Saturday, April 08, 2006

அரசு ஆணை உபயோகமற்றது:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அரசு ஆணை உபயோகமற்றது:

உண்மையை ஒப்புக் கொண்ட உணர்வு வாரஇதழ்

கடந்த 03.03.2006 அன்று தமிழக அரசு வெளியிட்டதாக
சொல்லப்பட்ட அரசு ஆணை குறித்து அனேக கருத்துக்கள் எதிராகவும் சில கருத்துக்கள் ஆதரவாகவும் இதுவரை வெளியாகி உள்ள நிலையில், கடந்த வார உணர்வு இதழில் வெளியாகி உள்ள திருமாவளவனின் பேட்டி மூலம் ஓர் உண்மை வெளிப்பட்டுள்ளது.


அந்த அரசு ஆணையின் எதார்த்த பலவீனங்களை தமுமுக பட்டியலிட்டபோது, உண்மை வெளியாகிவிட்ட அதிர்ச்சியில் தமுமுகவை தாறுமாறாக ததஜ தலைவர் விமர்சனம் செய்தார். ஆனால், இன்றோ அவரையும் அறியாமல் திருமாவளவன் பேட்டியின் மூலமாக அரசு ஆணை - வேஸ்ட் என்பதனை ஒப்புக் கொண்டுள்ளார்.


ததஜ தலைமை தவறு செய்யும் போது சுட்டிக் காட்டுவது போல், உண்மையை ஒத்துக் கொள்ளும் போது தட்டிக் கொடுக்கவும் நாம் தயங்கக் கூடாது. அவ்வகையில் அரசு ஆணை - வேஸ்ட் என ஒப்புக் கொண்ட ததஜவிற்கு நன்றி.


இதனைப் படிக்கும் ததஜ அபிமானிகள், அவர்களையும், அவர்களது தலைவரையும் நாம் அவதூறாக எழுதியிருப்பதாக கருதக்கூடும் அத்தகையோர் திருமாவின் பேட்டியை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்க்கவும்.


அப்பேட்டியில் சட்டம் பயின்ற திருமா திருவாய்
மலர்ந்துள்ள விஷயம்:


இந்த அரசு ஆணை, தேர்தல் அறிவிக்கைக்குப் பின் வெளியிடப்பட்டதால் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். தேர்தல் முடிந்த அடுத்த கணமே ஆணையம் அமுலுக்கு வந்து விடும்.


இதன்படி இந்த ஆணையம் இன்றைய தேதியில் ஒன்றுமேயில்லை என்பது தெளிவு. திருமா சட்டம் பயின்ற வக்கீல் தனது கட்சிக்காரருக்காக (அவரிடம்
ஆதாயம் பெற்றதற்காக) எப்படி ஒரு சாதாரண வக்கீல் வாதாடுவாரோ அப்படி வரிந்து கட்டி வாதாடியுள்ளார். அப்படியிருந்தும் கவனக்குறைவாக மேற்குறிப்பிட்ட உண்மையையும் ஒப்புக் கொண்டு விட்டார். அதனை ததஜ தலைவரும் உணர்வு ஆசிரியரும் கவனக்குறைவாக பிரசுரித்து விட்டார்.


இதை விட கொடுமை, இத்தகைய ஓர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக இதுவரை அரசாங்க கெஸட்டில் வெளியிடப்படாததாகும்.


அரசாங்க கெஸட்டில் வெளியிடப்படாததால், திருமா கூறியுள்ளது போல் தேர்தல் முடிந்தாலும் இப்படி ஒரு ஆணையம் செயல்பட முடியாது என்பதே
மிகப்பெரும் உண்மையாகும்.


தமிழக முஸ்லிம்களே சிந்திப்பீர்! எந்த ஒரு தலைவர் மீதும் தாங்கள் கொண்டுள்ள கண்மூடித்தனமான பக்தி சொந்த சமுதாய மக்களை சீரழித்து விடக் கூடாது. கவனமுடன் பரிசீலனை செய்யுங்கள்.


முஸ்லிம் விரோத அதிமுக ஆட்சியை தூக்கி எறிய ஆதரவளியுங்கள்


அபூஇஸ்மத் 09.04.2006

1 Comments:

At 5:53 AM, Blogger முத்துப்பேட்டை said...

சொல்லப்பட்ட அரசு ஆணை குறித்து

 

Post a Comment

<< Home