Thursday, May 24, 2007

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 16

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. .. )

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். ஒங்களத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்.

நீங்க தான கடலூர் மாவட்ட ததஜ விஷயமா விரிவா சொல்றேன்னு சொன்னீங்களே மறந்துட்டீங்களா.

சே...சே. மறக்கலாம் இல்ல. ஆனா அதுதான பழய மேட்டரா போச்சே. கடலூர் மாவட்ட முன்னாள் ததஜ நிர்வாகிகளோட லெட்டரே வலைல விரிஞ்சு கெடக்கே.

ஆமாமா. நானும் பார்த்தேன். சப்சாடா எல்லா வெ வரத்தையும் புட்டு புட்டு வச்சுருக்காங்களே.

ஆனாலும் அஹமது, நம்ம தலவரு இருந்தாலும் இப்புடி எளக்காரமா எளுதி இருக்கக் கூடாதுன்னு தான் நான் நெனக்கிறேன்.

இது என்ன புது கூத்தா.. .. யாரப்பத்தி என்ன எளுதி இருக்காரு ஒமர் பாய்... ..

இப்போ அவருக்கு மொத எதிரியே கடலூர் மாவட்ட முன்னாள் ததஜ தலைவர் தான. அவரப் பத்தி கேவலமாக, அவரு ஒரு செவிடரு அதுனால நாஞ் சொன்னத சரியா வெளங்கிக்கலன்னு எளுதியிருக்காரு.

அடப்பாவமே. அந்த கொறயோட கடந்த இரண்டு வருஷத்துக்கு மேலா அவரு இந்த வீணாப்போன ததஜவுக்காக எவ்வளவு ஒழைச்சாரு. அவரு இவருக்காக வசூல் பண்றபோதுலாம் தெரியாதது இப்பத்தான தெரிஞ்சுதாக்கும்.

அடப்போங்க அஹமது. நம்ம தலைவரு பாணியே இது தான. எப்போ அவருக்கு புடிக்கலியோ அப்போ மத்தவங்களயெல்லாம் இப்புடி என்னமாவது ஒரு கொறய சொல்லித்தான மட்டம் தட்டுவாரு. அல்லது இவராவே எதாவது பட்டம் சூட்டி விட்டுடவாரு.

அட ஆமாங்க ஒமரு. இதுக்கு முன்னால அபூஅப்துல்லாட்ட இருந்து வெலகும் போது அவர மற கழண்டவருன்னு சொன்னாரு. ஃபளுலுல் இலாஹிய கட்டம் கட்டும் போது திருடன்னு சொன்னாரு. இப்புடி ஒரு ஒருத்தரையும் என்னமாவது சொல்றது வாடிக்கை தானே.

இவுங்கள மட்டுமா சொன்னாரு. யூசுப் அல் கர்ளாவியவே லூசுப்பயன்னு சொன்னாரே.

ஆமா இவரு சஹாபாக்களயே மதிக்கல, சஹாபாக்களயே கிரிமினல்னும், கொலகாரன்னும் சொன்னவர்தானே. இவரு கடலூர் மாவட்ட தலைவர செவிடன்னு சொல்றதெல்லாம் இவருக்கு சகஜமான ஒண்ணுதான்.

நாம சொல்லியா அவரு இத மாத்திக்கப் போறாரு. வுடுங்க அஹமது. எனக்கென்ன சந்தேகம்னா, பாக்கர கழட்டி வுட சமயம் பார்த்து அடிச்சவரு, பாக்கர் அடிச்ச பதிலடில சரண்டராகி வுளந்துட்டார்ன்னு தான் நெனக்கிறேன்.

எப்புடிச் சொல்றீங்க ஒமர் பாய்.

அதாவது அஹமது, பாக்கர் நந்தினியோட தனிக்குடித்தனமே நடத்துனது தனக்குத் தெரியும்னு ஒத்துக்கிட்ட பிஜே ஏன் அதுக்கு நடவடிக்க எடுக்கல.

என்னது, பாக்கரு நந்தினியோட குடித்தனம் நடத்துனாரா. அந்தப் பொண்ணு இஸ்லாத்துக்கு வந்துச்சா வரலியா, இவரு கண்ணாலம் கட்டுனாரா இல்லியா.

அட என்ன அஹமது. இப்புடி கல்யாணம் பண்ணித்தான் சேரணும்னு யாரு சொன்னா. இரண்டு பேரும் விரும்புனா சேர்ந்துக்கலாம்ல.

என்ன ஒமர் பாய். புதுப்புது குண்டா போடுறீங்க. இத யாரு சொன்னது.

திருவாளர் (டு)பாக்கர் தான். இவரு இப்புடிச் சொல்றாரேன்னு பெண்கள் கல்லூரி ஆலிமாட்ட அந்த பொண்ணு கேட்டுச்சாம். ஆலிமா வெலவெலத்துப்போய் அல்லாமாட்ட கேட்டாங்களாம். பிரச்சன பாக்கரப் பத்துனதுனால அல்லாமா சிரிச்சுட்டு போயிட்டாராம். இதயும் அல்லாமா பிஜேவே கடலூர்காரங்கள்ட்ட சொல்லியிருக்காரு.

