Tuesday, May 02, 2006

தவ்ஹீது ஜமாத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு

சமுதாய பேரியக்கமாம் தமுமுகவை, ஆளும் வர்க்கத்தின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி உடைத்த திருவாளர் பிஜெ அன்று தமுமுக, தவ்ஹீதிற்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சுமத்தினார். பின்னர் தமுமுக அரசியல்வாதிகளோடு நெருங்கிப்பழகி அவர்களுக்காக எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர் இது இஸ்லாத்திற்கு முரணானது என வாதிட்டார்.

மரியாதை நிமித்தம் எழுந்து பின் அமர்ந்ததை கொச்சைப்படுத்தி பேசினார். உடனே அவரது சீடர்கள் இதனை மிகவும் தரக்குறைவான கீழ்தரமான விமர்சனங்களுடன் தொடர்ந்து மெயில் அனுப்பி வந்தனர்.

அவர்கள் அத்தனை பேரின் முகத்திலும், அகத்திலும் (கொள்கையிலும்) டன் கணக்கில் கரி பூசி விட்டார் ததஜ தலைவர் திருவாளர் பிஜெ.

கடந்த 21.04.2006 அன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பான நேருக்கு நேர் நிகழ்ச்சியின் முடிவில் இருகரம் கூப்பி தெளிவாக வணக்கம் என்று கூறி நிகழ்ச்சியை முடித்தவர் வேறு யாரும் அல்ல வடிகட்டிய தவ்ஹீதுவாதி என தமக்குத் தாமே புகழாரம் சூட்டிக் கொண்ட சாத்சாத் பிஜெ தான்.

தவ்ஹீதின் பெயரால் சிந்திக்காமல், அறிவை அடகு வைத்துவிட்டு பிஜேவை பின்பற்றியவர்களே, அன்று கோபாலபுரத்தில் கலைஞர் வீட்டில் நடந்த ஒரு சந்திப்பின் போது வரவேற்பறையில் காத்திருந்த பிஜே கலைஞரைக் கண்டதும் இருகரம் கூப்பி எழுந்து நின்று வணக்கம் சொன்னார் என சிலர் தெரிவித்த போது இது கட்டுக்கதை என உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு உண்மையை உதரித்தள்ளியவர்களே! இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

அதைவிட முக்கியம் இத்தகைய பிஜெவை பின்பற்றி பிறரை கேவலமாக கீழ்தரமாக விமர்சனம் செய்ததற்காக மறுமையில் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.

சகோதரர்களே! தயவு செய்து உண்மையை சிந்தித்து விளங்கி மரணத்திற்கு முன் தவ்பா செய்து கொள்ளுங்கள்.

இறையடியான். 02.05.2006

2 Comments:

At 5:40 AM, Anonymous Anonymous said...

PJ THANATHU SUYA NALANUKKAKA ETTHAKAYAIYA ILIVAANA SEYALAYAIUYUM SEYVAAR ENBATHU AMBALAMAAKIVITTATHU.......JUNIORVIKADAN ATTAIP PADATTHIL JEYALALITHAAVIN KOOLIP PADAYAI MARIYULLA PADAM VANTHULLATHU

 
At 6:49 AM, Blogger முத்துப்பேட்டை said...

சகோதரர்களே! யாராவது அந்த நிகழ்ச்சியை ரிகார்டிங் செய்திருந்தால் சகோ.அபூஜஸ்ரா அவர்களுக்கு தெரிவிக்கவும்.

முத்துப்பேட்டையான். 09.05.2006

 

Post a Comment

<< Home