Wednesday, July 09, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 30

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. .. ..

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். இன்னக்கி என்ன சேதி கொண்டு வந்திருக்கீங்க.

என்ன செய்யுறது அஹமது. சமுதாயச் செய்திகளுக்கு முன்னுரிமை குடுக்கணும்கிற அடிப்படைல ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கையே சமுதாயத்தப் பத்தி கவலப்படாம, தனி நபரோட மரியாத மக்கள் மத்தியில கொறஞ்சுடாம இருக்குறதுக்காக அடுத்தவங்க மேல புளுதி வாரி தூத்துற வேலயத் தான் செஞசுகிட்டு இருக்கு.

ஸ்டாப். ஸ்டாப். வளம போல சுத்தி வளக்காம ஸ்ட்ரெய்ட்டா வெஷயத்துக்கு வாங்க.

அதாவது அஹமது. இந்த உணர்வு பத்திரிக்க இருக்கே.. ... ..

ஓ நல்லா தெரியுமே. நமமாளு தமுமுகவுல இருந்து ஓடிப்போகும் போது சுருட்டிக்கிட்டு வந்தாரோ அது தானே.. .. ..

அதே தான். அந்த பத்திரிகைல இப்பல்லாம் தமுமுக தலைவர்கள தாக்குறதுக்கே பல பக்கங்கள யூஸ் பண்றாங்க. அந்த அடிப்படைல இப்போ தமுமுக பொதுச் செயலாளர தாக்கி பல பக்கங்கள்ல்ல அரைச்ச மாவவே அரைச்சுருக்காரு.

தமுமுகவோட பொதுச் செயலாளரப்பத்தி இன்னைக்கு நேத்தா எளுதுறாரு. 2004 இல பத்திரிக்கய எப்போ அப்பிக்கிட்டுப் வந்தாரோ அப்பய்லயிருந்து தான் எளுதி எளுதி மாஞ்சு போறாரு. ஆனா அவரு எளுதுறத நம்பத்தான் இப்போ ஆளுக கொறஞ்சு போயிட்டாங்க.

சரியாச் சொன்னீங்க அஹமது. இப்போ ஆளுக கொறஞ்சுகிட்டு போறதுனால, அதுலயும் குறிப்பா வல்லம் மீட்டிங்குக்கு அப்புறமா இவரு சொல்றத நம்புறதுக்கு ஆளுங்க இல்லாததுனால பக்கத்த நெறக்கிறதுக்காக என்னென்னமோ வித்த காட்டிப்பாக்குறாரு.

ஒமர் பாய். ஏற்கனவே இப்புடி மத்தவங்களப் பத்தி அக்கப்போர் எளுதுனதுனால பத்திரிக்க சர்குலேசனே கொறஞ்சு போச்சு, அதுக்காக வேற வல்லத்துல சலுகை வெலயில சந்தா சேர்த்துப் பாத்தாங்க. அப்பவும் யாரும் சீண்டாததுனால, இப்போ ஜுலை செயற்குழு வரைக்கும் நீட்டிச்சிருக்காங்க.

பரவாயில்லியே. நெறய தகவல் தெரிஞ்சு வச்சுருக்கீங்களே. இப்பவே 4 மாசத்துக்கு மேல கூவியே சந்தா சேரமாட்டேங்குது. இந்த லட்சணத்துல இப்புடி மத்தவங்களப் பத்தி எளுதிகிட்டு இருந்தா வருசம் பூரா சலுகை வெலைல குடுத்தாலும் பத்திரிக்க விக்காது.

சரி அத வுடுங்க. வேறென்ன சேதி வச்சுருக்கீங்க.

மழை விட்டும் தூவானம் வெடலங்குற மாதிரி இன்னமும் வல்லம் மேட்டரு தான்.. .. வேற ஒண்ணுமில்ல வல்லத்துல வைச்சிருந்த தடம் பொரண்டவங்க லிஸ்ட் பத்தித்தான்.

அதப்பத்தித்தான் கேள்வி நேரத்துல கேள்வி கேக்கப்பட்டு அல்தாபி கூட பதில் சொன்னதா சொன்னீங்களே.

ஜனங்க முன்ன மாதிரி இல்ல, அஹமது. முன்னாடிலாம் அண்ணன் சொல்லிட்டா அம்புட்டுதான். அதுதேன் வேத வாக்கு. அதபுடிச்சுக்கிட்டுத்தேன் ஒவ்வொருத்தனும் தொங்குவான். அண்ணன் பாஷைல சொன்னா வாந்தியெடுப்பான். இப்போ அந்த நெலம இல்ல. அதுனால அதே கேள்விக்கு மறுபடி மறுபடி பதில் சொல்ல வேண்டியிருக்கு.

