Friday, April 28, 2006

கேவலப்பட்டுப்போன ததஜவினர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுப்பது என்பது முஸ்லிம்களுக்கும், மற்றவர்களுக்குமான நல்லிணக்கத்தை குலைப்பது மட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்கிடையிலும் பிரிவினைகளை உண்டாக்குவதாகும்.

முன்னதை அகில இந்திய அளவில் BJP பார்த்துக் கொள்கிறது. பின்னதை குறைந்த பட்சம் தமிழகத்தில் செயல்படுத்த புதிதாய் புறப்பட்டுள்ளனர் PJB வகையினர்.

இந்தியாவில் சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் - இந்து சமூகங்களுக்கிடையே பிரச்சனைகளை உருவாக்கி, சகோதரத்துவத்தை கெடுத்து முஸ்லிம்களை கொன்று குவிப்பதே BJP என்ற பயங்கரவாத கும்பலின் செயல்.

தமிழ்நாட்டில் ஒற்றுமையாக இருந்த நம் முஸ்லிம் சமுதாயத்தில் மார்க்கம் என்ற பெயரில் பிரச்சனைகளை உண்டாக்கி சகோதரத்துவத்தை கெடுத்து, ஒவ்வொரு ஊர் ஜமாஅத்துகளிலும், முஹல்லாக்களிலும், குடும்பங்களிலும் குழப்பங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களிடையே பிளவுகளையும், அடிதடிகளையும் உண்டாக்குகின்ற சமூகவிரோத அமைப்புதான் PJB (P.ஜைனுல் ஆபிதீன் மற்றும் பாக்கர்).

BJP - PJB (பயங்கர - சமூகவிரோத) இரண்டு அமைப்புகளின் செயல்பாடுகளும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதில் எந்தளவிற்கு ஒத்து போகின்றன என்பதை சமூதாயமே சற்று வேதனையோடு சிந்தித்து உரிய நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

இனிஷியல் தான் மாறியுள்ளதே தவிர செயல்பாடுகளில் எவ்வித மாற்றமுமில்லை. தங்களின் மேலான பார்வைக்கு கீழ்கண்ட பட்டியலை சமர்ப்பிக்கிறோம்.

P.J.B (P.ஜைனுல் ஆபிதீன் மற்றும் பாக்கர்) தமிழக அளவில்
முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் சமூகவிரோத கும்பல்

1. மஸ்ஜிதுகளை கைப்பற்றுவது, மஸ்ஜிதுகளில் உள்ள போர்டு, கல்வெட்டுகளை சேதப்படுத்தி தனக்கு சொந்தம் என்று பொய் சொல்வது. மேலும், தொழுது கொண்டிருபவர்களை அடிப்பது அல்லது பிரச்சனைகளை உண்டாக்கி காலவரையற்று மூடவைப்பது. (உங்கள் பகுதியில் உள்ள மஸ்ஜிதுகளை அல்லாஹ்வின் உதவியைகொண்டு இந்த சமூகவிரோதிகளிடமிருந்து பாதுகாத்து வாருங்கள்)

2. முஸ்லிம் சமுதாயத்தில் பிணக்குகளை ஏற்படுத்துவது, ஜமாஅத்தார்களிடையேயும், முஹல்லதாரர்களிடேயும் பகைக்கச்சொல்வது, குடும்பத்திற்குள் மார்க்கம் என்ற பெயரில் பிளவுகளை ஏற்படுத்துவது.

3. பொய்களை மிகைப்படுத்தி உண்மையை மறைத்தது. உதாரணம் கும்பகோண மாநாட்டிற்;கு பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடினார்கள் என்றும், கும்பகோண மாநாட்டு திடலில் இடம் இல்லாததால் மாநாட்டிற்கு வந்தவர்களை காவல்துறை தஞ்சையிலேயே தடுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கேசட் மூலமாக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டார்கள். ஜெயலலிதா முன்னிலையில் கூனிகுறுகி ஒரு இலட்சத்திற்கு குறைவான நபர்களே வந்தார்கள் என்று உண்மையை உறைத்துள்ளார். (வெட்கக்கேடு இவரையும் மார்க்க அறிஞர் என்று பின்பற்றுபவர்களே உஷாராக இருங்கள்)

4. இங்கேயும் டவுசர் கலாச்சாரம்

5. தன் அமைப்பை ஏற்றுகொள்ளாதவன் முஸ்லிம் இல்லை என்றும், தன் அமைப்பில் உள்ளவர்கள் எந்த முஸ்லிம் அமைப்புடனும் பேச்சுவார்த்தையோ, உறவோ வைத்துக்கொள்ளக்கூடாது என்று விஷம கருத்துக்களை பரப்புவது.

