Tuesday, March 18, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 25

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே உமர் பாயா. என்ன ஒரேயடியா காணாமல் போயிட்டீங்க.

என்ன. . . அதுக்காக ஆள் கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனுவா போடப் போறீங்க.

ஆஹா அப்புடியெல்லாம் பாப்புலாரிட்டி தேடலாம்ங்கிற திட்டம்லாம் இருக்கோ. ஆமா நீங்க தான் நம்ம தலவரு பீஜே செய்யுறத அப்படியே செய்யுற ஆளாச்சே.

சே. என்ன அஹமது என்னயும் அந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே. நம்ம தலவரு பீஜே தான் அரசியல்வாதியா உருவெடுத்துகிட்டு வர்றாரு. அதுனால எதுல எப்புடி வெளம்பரப்படுத்துறதுன்னு உக்காந்து யோசிப்பாரோ என்னவோ. ஆனா இந்த கோர்ட் ஆளுங்களுக்கு எப்புடியோ அது வெளங்கிப் போனதுனால, ததஜ போட்ட கேஸு விளம்பரத்துக்காக போட்டதுன்னு கண்டுபுடிச்சு அபராதம் போட்டுட்டாங்க.

அந்த அபராதத்த கட்ட மாட்டோம். சுப்ரீம் கோர்ட்டுக்குப் போவோம்னுல பீஜே பேசியிருக்காரு.

ஹா. . .ஹா. . .ஹா. . . இவ்வளவுக்குப் பெறகும் நீங்க அவரு சொல்றத நம்புறீங்களா. பாவம். அஹமது நீங்க.

அதுவும் சரிதான் ஒமர்பாய். இப்புடி டிவில சொல்லிட்டு சத்தமில்லாம போயி கோர்ட்ல அபராதத்த கட்டிட்டு வந்துருவாரு தான். சரி அத வுடுங்க.

ஒரு வழியா வக்ஃப் வாரிய கட்டடம் தெறந்துட்டாங்க போல.

உண்மையிலேயே சந்தோஷம் தான் ஒமர் பாய். கோடிக்கணக்குல சொத்து உள்ள வக்ஃப் வாரியம் தன்னோட செயல்பாடுகளுக்காக இன்னொரு எடத்துல வாடக குடுத்துக்கிட்டு இருந்ததே ஒரு அவமானம் தான். பரவாயில்ல இந்த தமுமுகவால சமுதாயத்துக்கு கெடச்ச இன்னொரு பெரும இது.

ஆமாங்க அஹமது. வக்ஃப் எடத்த அனுபவிக்கிறவனெல்லாம் குறஞ்ச வாடகய குடுத்துக்கிட்டு இருக்கும் போது, சொந்த எடம் இருந்தும் ஒழுங்கான பராமரிப்பு இல்லாததுனால அதுல கட்டிடம் கட்ட வழியில்லாம வாடக இடத்துல இருக்க வேண்டியதாப் போச்சு. ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார கும்பல்கிட்ட இருந்து அந்த எடத்த வக்ஃப் வாரியம் கையகப்படுத்தவே தமுமுக தான் தொன செஞ்சுச்சு. அதுக்கு பலனா இப்போ தமுமுக பொதுச்செயலாளர் பேரு கல்வெட்டுல வக்ஃப் கட்டடத்துல பதிஞ்சு போச்சு போங்க.

தமுமுக பொதுச் செயலாளரோட பேரு கல்வெட்டுல பதிஞ்சா, தமுமுகவோட பேரு அரசாங்க கெஸட்லயே பதிவாகிப்போச்சே.

ஆமாங்க அஹமது. நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துனப்போ தமிழக மக்கள் மனசுல பதிஞ்சது. அந்த இடஒதுக்கீட முழுமையா பெறணும் அதுவும் பாதுகாப்பா பெறணும்னு பல அறிவுப்பூர்வமான நடவடிக்கைல எறங்குனதுனால இப்போ அரசாங்க கெஸட்லயும் தமுமுக தன்னோட பேர பதிவு பண்ணிடுச்சு போங்க.

