Saturday, June 14, 2008

வல்லத்தில் பீஜே தோண்டிய பள்ளம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

தவ்ஹீதை புதைக்க வல்லத்தில் பீஜே தோண்டிய பள்ளம்

அன்புச் சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... ..

ஆறு மாத காலமாக படாத பாடு பட்டு, அனுதினமும் கூக்குரலிட்டு அழைத்தும் ஐம்பதினாயிரம் பேரைக்கூட கூட்ட முடியாத பீஜே, ஓரிரு நாட்கள் அழுது புலம்பிய பின், தற்சமயம் மீண்டும் தனது பழைய பல்லவியான 'பல இலட்சம் மக்கள்' என்பதனை பாட ஆரம்பித்துள்ளார். பின்பாட்டுப் பாடுவதற்கு தற்சமயம் புதிய பிண்ணனிப் பாடகர்கள் கிடைத்துள்ளார்கள்.

உண்மையில் வல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தால் தவ்ஹீத் எழுச்சி அடைந்திருக்கிறதா? அதில் கலந்து கொண்டவர்களாக இருந்தாலும், அல்லது பாக்கர் பிஜே ((BJP) உபயம்: முல்லா) வே தொலைக்காட்சியில் பிளாஷ் பேக் சொன்னார்களே அதனைப் பார்த்த எவராக இருந்தாலும் சரி – கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்வார்கள்.

ஏனெனில்,

வல்லம் மாநாட்டிற்காக 100 ஏக்கர் நிலத்தில், ISO தரத்தில் எற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்று நாள்தோறும் கூவினார்கள்.

ஆனால், 50 ஆயிரம் பேர் மட்டுமே அமரத்தக்க வகையில் மேற்கூரையிட்டு அதற்கும் குறைவானவர்கள் உபயோகிக்கதக்க அளவில் தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்ததாக அவர்களே தொலைக்காட்சியில் ஒப்புக் கொண்டார்கள்.

வாக்கு மாறுவது தவ்ஹீத்வாதியின் பண்பாக இருக்க முடியாது. எல்லாம் செய்வதாக வாக்களித்து அவற்றில் ஒன்றைக்கூட உருப்படியாக செய்யாமல், எல்லாம் செய்வதற்காக எல்லோரிடத்திலும் வாரி வசூலித்து விட்டு, வளமை போல அதனை பங்கு பிரித்துக் கொள்வதும் தவ்ஹீத்வாதியின் இலக்கணமாக இருக்க முடியாது.

வாக்கு மாறும் நயவஞ்சகர்களாகவும், வாரிச் சுருட்டும் வஞ்சகர்களாகவும் இருப்பவர்களால் தவ்ஹீதிற்கு எழுச்சி ஏற்பட முடியாது.

உலக முஸ்லிம்கள் காணத் துடிக்கும் கஅபாவை சினிமா செட் ரேஞ்சுக்கு செட் போடுவது தவ்ஹீதிற்கு ஏழுச்சியைப் பெற்றுத் தராது.

கஃபாவை காணுவதற்காகவே தங்களது வருமானத்தை சேமிக்கும் இந்தோனேஷியா முஸ்லிம்களைப் போல அல்லாமல், கஃபாவை செட் போட்டு தனது வருமானத்தைப் பார்க்கும் இவர்களால் தவ்ஹீத் ஒருபோதும் எழுச்சி பெற முடியாது.

கபுர் வணங்கிகள் செய்வதைப் போல, இந்த (கஃபா) செட்டை, அது எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்று சுற்றி வந்த மக்கள் அதனை தொடுவதும் முத்தமிடுவதையும் கண்டவர்கள், தவ்ஹீதிற்கு இதை விட பெரிய இழுக்கு இருக்க முடியாதென கூறியது பரிதாபமானது.


வல்லத்தில் கூடியது தவ்ஹீதிற்காக அல்ல, மாறாக திருவிழா கூட்டம் தான் என்பதனை பிஜே-பி யும் ஒப்புக் கொண்டனர்.

அதனால் தான் அங்க தொடாதீங்க, இங்க சுத்தாதீங்கன்னு கூவிகிட்டு நின்னாங்க.

அதவிட பெரிய கூத்து, ஸ்கூல் எக்ஸிபிஷன்ல செய்யுறதெல்லாம் செய்யுறதுக்கு ஸ்டால் போட்டாங்க. ஏன்னா ஸ்கூல் பசங்க லீவுல சுத்துறதுக்கு ஒரு சித்திர திருவிழா மாதிரி இருக்கட்டுமேன்னு நெனச்சாங்க போல இருக்கு.

அதனால தான் திருவிழா ரேஞ்சுக்கு குதிரையேத்தம், ராட்டிணம்னு ஏற்பாடு செஞ்சிருக்காங்க.

இதுனால தவ்ஹீதுக்கு எழுச்சி ஏற்படுமா?

அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் கூட அமெச்சூர் நாடகத்தன்மையே மேலோங்கி இருந்தது.

உதாரணத்திற்கு ஜனாஸா குளிப்பாட்டும் செயல்முறை விளக்கம்.

ஜனாஸா குளிப்பாட்டும் முறையை குறும்பட வடிவில் தயாரித்து வழங்கியிருக்கலாம் அல்லது ஒரு டம்மி பொம்மையை வைத்து விளக்கி இருக்கலாம். அதனை விடுத்து, உயிருள்ள ஒருவனை படுக்க வைத்து விளக்கம் என்ற பெயரில் விரசமாக்கி இருக்கிறார்கள்.

இத்தகைய செயல்பாடுகளால் தவ்ஹீத் ஒருபோதும் எழுச்சியடையாது.

அரங்கங்கள் அனைத்தும் ததஜ லிமிடட் கம்பெனி பங்குதாராகளான பிஜேபி (பாக்கர், ஜெயினுலாபிதீன் பக்கீர்) யினருக்கு படி அளக்கும் அட்சய பாத்திரங்களாகத் தான் விளங்கின.

அந்த அரங்கங்களில் தவ்ஹீத் குறித்த பிற அறிஞர்களின் ஆக்கங்களையோ, வெளியீடுகளையோ காண முடியவில்லை. மாறாக எங்கும் எதிலும் லிமிடட் கம்பெனியினரின் ஆதிக்கம் தான். லிமிடட் கம்பெனியின் ஆண்டு விழா கூட்டம் என்றால் இப்பொழுது வந்திருந்த கூட்டத்தில் 10 இல் ஒரு பாகம் கூடத் தேறாது என்பதனால் தவ்ஹீதின் பெயரில் வியாபாரம்.

சொந்த வியாபாரம் செய்ய வந்த இடத்தில், தவ்ஹீதை கடைப்பிடித்து வாழ்ந்து நேர்மையாக நடந்து கொண்டதால் இஸ்லாத்தை நோக்கி உலக மக்கள் திரண்டு வரும்படி செய்தனர் ஸஹாபாக்கள். அது தான் உண்iமாயன தவ்ஹீத் எழுச்சி.

மாறாக இந்த பிஜேபியினர் (பாக்கரும் ஜெயினுலாபிதீனும்) தவ்ஹீதையே தனது வியாபார மூலதனமாக்கி அதிலும் பொய், புரட்டு, பித்தலாட்டம் போன்ற அனைத்து வகைகளையும் கலந்து வயிறு வளர்க்கின்றனர். எனவே தான் வல்லத்தில் நடைபெற்ற கூத்தை தவ்ஹீதின் தளர்ச்சியாகவே காணுகிறோம். இத்தகைய மோசடித்தனங்கள் ஒருக்காலும் எழுச்சியை உண்டாக்காது.

உச்சகட்டமாக இஸ்லாமிய அறிஞர்களை தடம் புரண்டவர்கள் என்ற தலைப்பிலும், உண்மையாகவே 2004 முதல் தடம் புரண்டு போய் புலம்பிக் கொண்டிருக்கும் உலவியை உலகளாவிய இஸ்லாமிய அறிஞர்கள் வரிசையிலும் பொறித்து வெளியிட்டுள்ள கயமைத்தனம்.

தெளிவாகத் தெரிந்த முனாஃபிக்குகளையே கூட வெளியிடத் தயங்கிய ரஸுல் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதாகச் சொல்லும் இவர்களுக்கு இத்தகைய பட்டியல் வெளியிட முடிகிறதென்றால் அதற்கு காரணம் அகந்தையும் பொறாமையும் தான்.

அகந்தையும் பொறாமையும் ஒருபோதும் தவ்ஹீதின் எழுச்சிக்கு வழிகோலாது.

இறுதியாக ஒரு காமெடி டிராக்.
2004 க்குப் பிறகு தவ்ஹீத் வட்டத்திற்குள் வந்த சிலர், 2004 ஏப்ரலில் தவ்ஹீத் என்பது லிமிடெட் கம்பெனியின் மூலதனமாகி விட்டதால், அடாவடி, அராஜகம், எட்டப்ப வேலைகள் என்று சுற்றி இருந்தவர்களை செல்லா காசாக்கி விட்டு, தலைமையின் நோக்கத்தை சரியாகப் புரிந்து மார்க்கத்தையும் மனிதாபிமானத்தையும் மறந்து வசூலை மட்டுமே வாடிக்கையாக்கிக் கொண்ட ஒருவர் இரண்டாம் நாள் அமர்வில் அமர்வு தலைவராக இருந்து அடித்தது வெடிக்கையான கூத்து.

