Thursday, October 19, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 6

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

வ அலைக்கு முஸ்ஸலாம் வாங்க உமர். எங்க பெருநாளக்கி ஊருக்குப் போயிட்டீங்களோன்னு பார்த்தேன்.

எங்க போறது. தீபாவளி கூட்டத்துல ட்ரெயினுக்கு டிக்கெட்டே கெடக்கலியே.

ஆமா மதுர இடைத்தேர்தல்ல திமுகவுக்கு செம தீபாவளி ஸ்வீட்தான் போல.

ஆமாமா ஆனா என்ன! இது எங்களாலதான்னு புதுவை இட ஒதுக்கீட்டு பரிந்துரை சமயத்துல சொன்னா மாதிரி நம்மாளு ஒண்ணுமே ஏன் சொல்லல.

எப்படிங்க உமர் சொல்ல முடியும். பாண்டி அரசாங்கம் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு பரிந்துரைத்த சமயம் நாம் பாண்டி ஏரியாவுல ஒரு பொதுக்கூட்டம் கூட போலட. கும்பகோணத்துலயும் பாண்டி விஷயமா ஒரு தீர்மானம் கூட போடல. ஆனால் ஆசப்பட்டு அதுக்கும் நம்ம கும்பகோணம் பொதுக்கூட்டம் தான் காரணம்னு சொன்னா. . .
அத நம்ம ததஜகாரன் கூட நம்பல. அப்ப வாங்குன சூடு போல. ஆதான் நம்மாளு கம்முனு இருக்காரு.

அதுவுஞ் சரிதான் அஹமது. நீங்க சொன்னப்புறம் தான் கவனிச்சேன். நம்ம பத்திரிக்கய நெட்ல அப்டேட்டே செய்யல. கிட்டத்தட்ட ஒரு மாசமாச்சு. நீங்க தான் விசாரிச்சு சொல்லணும் உமர்.

என்னத்த சொல்றது. வேற செய்தியே இல்லாம தொடர்ந்து தமுமுகவ தாக்கி எளுதுனதுனால சர்க்குலேசன் சறுக்கிக்கிட்டு போயிருச்சு. ஏதோ சுனாமி பேரச் சொல்லி கொஞ்சமா இரண்டு லட்ச ரூபாய ஒதுக்குனதுனால கொஞ்சம் பொழச்சுது. இதுக்கு மேல நெட்டுலயும் ஃபுல்லா போட்டுட்டா அவ்வளவு தான் ஒரு பயலும் நம்மாளுங்க கூட காசு குடுத்து வாங்காம ஓசில நெட்டுலயே படிச்சுடுறாங்கன்னு தான் அப்டேட் பண்ணல.

ஓஹோ அப்புடியா. இந்த களியக்காவெளயில விவாதம் நடத்துன பெறகு எல்லா கூட்டமும் நம்மள எதுக்க ஆரம்புச்சுட்டாங்க. என் மருமகன் துபாய்லருந்து போன் பண்ணுனான். அங்க டிவில ஜமாத்துல் உலமாகாரங்க நம்மாளோட தர்ஜமாவுல உள்ள தப்புகள பயான் பண்றதா சொல்றான்.

ஆமா. அந்த தர்ஜமாவுல தப்பு தப்பா இருக்குன்னு மக்கள் பேச ஆரம்புச்ச உடனேயே டி.ராஜேந்தர கூட்டிக்கிட்டு வந்து வெள்ளி மேடைல பாட்டு பாட வச்சு தர்ஜமாவுக்கு விளம்பரம் குடுக்க நெனச்சாரு. அதுவும் ஃப்ளாப் ஆயிருச்சு. அதே மாதிரி களியக்காவெள சிடி விக்கிறதுக்காக சம்பந்தமில்லாத காத்தான்குடி ஜமாஅத் அறிக்கய இலங்கை ஜமாஅத் அறிக்க மாதிரி பில்ட்அப் பண்ணுனாரு.

என்ன இப்புடி சொல்றீங்க உமர். நீங்க கூட அத சப்போர்ட் பண்ணி மெயில் அனுப்புச்சீங்களே.

