Saturday, April 22, 2006

ததஜ சுருட்டிய சுனாமி நிதி:

அருளடியான் தந்த பின்னூட்டத்திற்கு இறையடியான் தக்க பதில் அளிக்கிறார். தேவைப்படுவோர் கீழ்காணும் லிங்கிற்கு சென்று அவரது விமர்சனத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

http://tmpolitics.blogspot.com/2006/04/blog-post_114536660495707722.html

அன்புள்ள அருளடியானுக்கு,
சுனாமி நிதி விஷயமாக பி.ஜே. அறுவர் குழவை அமைத்துள்ளதாகத்தான் கூறியிருந்தாரேயல்லாமல் இது ஒரு ஆலோசனை என கூறவில்லை. உண்மையில், தான் கூறும் அவதூறை தமுமுக வழக்கம்போல் அலட்சியம் செய்யும். நாம் அதை வைத்து அரசியல் செய்யலாம் என பி.ஜே. தான் எதிர்பார்த்தார்.

தமுமுக கணக்குகள் தயார், மணடபமும் தயார், சுயமாக குழு அமைத்த, அரசியல்வாதி பி.ஜே அந்த மண்டபத்திற்கு தான் அமைத்த குழுவை அழைத்துவர வேண்டிய பொறுப்பு பி.ஜேவிற்கு என பகிரங்க அழைப்பு விட்டதும், தான் அமைத்த குழு ஒரு ஆலோசனை குழுதான் தமுமுக விருமபினால் மாற்றம்; செய்து கொள்ள வேண்டியது தானே என திசை திருப்ப ஆரம்பித்தார்.

அதனையே தாங்களும் பின்பாட்டாக பாடியுள்ளீர்கள்.

தமுமுக அக்குழவை மிலன் மண்டபத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை பி.ஜேவிற்கு தந்ததே, அவர் ஏன் அங்கு அழைத்துவர வில்லை?

மிலன் மண்டபத்தில் சமுதாய பிரமுகர்களும் தமுமுக அபிமானிகளல்லாத பல பொதுமக்களும் கலந்து கொண்டனர், என்பது யாவரும் அறிந்த செய்தி, அதற்கு தங்களின் பின்னூட்டமே சாட்சி, ஆனாலும் அங்கு தமுமுகவினர் மாத்திரம் தான் கலந்து கொண்டார்கள் எனவும் முரண்பட்டு குழம்பியுள்ளீர்கள்.

பாதிக்கப்பட்டோருக்கான நிவராண நிதியிலிருந்து தனது பத்திரிக்கைக்கோ அத்துடன் இயக்க சீருடைகளுக்கோ நிதி ஒதுக்கிக்கொள்ளாமல் முழுக்க முழுக்க அந்நிதியை பாதிக்கப்பட்டோரின் நலனுக்காகவே செலவிட்ட தமுமுக தனது பத்திரிக்கையின் இடநெருக்கடி காரணமாக முழுவிபரங்களையும் வெளியிட முடியாத நிலையில் உள்ளது.

என்றாலும், தேவைப்படுபவர்கள் நகல் எடுக்கும் கட்டணத்தை மட்டும் செலுத்தி நகல் பெற்றுக்கொள்ளலாம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது, தேவைப்படுபவர்கள் தலைமையகத்தை தொடர்பு கொள்ளலாம்.

அதுசரி, நண்பர் அருளடியான், பாதிக்கப்பட்டோரின் நிவாரண நிதியிலருந்து தனது இயக்கத்தவர்களுக்கு சீருடை வாங்கவும், பத்திரிக்கையின் கடனை அடைப்பதற்கும் ததஜ சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் செலவிட்டது, மார்க்க ரீதியாக சரி என்கிறாரா?

மறுமையில் அம்மக்கள் முறையீடு செய்ய மாட்டார்கள் என ததஜ தலைமை நம்புவது போல் நண்பர் அருளடியானும் நம்புகிறீரா?

இறையடியான் 23.04.2006

0 Comments:

Post a Comment

<< Home