Wednesday, August 23, 2006

முஸ்லிம்களே! பிஜேவிடம் ஏமாறாதீர்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

ததஜவினர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள் போலும். தமுமுகவிலிருந்து விலகி ஓடிய பின் கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் அடித்த அந்தர் பல்டிகள் கணக்கில் அடங்காதவை. குறிப்பாக வசூல் என்று வந்து விட்டால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்வதற்கு அவர்கள் தயங்கியதே இல்லை. ஒவ்வொரு முறையும் மும்மூர்த்திகளில் ஒருவர் மாற்றி ஒருவர், முறை வைத்துக் கொண்டு மக்களிடையே முறையிடுவார்கள்.

ஏமாந்த முஸ்லிம்கள் தங்கள் பொருளாதாரத்தை வாரி வழங்குவார்கள். இதனைப் பெற்றுக் கொண்டபின் முறையான கணக்குகள் எதனையும் மக்கள் மன்றத்தில் சமர்ப்பிப்பதே கிடையாது. இதற்கு நடுவில் வேறு ஒருவர் வேறு ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு களம் இறங்குவார்.

இந்த வகையில் எதிர் வரும் ரமளானை முன்னிட்டு விஷேச வசூலில் ததஜ இப்பொழுதே களம் இறங்கி விட்டது.

தற்சமயம் ததஜ மும்மூர்த்திகளில் ஒருவரான கிரிமினல் அலாவுதீன் (உபயம்: முகவைத்தமிழன்) சின்னத்திரையில் தோன்றி பொதுமக்களின் பொருளாதாரத்தில் பங்கு கேட்டு நிற்கிறார். அவர் குறிப்பிடக்கூடிய வாசகங்கள் குறித்து நமக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன.

கிரிமினல் அலாவுதீன் டான் டிவி நிகழ்ச்சிகளுக்காக கடந்த எட்டு மாதமாக பொதுமக்களின் பொருளாதார உதவி குறைந்து விட்டதாக குறைபட்டுக் கொள்கிறார்.

நமது கேள்விகளெல்லாம்,

1) இவரது வாக்குமூலத்தின் படி பொதுமக்களின் ஆதரவு ததஜவிற்கு குறைந்து வருகிறது. அவர் குறிப்பிடுவது போல் எட்டு மாதமாக பொதுமக்கள் ஆதரவு குறைந்து வருவது உண்மையானால் கும்பகோணத்தில் குலுக்கியது 15 என்றும் 12 என்றும் 10 லட்சத்திற்கு மேல் என்றும் கூறிக் கொண்டதெல்லாம் அப்பட்டமான பொய் என்று நிரூபணமாகிறது.

ததஜவின் வழமைப்படி பில்ட்அப் செய்த கணக்குதான் இது என்று ஒத்துக் கொண்ட கிரிமினல் அலாவுதீனுக்கு நன்றி.

2) டான் டிவியில் அவர்களது நிகழ்ச்சியில் விளம்பரங்களுக்கு குறைவை நாம் கண்டதில்லை. அப்படியானால் அந்த விளம்பரங்கள் அனைத்தும் இலவசமாக ஒளிபரப்பப்பட்டதா? இதுவும் பில்ட்அப் வகையராக்களில் ஒன்றா?

3) இதுவரை வசூலிக்கப்பட்ட பொருளாதாரத்தை ஆங்காங்கே முதலீடு செய்யும் படி தலைமையின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தம்மாம் போன்ற நகரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் கூறிக்கொள்கிறார்கள். ஆக, இதுவரை வசூலித்ததெல்லாம் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் டிவி நிகழ்ச்சிகளுக்கு கொடுப்பதற்காக புதுவசூல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா?

4) சுனாமி கணக்கில் களவாடிய பத்திரிக்கையின் நஷ்டத்தை ஈடுகட்டவும் தொண்டரடிப்பொடிகளுக்கு சீருடை வாங்குவதற்கும் உபயோகப்படுத்திக் கொண்டது போல் டிவி ஒளிபரப்புக்காகவும் ஃபித்ரா போன்ற பொது காரணங்களைச் சொல்லியும் வசூலிக்கப்படும் பணம் இனி எந்தெந்த தொழில்களில் முதலீடு செய்யப்படுமோ? அல்லது முதலீடு செய்யப்பட்டதாக தவ்ஹீத்-தக்லீத்வாதிகளுக்கு சொல்லப்பட்டு சுருட்டப்படுமோ? யார் கண்டது?.

தமிழறிந்த முஸ்லிம்களே! உண்மை தவ்ஹீதுவாதிகளே! இனியுமா தவ்ஹீது வியாபாரி கிரிமினல் பிஜேவிடம் (உபயம்: முகவைத்தமிழன்) ஏமாறப் போகிறீர்கள்.

இறையடியான். 23.08.2006

0 Comments:

Post a Comment

<< Home