6. பிற அமைப்பிற்கு சொந்தமான முஸ்லிம் மீடியா டிரஸ்ட், உணர்வு வார இதழை பகல் கொள்ளை அடித்தது. சேர்மன் என்ற பதவியில் இருந்ததற்கே என்னை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று அல்லாஹ்வை மறந்து திமிரான பேச்சு. இன்று ஒவ்வொரு மஸ்ஜிதுகளை அபகரிக்க முயல்வது.

7. நம்பிக்கை துரோகம் செய்வது. த.மு.மு.கவை விட்டு விலகும்போது, த.மு.மு.கவிற்கு மாற்றமாக எந்த அமைப்பையும் உருவாக்க மாட்டேன் என்று எழுத்துபூர்வமாக கூறி, த.மு.மு.க நிர்வாகிகள் இம்மையில் எந்த கூலியும் எதிர் பார்க்காமல் மறுமையில் அல்லாஹ்விடத்தில் கூலியை எதிர்ப்பார்த்தவர்களாக செயல்படுபவர்கள். த.மு.மு.க நிர்வாகிகள் மீது பழிபோடுபவர்கள் அபாண்டமாக பொய்கூறுபவர்களே என்று சொன்னவர், இன்று இயக்கத்தையும், நிர்வாகிகளையும் அழிக்க குண்டர்படைகளை ஏவுவது. கொடுத்த வாக்கை பாதுகாக்காமல் நம்பிக்கை துரோகம் செய்வது.

8. தன் அயோக்கியதனத்தை பற்றி யாராவது உண்மை விமசர்னம் செய்தால் அவர்கள் மீது பொய்வாரி தூற்றுவது அல்லது அவர்கள் மீது பழிசுமத்தி காவல்துறையில் காட்டி கொடுப்பது. விமசர்னம் செய்யும் அமைப்புகளை (அந்-நஜாத், ஜாக், விடியல் வெள்ளி, த.மு.மு.க, தப்லிக், சுன்னத்வல் ஜமாஅத். . .) அடியோடு அழிக்க தன் இயக்கத்தை சார்ந்த ஒன்றும் அறியாத அப்பாவிகளிடம் தவறான விஷமகருத்துகளை சொல்லி வெறுப்புணர்வையும், வெறியுணர்வையும் தூண்டி, எதிராக செயல்பட சொல்வது.

9. கடையநல்லூர் மஸ்ஜித் சமூகவிரோதியான உங்களுக்கு சொந்தமில்லை, அதனால் சாவியை உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று தாசில்தார் உள்பட அனைவர்கள் சொல்லியும் சட்டத்தை மதிக்காமல் தலைமறைவாக இருந்தது. எந்த மஸ்ஜிதை கைப்பற்றலாம் அல்லது எந்த மஸ்ஜிதை இழுத்து மூடவைக்கலாம் என்று தொடர்ந்து முஸ்லிம் விரோத செயல்களில் ஈடுபடுவது.

BJP. (பாரதிய ஜனதா பார்ட்டி) இந்திய அளவில்
முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத கும்பல்

1. மஸ்ஜிதுகளை இடிப்பது, மஸ்ஜிதுகளில் சிலைகளை வைத்து, எங்களுக்கு சொந்தம் என்று பொய் சொல்வது, மேலும் தொழவிடாமல் தடுப்பது அல்லது வழக்கு தொடுப்பது.

2. முஸ்லிம் - இந்துகளிடையே சகோதரத்துவத்தை கெடுத்து, பிணக்குகளை ஏற்படுத்தி, நல்லுறவுகளை பாழ்படுத்துவது.

3.பொய்களை திரும்ப திரும்ப சொல்லி உண்மைகளை மறைப்பது. உதாரணம் குஜராத் கோரமான ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று பொய்களையும், பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதர சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். உண்மை உலகிற்கு தெரிந்தும் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படவில்லை. இது இந்த நாட்டின் சாபக்கேடு.

4. டவுசர் கலாச்சாரம்

5.இந்து பாஸிச கொள்கைகளை கடைப்பிடிக்காதவர்கள். நாட்டைவிட்டு வெளியேறு என்று பிரச்சாரம் செய்வது.

6. வக்பு சொத்துகளையும், முஸ்லிம்களுக்கு சொந்தமான மையவாடி சொத்துக்களை அபகரித்தது, அபகரிக்க முயல்வது.

7.நம்பிக்கை துரோகம் செய்வது, உதாரணம் பாபர் மஸ்ஜித் இடத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் பூஜை செய்கிறோம் என்று கூறிவிட்டு பாபர் மஸ்ஜித்தை தகர்த்தது. இன்றுவரை அந்த பயங்கரவாதிகள் தண்டிக்கப்படவில்லை.

8. இந்த பயங்கரவாதிகளின் அயோக்கியத்தனத்தை (தெஹல்கா ஆயதபேர ஊழல்) உலகிற்கு உண்மையை சொன்னதால் அவர்கள் மீது பொய்வழக்குகளை போட்டு, அவர்களை அழிக்க நினைத்தது.

