Sunday, April 16, 2006

உணர்வு பத்திரிக்கையும், பா.ம.க தொகுதிகளும்!

தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இருப்பதால் பத்திரிக்கைகளுக்கு செம தீனி. ஒவ்வொரு பத்திரிக்கையிலும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கட்டுரைகளும், கருத்துக்கணிப்புகளும் விறுவிறுப்போடு வெளியாகி வருகின்றன.

கடந்த வார உணர்வு பத்திரிக்கையில், பா.ம.க. குறித்த செய்தி இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது. 31 தொகுதிகளை போராடி பெற்ற பா.ம.க. முஸ்லீம்களை எத்தனை தொகுதியில் நிறுத்தப்போகிறார் என்று ஆவலோடு அனைவரும் காத்திருந்தனர்.

முஸ்லீம்களின் தனி இடஒதுக்கீடுக்காக மாநாடு நடத்திய ராமதாஸ், நிச்சயம் ஓரிரு தொகுதிகளை ஒதுக்குவார் என்றே எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் ஒரு இடமும் முஸ்லிம்களுக்கு ஒதுக்காமல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த முடிவை த.மு.மு.க வன்மையாக கணடித்து களப்பணியிலிருந்து பா.ம.க தொகுதிகளில் ஒதுங்கி இருப்பதாக அறிவித்தது. த.த.ஜ.வும் இதில் தனது பங்குக்கு கருத்துக்கூறியது தான் இன்று கேலிக்குறியதாக ஆகிவிட்டது.

பா.ம.க முஸ்லீம்களுக்கு தொகுதி ஒதுக்காதது கண்டிக்கத்தக்கதுதான், என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அதனை கண்டிக்க த.த.ஜ விற்கு எந்த அருகதையும் இல்லை.

ஏனெனில் அதற்கு முந்தய வார உணர்வில் ஒரு கேள்வி பதில் இடம் பெற்றிருந்தது. எதிரணியிலருந்து முஸ்லீம் வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில் நாம் யாருக்கு ஓட்டளிப்பது என்ற கேள்விக்கு அ.தி.மு.க அணியில் யார் நிற்கிறாரோ அவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும், எதிரணியில் முஸ்லீம் வேட்பாளர் நின்றாலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

எதிரணியில் முஸ்லீம் வேட்பாளராக இருந்தாலும் தோற்கடிக்க வேண்டும் என கூறியவர், முஸ்லீம் வேட்பாளர்களை ஏன் நிறுத்;தவில்லை என குரல்கொடுப்பது இரட்டைவேடம் தானே.

முஸ்லீம் சமுதாயமே! சமுதாய துரோகிகளை அடையாளம் கண்டுகொள்வீர். . . .

- சாயபு 16.04.2006

0 Comments:

Post a Comment

<< Home