சரியாச் சொன்னீங்க ஒமர் பாய். முஸ்லிம்களோட எட ஒதுக்கீட்டுக்காக ஆரம்பத்துல இருந்தே தீவிரமா முயற்சி பண்ணுனதெல்லாம் தமுமுக தான். அந்த கிரடிட் தமுமுகவுக்கு போயிடக் கூடாதுன்னு தான் நம்ம தலவரு பீஜே என்னென்னமோ செஞ்சு பாத்தாரு. கடசியில இந்த இடஒதுக்கீடு விஷயத்துல அவரோடது எல்லாமே பப்ளிசிட்டி ஸ்டண்ட்தான்னு கோர்ட் சொல்லிடுச்சு போங்க.

ஆமா அஹமது. எட ஒதுக்கீடு அறிவிப்பு வந்தப்போ, அளுது வடிஞ்சு மூலைல மொடங்கி கெடந்தாரு. தமுமுக தலைவர்கள் தமிழக முதல்வர சந்திச்ச உடனே முளிச்சுக்கிட்டு, ததஜவால தான் இடஒதுக்கீடு கெடச்சதுன்னு அறிக்க வுட்டாரு.

அதுவும் கனிமொழிகிட்ட குடுத்த மனுவால இடஒதுக்கீடு கெடச்சுதுன்னு சொன்னாரு.

ஆமா. அதுமாதிரி இப்பவும் ஒரு கத வுட்டு இருக்காரு பாருங்க. அதுதான் இந்த ஸீஸன் ஜோக்.

அட, எட ஒதுக்கீடு வெஷயத்துல கோர்ட் குட்டுன குட்டுல அதப்பத்தி இனி பேசவே மாட்டாருன்னுல நெனச்சேன். இப்ப என்னத்த சொன்னாரு.

அதுதான் அஹமது அவரோட டெக்னிக். உள்ளூர் சப்போர்ட் இல்லன்னாலும், வெளிநாட்டுல செல பேரு இவரு மொகத்த டிவில மட்டும் பாத்துட்டு, வேற சேனல் கெடைக்காம விண்டிவிய மட்டும் பாத்துக்கிட்டு கெடக்குறாங்கள்ல, அவுங்களயாவது தக்க வச்சுக்கலாமேன்னு, கடந்த வாரம் அனைத்து கட்சி கூட்டம் முடிஞ்சு கருணாநிதி குடுத்த அரசு அறிக்கைல பாதிய வாசிச்சு காட்டி அவரால் தான் இது சாத்தியமாச்சுன்னு கத வுட்டிருக்காரு.

ஸ்டாப். ஸ்டாப். ஒமர் பாய், கொஞ்சம் வெளக்கமா புரியுறா மாதிரி சொல்லுங்க.

அதாவது அஹமது போன வாரம் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு விஷயமா கோட்டைல அனைத்து கட்சி கூட்டம் நடந்துச்சு தெரியுமா.

ஓ! அதுதான் தெரியுமே.

அதுல டாக்டரு கிருஷ்ணசாமி கோவிச்சுக்கிட்டு வெளியே போனாரே தெரியுமா.

ஓ! அதுதான் தெரியுமே.

அப்போ வெளக்கம் சொன்ன முதலமைச்சர் கலைஞரு, இதுமாதிரி நல்ல நோக்கத்தோட நாம போடுற திட்டங்கள் சில அதிகாரிகளால முறையா நடைமுறைப்படுத்தப்படாம போறதுனால பயனாளிகளும் பாதிக்கப்படுறாங்க. அரசாங்கத்துக்கும் கெட்ட பேரு வருதுன்னு சொன்னாரே அது தெரியுமா?

ஓ! அதுதான் தெரியுமே. அதோட சேர்த்து இங்க இருக்குற ஹைதர் அலி முஸ்லிம்கள் தனி இடஒதுக்கீட்டுலயும் அது மாதிரி பாதிப்புகள் ஏற்பட்டிருக்குன்னு சொன்னது மாத்திரமல்ல, இரண்டு நாளுக்கு முன்னால, தமுமுக தலைவர்கள் என்ன வீட்ல சந்திச்சப்பவும் இதச் சொன்னாங்க. இந்த அரசு நிச்சயமாக அதனை சரி செய்யும்கிற உத்திரவாதத்த குடுத்திருக்கேன்னும் சொன்னாரே. அதுவும் தெரியுமே.

