Friday, May 11, 2007

கடலூரில் கிழிந்த பிஜேயின் கண்ணியம்


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பி.ஜே

கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும்.
கடலூர் மாவட்ட ததஜவின் சம்பவம் நமக்கு இதைத்தான் நினைவுபடுத்துகிறது. பத்திரிக்கை செய்தியைப் பார்த்த நமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. காரணம், 2004 ஏப்ரலில், மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை தரைமட்டமாக்கும் தரங்கெட்ட எண்ணத்துடன் அரசியல் செய்து வெளியேறியதிலிருந்தே நாம் சமுதாய சொந்தங்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தோம்.

தமுமுகவை சீர்குலைக்க நாடியதன் மூலம், இஸ்லாமிய சமுதாயத்திற்கே பேரழிவை நாடியவர் தான் இந்த பசுந்தோல் போர்த்திய புலியான பிஜே என்பதனை காலங்கடந்தாவது கடலூர் மாவட்ட ததஜவினர் புரிந்து கொண்டனர். தமிழகத்தின் பிறபகுதியினரும் விரைவில் மயக்கத்திலிருந்து மீள துஆச் செய்வோம்.

பாக்கர் விஷயத்தைப் பொறுத்தவரை, அவர் மீது நடவடிக்கை எடுத்து விட்டதாக ததஜவினர் கூறிய பொழுது நாம் கேட்ட கேள்வி, 'எத்தனை நாளுக்கு?' என்பது தான். பாக்கரின் லீலைகள் பலமுறை வெளிப்படும், அப்பொழுதெல்லாம் அதனை மூடி மறைப்பதில் கவனம் செலுத்திய கனவான் பிஜே, இப்பொழுது நடவடிக்கை எடுத்ததாக கூறிய பொழுது நம்மால் நம்ப முடியாமலே இருந்தது.

ஏனெனில் ஆரம்ப கால தமுமுகவின் நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்ய வாங்கிக் கொடுக்கப்பட்ட உபகரணங்களை உபயோகித்து பதிவு செய்யப்பட்ட வீடியோ கேஸட்களை பாக்கரின் நிறுவனமான மீடியா வேர்ல்ட் காப்பிரைட் உரிமை கொண்டாடிய பொழுது, இதனை துபாய்காரர் கேள்வி கேட்ட பொழுது, பாக்கருக்காக பரிந்து பேசியவர் இந்த நவீன (குரு) பீர் பிஜே தான்.

அன்று முதல் இன்றுவரை பொதுச் சொத்தை கபளீகரம் செய்வதில் கைகோர்த்துள்ள கனவான்களில் ஒருவர் மீது மற்றவர் நடவடிக்கை எடுத்தார் எனில் எப்படி நம்ப முடியும். அதனால் தான் நாம் கேட்டோம் எத்தனை நாளைக்கு இந்த நடவடிக்கை என்று.

நாம் எதிர்பார்த்தது போலவே பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளரானார். இதனை கடலூர் சகோதரர்கள் எதிர்பார்க்க வில்லை போலும். அதனால் தான் கொதித்தெழுந்துள்ளனர். ஆனாலும் அன்று நடவடிக்கை ஏன் எடுத்தோம் என ஆடியோவில் உரையாற்றும் பொழுது ஆணித்தரமாக பேசி அசர வைத்த கிரிமினல் தலைவர் இன்று அசடு வழிந்துள்ளார்.

திருச்சியில் ஜுலை போராட்டம் பற்றி விவாதிக்கத்தான் கூடினார்களாம். அதில் ஒரு துணை அஜண்டாவாக பாக்கருக்கு பதவி அளிப்பது குறித்து பேசினார்களாம். கரம் உயர்த்தி ஆதரவு கேட்கப்பட்டு அதனடிப்படையில் பதவி வழங்கப்பட்டதாம்.

