Wednesday, April 19, 2006

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு!

தமுமுக முன்னெடுத்த கோஷம் இன்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த பத்தாண்டு கால போரட்டத்தின் பலன். அல்ஹம்துலில்லாஹ்.

பத்தாண்டுகளுக்கு முன் இந்த முழக்கம் முன் வைக்கப்பட்டபோது ஏளனம் செய்த திமுக கடந்த இரு தேர்தல்களில் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப்பின் இட ஒதுக்கீடு விஷயமாக திமுகவும், காங்கிரஸும் பல காரியங்களில் ஈடுபட்டு வருகிறது.

முஸ்லீம்களின் தனி இட ஒதுக்கீட்டிற்காக மாநாடு நடத்தி கவனத்ததை ஈர்ந்த கட்சி பா.ம.க., ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து அறிக்கை விட்டது அதிமுக தலைமை.

இந்த நிலையில் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் முஸ்லீம்களுக்கான ஒதுக்கீடு அவரவர் கட்சிகள் சார்பாக எந்த அளவு இருக்கிறது என நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.

எதிர்ரும் சட்டசபை தேர்தலில் இரு அணிகளும் ஒரு தனி நபரும் ஆகிய மூன்று அணிகள் (கட்சிகள்) சார்பாகத்தான் தமிழகம் முழுதும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர்.

அதன்படி, தேமுதிக சார்பில் நடிகர் விஜயகாந் 234 தொகுதிகளில் மொத்தம் 15 முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். (6.41 சதவிகிதம்)

ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில், திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 130 இடங்களில் 5 தொகுதிகளிலும் (3.85 சதவிகிதம்) காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 48 தொகுதிகளில் ஒரு இடத்திலும் (2.08 சதவிகிதம்) முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இதே அணியில் உள்ள பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரு இடத்தில்கூட முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தாமல் ஏமாற்றியுள்ளது.

சி.பி.ஐ., சி.பி.எம். ஐப் பொருத்த அளவில் முஸ்லீம்களின் பங்கபளிப்பு குறைவாக அல்லது அறவே இல்லாமலிருப்பதால் அவர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பது தவறு. ஆனால் பா.ம.க வைப்பொறுத்தவரை ஆரம்ப காலம் தொட்டே குணங்குடி ஹனீபா மற்றும் பழநிபாபா போன்றவர்களின் பங்களிப்பால் வளர்ந்த கட்சி, முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு மாநாடு நடத்திய கட்சி, இன்றளவும் முஸ்லீம் நிர்வாகிகளைக்கொண்ட கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட 31 இல் ஒரு இடத்தில்கூட முஸ்லீம்களை நிறுத்தாமல் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

எனவே, திமுக அணியை ஆதரிப்பதென்று முடிவெடுத்த தமுமுக, பாமக விஷயத்தில் தனது முடிவை மாற்றிக்கொள்வதாக அறிவித்துவிட்டது.

பாமக வின் நிலையை காரசாரமாக விமரிசித்த பி.ஜே. தான் ஆதரிக்கும் அதிமுக அணியின் நிலை குறித்து எதுவுமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக அணியை பொறுத்தவரை, 182 இடங்களில் போட்டியிடும் அதிமுக, முஸ்லீம்களை நிறுத்தியது வெறும் 3 இடங்களில்தான் (1.65 சதவிகிதம்) 35 இடங்களில் போட்டியிடும் மதிமுக நிறுத்தியதோ வெறும் ஒரு முஸ்லீமைத்தான் (2.85 சதவிகிதம்) இவர்களைத்தவிர விடுதலை சிறுத்தைகளும் மற்றவர்களும் ஜாதி அடிப்படையில் உள்ளதால், அவர்களிடம் எதிர்ப்பார்ப்பது தவறு என்பதால் விட்டு விடலாம்.

ஆனால் அதிமுக தனிப்பட்டு 182 இடங்களில் மூன்றே மூன்று இடங்களில் மட்டும் நிறுத்தியுள்ளதே இதனை பி.ஜே ஏன் கண்டிக்கவில்லை.

இவர்களைத்தவிர நடிகர் இயக்குனர் டி. ராஜேந்திரனின் ல.தி.மு.க சார்பாக 11 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இவர் பி.ஜே. யின் நெருங்கிய நண்பர். வெள்ளி மேடையில் பேச அழைக்கப்பட்ட முஸ்லீம் அல்லாத ஒரே நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு முஸ்லீமைக்கூட நிறுத்தாததைக்குறித்து பி.ஜே. ஏன் ஒன்றுமே கூறவில்லை என்று சிந்திக்க வேண்டும். தனது தர்ஜமா விளம்பரத்திற்காக டி. ராஜேந்திரனை வெள்ளி மேடை ஏற்றிய பி.ஜே ல.தி.மு.கவின் நிலை குறித்து அவசியம் கருத்து தெரிவிக்க வேண்டும் நடக்குமா?

பா.ம.க வை விமர்சித்தது போல் மிக குறைவாக தொகுதி ஒதுக்கிய அதிமுகவையும் தொகுதியை ஒதுக்காத லதிமுகவையும் ததஜ கண்டிக்கப் போகிறதா? அல்லது கண்டு கொள்ளாமல் விடப்போகிறதா?

சாயபு 18.04.2006

0 Comments:

Post a Comment

<< Home