எல்லாஞ் சரி. இந்த மேட்டர நம்ம தலைவரு பிஜே. டிவில எப்புடி சொன்னாருன்னு தெரியுமா.

அதுதானே தெரியாது.

அதத்தான் சொல்லப் போறேன். கவனமா கேளுங்க. இந்த அறிக்க பத்திரிக்கைல வந்ததோட தமுமுக ஸைட்லயும் போட்டிருந்தாங்க. ஆனா பத்திரிக்கைகலாம் இரண்டு நாள் களிச்சுத்தான அரபு தேசத்துக்குப் போவும். தவிர தமுமுக ஸைட்ட நம்மாளு எவன் பாக்கப் போறாங்குற நெனப்புல அவுத்து வுட்டாரு பாருங்க.

இதுதான் ஒமர் பாய் ஒங்கள்ட்ட புடிக்காத வெஷயம். ஒண்ணு ஷார்ட்டா சொல்லுவீங்க. இல்லன்னா இழுத்தடிப்பீங்க.

கோச்சுக்காதீங்க அஹமது. நீங்க பத்திரிக்கைல படிச்சீங்களே அந்த அறிக்கய மடிச்சு வச்சுக்கிட்டு அதுல கருணாநிதி குடுத்த உறுதிமொழிய மட்டும் வாசிச்சு, பாத்தீங்களா ததஜ போயி, முதல்வரோட செயலாளர் சண்முக சுந்தரத்துகிட்ட மனு குடுத்துட்டு வந்ததுனால தான் கலைஞரு புரிஞ்சுகிட்டு இப்புடி அறிக்க குடுத்துருக்காரு. அதுனால ததஜ தான் இந்த மாற்றத்த கொண்டு வந்துச்சு. தமுமுக காரனுவ வாரியத்த வாங்கி கிட்டு வீரியமில்லாம போயிட்டானுவ – அப்புடீன்னு அடிச்சு உட்டாரு பாருங்க.

அடச்சே, இந்த மனுசனுக்கு ஏன் இப்புடி புத்தி பெரண்டு போச்சோ தெரியலியே. எப்புடி இருந்த இவரு இப்புடி ஆயிப்போயிட்டாரேன்னு வருத்தப்படுற அளவுக்குல ஆகிப்போச்சு.

ஆமா போங்க. அவரு டிவி ஸ்டூடியோவுல மைக்க புடிச்சுகிட்டு உக்காந்துக்குவாராம். இவரோட எடுபுடிகள அனுப்பிச்சு முதல்வரோட மகள்ட்டயோ, செயலாளர்ட்டயோ ஒரு கடுதாசு குடுப்பாராம். உடனே முதல்வரு அத வாங்கி படிச்சுட்டு அடடா பெரியார், அண்ணாவுக்கு பொறவு நாம மதிக்கப்பட வேண்டியவர்ட்ட இருந்து ஓல வந்துருக்கு. உடனே அதச் செஞ்சுடணும்னு ஆக்ஷன் எடுப்பாராம். எப்புடி இருக்கு கதன்னு கேட்டீங்களா!

ஒமர் பாய். அதுதான் தமிழ்ல்ல ஒரு பழமொழி இருக்கே. கேக்குறவன் கேனையனா இருந்தா, கேப்பைல நெய் வடியுதுன்னு சொல்றவன் இருக்கத்தான் செய்வான்.

அடுத்தவன் செய்யுற நல்லதயெல்லாம் (மைக்க) புடிச்சுக்கிட்டு மூலைல கெடக்குற ஒருத்தன், தான் தான் எல்லாத்தையும் செஞ்சேன்னு சொல்றதே ஒரு பித்தலாட்டம். அதுக்கு மேல தமுமுக ஒண்ணுமே செய்யல, வாரியத்துக்காக அரசாங்கத்த முட்டு கொடுத்து பேசுறாங்கன்னு பேசுறது அயோக்கியத்தனம்.

