Friday, March 31, 2006

நான்காம் கிளாஸ் கூறும் சட்ட விளக்கம்

தேர்தல் திருவிழா தமிழகத்தில் களை கட்டிவிட்டது.

தமிழக முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்று தனியார் தொலைகாட்சியில் ததஜ தலைவர்
தோன்றி உரையாற்றினார்.

இதுநாள் வரை மார்க்க பிரச்சனைகளானாலும், சமுதாய பிரச்சனைகளானாலும், மிகத்
தெளிவாக பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் உரையாற்றும் அவர், தற்சமயம் ஏன்
இந்தளவு தள்ளாடினார் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

அவரது ஒரு மணி நேர உரையில், காங்கிரஸ் முதல் திமுக வரை சகலரையும் சகட்டு
மேனிக்கு விளாசியவர், அதிமுகவிற்கு மட்டும் சாமரம் வீசியது ஏன் என்பது தான்
விளங்க வில்லை.

முடிவாக அதிமுக அணியை ஆதரிக்க வேண்டும் என்று அனைவருக்கும் வேண்டுகோள்
விடுத்தார். ஆனால் ஏன் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு தெளிவான விளக்கம்
எதையுமே எடுத்துக் கூறவில்லை.

திரும்ப திரும்ப மற்ற கட்சியினரை சாடியவர், அதிமுக அரசு அந்திம காலத்தில்
அறிவித்த ஆணையை அளவுக்கதிகமாக புகழ்ந்தார்.

நமது கேள்வியெல்லாம்,

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, ஜெயலலிதாவை (அதிமுகவை) எதிர்க்க எதையெல்லாம்
காரணமாக கூறினாரோ அவற்றில் ஒரே ஒரு அம்சம் குறைந்து, அதே
சமயம் எண்ணற்ற புதிய அம்சங்கள் இணைந்திருக்கும் வேளையில் அதிமுகவை ஆதரிக்கச்
சொல்வதன் மர்மம் என்ன?

பாராளுமன்றத் தேர்தலின் போது பிஜேபி உடன் அதிமுக இணைந்திருந்தது. இந்தத்
தேர்தலில் பிஜேபி யை விட்டு விலகியுள்ளது உண்மை. ஆனால் பிஜேபி
கொள்கையிலிருந்து விலகியுள்ளாரா என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் உண்மை.

அப்பாவிகளுக்கு கூட விசாரணையைத் தொடங்காமல், ஜாமீன் அளிக்காமல் சிறையிலேயே
சித்திரவதை செய்வது, மதமாற்றத் தடைச் சட்டத்தை இன்றுவரை வாபஸ் பெறாமல்
இருப்பது போன்றவை அவரது முஸ்லிம் எதிர்ப்பு சாதனையில் 2004க்குப் பிறகு
சேர்க்கப்பட வேண்டியவைகள்.

இத்தனைக்குப் பிறகும் அதிமுகவை ஆதரித்து ஆக வேண்டியது அவசியம் என்பதற்கு ததஜ
தலைவர் கூறும் காரணம் சர்ச்சைக்குரிய அந்திமகால அரசு ஆணை.

இந்த அரசு ஆணையின் அவலட்சணத்தை பலர் எடுத்துரைத்து விட்டனர். அவர்களில்
குறிப்பிடத்தக்கவர்கள் சகோ. சிராஜுத்தீன், பாஸ்டர் சின்னப்பா மற்றும்
கருஞ்சட்டை தோழர் மானமிகு வீரமணி அவர்கள். இவர்களில் சகோ. சிராஜுத்தீனும்
வீரமணியும் சட்டம் பயின்றவர்கள்.

சட்டம் பயின்றவர்கள் இந்த அரசு ஆணையின் குறைபாடுகளை சுட்டிக் காட்டும் பொழுது,
பள்ளிப் படிப்பை தாண்டாத தலைவர், தனது வாதத்திறமையால் சப்பைக்கட்டு கட்டுவது
ஏன்? விளக்க வேண்டியது அவரது கடமை.

இது வரை அவரது தரப்பிலிருந்து படித்த மேதைகளோ அல்லது சட்ட வல்லுனர்களோ இந்த
ஆணையை ஆதரித்து பேசாததிலிருந்தே, இந்த ஆணை ஒரு குப்பைதான் என்பது ஐயமின்றி
தெளிவாகிறது.

சமூகத்திற்கு தீங்கிழைப்பவர்களை அவர்களது செயல்களைக் கொண்டே அடையாளம் காட்டிய
வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்.

அன்புடன்

உம்மு ஹாஜரா 01.04.2006

2 Comments:

At 10:24 PM, Anonymous Anonymous said...

உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாகவுள்ளது. தமிழ் தகவல் தொழில் நுட்பத்தில் வலைதளம் மூலமாக பல அரிய தகவல்கலளை தந்து எங்களை உற்சாகத்தில் ஆழ்த்திகொண்டிருக்கின்றீர்கள். மிகவும் நன்றி!
VIST WWW.MUTHUPET.COM

 
At 10:25 PM, Blogger abdulkasim said...

உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாகவுள்ளது. தமிழ் தகவல் தொழில் நுட்பத்தில் வலைதளம் மூலமாக பல அரிய தகவல்கலளை தந்து எங்களை உற்சாகத்தில் ஆழ்த்திகொண்டிருக்கின்றீர்கள். மிகவும் நன்றி!
www.muthupet.com

 

Post a Comment

<< Home