Sunday, April 02, 2006

சுனாமி எழுப்பும் சிந்தனை அலைகள்:

டிசம்பர் 26-2004.

உலக மக்களுக்கு வல்ல இறைவனின் சக்தியை உணர வைத்த நாள்.

மதங்களை கடந்து மனிதாபிமானத்துடன் மக்கள் அனைவரும் ஒன்றாக கலந்த நாள்.

ஆனால், துரதிஷ்டவசமாக ஒவ்வொன்றிலும் சுயஇலாபம் தேடும் அரசியல் வாதிகள் நம்மிடம் இருக்கிறார்களே, என்ன செய்வது, அடுத்தவர்களின் நலப்பணிகளை தான் செய்வதாக கூறும் சிலர், இயற்கை சீரழிவுகளை காட்டி, மக்களின் இரக்க உணர்வை தூண்டி அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டும் பலர், மற்றவர்களை குறை கூறி தங்களது தவறுகளை மறைத்துக் கொள்ளும் சிலர், இவர்களுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முறையான வங்கி கணக்கு மூலம் வசூல் செய்து, அதனை தேவை யுடையவர்களுக்கு பிரித்தளித்து, தனது வரவு செலவுகளை அரசுக்கும், வசூலித்து அளித்த ஆர்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவாக ஒப்படைத்த ஒரு இயக்கம் என பலதரப்பட்டவர்களையும் அடையாளம் காண சுனாமி துணையாகிப் போனது.

மேற்குறிப்பிட்ட வகையினரில் இஸ்லாமிய இயக்கங்களும் அடங்குவர்.

இஸ்லாமிய இயக்க ஒற்றுமையை சீர்குலைத்து தனி இயக்கம் கண்ட மார்க்க அறிஞர் ஒருவர், தனது தனிநபர் பகையை தீர்த்துக் கொள்ள, கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிறர் மீது பழி சுமத்தினார். இவரால் பழி சுமத்தப்பட்ட தமுமுகவோ, முறையான வங்கிக் கணக்கு வைத்திருந்ததனால், அரசு தணிக்கை அதிகாரி மூலம் சான்றிதழ் பெற்று பொதுமக்கள், இயக்க ஆதரவாளர்கள் மற்றும் சமுதாய பிரமுகர்கள் மத்தியில் வைத்து கணக்குகளை வெட்ட வெளிச்சமாக்கி தங்களது தூய்மையை நிரூபித்து, நம்பகதன்மையை தக்க வைத்துக் கொண்டனர்.

ஆனால் இதனை எதிர் பார்க்காததனாலோ என்னவோ, தமுமுக சமர்ப்பித்த கணக்கில் குறைகாண முடியாமல், கணக்கு சமர்ப்பிக்கப்பட்ட முறையை குறை கண்டார். தான் நியமித்த குழுவின் முன், தான் அறிவித்த இடத்தில் சமர்ப்பிக்காமல் தமுமுகவே இடம் தெரிவு செய்து கணக்குகளை வெளியிட்டதை பகல் வேஷம் என்றார். கணக்குகளை தணிக்கை அதிகாரி தணிக்கை செய்திருந்தும் அவை முறையற்றது. தான் கூறிய தலைவர்கள்
தணிக்கை செய்வது தான் சிறந்தது என்றார். அன்று (டிசம்பர்10, 2005) மிலன்
மண்டபத்தில் கூடியது தமுமுககாரர்கள் மட்டுமே, பொதுமக்கள் முன்னி லையில் கணக்கு காட்டியிருக்க வேண்டும் என்றார்.

நாம் இங்கு குறிப்பிட்டுள்ளவை மிகச் சிலவே. எண்ணற்ற குற்றச்சாட்டுகளை தமுமுக மேல் தொடர்ந்து சுமத்தினார். இந்திய இயக்கங்களின் வரலாற்றில் பொதுமக்கள் முன்னிலையில் கணக்கு வழக்குகளை சமர்ப்பித்த ஒரே இயக்கம் தமுமுக மட்டுமே என எதிரிகளின் ஊடகங்கள் கூட மனம் திறந்து பாராட்டிய வேளையிலும் பிஜே மட்டும் தான் கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக, தமுமுகவின் செயல்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் மோசமாக அவதூறாக உண்மைக்கு மாற்றமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்படிப்பட்டவர், கடந்த 26.02.2006 இல் சென்னையில் ஒரு ஹோட்டலில் தனது சிறப்பு செயற்குழுவைக் கூட்டி தனது இயக்கம் சார்பாக வசூலிக்கப்பட்ட சுனாமி நிதியின் வரவு செயவு கணக்கை சமர்ப்பித்ததாக பத்திரிக்கை செய்தி கூறுகிறது.