ஆவேசப்படாதீங்க ஒமர் பாய். 2004 லயிருந்தே அயோக்கியத்தனத்தையும் பித்தலாட்டத்தையும் நம்பித்தானே நம்ம தலைவரு பிஜே கட்சி நடத்திகிட்டு வர்றாரு. அவரோட பித்தலாட்டங்கள இனங்கண்டு பழய ஆளுங்கள்லாம் கழண்டுகிட்டாங்க. இப்போ கெடச்சுருக்கிர ரசிகர் கூட்டத்துக்கு ஒண்ணும் தெரியாதுங்குற நம்பிக்கைல தான் அடிச்சு வுட்டுகிட்டு இருக்காரு.

சரியாச் சொன்னீங்க அஹமது. நாங் கொஞ்ச நேரம் முன்னாடி சொன்ன மாதிரி இப்பல்லாம் ரசிகர்களோட ஆதரவுல தான் இப்போ கட்சி ஓடிக்கிட்டிருக்கு. இந்த வார பத்திரிக்கைல கூடப் பாத்திருப்பீங்களே, ஜித்தாவுல இருந்து ஒரு ரசிகர் எளுதுன கடிதத்துல கூட, தமுமுக டிவி நிகழ்ச்சில மார்க்கம் சம்பந்தமான நிகழ்ச்சிகள் குறைவு. உங்க நிகழ்ச்சி தான் நிறைவா இருக்குன்னு எளுதியிருக்காரு பாத்தீங்களா.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாக்கர வச்சு மார்க்க நிகழ்ச்சி நடத்துற கொடுமைய கண்டதுல இருந்து விண் டிவி ப்ரகிராம பாக்குறத நிறுத்திட்டேன். இப்புடி குண்டக்க மண்டக்க பொய்யயும், அவதூறயும் எளுதுறதுனால உணர்வு பத்திரிக்கை படிக்கிறதயும் நிறுத்திட்டேன். நீங்க வந்து சொன்னாத்தான் எனக்கு இந்த கூத்தெல்லாம் தெரியுது.

இந்த ரசிகர் புதுசா சேர்ந்திருப்பார் போல. இவர மாதிரியே இன்னும் பல புதிய ரசிகர்களை ஈர்க்குற மாதிரி பீஜே டிவில பேசணும்னு வேற எளுதியிருக்காரு. அதவிட பெரிய கூத்து என்ன தெரியுமா?

சொல்லுங்க கேட்போம்.

அதாவது, நீங்க உணர்வு படிக்கிறத நிறுத்துனா மாதிரி, பலபேரு பல பகுதிகள்ல நிறுத்திட்டாங்க. அதுனால பனைக்குளத்திலிருந்து ஒருத்தரு எளுதுன கடிதத்த இந்த வாரம் போட்டிருக்காங்க. ஆனா அது வேற காமெடி டிராக்காப் போச்சு.

அப்புடி என்ன எளுதியிருக்காரு ஒமர் பாய்.

தவ்ஹீத்வாதிகள் உணர்வு பத்திரிக்கைய புறக்கணிச்சுட்டாங்கங்குற விஷயத்த தெளிவா போட்டு ஒடச்சிருக்காரு.

இதுல என்ன காமெடி கண்டீங்க ஒமர் பாய். ஒருவேள எப்புடி இந்த உண்மய வெளியிட்டாங்கன்னு வேண்ணா ஆச்சரியப்படலாம்.

கரெக்ட் தான். ஆனா, அந்த கடிதத்துல, அந்த வாசகர் என்னா எளுதியிருக்காருன்னா.. .. உணர்வு பத்திரிக்க இப்போ கடும் பொருளாதார நெருக்கடியில இருக்கு. அதுனால லட்சக்கணக்குல இருக்குற ததஜ ஆளுங்க சந்தா அனுப்புனாங்கன்னா, அது கோடி கணக்குல வரும். பெறகு அத வச்சு ஆம்புலன்ஸ் சேவை, மாநில மாநாடு, மாவட்ட மாநாடுன்னு ஏகப்பட்ட வேலைகளைச் செய்யலாமேன்னு எளுதியிருக்காரு பாருங்க அதுதான் ஹைலைட் காமெடி.

