்குப் பெறகு எம்பி சீட்டு கெடக்ய்கலன்ன ஒடனே மொதல்வர பாத்து பேசுறாங்க. இதத்தான் நாம மொதல்லயே மீட்டிங் போட்டு சொன்னோம்னு இப்போ எளுதியிருக்காரு.

சரியாப் போச்சு போங்க. இவரு மீட்டிங் போட்டு ரோஸ்டர் முறயே நடைமுறைல இல்ல, தமுமுக சும்மா கத வுடுதுன்னு சொன்னாரு. தமுமுக ரோஸ்டர் மொற இருக்காம்னு அதிகாரிகள்ட்ட கேட்டு சொன்னதுக்கு பொறவு தான இவரு ரோஸ்டர் மொற இருக்கத்தான் செய்யுது. ஆனா இத ஏன் மொதல்லயே சொல்லலன்னு தானே குதிச்சாரு. இப்போ என்னடான்னா ரோஸ்டர் முறைங்குறது நீதி கட்சி கால நடைமுறைன்னு கருணாநிதி சொன்னதத்தான் ததஜவும் சொல்லுச்சுன்னு சொல்ல வர்றாரா என்ன.. .. .. .. அடேங்கப்பா.. .. .. .. பயங்கரமான அரசியல்வாதியா இருக்காரே.. .. ..

இதுக்கே ஆச்சரியப்படுறீங்களே அஹமது. இத வச்சு அவரு மண்ணடில பேசுனத கேட்டிருந்தீங்கன்னா இவருக்கும் மார்க்கத்துக்கும் சம்பந்தமிருக்க முடியாதுன்னு சொல்லி இருப்பீங்க. போங்க.

அப்புடி என்னத்த பேசிட்டாரு ஒமர் பாய்.

அரசியல் பண்ணுறதுன்னு எறங்கிட்டா, நாலாந்தர அரசியல்வாதிகள விட மோசமா இருப்பேன்னு சொல்றா மாதிரி நாகரீகமில்லாம பேசி ரசிகர்கள குஷிப்படுத்திட்டாரு போங்க.

ஓஹோ அதுனால தான் தமுமுக காரங்க தங்களோட மவுனத்த உதறிட்டு மக்கள் உரிமைல எளுதுனாங்களோ. சும்மா இருக்குறவங்களயும் இருக்க வுடாம, இளுத்து சந்தியில வுடுறது தான நம்ம தலவரோட ஸ்டைலே.

சரியாச் சொன்னீங்க. எட ஒதுக்கீடு விஷயத்துல மும்முரமா செயல்பட்டா மாதிரி, அத காப்பாத்துறதுலயும் கவனமா காய் நகர்த்திகிட்டு வர்ற தமுமுகவோட உறுதிய குலைக்கணும்னா இது மாதிரி சந்து மொனையில நின்னு குரைக்கணும்னு யாரு இவருக்கு ஐடியா குடுத்தாங்களோ அல்லது இவரே தனியா உக்காந்து யோசிச்சாரோ தெரியல. ஆனா வம்பு சண்டைக்கு வழி உண்டாக்குறாரு.

ஒமர் பாய். தனக்கு ஆகாதவங்க மேல என்னென்ன மாதிரியெல்லாம் அவதூறு பரப்பி அவங்கள ஓரம் கட்டுறதுங்குறதுல படிக்காமயே பட்டம் வாங்குனவராச்சே நம்மாளு. இவரு பாச்சா பலிக்காம போனது தமுமுக கிட்ட தான்னு நெனக்கிறேன். இருந்தாலும் விடாம முயற்சி பண்றாரு போல.

ஆமாமா, ஆறு மாசத்துல அளிஞ்சு போயிடும்னு ஜோசியம் சொன்னவரு, இன்னைக்கு ஆலவிருட்சமா நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டு போவுதேங்குற வயித்தெரிச்சல்ல மீட்டிங் போட்டு பேசுனது மாத்திரம் மல்லாம பத்திரிக்கையிலேயும் புடிச்சு மாஞ்சு மாஞ்சு எளுதியிருக்காரு.

