Thursday, April 06, 2006

நபிவழி என்று கூறி ஏமாற்றுவோர்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

நபிவழி என்று கூறி ஏமாற்றுவோர்.

உண்மையான நபிவழி நடப்பவர்கள் நாங்கள் தான் எனச் சிலர் தங்களுக்குத் தாங்களே 'தவ்ஹீதுவாதிகள்' என்று பட்டம் சூட்டிக் கொண்டு தற்சமயம் அலைந்து வருவதால், அவர்களது நடவடிக்கைகள் நபிவழியின் பரிணாம வளர்ச்சியாக ஆகிவிடாது.

மாறாக, அத்தகையோரது நடவடிக்கைகள் சொல்லாலும் செயலாலும் தங்களுக்குத் தாங்களே முரண்பட்டு நிற்கும் ததஜவின் தக்லீது போக்கினை தமிழக முஸ்லிம்கள் புரிந்து கொள்வதற்கு உதவி புரிந்துள்ளது. இதுவரை நபிவழி என்று கூறி மக்களை ஒன்று திரட்டியபின் தங்களது சுய தேவைகளுக்கு சமுதாயத்தை அடகு வைக்க முயற்சிக்கும் அவலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

பிறர் சொல்லாததை சொன்னதாகச் சொல்லி பொதுமக்களிடம் அடுத்தவர் மேல் புழுதி வாரி இறைப்பதும், தாங்கள் செய்கின்ற தவறை மூடி மறைத்து, பூசி மெழுகி நியாயப்படுத்த முயற்சிப்பதும் - அரசியல்வாதிகளின் குணம் என்றுதான் எண்ணியிருந்தோம். ஆனால் அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களல்ல என்று தற்சமயம் களத்தில் உள்ளவர்கள் ததஜவினர் என்பதற்கான ஆதாரங்கள் ஏராளம், ஏராளமாக உள்ளன.

பழைய விஷயங்களுக்குள் புகுந்தால், அது மெகா தொடராகி விடும் என்பதால், புதிதாக முகவை தமிழன் தனது வலைதளத்தில் பதிந்தவற்றுக்காக மாத்திரம் இதனை குறிபிடுகிறேன்.

சம்பந்தமில்லாத ஒன்றை மேற்கோள்காட்டி தமது எதிரிகளை கீழ்தரமாக விமர்சிப்பது தான் ததஜ தலைவரின் பாணி. அதனை அப்படியே பின்பற்றி இவர் எழுதியுள்ளார்.

இவ்வாறு எடுத்துக்கட்டி அவதூறாக பேசுவது (அ) எழுதுவது எப்படி நபிவழியாகும்? இதனை செயல்படுத்துபவர் எப்படி நபிவழி நடப்பவராக இருக்க முடியும்?

ஆக, இதன் மூலம் ததஜவினர் உண்மையான தவ்ஹீதுவாதிகளல்லர் என சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய புரிதலின் வெளிப்பாடாக விடியலின் வெளிச்சக்கீற்று எட்டிப் பார்க்கிறது.

பழைய அறிக்கைகளை எடுத்துப் போட்டு, நிகழ்கால நடப்புகளை மூடி மறைத்து மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் ததஜவின் எண்ணம் இன்ஷா அல்லாஹ் ஈடேறப் போவதில்லை. தமிழக முஸ்லிம்கள் அந்த அளவு முட்டாள்களில்லை. அதுவும் குறிப்பாக தமுமுகவின் அயராத உழைப்பால் அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்கும் இந்த சூழ்நிலையில் ததஜவின் தகிடுதத்தங்கள், தவிடுபொடியாவது நிச்சயம்.

சென்னைத் தமிழன் 06.04.2006

0 Comments:

Post a Comment

<< Home