அடடா.. .. என்னங்க இவரு, இவரு சொல்றத கேட்டு யாராவது சந்தா அனுப்சா கூட ஒருத்தனுக்கும் பத்திரிக்கை வந்து சேராது போல இருக்கே. சந்தா தொகைலாம் ஆம்புலன்ஸுக்கும், மாநில, மாவட்ட மாநாட்டுக்கும் போயிடுச்சுன்னா எப்புடி பத்திரிக்கையோட பொருளாதார நெருக்கடி தீரும். காசு குடுத்தவனுக்கு எப்புடி பத்திரிக்கை போயி சேரும். கேக்கவே தல சுத்துதே.

இதுதான். இதத்தான் காமெடின்னு சொன்னேன். சரியாச் சொல்றதா இருந்தா டிராஜிக் காமெடி. பாத்துகிட்டீங்களா, இதுதான் இன்னைக்கி இருக்குற ததஜ அடிவருடி அறிவாளிகளோட நலம. மொதலாவது உணர்வு பத்திரிக்க பொருளாதார நெருக்கடில இருக்குதுன்ன சொல்றதா இருந்தா அவரு ஒரு நிர்வாகியாத்தான் இருக்கணும். சாதாரண வாசகனுக்கு பொருளாதார நெருக்கடிலாம் தெரிஞ்சுருக்க சான்ஸே இல்ல. அப்டீன்னா, யாரோ ஒரு நிர்வாகி, சாதாரண வாசகன் எளுதுறமாதிரி எளுதிப் பிரிண்ட் போட்டு சந்தா சேர்க்க டிரை பண்ணி இருக்காருன்னு தான் அர்த்தம்.

இதுல என்ன வித்தியாசத்த கண்டீங்க ஒமர் பாய். தனக்கு வருமானம் வரணும்கிறதுக்காக பீஜே தான் என்ன வேணும்னாலும் செய்வாரே, மறந்துட்டீங்களா. தர்ஜுமா சேல்ஸ் கம்மியானவுடனேயே அடுக்கு மொழி நடிகர் டி.ராஜேந்திரன கூட்டிட்டு வந்து ஜும்மா பண்ற மேடைல ஏத்தி விரல சொடுக்கி பாட்டுப்பாட வச்சு தாஜுமாவ விளம்பரப்படுத்துனாரே நியாபகம் இல்லியா.

அடடே.. .. பரவாயில்லையே. நீங்க நியாபகம் வச்சிருக்கீங்களே அஹமது. ஆனா இப்புடி யோசிக்கிறவங்க கொறவா இருக்குற தைரியத்துல, தமுமுக காரங்க பண்றத விமரிசிச்சு பொழுத களிச்சிக்கிட்டு இருக்காரு இந்த பிஜே.

எது? அஜித் நற்பணி மன்றம் சார்பா நடந்த கபடிப்போட்டி விவகாரத்தத்தானே சொல்றீங்க.

அதுதான் முடிஞ்சு போச்சே. அஜித் பேர்ல உள்ள நற்பணி மன்றம் ஒரு வெளயாட்டுப் போட்டி நடத்துனா அதுக்கு ஆதரவு தெரிவிச்சது ஒண்ணும் தவறிலலைன்னு நம்மாளுங்களே பேசுனாங்களே. இது வேற.

அது என்ன புதுசா?

இது சம்பவம் நடந்த பாலசமுத்திரம் மக்களுக்கே கூட தெரியாத ஒரு செய்தி. அத இரண்டு மாசம் களிச்சு தோண்டி எடுத்து போட்டிருக்காரு.

மேட்டரு என்னன்னு சொல்லவேயில்லியே.

