Monday, April 03, 2006

தமுமுக தவறு செய்ததா? விளக்கம்:

தமுமுக தவறு செய்ததா?

தமிழ் முஸ்லிம் மன்றம் என்ற வலைப்பதிவில் தவறுக்கு மேல் தவறு செய்யும் தமுமுக என்ற தலைப்பில் வெளியான ஒரு சகோதரரரின் சந்தேகங்களுக்கான மறுமொழி.

1) தமுமுக மட்டும் லீக் கட்சிகளை லட்டர் பேடு இயக்கங்களாக சொல்லியதில்லை. இன்று தோழோடு தோழ் இணைந்து முதலமைச்சரைச் சந்திக்கச் சென்ற ததஜவின் தலைவரும் தான் சொல்லி இருக்கிறார்.
அடுத்ததாக, முஸ்லிம் லீக்கை விமர்சித்த தாவூது மியான் கான் பேட்டியை மக்கள் உரிமையில் வெளியிட்டபோதும் தமுமுக சுனாமி கணக்கு காட்டிய நிகழ்ச்சியில் அவர் முன்னிவை வகித்தது சமுதாய பிரமுகர் என்ற அடிப்படையில் தானே அல்லாமல் வேறல்ல.

2) இதற்கு முன் தமுமுக பொதுவான காரியங்களில் முன்னிலை வகித்தது என்பது கோவை கலவரம், சுனாமி போன்ற இன்னபிற பிரச்சனைகளை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும். தற்பொழுது சர்ச்சைக்குரிய மௌலவி பிஜே பிற அமைப்புகளோடு இணைந்து சென்று முதலமைச்சரை சந்தித்ததாக தாங்கள் எழுதி இருப்பது தவறான விஷயம். இதே மௌலவி முதலமைச்சரை சந்தித்ததன் பின் வெளியிட்ட சிடியைப் பார்த்தால் நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். அதில் இந்த மௌலவி தான் மற்ற அமைப்புகளை (பிரமுகர்களை?) இழுத்துக் கொண்டு சென்று முதலமைச்சரை சந்தித்ததாக குறிப்பிடுகிறார். தன்மானமிக்க தமுமுக இப்படி மற்ற எந்த ஒரு தனி நபரின் இழுத்த இழுப்பிற்கெல்லாம் செல்லாது.

3) தனி இட ஒதுக்கீடு கொள்கை தமுமுக துவங்குவதற்கு முன்பே லீக் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். நாம் அறிந்த வரை அப்படி ஒரு கோரிக்கையே நமது சமுதாயத் தலைவர்களால் முன்னிறுத்தப்பட்ட தில்லை. துவங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வை சமுதாய மக்களிடமும் தனிஇட ஒதுக்கீட்டின் தேவையை பிற அரசியல் தலைவர்கள் மத்தியிலும் உருவாக்க அரும்பாடு பட்ட அதில் ஒரு சிறிய முன்னேற்றத்தை இப்பொழுது கண்டுள்ள நிலையில் தனிப்பெருமை தேடுவதில் என்ன தவறு?

4) பாளையங்கோட்டை தொகுதியை தமுமுக தனக்காக கேட்கவில்லை, இன்றளவும் பலுலுல் இலாஹி முஸ்லிம் லீக் உறுப்பினராகத்தான் இருக்கிறார். இப்பொழுதும் பாளையங்கோட்டை தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (திமுக) சார்பில் அங்கு போட்டியிடப் போவது ஒரு முஸ்லிம் வேட்பாளர் தான். வாணியம் பாடி தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெறச் செய்த வடிவேலு போல ஒரு முஸ்லிம் அல்லாதவர் அல்ல.
இதில் தமுமுக எந்தவகையில் சமுதாயத்திற்கு துரோகம் செய்தது.

5) இந்த கேள்வியே உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் பால் பட்டது. தமுமுக பலுலுல் இலாஹியை வெற்றிபெறும் சாத்தியக்கூறு அதிகமுள்ள வேட்பாளராகத்தான் கருதியதே அல்லாமல் வேறல்ல.

7) சமாதானக்குழுவின் அமைப்புகள் இது விஷயத்தில் தமுமுகவோடு நடந்து கொண்ட விதத்தை தெளிவு படுத்துவதற்காகவே அல்லாமல் அந்த விமர்சனங்கள் வெளியிடப்படவில்லை, தவிர அதே கருத்துக்ளோடு நாம் அவர்களுடன் பகைமை பாராட்டவும் இல்லை.

அன்புடன்

இறையடியான் 03.04.2006

1 Comments:

At 2:50 AM, Blogger முத்துப்பேட்டை said...

