Wednesday, May 31, 2006

சுனாமி திருடர்கள் யார்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

சுனாமி திருடர்கள் யார்?

அன்பான வாசக சகோதர்களே!

இப்பொழுதும் இந்தோனேஷியா நிலநடுக்கத்தால் மீண்டும் பாதிக்கப்பட்டது. இதே இந்தோனேஷியாவில் 2004 டிசம்பரில் ஏற்பட்ட கடல் நிலநடுக்கத்தை எவராலும் மறக்கமுடியாது. தெற்காசிய மக்கள்தொகையை கணிசமாக குறைத்து, பல நாடுகளில் பொருளாதாரத்தை சீர்குலைத்த சுனாமி எனும் ஆழிப்பேரலையை, நெஞ்சில் ஈரமுள்ள எவரால் மறக்க முடியும்?

ஆனால் என்ன செய்வது, வல்ல இறவைனின் படைப்பில் ஈரமில்லா நெஞ்சுடையவர்களும், எலும்பில்லாத நாக்கால் உண்மையோடு பொய்கலந்து ஏமாற்றும் வித்தை தெரிந்தவர்களும் நம்மிடையே இருக்கத்தானே செய்கிறார்கள்.

குறிப்பாக சுனாமியை பினாமியாக்கி சேகரித்ததில் கணிசமாக சுருட்டிக்கொண்டாவர்கள் அத்துடன் நின்றாலாவது சமுதாயம் மறந்துவிட்டிருக்கும், ஆனால் சுருட்டிக்கொண்டதை மறைப்பதற்காக மற்றவர்களை குறைகூறித் திரிகிறார்கள் இந்தக் குறைமதியாளர்கள்.

ஆமாம், சுனாமி பெயரால் வசூலித்து தனது இயக்கத்தவர்களுக்கு சீருடை வாங்கிக்கொடுத்து அதன் மூலம் தனக்கு சுயவிளம்பரம் தேடிக்கொண்டவாகள், மற்றவர்களை (அதாவது கலப்பில்லாத முறையில் சுனாமிக்காக வசூலித்ததை, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே செலவு செய்த தமுமுகவை) சுனாமி திருடர்கள் என அடைமொழி இட்டு ஏளனம் செய்கின்றனர்.

ஒரு வசனத்தை அவர்களுக்கு, நினைவூட்டிவிட்டு அவர்களுடைய இலட்சணத்தை அவர்களது வாக்குமூலம் மூலமாகவே காண்போம்.

மூஃமின்களே! எந்த ஒரு கூட்டத்தினரும், மற்றொரு கூட்டத்தினரை பரிகாசம் செய்ய வேண்டாம். (ஏனெனில்) இவர்களைவிட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும் . . . . . . அன்றியும் கெட்ட புனைப்பெயர்களைக்கொண்டு பட்டப்பெயர் சூட்டிக் கொள்ளாதீர்கள் . . . . .(49 : 11)

தமுமுகவிற்கு கெட்ட புனைப்பெயர் சூட்டும் ததஜ தலைவர், தன்னைப்பற்றி 'தான் அபூஜஹ்லைவிட கொடுமையானவன்' என்று கூறியிருந்தும் கூட திருவாளர் பி.ஜே. வைப்பற்றி குறிப்பிடும் பொழுதெல்லாம் தமுமுகவினர் அபூஜஹல் பி.ஜே என குறிப்பிடுவதில்லை, அவர்களாக புனைந்து கெட்ட புனைப்பெயர் வைக்காததோடு, அவரே குறிப்பிட்ட அடைமொழியைக்கூட உபயோகப்படுத்த அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடிய உண்மை தவ்ஹீத்வாதிகளாக தமுமுகவினர்தான் இருந்துவருகின்றனர்.

தமுமுகவிலிருந்து பிரிந்து சென்றபொழுது, அவருடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்த டிரஸ்ட் சொத்துகளை, அதன் உரிமையாளர்களாக தமுமுகவிடம் திரும்ப ஒப்படைக்காமல், திருடிச்சென்றது உண்மையாக இருந்தும், திருவாளர் பி.ஜே வை டிரஸ்ட் திருடன் என திரும்ப, திரும்ப சொல்வதற்கு கூச்சப்படக்கூடிய உண்மை முஸ்லிம்களாகத்தான் தமுமுகவனர் இருந்து வருகின்றனர்.

ஏனெனில் வெட்கம் ஈமானின் ஒருபகுதி என்பதை உணர்ந்த உண்மையாளர்கள் தமுமுகவினர் இதுபோன்ற ஒப்பீடுகள் அதிகம் இருந்தாலும், சுனாமியைப்பற்றிய ஒப்பீட்டை இப்போது பாருங்கள்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, நிதி சேகரிக்க தனியான ஒரு வங்கிக்கணக்கு ஆரம்பித்தது தமுமுக.