இதுமாதிரி கேட்ட கேள்வியவே திரும்ப கேட்டா, கேஸட்ட வாங்கிக் கேளுங்கண்ணு வியாபார விளம்பரம் செய்வாங்களே. அப்புடி செய்யலியா.

கூத்து என்னன்ணா, இந்த கேள்வி மொதல்ல கேக்கப்பட்ட போது அதுக்கு பதில் சொன்னது பிஜே, மறுபடியும் கேக்கப்பட்ட போது பதில் சொன்னது அல்தாஃபி, அப்புறம் அதே கேள்வி வந்தபோது பதில் சொன்னது ரஹமத்துல்லாஹ். இதுல என்ன விசேஷம்னா, மூணு பேரும் சொன்ன பதிலு மூணு வெதமா இருந்தது தான்.

குர்ஆன் ஹதீஸ்லயே மாறுபட்ட கருத்துக்கள சொல்லக் கூடியவங்களாச்சே. அவுங்க மனோ இச்சைப்படி செஞ்ச இந்த வேலைக்கு எப்புடி ஒருமித்த கருத்த சொல்ல முடியும். அவுங்க அவுங்களுக்கு தோனுன மாதிரி அடிச்சு வுட்டிருப்பாங்க.

அதே தான். அதுலயும் ரஹ்மத்துல்லாஹ் சொன்ன பதில்ல பிஜே கேட்டிருந்தா அவரே ஆடிப்போயிருப்பாரு. அதாவது, அந்த லிஸ்ட்ல உள்ளவங்கள்லாம் தவ்ஹீது பிரச்சாரத்துல ஈடுபட்டிருக்காங்கலாம். அவுங்க சொல்லக்கூடிய வெசயங்கள்லாம் ஜமாத்துக்கு மாத்தமா இருக்காம். அதுனால அவுங்க பேசுறதக் கேட்டு அவுங்களும் ததஜவ சேர்ந்தவங்கன்னு யாரும் முடிவு பண்ணிடக் கூடாதுங்குறதுக்காக அப்புடி ஒரு லிஸ்ட் போட்டாங்களாம்.

உண்மையிலேயே சரியான தமாஷ் ஒமர் பாய். லிஸ்ட் போட்டது தவ்ஹீதுல இருந்து தடம் பொரண்டவங்கன்னு சொல்றதுக்கு. ஆனா அந்த லிஸ்ட்ல உள்ளவங்க தவ்ஹீத பரப்புறதுக்காக எவ்வளவு செரமப்பட்டாங்கன்னு தெரிஞ்சவங்க யாரும் இவுங்க போட்ட லிஸ்ட்ட ஏத்துக்க முடியாதுங்குறத அவுங்க ஆளுங்களே ஒத்துக்கிட்டாங்க போங்க. சரி இதுக்கு மேல வல்லத்தப் பத்தி பேசாம லேட்டஸ்ட்டா எதாவது இருந்தா சொல்லுங்க.

அதுவுஞ் சரிதான். ததஜவுல நடக்குற கூத்து தான் நாளுக்கு ஒரு வெதமா இருக்கே. புதுசாவும் பல வெஷயம் இருக்கு.

அதச் சொல்லுங்க மொதல்ல. ஜுலை 1 ஆம் தேதி பொதுக்குழு கூடுச்சாமே அது வெவரத்தச் சொல்லுங்க.

அதத்தான் சொல்லப் போறேன். ததஜ, அதிமுக லெவல்ல போயிட்டிருக்கு.

என்ன சொல்றீங்க ஒமர் பாய். அண்ணன் கால்ல எல்லோரும் வுளுந்து எந்திரிச்சாங்களா.

சேச்சே. அப்புடிலாம் எதுவுமில்ல. நான் அதிமுக ரேஞ்சுன்னு சொன்னவுடனே நீங்க இந்த அளவுக்கு யோசிக்கத் தேவ இல்ல. ஆனா பொதுக்குழுவுல புதுசா யாருக்காவது பதவி கெடய்க்குமுல. அத மாதிரி இங்கயும் பல பேருக்கு புதுசா பதவி கெடச்சுருக்கு.

அப்புடியா சேதி. யாரு அந்த அதிருஷ்ட சாலிங்க.