அருளடியான் 'தவறுக்கு மேல் தவறு செய்யும் த.மு.மு.க' என்று தலைப்பில் எழுதியவற்றுக்கான பதிலை இங்கே பிரசுரித்துள்ளோம். அவர் எழுப்பிய குற்றச்சாட்டை கீழே தருகிறோம். தேவைப்படுவோம் கீழ்காணும் முகவரிக்கும் சென்று அவரது பதிப்பை பார்க்கலாம்: ஆசிரியர் முத்துப்பேட்டை 04.04.2006

1. சில நாட்களுக்கு முன் த.மு.மு.க தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், தி.மு.கவின் தேர்தல் பிரச்சார மேடையில் நின்று கொண்டு, அ.இ.அ.தி.மு.கவை ஆதரிக்கும் முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் லெட்டர் பேடு அமைப்புகள் என்று பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத் தக்கது. முஸ்லிம் லீக்கை விமர்சித்த தாவூது மியாகானின் பேட்டியை மக்கள் உரிமையில் வெளியிடும் போதும், த.மு.மு.க கணக்கு காட்டும் நிகழ்ச்சியில் அவர் முன்னிலை வகித்த போதும், அது லெட்டர் பேடு அமைப்பு என்று பேராசிரியருக்குத் தெரியாதா?

2. சர்ச்சைக்குரிய மவ்லவி பி.ஜெ கூட, பிற அமைப்புகளுடன் இணைந்து சென்று முதல் அமைச்சரைச் சந்திக்க சம்மதிக்கிறார். ஆனால் அனைத்து தரப்பு முஸ்லிம்களுக்கும் தாங்கள் தான் பிரதிநிதி என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பிற முஸ்லிம் அமைப்புகளுடன் எந்த ஒரு பொதுக்காரியத்திலும் இணைந்து செயல்பட மறுப்பது ஏன்?

3. தமிழுக்கு செம்மொழி தகுதி வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளுக்கு முன்பே உள்ள கோரிக்கை. அக்கோரிக்கை ஏற்கப்பட்டது சமீபத்தில் தான். அது போலவே, முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கை த.மு.மு.க தோன்றுவதற்கு முன்பே உள்ள கோரிக்கை. முஸ்லிம் லீக் மாநாடுகளில் இது தொடர்பாக தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, த.மு.மு.க மட்டும் தனிப்பெருமை தேடுவதில் என்ன நியாயம்?

4. தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மவ்லவி பி.ஜெ, முதல்வரிடம் பேசும் போது, இந்திய தேசிய லீக்கிற்கு அதிக இடங்களைக் கொடுங்கள் என்று கேட்டார். ஆனால், தி.மு.க கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக்கிற்கு அளிக்கப் பட்ட பாளையங்கோட்டை தொகுதியை த.மு.மு.க, மவ்லவி ஃபழ்லுல் இலாஹிக்காக கேட்டதாகவும், அதனால் அத்தொகுதியை முஸ்லிம் லீக், த.மு.மு.க ஆகிய இருவருக்குமே இல்லாமல் தி.மு.கவே எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுவது உண்மையா? இச்செய்தி உண்மையென்றால், த.மு.மு.க செய்தது ஒரு சமுதாயத் துரோகமே.

5. மவ்லவி பி.ஜெ அவர்களிடம் எனக்கு மார்க்கம் தொடர்பாகவும், அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் பல கருத்துகளில் வேறுபாடு உண்டு. எனினும் அதே போன்று சர்ச்சைக்குரிய மவ்லவி ஃபழ்லுல் இலாஹியை த.மு.மு.க முன்னிறுத்துவது ஏன்? த.மு.மு.க எது செய்தாலும் சமுதாயம் எந்தக் கேள்வியும் கேட்காது என நினைக்கிறார்களா?

6. தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுப்பதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைக்காக சிறுபாண்மையினர் கூட்டமைப்பில் பிளவு ஏற்பட பேராயர் எஸ்ரா. சற்குணமும், த.மு.மு.கவும் தானே காரணம்? சிறுபாண்மையினர் கூட்டமைப்புக்கு தேர்தல் நிலைப்பாடு எடுப்பது தவிர வேறு எந்த வேலையும் கிடையாதா?

7. சுனாமி கணக்கை தனி கூட்டம் நடத்தி பொது மக்கள் முன் சமர்ப்பித்த த.மு.மு.கவைப் பாராட்டுகிறோம். எனினும், விமர்சனம் என வந்த பிறகு முஸ்லிம் சமாதானக் குழுவிடம் கணக்கு காட்டச் செல்லாததும், அக்குழுவில் இடம் பெற்ற அமைப்புகளையெல்லாம் விமர்சித்து அதன் தலைவருக்கு களங்கம் கற்பித்ததும் இஸ்லாமிய வழிமுறை அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது உள்ள அளவு கடந்த வெறுப்பு த.மு.மு.கவின் கண்ணை மறைத்து விட்டது.

தனிச்சுட்டி| பதிந்தது: அருளடியான் : 6:45 AM

http://tamilmuslim.blogspot.com/2006/04/blog-post.html

 

Post a Comment

<< Home