Saturday, May 12, 2007

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 15

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே வாங்க ஒமர் பாய் என்ன இவ்வளவு சுருக்கா வந்திட்டீங்க.
என்னங்க அஹமது. வரலைன்னாலும் கோவிச்சுக்கிறீங்க. வந்தாலும் சலிச்சுக்கிறீங்க.

சரி சரி ஒமர் பாய் ஒங்க வேலய ஆரம்பிங்க.

என்னத்தங்க அஹமது ஆரம்பிக்கிறது. நம்மாளுங்க தான் வக்பு வாரிய விஷயத்தை ஆரம்பிச்சுட்டு முடிக்க முடியாம எளுதிகிட்டு இருக்காங்களே.

ஓ. இன்னைக்கு வக்ப்லயே ஆரம்பிக்கலாம்ங்கிறீங்க. என்னங்க செய்யுறது நாம ஆரமிச்ச அம்மா மண்ண கவ்விட்டாங்க. அவுங்கள்ட்ட பெட்டி வாங்குன விசுவாசத்துக்காக இடஒதுக்கீடு விஷயத்துல அம்மா ஆர்டரே போட்டா மாதிரி அலப்பற பண்ணுனோம். ஒருவேள ஜெயிச்சுருந்தா அத வச்சே என்னவாச்சும் வாங்கியிருக்கலாம். இப்ப என்ன பண்ண முடியும். அடுத்தவன பார்த்து வயிறு எரியத்தான முடியும்.

அதுக்காக இப்புடியா. போறபோக்குல பாத்தா வயிறே தீஞ்சுடும் போல இருக்கே.

சரி இப்ப என்ன எளுதிட்டாங்கன்னு சொல்ல வந்துட்டீங்க.

இதுவர அந்த பதவிக்கு வந்தவங்க யாரும் இவர மாதிரி கூட்டங்கள் நடத்தலயாம்.

அடப்பாவமே. அப்ப என்ன மத்தவங்க மாதிரி இவரும் செயல்படாம இருக்கணும்கிறாங்களா எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் இந்த பொறுப்புக்கு மக்களோட தொடர்பு வச்சுருக்கிற யாரும் வந்ததா தெரியல. இதுவரைக்கும் இருந்தவங்கள்ளாம் அந்தந்த கட்சி தலைவருங்களுக்கு மட்டும் தெரிஞ்ச ஆளா இருப்பாரு. அதுனால அவர யாரும் கண்டுக்க மாட்டாங்க. அவரும் யாரையும் கண்டுக்க மாட்டாரு. அவரவர் பாணியில் வக்ப் சொத்த சாப்டுட்டுப் போயிருவாங்க. இப்பத்தான் முதல் முறையா மக்களோடு தொடர்புள்ள ஒருத்தரு வந்துருக்காரு. மத்தவங்க மாதிரி பாராட்டுக்கூட்டம் போடலன்னாலும் பேசாம இருந்துட்டுப் போலாமே. இப்புடியெல்லாம் எளுதுனா அப்புறமா நம்மள எவனுமே கண்டுக்க மாட்டான்.

பரவாயில்லையே. அஹமது பாய் இப்போ நீங்களும் வௌரமா பேச ஆரம்புச்சுட்டீங்கலே. ஆனா நம்ம அண்ணன் அவ்வளவு வௌரமில்லாதவரா. அவரு நெனக்கிறத எல்லாம் வேற யாரோ வாசகன் எளுதுனாமாதிரி வாசகர் கடிதத்துலயோ அல்லது கேள்வி பதில்லயோ தானே போடுவாரு. அப்புறமா அத மாத்திகலாம்ல.

அடப்போங்க. ஒமர் பாய். என்னமோ அண்ணன் கொள்கைல உறுதியா நிக்கிற மாதிரில பேசுறீங்க. தமுமுகவுலயிருந்து வெளியேறுனதுல இருந்து எத்தன விஷயத்த எத்தன பேர்ட்ட எத்தன எடங்கள்ள மாத்தி மாத்தி பேசுனாருன்னு ஒங்களுக்கு மறந்து போச்சா.

சரி அத வுடுங்க. இப்ப கவிஞர் சல்மாவ நம்மாளுங்க சப்போர்ட் பண்ண ஆரம்புச்சுட்டாங்க தெரியுமா.

அது சரி. எந்த விஷயத்துக்காக.

எல்லாம் வாரியம் விஷயமாத்தான். சல்மாவுக்கு வாரியம் கெடச்சுருக்காம். ஆனா அவுங்க ஒண்ணும் கூட்டம்லாம் போடாம அமைதியாக பணி செய்றாங்களாம்.

ஏன் ஒமர் பாய் நம்மாளுங்களே முன்னால நின்னு பாராட்டு கூட்டம் நடத்தட்டுமே. எல்லாம் நம்ம அண்ணன் பண்ற வேல. அவரு எலக்சன் டயத்துல கருணாநிதிய திட்றதுக்காக மோடியவே நல்ல ஆளுன்னு சர்டிபிகேட் குடுத்தார்ல. அத மாதிரி நம்மாளுங்க எளுதியிருப்பாங்க.