ஆனால் சுனாமி நிவராண நிதியை ததஜ வசூலித்தது தனது ஒரே வங்கிகணக்கில் தான். இதனால் என்ன ஆகும். ஆரம்பம் முதலே செயல்பட்டு வந்த ததஜவின் கணக்கில்தான் அவர்கள் நன்கொடை வசூலிக்கிறார்கள். (டான் டிவியில் ஒவ்வொரு நாளும் தோன்றி நன்கொடை அனுப்பச்சொல்லி வேண்கோள் விடுப்பதை காணலாம்) இதைத்தவிர ஜகாத் பணமும் (வாழ்க்கையில் ஒரு முறை ? ? ?) அதே வங்கி கணக்கில்தான் வசூலிக்கப்படுகிறது.

கடந்த வருடம் குலங்கியதாக கதைவிட்ட கும்பகோணத்திற்காக உண்டியல் குலுக்கியதும் இதே வங்கிக்கணக்கில்தான். நுன்கொடை அனுப்பும் நல்ல உள்ளங்கள் அவர்களாக முன்வந்து வகைப்படுத்தினாலொழிய அறிந்து கொள்ள முடியாத வகையில் அனைத்து;ம ஒரே வங்கி கணக்கில் வசூல் செய்ததன் பின் சுனாமி வகைக்காக அனுப்பப்பட்ட தொகை இயக்க நன்கொடையாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்காது என்பதற்கான எவ்வித உத்திரவாதமுமில்லை.

இப்படி நன்கொடைகளை வகைப்படுத்தாமல் கலந்து விட்டவர்தான், சுனாமிக்காக தனி வங்கி கணக்கின் மூலம் வசூலித்து வினியோகித்த தமுமுகவை அல்லாஹ்விற்கு அஞ்சாமல் ஏளனம் செய்கிறார்.

வசூலித்ததே இந்த இலட்சணத்தில் என்றால், வினியோகம் செய்தது அதைவிட கொடுமை.

சுனாமி நிதி வினியோக பட்டியலில் ததஜ கணக்கு காட்டியுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்த நன்கொடையாளர்கள் அனேகர்.

ஏனெனில் கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு ததஜ சுனாமி நிவாரணமாக கணக்கு காட்டியுள்ளது ரூபாய் 60 ஆயிரம், கடற்கரையே இல்லாமல் எப்படி சுனாமி தாக்கியது என்பது ததஜ தலைமையே அறிந்த ரகசியம்.

கடற்கரை இல்லாத வேலூருக்கு ததஜ செலவிட்டதாக எழுதியுள்ளது அக்மார்க் கணக்காம். ஆனால், அந்தமான் மற்றும் விசாகபட்டிணத்திற்கு தமுமுக செலவிட்டது கள்ள கணக்காம். ஏன் விசாகப்பட்டிணத்திலும் அந்தமானிலும் சுனாமி தாக்குதல் நடைபெற வில்லையா? அல்லது அவர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடாதா?

கடற்கரை இல்லாத வேலூருக்கு சுனாமி நிதியை செலவிடலாமாம் ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்டோரின் எதிர்கால உபயோகத்திற்காக நாகையில் தமுமுக முன்னிற்று சமுதாய கூடம் கட்டுவது தவறாம்.

சுனாமி பாதிப்பை உணர்ந்து உடனடியாக களத்தில் இறங்கி மீட்புபணியில் தமுமுக செய்கிற பொழுது, தன்னுடைய ஒழுக்க கட்டுப்பாட்டின் காரணமாக சீருடை அணிந்து சிறப்பாக தமுமுக தொண்டர்கள் பணியாற்றினார்கள்.

உடனடி மீட்பு பணியிலோ, நிவாரண முகாம் அமைப்பதிலோ வேகம் காட்டாத ததஜ பின்னர் சுதாரித்து சுனாமி நிவராண நிதி திரட்டியபின், அந்த பணத்திலேயே தனது சீடர்களுக்கு சீருடை அணிவித்து அழகு பார்த்தது.

சுPருடைக்காக செலவிடப்பட்;ட ரூபாய் 40 ஆயிரம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் உணவு, உடை, உறைவிடத்திற்காக அன்பளிப்பாக அளிக்கப்பட்டதா? ததஜ வின் இயக்கத்தவருக்கு சீருடை வாங்கவா?

சுனாமி சீரமைப்புக்காக பெற்ற தொகையில் ரூபாய் 40 ஆயிரத்தை தனது தொண்டர்களுக்கு தாரைவார்த்த ததஜ, முறையாக வினியோகித்த தமுமுவை சுனாமி திருடர்கள் என அடைமொழி இடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா?

இவை அனைத்தையும்விட உச்சகட்;ட கொடுமை, சுனாமிக்காக வசூலித்த பணத்தில் ரூபாய் இரண்டு இலட்சம் உணர்வு பத்திரிக்கைக்காக எடுத்துக்கொண்ட கயமைத்தனம்.

இப்படி எல்லா வகைகளிலும் மோசடி செய்தவர், நியாயமாக செலவிட்டவரைப்பார்த்து திருடன் எனச்சொல்வது அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பாதவற்றின் வெளிப்பாடாகும்.

தனது தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளாவிடில், ததஜ ஆரம்பிக்கும் முன் அதன் தலைவர் செய்த அத்தனை நல்லறங்களும் பாழாய்போய்விடும் என எச்சரிக்கிறோம். வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!.

இறையடியான் 31.05.2006

0 Comments:

Post a Comment

<< Home