அதாவது அஹமது. திண்டுக்கல் பக்கத்துல பாலசமுத்திரம்கிற ஊர்ல தமுமுகவோட புது கௌ இருக்கு. அதுல புதுசா நிர்வாகிகளா தேர்வான செல பேரு பளய பளக்கத்துல கந்தூரி விழா போஸ்ட்டர அடிச்சிருக்காங்க. இது தெரிஞ்ச உடன மாவட்ட நிர்வாகிகள் ஒடிப்போயி, 'யப்பா ராசா, நீ தமுமுகவுல இருக்கணும்னா இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கு மாத்தமா நடக்கக் கூடாதுப்பா. கந்தூரிங்கிறது இஸ்லாத்துக்கு விரோதமான செயல்'னு சொன்னவுடன, ஒட்டுன போஸ்டர எல்லாம் கிளிச்சு எறிஞ்சுட்டாங்க.

இதுல கூப்பாடு போடுறதுக்கு என்னங்க இருக்கு ஒமர் பாய். நல்ல வெஷயம் தானே நடந்திருக்கு. குராஃபத்துல இருந்தவன தமுமுக நிர்வாகியாக்கி, இஸ்லாத்த கத்துக் குடுத்து தவ்ஹீத்வாதியாவுல மாத்தியிருக்காங்க.

அதான், இப்புடி யோசிக்கிறவங்க ததஜவ்ல கம்மிங்கிறதுனால தான், ஜனவரில நடந்த ஒரு வெஷயத்த, இப்போ மார்ச்ல கொண்டு வந்து கொட்டுறாரு.

சரி வுடுங்க ஒமர் பாய். மே மாச திருவிழா பத்தி ஒரு நியூசும் நீங்க சொல்லலியே.

அடடே பாத்தீங்களா அஹமது. நா மறந்தே போயிட்டேன். மே மாச திருவிழா விஷயமா நீங்க டிவில பாத்திருப்பீங்க தானே.

ஹலோ.. ..நாந்தான் அப்பவே சொல்லிட்டேனே. என்னிக்கி இந்த பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பாக்கர கொண்டு வந்து இஸ்லாமிய பிரச்சாரம் பண்ண வச்சாங்களோ, அன்னியிலிருந்து நான் ததஜ புரகிராம பாக்குறதயே உட்டுட்டேனே.

அப்படீன்னா நீங்க பாக்காதது கூட நல்லது தான்.

வெவரமா சொல்லுங்க ஒமர் பாய்.

சொல்றேன். சொல்றேன். அதாவது அஹமது மே மாச நடத்த இருக்குற மாநாட்டுக்கு பலவழிகள்ல்ல எப்புடியாச்சும் ஆள் திரட்டி காட்டணும்னு ரொம்ப மெனக்கெடுறாங்க. தமுமுக மாதிரி கொறச்ச கால அவகாசத்துல, நாம கூப்ட உடனே மக்கள் வரமாட்டாங்கன்னு நல்லா தெரிஞ்சு போச்சு. அதுனால ஆறு மாசத்துக்கு முன்னால இருந்தே ஆள் புடிக்க அலையுறாங்க.

இதுக்கும் நான் டிவி பாக்காததுக்கும் என்னங்க சம்பந்தம்.

இருங்க சொல்றேன். ஆள் படிக்கிறதுல ஒரு வகையா, தெனிக்கும் டிவியில மாநாட்டு செய்திகள்னு அதுல என்னன்ன மாதிரி செய்யப்போறோம்னு படம் காட்டிக்கிட்டு வர்றாங்க.

அதாவது தயாரிச்சுக்கிட்டு இருக்கிற சினிமாவ பத்தி டிவில டிரைலர் போடுவாங்களே அது மாதிரியா?

சரியாச் சொன்னீங்க. கிட்டத்தட்ட அது மாதிரி தான். ஆனா அதுல காட்டுன உச்ச கட்ட காமெடி என்னன்னா.. .. இடைல ஒரு நாளு பாக்கரு வந்து பிஜே கூட வீடியோ காண்பரன்ஸ்ல பேசினாரு பாருங்க, அதுதான் உச்சகட்ட காமெடி.

