Wednesday, April 19, 2006

ததஜவும் அதன் நேர்மையும்

சகோதரரர் தவ்பீக் அஹ்மதின் கட்டுரைக்கு இறையடியான் விமர்சனம் எழுதுகிறார். தேவைப்படுவோர் கீழ்காணும் லிங்கிற்கு சென்று சகோதரரர் தவ்பீக் அஹ்மதின் கட்டுரையை பார்த்துக் கொள்ளுங்கள்.

http://tmpolitics.blogspot.com/2006/04/blog-post_114536660495707722.html

விபரங்கெட்டவர்களின் விலாசம் தான் ததஜ என்பதை சகோ. தவ்பீக் மீண்டும் நிரூபித்துள்ளார்.

சுனாமி மட்டுமல்ல ஏகத்துவம் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலுமே தாங்கள் பிஜேயின் நிரந்தர பினாமிகள் தான், அவர் ஸஹாபாக்களை ஏசினாலும் ஏற்றுக்கொள்வோம், சக அமைப்புகளை, முஸ்லீம் சகோதரர்களை எந்த அளவு கீழ்தரமாக விமரிசித்தாலும் அப்படியே எதிரொலிப்போம் என்ற கொள்கையுடையவர் என தெளிவு படுத்தியுள்ளார்.

பொதுவிசாரணை குழு அமைக்கும் பொறுப்பை தமுமுக, ததஜவிற்கு அளிக்கவில்லை. மாறாக, எவ்வித ஆலோசனையுமின்றி தானாக குழு அமைத்துக்கொண்ட திருவாளர் பிஜேவை அவர் அமைத்த அறுவர் குழுவுடன் மிலன் மண்டபத்திற்கு வரச்சொல்லி அழைத்தது தமுமுக தன்னிச்சையாக குழு அமைத்தவர், தமுமுகவின் அழைப்பை உதாசீனப்படுத்தி ஒடி ஒளிந்தது ஏன்?

அறுவர் குழு இரண்டாம் அமர்விலேயே நால்வர் அணியாக சுருங்கியது ஏன்? நடுவர்கள் என தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட நடுநிலையற்றவர்கள் மட்டுமல்ல பொதுமக்கள், அனுதாபிகள் ஏன் எதிரிகளும் கலந்து கொண்டு பார்வையிடவும், விளக்கம் பெறவும் வகை செய்த தமுமுகவின் அறிவிப்பு டிஎம்எம்கே டாட் ஐஎன் http://www.tmmk.in/ என்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், ஸ்குரோல் எனப்படும் சிறப்புச்செய்தியாக டிசம்பர் 10 வரை ஓடிக்கொண்டிருந்ததை சகோ. தவ்பீக், ததஜ தலைவரால் பூட்டப்பட்ட விழித்திரையால் (Eye lid) பார்க்க முடியாமல் போயிருக்கலாம்.

அல்லது முன்பு ஒரு முறை ஜே.ஏ.க்யூ.ஹெச் என எழுதியிருந்ததை (எம்.ஹெச்.ஜெ) ஜவாஹிருல்லாஹ் என வாசித்தது மட்டுமல்லாமல், அப்படியே பிரச்சாரம் செய்த ததஜவினரைப்போல இப்போழுதும் தவறான செய்தியை பரப்ப முன் வந்திருக்கலாம். ஆனால் உண்மை என்னவோ, தமுமுக தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தனி நபரின் தன்னிச்சையான அறைகூவiலுக்கான பதில் முதல் டிசம்பர் 10 மிலன் மணடபத்தில் நடந்தது வரை ஒவ்வொரு நிகழ்வையும் விரிவாக வெளியிட்டு வந்தது என்பதுதான்.

ஃபித்ரா வசூல் மற்றும் விpனியோக விபரங்கள் வெளியிடப்படும் நடைமுறையில் தமுமுக ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை, தேவைப்படும் மாற்றங்களை கோருவதற்கும், ஆலோசனை செய்து முடிவெடுப்பதற்கும் நிர்வாகிகளுக்கு தகுதியுண்டு.

சுனாமி நிதியில் பத்திரிக்கைக்கு லட்சக்கணக்கில் பணம் ஒதுக்கிக்கொண்டவர்கள், பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க வழங்கப்பட்ட பணத்தில் தனக்கு சீருடை வாங்கி படம் காட்ட ஆயிரக்கணக்கில் ஒதுக்கிக்கொண்டு சுனாமி நிதியை சூறையாடியவர்கள், சுனாமியின் சுவடே அறியாத வேலூர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கி முறைகேடு செய்தவர்கள் - இத்தனையையும் செய்த ததஜ தலைமையை தட்டிக்கேட்க வழியில்லாதவர்கள், விழி பிதுங்கி செய்வது இன்னதென்று அறியாமல் பிஜேயின் பினாமிகளாக மாறிவருகின்றனர்.

ததஜ தலைமை சுனாமிக்கென்று நிதி வசூல் செய்த வங்கி கணக்கு எண் என்ன ?

வந்து வழுந்த நன்கொடைகளை சுனாமி என்றும், இயக்கத்திற்கான நன்கொடை என்றும், ஜகாத் நிதி என்றும் எப்படி இனம் கண்டார்கள்?

தமுமுக வெளியிட்டது போல் வங்கி அறிக்கையை வெளியிடத்தயாரா ?

தமுமுக தனது கணக்குகளை தணிக்கை அதிகாரி மூலம் தணிக்கை செய்தது போல் ததஜ கணக்குகளை தணிக்கைக்கு உட்படுத்த தயாரா?

ஏக இறைவனுக்கு கீழ்படிவதே ஏகத்துவம் (தவ்ஹீத்) என்பது போக, இப்போது ஏக ஒருவன் (பீ.ஜே)க்கு கீழ்படிவதே மறுமைவெற்றி என நம்பிக்கைகொண்டுள்ள ததஜவினர் தெளிவு பெறவும், சூனியக்காரர்களின் சூழ்ச்சிகளிலிருந்து விடுபட்டு தூய இஸ்லாத்தை பினபற்றும் நன் மக்களாகவும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக!

இறையடியான் 20.04.2006

0 Comments:

Post a Comment

<< Home