ஓஹோ! விஷயமே கெடய்க்காம காஞ்சு போயி ஈமெயிலையும், கொசு மெயிலையும் போட்டு எடத்த நிரப்புனவரு இப்போ தமுமுகவ வச்சு பக்கத்த நெறக்கிறாறோ.

சரியாச் சொன்னீங்க. இன்னெக்கி இல்ல, ததஜவ ஆரம்புச்சதுல இருந்தே இதே பொழப்பு தான். தமுமுக பத்தி எளுதாம அவரால பத்திரிக்க நடத்த முடியாது.

அதுனால தான் நானே இப்போ உணர்வுக்கு பதிலா மக்கள் உரிமைய படிக்கிறேன். சரி சரி நீங்க அவரு என்ன செஞ்சாருன்ன சொல்லுங்க.

பரங்கிப்பேட்டை வெஷயமா இவரு கேட்டதுக்கு தமுமுக பதில் சொல்லலியாம்.

அடப் பைத்தியங்களா. பரங்கிப்பேட்டை வெவகாரத்த விலாவாரியா எளுதுனது மட்டுமில்லாம, வக்ஃப் போர்டு விஷயமா அரசாங்க ஸைட்டுல போயி கூட யாரும் செக் பண்ணிக்கலாம்னு நெஞ்சு நிமித்தி சொல்லியிருக்காங்களே. இவுங்களோட காமாலைக் கண்களுக்கு அது தெரியலியா? அல்லது வளம போல மறைக்குறதுக்கு முயற்சி பண்றாங்களா.. .. ..

கோவப்படாதீங்க அஹமது. நம்மாளு டெக்னிக்கே அடுத்தவர்கள சீண்டிப்பாத்து, கோவப்படுத்தி அத வச்சு அரசியல் பண்றது தானே. அப்புடி சீண்டுனதுனால தமுமுக அவர மனநோயாளின்னு எளுதுச்சு. மத்தவங்கள யெல்லாம் மனநோயாளின்னு சொல்லி மனது குளுந்துகிட்டு இருந்தவர அவரோட செயல்களின் அடிப்படைல உண்மையான மனநோயாளியாத்தான் இருப்பாரோங்குற சந்தேகத்துல எளுதுனவொடன பித்தம் தலைக்கேறி பாய பிராண்ட ஆரம்பிச்சுட்டாரு போல. அதுனால தான் இந்த வாரம் 5 இடத்துல போட்டு பொலம்பி தள்ளியிருக்காரு.

ஒமர் பாய். அவரு ஸஹாபாக்கள கிரிமினல்ன்டும், இமாம்கள அவன் இவன்டும், யூசுப் அல்கர்ளாவி போன்ற அறிஞர்கள லூசுப்பயண்டும், சவுதி அப்துல்லாஹ் பின் பாஸ குருடண்டும் கேவலமா பேசுனப்போ நாம அமைதியா இருந்ததுனால தான் இந்த நெலம. திருச்சி அபூஅப்துல்லாஹ் வுல ஆரம்பிச்சு இவரோட இருந்த எல்லாரையும் திட்டுன இவர மனநோயாளின்னு சொல்றது தப்பே இல்லீங்க.


சரி அஹமது, நாய் வால நிமித்த முடியாது. விடுங்க. அதுனால தான் தமுமுக கூட அவருடைய கூப்பாட்டுக்கெல்லாம் பதில எளுதிட்டு, அவரு மேக்கொண்டு எளுதுனா நாம சரியான பாதைல இருக்கோம், இதோட அமைதியாயிட்டா நாம சோர்ந்து போயிருக்கோம்னு அர்த்தம்னு எளுதி முடிச்சுட்டாங்க. ஆனாலும் அவரோட இயல்ப மாத்த முடியாதில்லியா. அதுதான் மறுபடியும் பொலம்பியிருக்காரு. தான் அபூஜஹ்ல விட மோசமானவன்னு சொன்னத இதன் மூலமாவும் அவரு நிரூபிச்சுட்டாரு போங்க.