அட வெக்கக்கேடே. அப்ப தனிக்குடித்தனம் நடத்தும் போதுலாம் அனுமதிச்சவரு, பஸ்ஸுல போனதுக்கு மட்டும் அதிரடி ஆக்சனா.

நீங்க வேற, கன்னியாகுமரி மாவட்ட நிர்வகிங்க சத்தம் போட்டதுனால தான் ராஜினாமா செய்யச் சொன்னோம்னு தலவரு சொல்லியிருக்காரே.

கன்னியாகுமரி ஆளுங்க கேட்டதுக்காக ஆக் ஷன் எடுத்தவரு அப்புறம் எதுக்கு பேக் அடிச்சாரு.

அது அதவிட பெரிய கூத்து. மதுரக்காரங்க வந்து பாக்கருக்கு மறுபடியும் பதவி குடுத்தே ஆகணும்னு அடம் புடிச்சதுனால மறுபடியும் பதவி குடுத்துட்டாங்களாம்.

அடப்போங்க ஒமர் பாய். கேக்கவே தல சுத்துது, யாரோ மிரட்டுனதுனால ஆக் ஷன் அப்புறம் வேற யாரோ மிரட்டுனதுனால ஆன்டி கிளைமாக்ஸ் இப்புடி வேற எந்த அரசியல் கட்சியில கூட நடக்காதுன்னு நெனக்கிறேன். அரசியல் கட்சிகள விட நம்மளோடது ரொம்ப கேவலமாய் போச்சு போங்க.

அடப்போங்க அஹமது. அவன் கேட்டான் ஆக் ஷன் எடுத்தேன் இவங்கேட்டான் மாத்திட்டேன்னு அவரு சொல்றத எல்லாம் அப்புடியே நம்புறீங்களா நீங்க. பரிதாபம் போங்க. நாங் கேக்குறேன். சும்மா மெரட்டுனதுக்கே ஆக் ஷனும், அப்புறம் பதவியும் குடுத்ததா சொல்றாரே. ஆனா மறுபடியும் பதவி குடுத்ததுக்காக ஒரு மாவட்ட நிர்வாகமே விலகியிருக்கே அல்லது விலக்கப்பட்டிருக்கே இந்த நடவடிக்கை ஏன் கன்னியாகுமரியிலோ அல்லது மதுரைக்கோ எடுக்கல.. .. ..

அட ஆமா ஏன் அவுங்க மேல தலைமையின் முடிவ ஏத்துக்காததுக்காக நடவடிக்கை எடுக்கல.

சும்மா தமாசு பண்ணாதீங்க அஹமது. எல்லாமே செட்டப்பு. தனிக்குடித்தனம் நடத்துறது தெரிஞ்சும் நடவடிக்க எடுக்காம, பஸ்ஸுல போனதுக்காக நடவடிக்கங்குறதே சும்மா அவர களட்டி வுடுறதுக்கு சான்ஸ் பாத்து செஞ்சது தான்.

அப்புறம் எப்படி மதுரக்காரங்க கேட்டதுனால திரும்ப பதவி குடுத்ததா சொல்லியிருக்காரு.

என்ன செய்றது அஹமது. பாக்கரு துபாய் போய் பீஜேவோட வண்டவாளத்த எல்லாம் தண்டவாளத்துல ஏத்த ஆரம்புச்சப்பறம் வேற வழியில்லாம பாக்கருக்கு பதவி குடுத்திருக்காரு. அதுக்கு சப்போட்டுக்குத் தான் மதுரக்காரங்க கேட்டாங்கன்னு சொல்றதுலாம்.

யார் யாரோ அரசியல்வாதிங்கன்னு அபாண்டமா சொன்ன இவரு பண்ற அரசியல் தாங்க முடியலியே.

தாங்க முடியாமத்தான் கடலூர் மாவட்டகாரங்க களண்டுகிட்டாங்க.

ஆமா ஒமர் பாய் எனக்கு ஒரு சந்தேகம். கடலூர்கார சகோதரர்கள் கேட்ட அளவுக்குக்கூட நம்ம கட்சியில உள்ள மவ்லவிகள் எதுவுமே கேக்க மாட்டாங்களோ.

யாரச் சொல்றீங்க. ஜகாத் ஆய்வு குழு புகழ் மவ்லவிகள் கூட்டத்தையா கேக்குறீங்க.

அட நல்ல டைட்டிலா இருக்கே. அந்த ஆய்வு குழு மட்டுமல்லாமல், இன்னும் எத்தனயோ பேரு மவ்லவி பட்டமும் வாங்கி சுத்தி இருக்காங்களே அவுங்களத்தான் கேக்குறேன்.

அவுங்கள்லாம் எப்படி அண்ணன எதுத்து கேப்பாங்க. சம்பளம் குடுக்குற முதலாளிய எதுத்து எந்த தொழிலாளியாவது கேள்வி கேப்பானா. கேள்வி கேட்டா சீட்டு கிழிஞ்சுடும். சம்பளம் போயிடும். அதுதான் பயம்.

கிளிஞ்சுது போங்க.

வர்றேன் வஸ்ஸலாம்

முல்லா

0 Comments:

Post a Comment

<< Home