இதுவரைக்கும் எந்த நிர்வாகப் பதவியும் வகிச்சுறாத நம்ம சுலைமான் தான் இப்போ மாநில தலைவர்.

என்ன சொல்றீங்க ஒமர் பாய். பொதுச் செயலாளர் பாக்கரோட அவரு எப்புடி ஒத்துப் போவாரு. அவருக்கும் இவருக்கும் எப்பவும் ஆகாதே. நந்தினி வெவகாரத்துல பாக்கர பதவிய வுட்டு தூககணும்னு நின்னவராச்சே.

கொஞ்சம் பொறுமையா இருங்க அஹமது. முழுசா சொல்றதுக்குள்ள அவசரப்படாதீங்க. நீங்க நெனக்கிறமாதிரி உரசல்லாம் எதுவும் நடக்காது. ஏன்னா இப்போ பாக்கரு பொதுச் செயலாளர் இல்ல.

என்ன ஒமர் பாய். குண்டு மேல குண்டு போடுறீங்க. அவுங்க ரெண்டு பேரையும் வச்சுத்தான ததஜவையே BJP(பாக்கர் ஜெயினுலாபிதீன் பக்கீர்)னு சொன்னீங்க.

ஆமா அஹமது. இப்பவும் அது இல்லன்னு ஆகிப் போயிடுமா. இல்ல BJP (பிஜேபி) இரண்டு பேரும் ததஜவ வுட்டே போயிட்டாங்களா. ஒரிஜினல் (BJP)பிஜேபி ல அத்வானி மறுபடியும் தலைவரா ஆனது மாதிரி இங்கயும் நடக்காதுங்குறதுக்கு என்ன உத்திரவாதம்.

ஓ அப்புடிச் சொல்றீங்களோ. சுலைமானுக்கு என்ன அனுபவம் இருக்குனு யோசிச்சேனே இல்லாம, அதயே காரணமா வச்சு மறுபடியும் அவரு தலைவரா ஆவாருன்னு யோசிக்கலியே.

அதுமட்டுமில்ல அஹமது. இப்பவும் கூட நம்ம திருவாரூர் தளபதி குத்புதீன் மாதிரி ஆளுங்களுக்கு பதவி குடுக்கல்ல. அவரு பாவம் இன்னமும் பிஜே வ நம்பிக்கிட்டு அவருக்காக ஓடிக்கிட்டு இருக்காரு.

எனக்கு ஒரு சந்தேகம் ஒமர் பாய். இரண்டு பேருல யாராவது ஒருத்தராவது நிர்வாகத்துல இருந்திருக்கலாமே. ஏன்னா தமுமுகவுல இருந்து அனுபவம் பெற்று ஓடிவந்த மும்மூர்த்திகள்ல்ல அலாவுதீன் மொதல்லயே களிச்சு கட்டிட்டாங்க. இப்போ இவுங்க ரெண்டு பேரும் சேர்ந்து தனியா நிக்கிறதப் பாத்தா டவுட்டா இருக்கே.

ஒரு புண்ணாக்கும் இல்ல அஹமது. பொதுக்குழுவுல வல்லம் பெயிலியரப்பத்தி காரசாரமா பேச்சு வந்திருக்கு. அதுக்கு வசூல் பண்ணுன தொகை, வசதிகள் ஒண்ணும் பண்ணாம சுருட்டிக்கிட்டதுன்னு ஏகத்துக்கு எல்லோரும் எகிறவுடன வேற வழியில்லாம இரண்டு பேரும் எறங்கி ஓடிட்டாங்க போல.

அதுமட்டுமில்ல. நான் என்ன நெனச்சேன்னா, முதல்ல ஒரு வாட்டி பாக்கர பதவியில இருந்து எறக்கி வுட்டதுனால பிஜேவுக்கு வந்த நெருக்கடிய வச்சு பாக்கும் போது, பாக்கர எறக்கணும்னா தானும் எறங்குறதத் தவிர வேற வழியில்லன்னு ஆகிப் போனதுனால பிஜே எறங்கியிருப்பாரோன்னு தோணுது.

அதாவது சின்ன வயசுல படிச்ச தொப்பி வியாபாரியும் குரங்கும்ங்கிற கத மாதிரி

ஹா ஹா. சரியாச் சொன்னீங்க ஒமர் பாய்.

சரி அஹமது நேரமாச்சா. பெறகு சந்திப்போம். வஸ்ஸலாம்

முல்லா 09.07.2008

0 Comments:

Post a Comment

<< Home