Tuesday, September 26, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 3

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)

வஅலைக்கு முஸ்ஸலாம். வாங்க உமர் என்ன சோர்வா இருக்குறாப்ல இருக்கு. தல நோன்புன்னா?

அதெல்லாம் இல்லீங்க அஹமது பாய். நம்மளப் போட்டு பின்னி எடுக்கிறாங்க அதான் கொஞ்சம் டயர்டா இருக்கேன்.

என்ன உமர் ! யாரும் உங்கள டார்ச்சர் பண்றாங்களா. அதுக்கு ஏன் நீங்க கலங்குறீங்க. நம்ம தலமைல சொல்லி ஏதாவது ஆர்ப்பாட்டம் நடத்தி நம்ம பொதுச் செயலாளர் பாக்கர வுட்டு கலக்கிறலாமே.

என்னங்க அஹமது அலி. உண்மையிலேயே வெவரம் எதுவும் தெரியாம தான் பேசுறீங்கள. இல்ல நீங்களும் என்னய கிண்டல் பண்ணிப் பாக்குறீங்களா.

சே! சே! அப்புடியெல்லாம் தப்பா நெனக்காதீங்க. வெவரத்தை சொல்லுங்க.

என்னத்த சொல்றது. ஜெயலலிதா ஆண்டிப்பட்டில பேசுன இஸ்லாமிய எதிர்ப்பு பேச்சுக்கே நாம என்ன சொல்றதுன்னு புரியாம வாயடச்சு போய் நின்னோம். இப்போ என்னடான்னா நம்ம பாக்கர் இங்க துறைமுகம் மீட்டிங்ல பேசுனத வச்சு தமுமுககாரன் கொடயுறான்.

அப்புடி என்னதான் சொன்னாரு நம்ம பொதுச் செயலாளரு?

'அன்றய பெண்களும் இன்றய பெண்களும்' ன்னு ஒரு தலைப்புல பேசும் போது நபி (ஸல்) அவுங்களோட மனைவிமார்கள கௌவிகள்ன்னு சொல்லிட்டாரு. அதப்போயி கவனிச்சு இப்போ பெரும் பிரச்சன பண்றானுவ.

இது என்னங்க இது அநியாயமா இருக்கு. அவரு ஏதோ பேச்சு பராக்குல ஒரு தடவ சொல்லியிருப்பாரு இதயுலாமா பெரிசுபடுத்துவாங்க.

அப்படியும் சொல்ல முடியாது அஹமது அலி. நம்மாளு பாக்கரு மருபடியும் மருபடியும் கௌவிகள் தான்னு சொல்றத நானே கேட்டேனே.

அடடா. அப்டீன்னா - தெரியாம பேசிட்டேன் ஸாரின்னு பாக்கர் சொல்லிற வேண்டியது தானே. அது எப்படிங்க முடியும், இன்னைக்கி இத ஒத்துக்கிட்டா, இப்புடி ஒவ்வொண்ணா தமுமுககாரன் கேக்குறதயெல்லாம் ஒத்துக்கிட்டு போவச் சொல்லுவீங்க போல இருக்கே. வரவர நீங்க யாரும் அவனுகளுக்கு பதிலே எழுதுறதில்லை. நான் ஒருத்தன் மட்டும் கெடந்து மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கேன். ஆனாலும் இதுல ஏந்தான் மூக்க நொளச்சோமோன்னு இப்ப கவலையா இருக்கு.

அட இதுக்குப் போயி கவலைப்படலாமா? அண்ணன் பிஜேட்ட சொன்னா, வசமா குர்ஆன் ஹதீஸோட இந்த பிரச்சனய எடுத்துப்போட்டு, அதுக்கு சம்பந்தமில்லாத வெளக்கத்த குடுத்து சுத்திவுட்டுட மாட்டாரா. அல்லது வழக்கம் போல தமுமுககாரன் பேர்ல என்னமாவது ஒரு கப்ஸாவ அவுத்து வுட்டுட மாட்டாரா. நீங்க கவலப்படாம அவருக்கு போன் போட்டு பேசுங்க.

ஹ்ஹா..... அஹ்மது பாய். இதுவும் கூட அந்த தமுமுககாரனுகளுக்கு தெரிஞ்சு போச்சு போல. அப்துல்லாஹ்ங்கிறவர் எழுதியிருக்குற மெயில்ல, உளறுவாய் உமரோ (அதாவது என்னயத்தான்) அல்லது அவருக்கு எழுதிக் குடுப்பவரோ அல்லது எழுத அனுமதிப்பவரோ (அதாவது பிஜேவ) அப்டீன்னு எழுதியிருக்காரு. இதாவது பரவாயில்ல. எப்போதும் போல கண்டுக்காத மாரி விட்டுடலாம். ஆனா வேற ஒரு கேள்வி கேட்டுருக்கானுக பாருங்க. நாமெல்லாம் மூட்ட முடிச்ச தூக்கிக்கிட்டு எங்காவது அகதியா போயிரனும்.

அட ஏன் அலுத்துக்கிறீங்க, அப்டி என்ன கேட்டுட்டானுவ.

உம்மஹாத்துல் முஃமீன்களை தரக்குறைவாக பேசி, அதனை கொஞ்சங்கூட வெட்கப்படாமல் உலகம் முழுவதும் டிவி இல் ஒளிபரப்பிய நீ, பெட்டி வாங்கிக் கொண்ட நன்றிக்கடனாக நாடறிந்த நடிகையான ஜெயலலிதாவை பொதுமேடையில் மிக பணிவாக, மரியாதையாக அம்மா என்று அன்போடு அழைக்கிறாயே, தைரியமிருந்தால் பொதுமேடையில் ஜெயலலிதாவை கௌவி என்று குறிப்பிட்டு பேச முடியுமா - இது பயங்கரவாதி பாக்கருக்கும் உளறுவாய் உமருக்குமான சவால்னு எழுதி மெரட்டுறானுக.

சரி சரி உமர் பாய் எனக்கு வேலையிருக்கு நான் வர்றேன்.

வஸ்ஸலாம்

முல்லா 26.09.2006

0 Comments:

Post a Comment

<< Home