Friday, April 18, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 27

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..

வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே வாங்க ஒமர் பாய்.

கடைசில கும்பகோண பூனைக்குட்டி வெளிய வந்துருச்சு பாத்தீங்களா.

அவசரமா ஓடாம, நிதானமா வெளக்கமா சொல்லுங்க ஒமர் பாய். கும்பகோணத்துல என்ன பூனக் குட்டியா. ராஜபாளையம் நாய் மாதிரி கும்பகோண பூனையா. புரியலியே.

சரி சரி பொறுமையா சொல்றேன் கேளுங்க. கும்பகோணத்துல ததஜ சார்பா 2005ல கூட்டம் போட்டாங்களே ஞாபகமிருக்கா.

ஓ! அப்போ நம்ம ஆளுங்க அடிச்ச கூத்த அவ்வளவு லேசுல மறக்க முடியுமா. 10, 12, 15 ன்னுல கூடுன கூட்டத்த ஏல அறிவிப்பு மாதிரி ஏத்திக்கிட்டு போனாங்களே.

அதே தான். அந்த கணக்குலாம் சும்ம ஜுஜுபி... .. ஊலலல்லான்னு நம்ம தலைவர் வாயாலேயே நேத்திக்கி (16.04.2008) ஒத்துக்கிட்டது தான் இன்னெக்கி டால்க் ஆஃப் த டவுன்.

அப்புடியா. நெசமா சொல்றீங்க. அன்னைக்கு தமுமுக காரன்லாம் இந்த எண்ணிகைலாம் சும்மா பில்ட் அப் பண்றானுங்க. கூடுன கூட்டம் 50 ஆயிரத்துக்கும் கொறயாத்தான் இருக்கும்னு சொன்னப்ப, தமுமுக காரனுவ தான் தலையை எண்ணி உட்டானுங்களா, கூட்டம் 10 இலட்சத்துக்கும் மேல கூடுனது தான் உண்மைன்னு பத்திரிக்கைல எளுதுனாரே அப்ப அதுகூட ஊ.. ..லலல்லாவா.. ..என்ன கொடும இது ஒமர் பாய்.

நேத்து அவரு உட்ட ஸ்டேட்மெண்ட்டுக்கு பதிலா, தமுமுக காரனுவ சொன்னது உண்மை தான்னு சொல்லியிருந்தாலாவது கொஞ்ச நஞ்சமாவது மரியாத மிஞ்சி இருந்திருக்கும்.

அப்புடி ஒட்டு மொத்த மரியாதயையும் போக்குற மாதிரி என்ன தான் சொன்னாரு ஒமர் பாய்.

வெளக்கமாவே சொல்றனே. துபாய்ல ஜட்டி மர்கஸ்ன்னு ஒண்ணு இருக்குல.

அய்யோ ஒமர் பாய், அது ஜட்டி மர்கஸும் இல்ல, பனியன் மர்கஸும் இல்ல, அதுக்குப் பேரு ஜெ.டி மர்கஸ். இதுல இருந்து தான பஸ்ஸுக்குள்ள ஜல்சா புகழ் பாக்கரு மாநாட்டு வசூல் பத்தி டிராமா ஆடுனாருன்னு நீங்க தான முன்னால சொன்னீங்க. அந்த ஜெ.டி மர்கஸ் தான் இது. அதுல என்னாச்சு.. .. ..

அதுக்கு ஒண்ணும் ஆகல. அதுல இருந்து ஒருத்தர் கும்பகோணத்துல கூடுன கூட்டத்த பத்தி கேட்டதுக்கு நம்மாளு சொல்றாரு, 'அதாவதுமா, அரசியல்வாதிள்லாம் 1 இலட்சம் பேரு கூடுனா அத 10 இலட்சம்னு தான் சொல்வாங்க' – அப்புடீங்குறாரு.

அடச்சீ. வெட்கக்கேடாவுல போச்சு. கடைசில, தான் ஒரு தவ்ஹீத்வாதியில்ல. அரசியல்வாதிதான்டுல ஒப்புதல் வாக்கு மூலம் குடுத்திருக்காரு. 4 வருசம் களிச்சாவது ஒத்துக்கிட்டாரே. இன்னமும் இவரு மார்க்கத்த ஒழுங்கான மொறயில சொல்வாருன்னு எப்புடிங்க நம்ப முடியும்.

இந்தாளு தவ்ஹீது பேரச் சொல்லி தமுமுகவ ஒடைக்க முயற்சி செஞ்சப்பவே தமுமுககாரங்க எச்சரிக்க பண்ணுனாங்க. ஆனா அதயும் நம்பாம இவரு தவ்ஹீதுக்காகத்தான் இப்புடி செய்றாருன்னு நம்பி நாமெல்லாம் அவரு பின்னால ஓடுனோம்.

வாஸ்தவம் தான். ஆனா பாக்கரோட பஸ்லீலைகள் தெரிஞ்சதுக்கப்புறம் நான் அமைதியாகிட்டேன். நீங்க தான் இன்னமும் ஒட்டிக்கிட்டு இருக்குற மாதிரி தெரியுது.

நம்ம சோக கதய விடுங்க அஹமது. இன்னமும் ஏமாறுறதுக்கு ஆள் இருக்குறா மாதிரித்தான் தெரியுது.

