Tuesday, April 18, 2006

மதமாற்றத்தடை சட்டமும் தனி இடஒதுக்கீடும்

மதமாற்ற தடைச் சட்டமும் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீடும்

தேர்தல் என்றாலே பரபரப்பும் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் தான் என்ற இலக்கணத்திற்கு தமிழக சட்டசபைத் தேர்தலும் விதிவிலக்கல்ல.

கூட்டணித்தலைவர்களின் அறிக்கைகளும் விமர்சனங்களும் பொதுமக்களுக்கு சிறந்த பொழுது போக்கு அம்சங்களாக விளங்குகின்றன.

இதற்கு நடுவில் உளவுப்பிரிவினரின் கூத்து வேறு.

மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வில்லை என திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும், கூட்டணியை ஆதரிக்கும் திராவிடக் கழகம் மற்றும் தமுமுக போன்ற இயக்கங்களும் பிரச்சாரம் செய்து வருகின்றன. இது உண்மைக்கு புறம்பானது என்றும் மதமாற்றத் தடைச் சட்டம் ரத்துசெய்யப்பட்டது உண்மையென்றும் இதனை முதல்வர் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எடுத்துரைக்க வேண்டும் என்றும் உளவுப்பிரிவினர் பரிந்துரை செய்துள்ளதாக பத்திரிக்கைக் குறிப்பு கூறுகிறது.

அப்படியானால் அதிமுகவின் புதிய தோழர் அண்ணன் பிஜே அவர்கள் வாயார வாழ்த்தும் இடஒதுக்கீட்டு ஆணையம் குறித்தும் முதல்வரைப் பேசச் சொல்லலாமே.

ஆனால் பாவம் முதல்வர் எப்படி இடஒதுக்கீட்டு ஆணையம் குறித்து பேசுவார். முன்தேதியிட்டு கையொப்பம் இட்டிருந்தாலும் இன்று வரை கெஸட்டில் வெளியிடவில்லையே, அதனால் தானே இன்று வரை அவரோ அவருடைய அமைச்சர்களோ ஏன் மூன்றாம் நான்காம் மட்ட பேச்சாளர்கள் கூட வாய் திறக்க மறுக்கின்றனர்.

சன்டிவி மற்றும் கருணாநிதி குடும்பத்தவரை எதிர்ப்பதற்காகவே வைகோவை விலை கொடுத்து வாங்கி உள்ளது போல் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் வெளியிடப்படாத போலி ஆணையத்தை பெரிதாய் காட்டி பிரச்சாரம் செய்யத்தான் பிஜேவை விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அதனால் தான் முதல்வர் இதுவரை ஆணையம் பற்றி எதுவும் வாய் திறக்க வில்லை என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை முதல்வர் வாய் திறந்தால் ரேஷன் அரிசி விஷயத்தில் வைகோ முகத்தில் கரி பூசியதைப் போல அண்ணன் பிஜெ முகத்திலும் பூசுவாரோ?

கனி ராவுத்தர் 18.04.2006

0 Comments:

Post a Comment

<< Home