அடடே. அஹமது. எலக்சன் பேச்சயெல்லாம் ஞாபகம் வச்சுருக்கீங்களா. நீங்க நான்லாம் மறந்திருப்போம்னு நெனச்சு இந்த வாரம் குஜராத் போலி என்கவுண்டர் பத்திலாம் செய்தி போட்டிருக்காங்கலே.

ஏன் இப்பவும் குஜராத் மோடியோட ஆட்சியில அங்க முஸ்லிம்கள் அமைதியா இருக்காங்கன்னு செய்தி போடச் சொல்றீங்களா. எலக்சன் டயத்துல பேசிட்டு வாங்கி கட்டிக்கிட்டதே போதும் போங்க.

சரி அத வுடுங்க. நுபார்தீன் விஷயமா எளுதியிருக்காங்கலே பாத்தீங்களா.

ஆமா அஹமது. எதயுமே நாம ஞாபகம் வச்சுக்க மாட்டோம்ங்கிற தைரியத்துலதான் இப்புடிலாம் எளுதுறாருன்னு நெனக்கிறேன். அவர விவாதத்துக்கோ, முபாஹலாவுக்கோ கூப்டுறவங்கள்ட்ட இருந்து தப்பிக்க இப்புடிதான மாத்தி மாத்தி சொல்லி நம்மள தலயாட்ட வச்சுட்டாரு.

இப்ப மட்டும் என்ன கிளிச்சுட்டீங்க. இப்பவும் அவரு எளுதியிருக்குறத படிச்சுட்டு சும்மதான இருக்கோம்.

என்னங்க செய்றது. இதுலஇருந்து வெளியேற முடியாமத்தான முளிச்சிக்கிட்டு இருக்கோம். பரவாயில்லை நீங்க மறந்துருப்பீங்கன்னு நெனச்சேன். இவரு சுனாமி விஷயமா தமுமுகவ வம்புக்கு இழுக்கும் போது இப்புடித்தான் எடத்தையும் நேரத்தையும் இவரே முடிவு பண்ணுனாரு. இப்ப முஜீபு ரஹ்மான் அத கேக்காம நுபார் விஷயமா கேட்டவுடன் விவாதம், முபாஹலான்னு மறுபடியும் குண்டக்க மண்டக்க ஒளறி வச்சுருக்காரு போங்க.

இதாவது பரவாயில்லை ஒமர் பாய். நம்ம அண்ணன் மனசுல பொதஞ்சு போயிருக்குற எரிச்சல எல்லாம் வாசகர் இக்பால்ங்குற பேருல எளுதியிருக்காரு பாருங்க. அதுதான் ரொம்பவும் அசிங்கமா இருக்கு. இப்புடிலாம் எளுதுனா இருக்கிற கொஞ்ச நெஞ்ச மரியாதயும் கெட்டுத்தான் போகும் போங்க.

என்ன அஹமது. நாங் கவனிக்காத விஷயம் மாதிரி தெரியுது.

அட ஆமாங்க. இந்த வார பத்திரிக்கைல தமுமுக தலைவரு இன்டர்நெட்லாம் தெரியாம இருந்தாரு நம்மாளுதான் அவருக்கு சொல்லிக் குடுத்தாருன்னு வெளியிட்டிருக்காங்க.

திஸ் இஸ் டூடூ மச்சுங்க அஹமது. நம்மாளு நாலாவதே தாண்டாதவரு. தனக்கு இங்கிலீசுலாம்; தெரியாதுன்னு கோர்ட் படியேறி நீதிபதி முன்னால ஒப்புக்கிட்டவரு. ஆனா தமுமுக தலைவர் இன்டெர்நெட் மற்றும் மீடியா பத்தி ஆராய்ச்சி கட்டுரையே தயாரிச்சவரு. அவருக்குப் போயி நாந்தான் இன்டெர்நெட் படிச்சுக் குடுத்தேன்னு இவரு சொன்னாருன்னா அத மாதிரி ஒரு கிறுக்குத்தனம் எதுவுமிருக்க முடியாது. ஒருவேளை இது வேற யாரோ எளுதுனதா இருந்தாலும் அத போட்டிருக்கக் கூடாது. ஏன்னா எங்கள்ட்ட உள்ளவங்கள்ளாம் இப்புடிப்பட்ட அரகொறதான்னு நாமளே டமாரம் அடிச்ச மாதிரி ஆகிப்போச்சுல்ல அதுக்குத்தான்.

எப்புடியோ, தன்னோட வஞ்சத்த எல்லாம் நம்ம தலைல திணிக்கிறாரு போங்க.

அந்த காலம் இப்போ மாறிக்கிட்டு வருது அஹமது. கடலூர் விஷயம் தெரியும்ல.

தெரியலியே என்ன அது.

அப்ப கொஞ்சம் யோசிச்சிக்கிட்டு இருங்க. மறுபடியும் சந்திக்கும் போது விபரமா சொல்றேன்.

வஸ்ஸலாம், முல்லா 13.05.2007

0 Comments:

Post a Comment

<< Home