Monday, September 04, 2006

பிஜேயின் கழுத்து தாங்குமா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உண்மைக்கும் உ.உ.கூ.உமரின் வார்த்தைகளுக்கும் எள்ளளவும் சம்பந்தம் இருந்ததில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று.

தனது மெயிலில் ஏதாவது உதாரணம் எழுதுகிறேன் பேர்வழி என்று எழுதிவிட்டு ஏடாகூடமாக மாட்டிக் கொள்வது அவரது வாடிக்கை. சமீபத்திய மெயிலில் எழுதிய உதாரணத்தின் மூலம் ததஜ தக்லீதுகள் கூலிக்கு மாரடிப்பவர்கள், கூலி கிடைக்க வில்லையானால் எதுவும் செய்யமாட்டார்கள் என ஒப்புக் கொண்டவர்.

உண்மை தவ்ஹீத்வாதிகளையே (ஸஹாபாக்களையே), தான் எடுத்துக் கூறிய அல்குர்ஆன் வசனத்தின் மூலம் தடுமாற வைத்த ஷைத்தானின் வரலாறு (அபூஹுரைரா (ரளி)) விஷயத்தில் நாமெல்லாம் அறிந்து வைத்துள்ள சரித்திர பாடம்.

இதே வழியைப் பின்பற்றி தான் அனுப்பும் மெயில்களில் குர்ஆன் வசனத்தையோ, நபிமொழியையோ இடம்பெறச் செய்து, அதனை வாசிப்பவர் மத்தியில் தானொரு உண்மை விசுவாசி (அவரைப் பொறுத்த வரை பிஜேவின் விசுவாசி, மற்றவர்களைப் பொறுத்தவரை அல்லாஹ்வின் விசுவாசி) என நாடகமாடுவதில் நாட்டமுள்ளவர்.

அத்தகைய உ.உ.கூ.உமர் தனது இன்றைய மெயிலில் கீழ்காணும் நபிமொழியை இடம் பெறச் செய்துள்ளார்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு மனிதன்,
இன்னொரு மனிதனின் ஒரு சாண் நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொண்டால், அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் ஏழு பூமிகளை அவனது கழுத்தில் விலங்காகப் போடுவான்.'
(புகாரி, முஸ்லிம்) அறிவிப்பாளர்: ஸயீத்பின் ஸைத் (ரலி)

முதலில் இந்நபிமொழி இந்த விஷயத்திற்கு சம்பந்தமில்லாத ஒன்று. ஏனெனில் சொத்து விஷயமாக சிவில் வழக்கு நடைபெறும் கடையநல்லூர் பள்ளியை வக்ஃப் வாரியம் ஏற்றுக் கொண்டதைப் போலவே, சொத்து விஷயமாக சிவில் வழக்கு நடைபெறும் மேலப்பாளையம் பள்ளியையும் வக்ஃப் வாரியம் ஏற்றுக் கொள்ள முன் வந்தது.

கடையநல்லூர் விஷயத்தை தனக்கு சாதகமாக ஆர்ப்பரித்து குரலெழுப்பிய ததஜ கிரிமினல்கள், மேலப்பாளையம் விஷயத்தில் எதிர்த்து குரலெழுப்ப வேண்டிய காரணம் என்ன?

மேலப்பாளையம் விஷயத்தில் லுஹா வகையறாக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் கிரிமினல் தலைவன் பிஜேவுக்கு ஏற்பட்டுள்ளது. மாறாக, லுஹாவை மாட்டி விட எண்ணினால் பிஜேவின் வண்டவாளங்களை லுஹா தண்டவாளத்தில் ஏற்றிவிடுவார் என்ற பயம் பிஜேக்கு ஏற்பட்டுள்ளது.

அது, அவர்களின் உட்கட்சி விவகாரம் தெலையட்டும்.

ஆனால், பொருத்தமில்லாத இடத்தில் இடம்பெறச் செய்துள்ள இந்நபிமொழி மூலமாக, இவர் கிரிமினல் பிஜேவை சிக்கலில் மாட்டிவிட எண்ணுகிறார் போலும்.

ஒரு சாண் நிலத்தை ஆக்கிரமித்தவனுக்கே ஏழு பூமிகள் கழுத்தில் மாட்டப்படுமானால் ஏழை எளியவர்களின் பொருளாதாரத்தால், தமுமுக எனும் மக்கள் பேரியக்கத்திற்காக வாங்கப்பட்ட ராயப்பேட்டை ஃபிளாட் ஐ அபகரித்துச் சென்று கிரிமினல் தலைவன் பிஜேஇன் கழுத்தில் எத்தனை பூமிகள் தொங்கவிடப்படுமோ. அல்லாஹ் அறிந்தவன்.

இதுமாத்திரமல்லாமல், தமுமுக அலுவலக கட்டிடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்திற்காக எத்தனை பூமிகளோ???

அத்துடன் மதுரையிலுள்ள தமுமுகவிற்கு சொந்தமான இடத்தை தன்னிச்சையாக தாரைவார்த்துக் கொடுத்துள்ளாரே அதற்காக எத்தனை பூமிகளோ???

இவையனைத்தையும் மீண்டும் நினைவூட்டிய உ.உ.கூ.உமரே! முதலில் இந்நபிமொழியை கிரிமினல் தலைவன் பிஜேக்கு நினைவூட்டி, ஆக்கிரமித்துள்ள, அபகரித்துள்ள தமுமுகவின் சொத்துக்களை திரும்ப ஒப்படைக்கும்படி வலியுறுத்துங்கள்.

வரக்கூடிய ரமளானில் ஒழுங்காக தொழுது தவ்பா செய்து கொள்வதுடன் அனைத்து தமுமுக சகோதரர்களிடமும் மன்னிக்கும்படி உருக்கமாக வேண்டிக் கொள்ள அறிவுறுத்துங்கள். மன்னிக்கும் மாண்புடைய தமுமுக சகோதரர்கள் ஒருவேளை மன்னிக்கலாம். உடனடியாக சொத்துக்களை ஒப்படைத்துவிட்டு ஒதுங்க அறிவுறுத்துங்கள்.

ராவுத்தர் 04.09.2006


0 Comments:

Post a Comment

<< Home