Tuesday, May 04, 2010

முத்துப்பேட்டையில் அரசுப் பேருந்து மீது கல் வீச்சு

முத்துப்பேட்டையில் அரசுப் பேருந்து மீது கல் வீச்சு

திருத்துறைப்பூண்டி, மே 1:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அரசுப் பேருந்து மீது கல் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை வழியாக பட்டுக்கோட்டைக்கு அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பேருந்தின் மீது கல் வீசித் தாக்கினர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 Comments:

Post a Comment

<< Home