Sunday, April 23, 2006

ததஜவினர் காதுகளில் பூசுற்றும் பிஜே:

இடஒதுக்கீட்டிற்கு ஆணையம் தேவையற்றது.

2004ம் ஆண்டு அக்டோபர் 23, 24 ஆகிய இரு தினங்கள் நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் உள்ள மேலப்பத்தை கிராமத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையில் நடந்த மாநில செயற்குழுவில் ''தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்'' என்ற தலைப்பில், நிறைவேற்றப்பட்ட 5வது தீர்மானம்.

''ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது தொடர்பாக ஆந்திர உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது கூடாது என்று குறிப்பிடவில்லை. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது அவசியம் என்றும், ஆனால் அதற்கு முன்பு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையை பெற வேண்டுமெனவும் தான் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த அடிப்படையில் தமிழக அரசு முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிந்து இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்ய உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை நியமிக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்த ஆணையம் குறுகிய காலத்திற்குள் தனது விசாரணைப் பணிகளை நிறைவு செய்து தனது பரிந்துரையை சமர்ப்பிக்க ஆவண செய்ய வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்த அடிப்படையில் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க உடனே ஆவண செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது''

இந்தத் தீர்மானம் குறிப்பாக ஆந்திராவில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு சமயத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். இந்தத் தீர்மானமே கடைசியான தீர்மானமாக இருக்க வில்லை, அதனால் ததஜவினர் சந்தோசப்பட இதில் ஏதும் இல்லை. இதற்கு மட்டும் பிஜெ தப்ஸீரை மாற்றி எழுதியிருக்கிறார்.

'வேஸ்ட் பேப்பர் ஆணையம்' பெறப்பட்ட தேதி 03.03.2006, அதற்கு முன்பு அதாவது 19.02.2006 அன்று திருச்சியில் தமுமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தீர்மானங்கள் எண் 7,8,9,13 ஆகியவை இடஒதுக்கீடு தொடர்பான தீர்மானங்களாகும். அதிலும் குறிப்பாக 9 வது தீர்மானம் மிகமிக முக்கியமானதும் ததஜ வினர் தலையில் சம்மட்டியால் அடிக்கும் தீர்மானமாகும்.

தீர்மானம் 9, இடஒதுக்கீடு: மாநில அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க சட்டத்திருத்தமோ, புதிதாக ஆணையமோ அமைக்கத் தேவையில்லை. தமிழகத்தில் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 142 சாதிகளில் 1)அன்சாரி 2)லெப்பை (மரைக்காயர், ராவுத்தர் உட்பட) 3)தக்னி முஸ்லிம்கள் 4)ஷேக் 5)சைய்யது ஆகிய முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளார்கள். பிற்படுத்தப்பட்ட சாதியில் இடம் பெற்றுள்ள 142 சாதிகளுக்கு 30 சதவிகிதம் இடஒதுக்கீடு தற்போது அமுலில் உள்ளது. இந்த 30 சதவிகிதத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியில் இடம் பெற்றுள்ள 5 வகை முஸ்லிம்களுக்கு தனியாக உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மாநில அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. (பார்க்க: மக்கள் உரிமை, 2:40, பிப்24,-மார்ச்02,2006)

இந்தத் தீர்மானம் பீஜே வேஸ்ட் பேப்பரை வாங்கி வருவதற்கு 12 நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். இப்போது பீஜே தனது முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப் போகிறார்?

ததஜவினர் சரியான மாங்காய் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் காதுகளில் பூச்சுற்ற முயன்று இருக்கிறார் பிஜே.

தமுமுகவினர் பிஜேயை புரிந்து கொண்ட அளவுக்கு ததஜவினர் அவரை புரிந்து கொள்ளும் நாள் எப்போதோ?

முதுவைத்தமிழன் 23.04.2006

0 Comments:

Post a Comment

<< Home