என்ன பண்றது அஹமது உரலுக்குள்ள தலய உட்டாச்சு அப்புறம் ஒலக்கைக்கு பயந்தா முடியுமா. அதுதான் என்னத்தயாவது ஒளறி கொட்டி கிளறி மூடிக்கிட்டு இருக்கோம்.

ஆமாமா. அதுவுஞ் சரிதான். ஆனா எதுக்கு அண்ணன் இப்புடி தப்பும் தவறுமாக தர்ஜமா எழுதுனாரு.

அஹமது ! இவரு என்னமோ இதுவரைக்கும் எளுதுன புஸ்த்தகங்க மாதிரி இத எழுதிப்புட்டாரு. மத்த ஆலிம்கள்ட்ட காட்டவும் பயம். ஏவனாவது அதுல தப்பு சொல்லிட்டா ரிலீஸ் பண்ண முடியாதுன்னு யார்ட்டயும் காட்டாம அவசர அவசரமாக ரிலீஸ் பண்ணிட்டாரு. அதுல நல்ல லாபமும் வந்துருச்சு. கூடவே தர்ஜமாவுல உள்ள தப்பும் வெளிய தெரிஞ்சுருச்சு. வெளிய சொன்னா வெக்கக்கேடு. ஓரு ஆயத்தையே இடம் மாத்தி அச்சடிச்சுருந்தாரு. துமுமுக காரன் தான் சொல்லி, அப்புறம் ஸ்டிக்கர் அடிச்சு மிச்சத்துல ஒட்டுனாரு.

ஓஹோ. அப்புடியா கத. அதுனால தான் அவசர அவசரமா தமுமுகவுல இருந்தா இனி மதிப்பில்லன்னு ஓடி வந்தாரோ.

'ஆமா. ஆனா, வேற எதச் சொன்னாலும் நம்மளோட எவனும் வரமாட்டான். தவ்ஹீதுன்னு சொன்னாத்தான் ஒரு கூட்டம் ஓடியாரும்னு தவ்ஹீத சொன்னாரு. அத நம்பி வந்தவன் தலயில தர்ஜமாவ கட்டி மறுபதிப்பு போட்டு நல்லா காசு பாத்தாரு. அதும் பத்தாதுன்னு மார்க்கமே தெரியாத ஐரோப்பா மக்கள்ட்டயும் வித்து ஒரு தொகய தேத்திட்டாரு. இப்ப துபாய்ல இந்த தர்ஜமாவ விமர்சிச்சு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அங்கய்லாம் சேல்ஸ் அமோகமா நடத்தியாச்சு.

அதுசரி. இப்போ டிவில அதப்பத்தி பேசுறதுனால அண்ணனுக்கு எந்த நஷ்டமும் இல்ல. அத வாங்குன நம்மள மாதிரி ஏமாளிகளுக்குத் தான் நஷ்ட்டம். அப்புடியா.

ஆமா. இதுக்குமெலயும் விவரமா சொல்லனுமாக்கும்.

சரி உமர் பாய். இப்புடிலாம் அவரோட சேர்ந்து நாம ஏமாத்துனா அல்லாஹ் நம்மள நரகத்துல போட்டுற மாட்டானா.

என்ன அஹமது. உங்களுக்குத் தெரியாதா. அண்ணன் சொல்லிட்டாரு. சொர்க்கம் நரகம்லாம் இதுவர உண்டாக்கப்படவே இல்லியாம். அதெல்லாம் இனி இந்த பூமிலதான் உண்டாக்கப்படுமாம். ஆதனால ஏன் கெடந்து பயந்து சாவுறீங்க.

உமர். எனக்கு இப்பத்தாங்க உண்மையிலேயே பயமா இருக்கு. வணக்க வழிபாடுகள்ள அது இல்ல, இது இல்லன்னு சொன்னவரு அடுத்ததா ஜகாத் கடமையவே இல்லன்னு சொன்னாரு. இப்போ என்னடான்னா ஈமான்லே ஒரு பகுதிக்கே வேட்டு வக்கிறாருங்க எனக்கு பயமா இருக்கு. என்னய உட்டுடுங்க. நான் போயி ரமளான் முடியிறதுக்குள்ள பாவமன்னிப்பு கேக்கணும். நான் வர்றேன். வஸ்ஸலாம்.

முல்லா 19.10.2006

0 Comments:

Post a Comment

<< Home