நல்லது. நான் பாக்காம இருந்தது கூட நல்லதுக்கு தான். ரதி மீனா பஸ் சம்பவத்துக்குப் பெறகு எல்லாமே காமெடியாத்தான் போச்சு. ஆமா ஒரு சந்தேகம். பாக்கரும் பிஜேவும் ஒண்ணா உக்காந்துகிட்டு தானே பேசிக்கிட்டு இருப்பாங்க. அப்ப எப்புடி வீடியோ காண்பரன்ஸ்?

ஓ.. .. உங்களுக்கு வெஷயமே தெரியாதோ. பாக்கரு இப்போ மாநாட்டு வசூலுக்காக கல்ஃப் டூர்ல இருக்காருல்ல. அதுல துபாய்ல இருந்தோ, குவைத்ல இருந்தோ பேசியிருப்பாரு போல.

துபாய் கத்தாருக்குலாம் நம்ம தலைவரு பிஜே போக முடியாதுங்கிறதுனால இவரு போயிருப்பாரு போல. சரி வெஷயத்துக்கு வாங்க.

வசூலுக்கு போன எடத்துல உள்ளவங்களயும் இம்ப்ரஸ் பண்ணனும், இத டிவி வழியா பாக்குற அத்தன பேரையும் முட்டாளாக்கணும்கிற எண்ணமோ, என்னவோ தெரியல மாநாட்டு வசூல் சம்பந்தமா ஒரு டிராமாவே நடத்தயிருக்காங்க போங்க.
அதாவது, அந்த டெலி காண்பரன்ஸ் மூலமா பாக்கரு பிஜேகிட்ட சொல்றாரு.. .. அண்ணே மாநாட்டுக்காக நம்ம நிர்வாகிகள் மட்டத்துல பேசும் போது சொன்னீங்களே அண்ணே.. .. இந்த மாநாட்டுக்காக நாம நம்மள்ட்ட இருக்குற முழு சக்தியையும் செலவழிச்சு மத்தவங்களுக்கு உதாரணமா இருக்கணும்னு சொன்னீங்களே அண்ணே.. .. சொன்னதோட இல்லாம உங்க சக்திக்கும் மீறி ரூபாய் 10,000 த்த குடுத்து வசூலை ஆரம்புச்சு வைச்சீங்களே அண்ணே.. .. அதே மாதிரி தாண்ணே இங்க இருக்குற சகோதரர்கள் ஒரு மாச சம்பளத்த கூட தர்றதுக்கு ரெடியா இருக்காங்கண்ணே.. .. ..அப்புடி இப்புடின்னு பேசியிருக்காரு.

சே.. .. .. இப்புடிலாம் நடிக்கணுமா. ஆக மொத்தம் உச்சகட்ட வசூலா இது இருக்கணும்னு முடிவெடித்துட்டாங்க போல. தொக கணிசமானதா இருந்தாத்தான் பிரிச்சுக்க வசதியாயிருக்கும்னு நெனச்சாங்க போல. போன தடவ கும்பமேளாவுக்கு போயஸ் தோட்டத்துல இருந்து மேமிச்சமா மிஞ்சி கெடச்சுச்சு. இப்போ அதுக்கு வழியில்லாததுனால கொஞ்ச நெஞ்சம் மிஞ்சி இருக்கிற ரசிகர்கள்ட்ட இருந்து உறிஞ்சி எடுத்துறணும்னு தீர்மானம் போட்டுட்டாங்க போல. போன தடவ நம்மளயெல்லாம் சமுதாயத்தின் பேர்ல கூட்டிட்டு போயிட்டு ஜெயலலிதா முன்னால நின்னப்ப, கோனிகா பஷீருக்கு சீட்டு கேட்கத்தான் கும்பமேளா நடத்துனோம்னு சொன்னாரு. இப்போ கூடுற கூட்டத்த வச்சு என்ன பண்ண காத்திருக்காரோ தெரியலியே.. .. ..

பொறுத்திருந்து பார்ப்போம். அப்போ நான் வர்றேன். வஸ்ஸலாம்

முல்லா 18.03.2008

0 Comments:

Post a Comment

<< Home