Thursday, August 10, 2006

ததஜவின் டான் டிவி வசூல்

அன்புச்சகோதரர் இப்னு ஃபாத்திமாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தங்களின் வெளியீட்டில் ததஜ அலாவுதீன் டான் டிவியில் விடுக்கும் வேண்டுகோள் குறித்து எழுதியிருந்தீர்கள். தாங்கள் குறிப்பிட்ட ராப்பிச்சை என்ற வாசகம் சற்று கடுமையாக இருக்கிறது, என்றாலும் அவர்கள் யாசகம் கேட்பதை ததஜ தொடங்கிய அன்றிலிருந்தே செயல்படுத்தி வருகிறார்கள். இதில் பொதுமக்களாகிய நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை என்ற வலைப்பதிவில் வெளியான ஒரு ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல் நமது பொருளாதாரம் எந்த வகையில் உபயோகப் படுத்தப்படுகிறது என்று சீர்தூக்கிப் பார்ப்பதாகும்.

இது வரை அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொருளாதாரத்தின் மூலம் சக இயக்கங்களைச் சாடுவதற்கும் சக முஸ்லிம்களை காபிர் என்றும் முஷ்ரிக் என்றும் முனாபிக் என்றும் திட்டித்தீர்ப்பதற்குத்தான் உபயோகப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

தவிர, வெறும் நான்கு விளம்பரங்களை வைத்துக் கொண்டு தடுமாறினாலும் பொதுமக்களிடம் நிதி வேண்டுகோள் வைக்காமல் இருந்து வரும் தமுமுக ஒளிபரப்பக் கூடிய இஸ்லாமிய சமுதாயத்திற்கு தேவையான பல அரிய செய்திகள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்ற நல்லெண்ணம் கொள்ளும் நம் போன்ற சகோதரரர்கள் தாராளமாக நேரடியாக நன்கொடைகளை அனுப்ப முன்வர வேண்டும்.

ஆனால் 11 விளம்பரங்களுக்கும் அதிகமாக ஒளிபரப்பி வரக்கூடிய ததஜவின் தெலைக்காட்சி மேலும் நிதி அனுப்பச் சொல்லி வேண்டுகோள் விடுக்கிறது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்.

1) பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களைச் சொல்லி பொதுமக்களிடம் நிதி சேகரித்து அதற்கு எந்த முறையான கணக்கும் வெளியிடாமல் தன்னை வளப்படுத்திக் கொண்டது போல் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காக கேட்கப்பட்டிருக்க வேண்டும்.

2) அல்லது, தற்பொழுது வெளிவரும் விளம்பரங்கள் அந்தந்த நிறுவனங்கள் (அ) நபர்களின் அனுமதியில்லாமல் வெறுமனே அவர்களின் ஆதரவு தங்களுக்கு உண்டு என்று பில்ட்அப் செய்வதற்காக கட்டணம் பெறப்படாமல் வெளியிடப்படுபவைகளாக இருக்க வேண்டும்.

இதை நாம் அனுமானமாக சொல்ல வில்லை, சுனாமி வசூலில் கூட இது போல பில்ட்அப் செய்து பல்வேறு நபர்களின் பெயரால் பெரும் தொகை எழுதிவிட்டு கணக்கு காட்டும் சமயத்தில் அவை வந்து சேர வில்லை என்று கதை அளந்ததை நாம் அறிவோம்.

எனவே தான் ஒவ்வொருவராக களம் இறக்கப்பட்டு தற்பொழுது திரையில் நாகூர் ஏ.எஸ் அலாவுதீன் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார். இதைவிட மிக இலகுவான வழிமுறை ஒன்று இருக்கிறது, தேர்தல் சமயத்தில் அன்றைய ஆளும் கட்சியிடம் பெற்றதையும் தொலைக்காட்சி மூலம் கிடைத்த லாபத்தையும் முதலீடு செய்தாலே டான் போன்ற மலிவு தொலைக்காட்சிகளை வருடம் முழுக்கவும் நடத்த இயலும். இன்றைய தேதியில் அதிகமான சொத்துக்கள் உள்ள தமிழகத்தின் ஒரே மௌலவி பிஜே என்பது தமிழறிந்த அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

ராவுத்தர் 10.08.2006

0 Comments:

Post a Comment

<< Home