அடுத்தவர்களின் முதுகையே ஆராய்ச்சி செய்வதால் அவரது முகத்தில் படிந்துள்ள அவலட்சணங்கள் அவருக்குத் தெரிவதில்லை. தமிழகத்தில் அதிமுகவிற்கு அடுத்தபடியாக இவரது இயக்கத்தவரும், தங்களது தலைவரின் குறைகளை சுட்டிக்காட்ட துணிவதில்லை. துணிந்தால் என்ன நடக்கும், துணிந்தவர் தூக்கியெறியப்படுவதுடன், உலக மீடியாவில் பாரதூரமான குற்றச்சாட்டுகளை அள்ளி வீச தலைவர் தயங்கமாட்டார் என்பதால் எவருக் கும் துணிவு வருவதேயில்லை. இந்த விஷயத்தில் பிஜேவும் ஜெஜெவும் ஒன்றே என்பதால் ததஜ சகோதரரர்கள் சார்பாக நாமே பிஜேக்கு, அவருடைய தப்புத் தாளங்களை சுட்டிக் காட்டுவோம். திருத்திக் கொண்டால் இம்மை மறுமை ஈருலகிற்கும் நல்லது. இல்லையெனில் இம்மையை மட்டும் அனுபவித்துக் கொள்ளலாம். மறுமையில்...

சுனாமி சுருட்டலில் சுருண்டு போன சில கேள்விகள்:

1) சுனாமி கணக்கை ஒப்படைக்க அறுவர் குழுவை தன்னிச்சையாக அறிவித்து டிசம்பர் 10 க்கு முன்பே கணக்குகள் தயார் எனக் கூறியவர், தமுமுக வரவில்லையானாலும் பரவாயில்லை எனது இயக்க கணக்குகள் இதோ, சரி பார்த்துக் கொள்ளுங்கள் என தான் நியமித்த அறுவர் குழுவிடம் சமர்ப்பிக்காதது ஏன்?

2) பொது மக்கள் முன்பு தான் கணக்குகள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அறைகூவல் விடுத்தவர், பொதுவான நபர்கள் எவருமில்லாமல் தனது இயக்க நிர்வாகிகளை மட்டும் வைத்துக் கொண்டு கணக்கு காட்டியது ஏன்?

3) பொது மக்கள் அல்ல சமுதாய தலைவர்கள் முன் தான் கணக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனக் கூறினோம் என்று சொல்வாரேயானால் அவர் கணக்கு காட்டியபோது உடனிருந்து சரிபார்த்த சமுதாய தலைவர்கள் யார்? யார்?

4) தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகளும், சன் டிவி, ஆசியா நெட் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும், சுனாமி நிதி வசூலித்து பிரதமர்
மற்றும் முதல்வர் நிதிக்கு அனுப்பி வைத்தன. அதைப் போலவே தமுமுக ஜமாத்தே இஸ்லாமி போன்ற இயக்கங்கள் வசூலித்து வினியோகம் செய்தன. ஆனால் இவர்களில் யாருமே தான் வசூலித்த தொகையிலிருந்து தங்களது பத்திரிக்கைக்கோ அல்லது டிவிக்கோ செலவு செய்ய வில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிறர் அளித்த நன்கொடையிலிருந்து தனது பத்திரிக்கைக்கு 2 லட்சம் ரூபாய் ஒதுக்கிக் கொண்டது எப்படி நீதமாகும்?

5) களவாடிய அந்தப் பத்திரிக்கையில், பத்தி பத்தியாக பிறரை குறை கூறியதோடு, சுய தம்பட்டமும் அடித்த காரணத்தால் சர்க்குலேசன் சறுகிக் கொண்டுபோய் தரைதட்டி விட்டது. அதனை கொஞ்சமாவது தூக்கி விடத்தான் இந்த 2 இலட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது என் பொதுமக்கள் பேசிக் கொள்வது உண்மையா?

6) பாதிக்கப்பட்ட அனாதைகளுக்குரிய 2 இலட்சத்தை அபகரித்துக் கொண்டது, மார்க்கம் கூறும் மனித உரிமை மீறல் ஆகாதா?

7) இதைப் போலவே ஒளிப்பதிவு (கேமரா வாடகை) செய்து விளம்பரம் செய்ய
பாதிக்கப்பட்டோரின் பெயர் சொல்லி வசூலித்த பணத்தை பங்கு வைக்கலாமா? மார்க்கம் இதனை அனுமதிக்கிறதா?

8) பாதிக்கப்பட்டோர் உடை மற்றும் உறைவிட தேவைக்காக பொதுமக்கள் அளித்த நன்கொடையில் இயக்கத்தவருக்கு சீருடை வாங்க இஸ்லாம் அனுமதிக்கிறதா?

9) சுனாமி நிதிக்கென்று தனிக்கணக்கு துவக்கப்படாத நிலையில் வந்து விழுந்த நன்கொடைகளை சுனாமி எது? பினாமி எது? என இனம் கண்டது எப்படி?, வெறும் வங்கி கணக்கு எண்ணை மட்டும் கண்டு பணம் அனுப்பியவர்களின் பணம் எப்படி செலவிடப்பட்டது.

10) இக்கணக்கு ததஜவைத் தவிர வேறு யாரால் தணிக்கை செய்யப்பட்டது.

என்பது போன்ற கேள்விகள் பல எழுந்துள்ள நிலையில்,தனது நம்பகத்தன்மை
பளிச்சிட்டது என தங்களுக்கு தாங்களே புகழாரம் சூட்டிக் கொள்ளும் ததஜ தலைமை பதிலளிக்குமா? அல்லது

வழக்கம் போல் பிறர் மீது புழுதி வாரி இறைக்குமா?

அபூஇஸ்மத் 02.04.2006

0 Comments:

Post a Comment

<< Home