9. சட்டத்தை மதிக்காமல் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது.

நம் சமுதாயத்தில் மார்க்கம் என்ற பெயரில் ஊடுருவிய இந்த நாசகர சமூகவிரோத கும்பல், நம் சமுதாய அப்பாவி சகோதரர்களிடையே, பிரிவினைக் கருத்துக்களைப் பரப்பி, எந்த ஒரு முஸ்லிம் அமைப்பையும் சகோதரத்துவத்தை கொண்டு பார்க்க கூடாது என்றும், முழு மூச்சுடன் அவைகள் எதிராக செயல்பட வேண்டும் என்று தூண்டுவது அல்லது அந்த அமைப்புகள் மீது புழுதிவாரி தூற்றுவது இது தான் அவர் மார்க்கம் என்ற பெயரில் போதனை செய்கிறார். அந்த அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட சகோதரர்களே இந்த செயல்பாடுகள், எண்ணங்கள் உங்களிடம் இருக்கிறதா? இல்லையா? சற்று சுயபரிசோதனை செய்யுங்கள். தமிழ்நாட்டில் செயல்படுகின்ற எந்த ஒரு முஸ்லிம் அமைப்பையாவது தோழமையுடன் அனைத்து செல்கிறதா? இது சமூகவிரோத அமைப்பு என்பதால் யாருடனும் ஒத்துபோகாமல் தனித்தே செயல்படுவதை பாருங்கள்.

பி.ஜே. என்ற மனிதர் சொன்னால் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வும், ரசூலும் சொன்னது போல, அவரை கண்மூடித்தனமாக பின் பற்றும் சகோதரர்களே, பி.ஜே. என்ற மாயைவிட்டு விலகுங்கள்.

P.J.B (P. ஜைனுல் ஆபிதீன். பாக்கர்) என்ற இந்த சமூகவிரோத கும்பல் சிலோனில் அங்குள்ள முஸ்லிம் சகோதரர்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சியில் இறங்கியது. ஆனால் அல்லாஹ்வின் உதவியை கொண்டு, அங்குள்ள ஆலிம்களின் கடுமையான எதிர்ப்பினால் நாடு கடத்தப்பட்டுள்ளார், அதேபோல் தான் U.A.E கத்தாரிலும் பேச அனுமதி மறுக்கப்பட்டு நாடு திரும்பினார்.

P.J.B (P. ஜைனுல் ஆபிதீன், பாக்கர்) இந்த சமூகவிரோத கும்பல் சொன்னவுடன் நன்மையை கருதி நன்கொடைகளையும், சந்தாக்களையும் வாரி வழங்கும் சகோதர, சகோதரிகளே, தமிழ்நாட்டில் எத்துனையோ முஸ்லிம் அநாதை இல்லங்கள், பெண்கள் அரபி மத்ரஸா, ஆண்கள் அரபி மத்ரஸா, மாற்றுமத நண்பர்கள் முஸ்லிம் மார்க்கத்தை வாழ்;க்கை நெறியாக போதிக்கின்ற இடங்களுக்கு உங்களுடைய நன்கொடைகளை அனுப்பி ஈறுலகிலும் அல்லாஹ்விடம் நன்மையை பெறுங்கள். மாறாக, பிரிவினைக்கு வித்திடும் P.J.B. யை ஆதரித்து உங்களின் நன்மைகளை பாழாக்கிக் கொள்ளாதீர்கள்.

முஸ்லிம் சமுதாய ஜமாஅத்தார்களே, முஹல்லா தாரர்களே, சகோதர சகோதரிகளே உங்கள் பகுதியில் P.J.B (P. ஜைனுல் ஆபிதீன். பாக்கர்) இந்த சமூகவிரோத கும்பல் கூட்டம், மாநாடு போட அனுமதிக்காதீர்கள், முறையாக காவல்துறையில் தடை உத்தரவு வாங்குங்கள் அல்லது அவர்கள் போடுகின்ற அதே இடத்தில் உங்கள் சார்பாக பயான்போட ஏற்பாடு செய்து எதிர்ப்புகளை தெரிவியுங்கள். சில அப்பாவி சகோதரர்கள் இந்த P.J.B (P. ஜைனுல் ஆபிதீன். பாக்கர்) சமூகவிரோதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நம் சமுதாய மக்களை அழிக்க BJP. என்ற பயங்கரவாதி அமைப்புடனும் சேர்ந்து நம் முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க தயங்கமாட்டார்கள். சமுதாயமே உஷாராக இருந்து சமுதாயமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பையும் தேடுங்கள்.


அன்புடன்,
எல். புருஹான் 28.04.2006

0 Comments:

Post a Comment

<< Home