Sunday, July 16, 2006

பீஜேக்கு பிடித்த பித்து

'எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல' என்று பழமொழி சொல்வார்கள், அப்படிப்பட்ட வேலையை செய்யக் கூடியவர் தான் நமது சின்னத் திரை கதாநாயகர் பீஜே.

ததஜவின் கோல்மால்தனத்தை கண்டுகொள்ளாமல் நடிக்கத் தெரியாத ஒரு சகோதரரர் தான் வகித்த முக்கியப் பொறுப்பை முறையாக துறந்து விட்டு, ததஜவிலிருந்து வெளியேறிவிட்டார்.

அவரை எப்படியும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பீஜே அலைந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவருக்கு இப்போது சரியான சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. தவ்ஹீதை உயிர் மூச்சாக நினைக்கும் அந்த சகோதரரர் தாய் தந்தையர் இல்லாத ஓர் விதவைப் பெண்ணுக்கு வாழ்வளிக்கும் நோக்கில் தனது இரண்டாவது மனைவியாக ஆக்கிக் கொள்கிறார்.

இதில் முதல் மனைவியை தகுந்த முறையில் பராமரித்தும் வருகிறார். இதை தெரிந்து கொண்ட பீஜே தன்னை சந்திக்குமாறு அந்த முதல் மனைவிக்கு ஆள் அனுப்பி பல முறை வரச் சொல்லியிருக்கிறார். இவரைப் பற்றி நன்கு அறிந்து கொண்ட அவர், சந்திக்கச் செல்ல வில்லை. வேறொரு நபரிடம் இந்த பிரச்சனையை பார்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து இருக்கிறார்.

பாவம் அந்த குடும்பம் பீஜெயின் பழிவாங்கும் போக்கால் வீதிக்கு வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இது போன்றே பீஜே பல கோல்மால் வேலைகளையும் இதற்கு முன்பும் செய்துள்ளார். அதில் முக்கியமாக, ஜாமிஆ புஷ்ரா பெண்கள் கல்லூரையை முறையாக சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வந்த ஜாக் நிர்வாகத்தை பலவந்தமாக அகற்றுவதற்கு பின்புலமாக இருந்தவர், எதிரணியினருக்கு தக்க ஆலோசனையும் பாதுகாப்பும் தந்தவர் என்பது இன்றுவரை மறக்க முடியாத அவரது துரோகமாகும்.

பீஜேயோடு இருப்பவர்கள், பீஜேயை விட்டு விலகும் தருணம் ஏற்பட்டால் ஏதாவது ஒரு வகையில் நஷ்டத்தை ஏற்படுத்த அல்லது பழிவாங்க முயற்சிகள் மேற்கொள்வார் என்பதை புரிந்து கொண்டு அவரையே வலம் வர வேண்டும். அப்படியில்லையேல் நஷ்டத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கட்டும்.

இப்னு ஃபாத்திமா 17.07.2006

0 Comments:

Post a Comment

<< Home