அதுவுஞ் சரிதான். இதுதான் சாக்குன்னு ஓடாதீங்க. மே மாச மகாமக நியூஸ் எதாவது இருந்தா சொல்லிட்டுப் போங்க.

அது ஒரு தனிக்கத போங்க. ஒவ்வொரு டிவியிலயும் புதுசா எடுத்துக்கிட்டு இருக்குற சினிமாவுக்கு பில்ட் அப் குடுப்பாங்களே அது மாதிரித் தான். அங்க அது வைக்கப் போறோம், இங்க இது வைக்கப் போறோம். மேஜிக் ஷோ காட்டப் போறோம் அப்புடி இப்புடின்னு ஒரே கூப்பாடுதான் போங்க.

அதாவது கோயில் திருவிழா மாதிரி, தர்கா கந்தூரி கூடு மாதிரி இது ஒரு தவ்ஹீது கூத்து விழான்னு சொல்லுங்க.

உண்ம தான். வர வர இவரு அடிக்கிற கூத்தப் பாத்தா தவ்ஹீதுங்குற பேருக்கு இருக்குற மரியாதய இவரு கெடுத்துருவாரு போல. அந்த மகாமக திருவிழாவுல இன்னொரு விசேஷம் என்ன தெரியுமா.

சொன்னாத்தான ஒமர் பாய் தெரியும்.

லட்சக்கணக்கான ரூபா செலவளிச்சு கஅபாவோட மாதிரி செஞ்சு வைக்கப் போறாராம்.

என்ன சொல்றீங்க ஒமர் பாய். இப்புடி ஒண்ணு செஞ்சதுனால 2000த்துல நடந்த மதுர மாநாட்டுலயே பலபேரு ஆட்சேபம் தெரிவிச்சாங்க. அது தெரிஞ்சிருந்தும் இப்போ ஏன் மறுபடியும் இந்த வீண் முயற்சியும் வீண் செலவும்.

இந்த 2000 மதுர மாநாட்டு கதயெல்லாம் என்ன மாதிரி, உங்கள மாதிரி பளய ஆளுங்களுக்குத்தான தெரியும். இப்போ நம்மாள சுத்தி நிக்கிறதுலாம் புதுசா வந்த ரசிகர்கள் தான. அதுனால அவங்களோட தாகத்த தீர்க்குற மாதிரி செட் போட்டு காட்டப் போறாரு போல.

செட் போடுறதோட நிக்கச் சொல்லுங்க ஒமர் பாய். ஜகாத் விஷயத்துல குளப்படி பண்ணுனா மாதிரி, இப்போ மக்காவுல நெருக்கடியா இருக்கு அதுனால இத தவாஃப் பண்ணுனாலும் அங்க பண்ணுனதுக்கு சமம்னு புரட்சிகரமான ஃபத்வா குடுத்துறப் போறாரு.

ஜகாத் விஷயத்துல வாங்குன சூட்டுக்குப் பிறகு இது மாதிரியான முயற்சில எறங்கமாட்டார்னு தான் நெனக்கிறேன். இன்னக்கி இருக்குற தொழில் நுட்ப வசதிகள வச்சு கஅபாவ முப்பரிமாண திரைல காட்டி வெளக்கம் சொன்னாலே போதுமானதா இருந்திருக்கும். தேவையில்லாம இப்படி ஒரு முயற்சி பண்ணி கூட்டம் சேர்க்கணுமான்ன பாக்குறவன்லாம் கேக்குறான். பதில் சொல்ல முடியல.
சரி பரவாயில்ல. ரெஸ்ட் எடுங்க. பெறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்

முல்லா 09.04.2008

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home