புதுமுக கதாநாயகனுக்கு டைரக்டர் பாக்கர் என்ன டிரெயினிங் குத்தாரோ தெரியவில்லை. கதாசிரியர் (ஜேபி) ஜெயினுலாபிதீன் எழுதிக் குடுத்த கதை வசனத்தை மறந்து விட்டோ, அல்லது கூட்டத்தை கண்ட குஷியில் மறைத்து விட்டோ, சொந்த வசனம் பேசி சொதப்பினார்.

'நாங்கள் காற்றுள்ள பந்து, தண்ணீருக்குள் அழுத்தினால் திமிறிக் கொண்டு வெளியில் வருவோம்' என்றெல்லாம் வீரவசனம் பேசினார்.

காற்றடிக்கும் திசையெல்லாம் தாங்கள் உருண்டோடுவதை சூசகமாக குறிப்பிட்டார் போலும். அதைவிட பெருங் கேலிக் கூத்து அவரது உரையின் நிறைவுப் பகுதி.

'.. .. .. என்று அறைகூவல் விடுக்கிறோம் என்று நான் கூறிக் கொள்கிறேன்'.

மார்க்கம் மட்டுமல்ல. இவர்களிடத்தில் பாவம் தமிழும் தள்ளாடுகிறது. கம்பன் கழகம் இவரது ஊரில் தானே இருக்கிறது. ஒழுங்காக படித்திருந்தால் உருப்படியாக தமிழாவது தெரிந்திருக்கும்.

அதுசரி ஜே.ஏ.கியூ.ஹெச் (JAQH) என்று எழுதியிருந்ததையே ஹைச்.ஜவாஹிருல்லாஹ் (H.J) என்று வாசித்து, அவதூறு பரப்பிய அறிவுச் செம்மல் அல்லவா.

புதுமுக கதாநாயகனின் கூத்து முற்றுப் பெறவில்லை.

தவ்ஹீதின் ஆரம்ப காலத்தில், பள்ளி இமாம்கள் கல்யாணம் நடத்தி வைக்கும் அழகை (?!) மேடைதோறும் காய்ச்சி எடுப்பார்கள். பாவம் இந்த புதுமுகம் வசூலில் சாதனை படைத்ததால் மேடையேற்றப்பட்டவர் அல்லவா. அதனால் பழைய சம்பவங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. எனவே இத்தகையவரது தலைமையில் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தவர்களோ அல்லது அதற்கு அனுமதி வழங்கியவர்களோ இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் போலும்.

சுயமரியாதை தவ்ஹீத் திருமணங்களை இவர் நடத்திய அழகிருக்கிறதே அடடா.. ..
மாப்பிள்ளைக்கு திருமண ஒப்பந்தத்தை சொல்லிக் கொடுக்கிறார் பாருங்கள்.
'.. .. ..இவரின் மகளை .. .. ..மகருக்கு வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டேன்'.

அதாவது உண்மையில் இவர் தான் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொள்கிறார். பிறகு மாப்பிள்ளையின் கதி - - - அடப்பாவிகளா இதனைத் தானே பட்டி தொட்டி எங்கும் கேலிக்கூத்தாக்கினீங்க. இப்ப அதே கேலிக் கூத்த தவ்ஹீத் பெயரால் செய்தால் மட்டும் சரியா.

அதனால் தான் சொல்கிறோம். வல்லத்தில் நடைபெற்றது எழுச்சி மாநாடல்ல. மாறாக வசூல்மாநாடு.

என்று காசுக்காக களியக்கா விளையில் ஜமால் அன்கோவிடம் தோற்றுப் போனாரோ அன்றே இந்த பிஜே தன்னிடமிருந்த தவ்ஹீதை சாகடித்து விட்டார்.
இப்பொழுது அதனைப் புதைப்பதற்குக்குத்தான் வல்லத்தில் பள்ளம் தோண்டியிருக்கிறார். அவர் தோண்டிய பள்ளத்தில் அவரே மாய்வார் என்பது மட்டுமே திண்ணம்.

ராவுத்தர்
15.06.2008

1 Comments:

At 4:00 AM, Blogger M.முஹம்மது பதுருதீன். said...

எந்தெந்த விஷயங்களைக் கொண்டு சுன்னத் வல் ஜமாஅத்தினரை குறிப்பாக உலாமா பெருமக்களை பொய், அவதூறு, கேலி, கிண்டல் செய்தார்களோ, அதே விஷயங்களை அவர்களையே செய்யவைத்து அவர்களின் சாயத்தை வெளுக்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கு மாற்றமான அனைத்து அனாச்சாரங்களையும் செய்துவிட்டு கடைசியாக தீர்மானத்தில் நாங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம் எனக்கூறியது, உண்மையை உணர்ந்தோர் வாயால் மட்டுமல்ல ...லும் சிரிக்க மாட்டார்கள் என்பது என்னவோ உண்மை.

இவன்.
முஹம்மது பதுருதீன்.

www.nanmaivirumbi.blogspot.com

 

Post a Comment

<< Home