Monday, April 10, 2006

மலர்களை வெறுக்கும் ஸ்ரீநிதிக்கு,

இரத்த யாத்திரைகள்!

http://copymannan.blogspot.com/2006/04/blog-post_06.html

இந்த வலைப்பதிவில் ரத்த யாத்திரைகள்! என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு கீழ்கண்டவாறு நண்பர் ஸ்ரீநிதி விமர்சனம் எழுதியுள்ளார். அவரது
விமர்சனம் எந்த அளவுக்கு தவறானது என்பதை சகோதரரர் இந்தியன் விளக்குகிறார்.

பன்முகத்தன்மைப் பற்றி உங்களைப் போன்ற ஒரு முஸ்லீம் அடிப்படைவாதிக்கு பேச எந்தத் தகுதியும் இல்லை. முதலில் சவுதியில் இந்துக்களுக்கும் பிறருக்கும் வழிபாட்டு உரிமைகள் இல்லாததை விமர்சித்துவிட்டு பன்முகத்தன்மை குறித்து ழுதுங்கள். பா.ஜ.க ஒரு இந்த்துவ அடிப்படைவாதக் கட்சி என்றால் முஸ்லீம் லீக்களும், தமுமுக போன்றவை இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள். மதக்கலவரங்களுக்கு இரு தரப்பாரும் காரணம்.

(இது ஸ்ரீநிதியின் விமர்சனம்)

மலர்களை வெறுக்கும் ஸ்ரீநிதிக்கு,

நண்பர் ஸ்ரீநிதி தனது அறியாமையை இப்பதிவில் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தியாவின் குடிமகனான இந்திய முஸ்லீமுக்கு இந்திய பன்முகத் தன்மையை விமர்சிக்க தகுதி கோரி எவரிடமும் சான்றிதழ் பெறத் தேவையில்லை. சக இந்தியனுக்கு தகுதியில்லை என மறுக்கும் உரிமையை ஸ்ரீநிதி எங்கிருந்து பெற்றார். இந்திய அரசியல் சாசனத்திற்கு முரணாகப் பேசும் இவர் போன்றவர்கள் தான் உண்மையான தேச துரோகிகள் என்பதை எவரும் மறுக்க முடியாது. மறுப்பவர்கள் இந்திய அரசியல் சாசன சட்டத்தை மதிப்பவர்களாக இருக்க முடியாது.

இந்திய குடிமகனுக்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை விமர்சிக்கும் தகுதியில்லை என தீர்ப்பளிக்கும் இவர், எந்த உரிமையில் வேற்று நாட்டின் வழிபாட்டு உரிமையை பற்றி வாதிடுகிறார். ஒவ்வொரு நாட்டிலும், அந்தந்த குடிமக்களின் நலனுக்கேற்ப உரிமைகள் வழங்கப்படுவது இயற்கை. இதனடிப்படையில் சவுதிஅரேபிய குடிமக்களின் வழிபாட்டு உரிமையை அவ்வரசு வழங்கி உள்ளது. சவுதி குடிமக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுமானால் அந்நாட்டு குடிமக்கள் அதனைக் குறித்து பேசுவார்கள், விவாதிப்பார்கள்.

ஆக உண்மையைச் சொல்லப்போனால், சவுதி அரேபியாவின் வழிபாட்டு உரிமைகளைப் பற்றி பேசத்தான் இந்தியனுக்கு தகுதியில்லையே அல்லாமல், இந்தியாவின் பன்முகத்தன்மை பற்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் இந்தியனான எவருக்கும் முழு உரிமையும், தகுதியும் தாராளமாக உள்ளது என்பதனை நண்பர் ஸ்ரீநிதி புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப்போலவே பாஜக மற்றும் முஸ்லிம் லீக் மற்றும் தமுமுக குறித்த அவரது ஒப்பீடும் தவறான புரிதலின் வெளிப்பாடே. பாஜக ஒரு பாசிச, பயங்கரவாத, இந்துத்துவ அடிப்படைவாத கட்சி என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், முஸ்லிம் லீக், தமுமுக போன்றவை இஸ்லாமிய அப்படைவாத கட்சிகள் என்று எந்தவித அடிப்படையும் இல்லாமலேயே எழுதியுள்ளார். இதுவரை முஸ்லிம் லீக், தமுமுக போன்றவை நடத்திய ரத யாத்திரைகள் எத்தனை? அதன் மூலம் ஏற்பட்ட கலவரங்கள், அதில் உயிரிழந்தவர்கள், உடைமை இழந்தவர்கள், உறுப்பு இழந்தவர்கள் எத்தனை என்று அவரால் வெளிட முடியுமா?

அதே சமயம் பாஜகவின் ரத்த யாத்திரைகளால் இந்திய தேசம் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இழந்தவைகளை இவர் போன்றவர்கள் மீட்டுத்தர முடியமா?

அநீதிக்கும், அக்கிரமத்திற்கும் ஆதரவளிப்பதை கைவிட்டு, உண்மைக்கும், நீதிக்கும் துணை நிற்க அனைவரும் முன் வந்தால், அப்போது தான் மனிதம் தலை நிமிரும். மதக்கலவரங்கள் மறையும். இந்தியாவின் பன்முகத்தன்மை பாராட்டுப் பெறும்.

இந்தியன் 10.04.2006

1 Comments:

At 12:08 AM, Anonymous Anonymous said...

சகோதரரே! அருமையான பதிலடி கொடுத்துள்ளீர்கள். இப்பதிவினைக் குறித்து ரத்த யாத்திரைகள் பதிவில் ஓர் பின்னூட்டமும் இடலாமே!

 

Post a Comment

<< Home