காதுகளில் பூப்பந்து அல்ல பூந்தோட்டத்தையே பதியன் செய்வது தான் பிஜேயின் தனித்தன்மை. பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு இவர்கள் அறிவித்தது தண்டனையே அல்ல என்று இப்பொழுது பேசும் பிஜே, அன்று பாக்கர் நீக்கப்பட்ட விபரம் குறித்து பேசிய பொழுது தவறு நடந்திருக்க வாய்ப்பிருந்திருப்பதால் அவர் பதவி விலகுவது தான் நியாயம் என நாங்கள் எண்ணினோம். அவரும் ஒப்புக் கொண்டதால் பதவியைத் துறந்து சாதாரண தொண்டாக இருந்து களப்பணியாற்ற சம்மதித்துள்ளார் என முழங்கினார்.

ஆனால் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. பதவி மோகமில்லாத பாக்கரும் பணிவுடன் பறிக்கப்பட்ட பதவியை சூழ்ச்சியின் மூலம் மீண்டும் பெற்றுக் கொண்டார்.


இது விஷயத்தில் நியாயமாக எழும் சில கேள்விகளை நாம் எழுப்பியிருந்தால் அதனை அவதூறு என தனது சீடர்களிடம் அடித்துச் சொல்லி அதன் மூலம் அனுதாபம் பெற்றிருப்பார். ஆனால், எதிர்பாராத தருணத்தில் கடலூரிலிருந்து இக்கருத்து புறப்பட்டு வந்ததும் கதிகலங்கிப் போய் பொதுக்குழு என்ற பெயரில் பொதுமக்கள் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்சனை குறித்து அறியாத மக்கள் முன்னிலையில் மற்றவர்களை மட்டம் தட்டி ஏளனம் செய்து தனது மாநில தலைவர் எனும் கணையை வீசி கேள்வி கேட்டவர்களை விலக்கியுள்ளார்.

கடலூர் (முன்னாள்) ததஜவினர் கேட்ட கேள்விக்கு இந்த நவீன ஆபூஜெஹல் அளித்த பதிலைப் படித்தால், இவரையா பேரறிஞர் என எண்ணிக் கொண்டிருந்தோம் என எஞ்சியுள்ளவர்கள் வெட்கித் தலைகுனியும் வண்ணம் விளக்கமளித்துள்ளார்.

(கடலூர் சகோதரர்களின் கேள்விகளை காண இங்கே சொடுக்கவும்)

பக்கம் -1, பக்கம் -2, பக்கம் -3, பக்கம் -4

இந்த கேள்விகளை இதுவரை கேட்காமலிருந்த ஏனைய ததஜ நிர்வாகிகளும் ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தாங்கள் உண்மை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக் கொள்வதை உடனடியாக நிறுத்துவார்களா?

இத்தகைய கேள்விகளை கேட்க முன் வராதவர்கள் பாவத்தின் பங்காளிகள் என உணர்ந்து கொள்வார்களா?

தமுமுகவை உடைக்க நாடியதிலிருந்து பாக்கர் (கோவில் பட்டி) விஷயம் வரை எத்தனை விஷயங்களில் நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறி மாறி பல்டியடித்து அரசியல்வாதிகளையே அசர வைத்துள்ளார் என இப்பொழுதாவது ததஜவின் அடிவருடிகள் எண்ணிப் பார்ப்பார்களா?

இல்லை. எங்களுக்கு எதுவும் விளங்காது. எதுவாக இருந்தாலும் அண்ணன் சொல்றாரு அடிவருடி நாஞ் செய்றேன்னு வால் புடிச்சு தக்லீதின் அடித்தட்டிலேயே வீழ்ந்து கிடக்கப் போகிறார்களா. பொறுத்திருந்து பார்ப்போம்.

தேவைப்பட்டால் மீண்டும் அனைத்தையும் நினைவூட்டுவோம்.

அனைத்து சகோதர்களும் நேர்வழி பெற வேண்டுமென்பதற்காகவே இதனை எழுதியுள்ளோம்.

வஸ்ஸலாம், ராவுத்தர் 12.05.2007

0 Comments:

Post a Comment

<< Home