எப்புடி சொல்றீங்க அஹமது. மாசத்துக்கு ஒரு போலி சாமியாரப் பத்துன நியூஸ் வந்தப்புறமும் கூட எவ்வளவு பேரு மறுபடியும் மறுபடியும் ஏமாந்து நிக்கிறாங்கன்னு நீங்க பாக்கலியா. அத மாதிரி தான் இதுவும்.

ஒருவேள நீங்க கடந்த மொற சொன்னா மாதிரி இந்த மாநாடு முடிஞ்சப்புறமா ததஜவ அரசியல் கட்சின்னு டிக்ளேர் பண்ணுவாரோ.

இருக்கலாம் அல்லது எல்லாத்தையும் ஊத்தி மூடிட்டு, இப்போ நடக்குற உச்சகட்ட வசூல வச்சு இவரும் பாக்கரும் பாகம் பிரிச்சுக்கிட்டு போகலாம்.

இன்னக்கி வர்ற வசூல பாகம் பிரிச்சுக்குவாங்களே தவிர ஊத்தி மூடிட்டுலாம் போவமாட்டாங்க. போன தடவ கும்பகோண கூட்டத்த காட்டி ஜெயலலிதாகிட்ட வசூல் பண்ணன மாதிரி இப்போ கூடுற கூட்டத்த எங்க அடகு வக்கலாம்னு உக்காந்து யோசிப்பாங்க.. .. ..

அதுவும் சரிதான். கும்பகோண கூட்டத்த பில்ட் அப் பண்ணிட்டு இன்னக்கி அரசியல்வாதின்னா அப்புடித்தான் சொல்வாங்க. அதுனால நாங்க சொன்னது சரிதான்னு சப்பகட்டு கட்டுறவங்கன்னு தெரிஞ்சப்புறமா எவன் வல்லத்துக்கு போவான். அதுனால எப்புடியாவது கூட்டத்த சேர்த்து காட்டணும்னு மக்கா செட்டு என்ன.. .. மதீனா செட்டு என்ன.. .. இன்னும் இதக் காட்டிலும் அதிகமாவும் இருக்குனு டெய்லி டிவில வெளம்பரம் பண்றாங்களே பாக்கலியா.

ஒமர் பாய். நாந்தான் ஒங்கள்ட்ட பலமொற சொல்லிட்டேனே. பாலியல் பாக்கர வச்சுகிட்டு தவ்ஹீது பிரச்சாரமான்னு என்னக்கி வீட்ல கேட்டாங்களோ அன்னைலயிருந்து நாந்தான் பாக்குறதே இல்லியே.

அதுனாலதான் ஒங்களுக்கு நம்மாளோட பித்தலாட்டம்லாம் தெரியாமப் போகுது. இப்போ கூட பாருங்க, ஒரு கேள்விக்கு பதிலளிக்கிறேன் பேர்வழின்னுட்டு, தவ்ஹீதுவாதிகள் நடந்துக்குறத வச்சுத்தான் மத்தவங்க நம்ம ஜமாத்துக்கு வருவாங்கன்னு சொல்றாரு. அதாவது ஒருத்தர் தவ்ஹீதுல இருக்காறா இல்லயாங்குறத முடிவு பண்றது அவரோட ஜமாத்தாம். அப்புடீன்னா இதுவர நாம எதுத்துக்கிட்டு வந்த மத்த பீர்மார்களுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்.

இதுவர நம்மளயல்லாம் ஏமாத்திட்டுத்தான் இருந்தாருன்னு அவரே நேத்து ஒத்துக்கிட்டதா சொல்லியிருக்கீங்க. எனக்குத் தெரிஞ்சு இந்த 4 வருசத்துல இவரு தவ்ஹீதுங்குற பேருக்கு இருந்த மரியாதயவே கெடுத்து குட்டியசுவராக்கிட்டாருன்னு தான் சொல்லணும்.

ஆமாங்க அஹமது. அதுவும் உண்ம தான். தமுமுகவுல இருந்த வரைக்கும் தன்னோட சொந்த கருத்துன்னு வெச்சுக்கிட்டு இருந்ததயெல்லாம், தவ்ஹீது ஜமாத்துங்குற பேர்ல எறக்கி வுட்டாரு. ஒண்ணா ரெண்டா அப்புடி எறக்குன வெசயங்கள். ஜகாத்துல தொடங்கி ஸஹாபாக்கள திட்டுனது மாத்திரமல்லாம, குராபிகள்ட்ட போயி விவாதம் பண்றேன்ன சொல்லி அவனுக வளத்து விட்டு நம்ம மூஞ்சியில கரியப்பூசிட்டாரு போங்க.

என்ன செய்யுறது ஒமர் பாய். இப்போ தான இவரோட ஒரிஜினல் மூஞ்சி தெரியுது. தமுமுககாரங்க சொன்னது சரியாத்தான் போச்சு. தனக்கு தவ்ஹீதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். தானொரு ஒரிஜினல் அரசியல்வாதின்னு அவரு வாயாலேயே அல்லாஹ் வெளியாக்கிட்டான். அதுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம் போங்க.

சரி சரி பெறகு சந்திப்போம். வஸ்ஸலாம்.

முல்லா 19.04.2008

1 Comments:

At 1:57 PM, Anonymous Anonymous said...

Ask about Thowheed Eluchi Manadu conference to TMMK Vice President, who was attended on May 10. He will explain the conference and the numbers of attendees.

 

Post a Comment

<< Home