Sunday, June 10, 2007

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 17

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

வஅலைக்கு முஸ்ஸலாம். அடடே வாங்க ஒமர்பாய். என்ன இப்பல்லாம் திடீர்னு வர்ரீங்க. திடீர்னு காணாப் போயிடுறீங்க.

என்ன செய்றது. அஹமது. கொளுத்துற வெயில்ல வெளிய தல காட்ட முடியலியே.

ஆக, வெளிய வராததுக்கு வெயில் தான் காரணம்னு சொல்றீங்க.

அடப்போங்க. அஹமது. அது தான் ஊரறிஞ்ச ரகசியமா போச்சே. களுத முன்னால போனா கடிக்குது. பின்னால போனா ஒதக்கிது.


ஆக, (டு)பாக்கர் மேட்டரு புலி வாலப்புடிச்ச கதயா ஆச்சுன்னு சொல்லுங்க.

ஆமா அஹமது. கோயில்பட்டி பஸ்ஸு விஷயத்தையும், ஒய்.கே.மேன்சன் சமாச்சாரம் மாதிரி தட்டி வுட்டுரந்தாருன்னா இந்த அளவுக்கு நாறியிருக்காது.

ஆக. தவ்ஹீதுங்குற பேர்ல தொடர்ந்து ஜல்சா பண்ணிக்கிட்டே இருந்தாலும் கண்டுக்காம வுட்டுரக்கணும்னு சொல்றீங்களா.

வேற என்னங்க செய்றது. அது தப்புன்னு சொல்லி நடவடிக்கை எடுக்கவும் முடியல. அது சரின்னு எல்லோரையும் ஏத்துக்க வைக்க முடியலியே.

அதுதான் நம்மாளு கெடந்து தடுமாறுராறே.

அத ஏன் கேக்குறீங்க. நம்மாளு போற போக்கப் பாத்தா மிர்ஸா குலாம் மாதிரி ஆகிடுவாரு போலன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்களே. எனக்கென்னமோ அவரு இப்போ பஞ்சாப்ல ஒரு குரூப் கௌம்புச்சே.. .. .. அது என்ன சச்சா கவுதாவா? அதப்போல நம்ம குரூப்பும் ஆகிடும் போல.

என்ன சொல்றீங்கன்னே வெளங்கல ஒமர் பாய். கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க.

அஹமது. இந்த அகாலிகள் இருக்காங்களே. அவுங்கள்ள யாராச்சும் தப்பு பண்ணிட்டா, அவுங்க பொற்கோயில்ல போயி, வர்ரவங்க கால களுவுறது, செருப்ப தொடக்கிறதுன்னு சேவை செய்யணும்.

அதுக்கும் நம்ப (டு)பாக்கர் விஷயத்துக்கும் என்னங்க சம்பந்தம்.

சரியாப் போச்சு போங்க. நீங்க நம்ம தலவரோட பேச்ச கேக்கலியோ.

அத நிறுத்தி பலகாலமாச்சு. இப்பல்லாம் குர்ஆன் ஹதீஸ எங்க சொல்றாரு. தன்னோட வாத தெறமைய நம்பி மட்டும் தான பேசுறாரு. அதுனால நான் சமீப காலமா எதயுமே கேக்கல.

தப்புச்சீங்க போங்க. பரவாயில்ல நானே சொல்லிடறேனே. அதாவது பாக்கர பதவியில இருந்து எடுத்ததுக்கப்புறமும் அவரு, தொடர்ந்து ததஜ ஆபிசுக்கு வந்தாராம். வந்தவரு மாடிப்படியில எல்லாம் குப்பையா இருக்குன்னு தொடப்பகட்டய எடுத்து படிய பெருக்கி சுத்தம் பண்ணுனாராம். ஆக, அகாலிகள் பொற்கோவில சுத்தம் பண்ணி பாவ மன்னிப்பு பெறுகிற மாதிரி நம்ம (டு)பாக்கரு ததஜ ஆபிஸ சுத்தம் பண்ணி பாவமன்னிப்பு பெற்று பதவியும் வாங்கிட்டாரு போங்க.

தொடப்பகட்ட. ததஜ ஆபீஸுல படி மட்டுமா குப்ப. மொத்த இயக்கத்தையே பெருக்கி தள்ளனும் போங்க.

என்ன அஹமது இப்புடி ஆவேசப்படுறீங்க.

வேறெ என்ன செய்யச் சொல்றீங்க. (டு)பாக்கர் வெசயமா மொதல்ல நம்மாளு என்ன சொன்னாரு, பஸ் விஷயமா கேட்டப்போ, பாக்கரு மறுத்தாரு. அப்புறமா நம்மள்ட்ட இருந்த ஆதாரங்கள் சாட்சிகளயெல்லாம் தூக்கிப் போட்டவுடன ஒத்துக்கிட்டாருன்னு சொன்னதா தான நீங்க சொன்னீங்க.

ஆமா அவரு சொன்னத தான் நான் சொன்னேன்.

இப்ப என்னடான்னா, இதுக்குலாம் ஒரு தண்டனையே கெடயாது. யாரும் குடுக்க முடியாதுன்னு பேசுனாருன்னா எப்படிங்க பொறுக்க முடியும்.

சரி சரி அஹமது அதுக்காக நீங்களும் கடலூர் காரங்க மாதிரி ஏன் குதிக்கிறீங்க.

ஆமா ஒமர் பாய் கேக்கணும்னு நெனெச்சேன். அவுங்களோட நெலம என்ன?

இதுவும் தெரியாதா ஒங்களுக்கு. சரிதான் போங்க. வர்ற 16 ஆம் தேதி முபாஹலாவுக்கு கூப்டுறுக்காங்க.

இவரு போயிட்டுதான் வேற வேல பாப்பாரு போங்க.

ஏன் அப்டி சொல்றீங்க அஹமது.

என்ன ஒமரு பாய். நீங்க தெரியாமத்தான் கேக்குறீங்களா. அல்லது தெரிஞ்சுகிட்டே என்னய நக்கல் பண்றீங்களா. பரவாயில்ல. அபூ அப்துல்லாவுல ஆரம்புச்சு நம்ம மவ்லவி முஜீபுர்ரஹ்மான் உமரி வர எத்தனையோ பேர்கிட்ட முபாஹலாவுக்கு அழைப்பு விடுத்தாரு. ஆனா இதுவர ஒருத்தர்ட்டயாவது முன்னால வந்து முபாஹலா பண்ணுனாரா.

ஆமா. ஒருத்தர்ட்டயும் பண்ணலதான். ஆனா அவுங்களா ஓடிப்போனதா தான சொன்னாரு.

அப்புடித்தான் சொல்வாரு. அப்புடி இல்லாம நாந்தான் பம்மாத்து காட்டுனேன். அத நம்பி அவனுங்க வந்துட்டானுங்க. நம்மாளய்லாம் முடியாதுன்னா சொல்வாரு.

அப்போ 16 ஆம் தேதிக்கு பெறகு எதாவது கத சொல்லி கடலூர்காரங்க ஓடிப்போயிட்டதா சொல்வாருங்கிறீங்களா.

அப்புடித்தான் நடக்கும்னு நான் நெனக்கிறேன். ஆனா கொஞ்ச பேரு, ஒங்க தலைவரு சொர்க்கம் நரகம் படைக்கப்படல, அல்லாஹ் முதல் வானத்துக்கு எறங்கி வரலன்னு குஃப்ர் தனமா பேசுறதயும், ஸஹாபாக்கள திட்டுறதையும் வச்சுப் பாத்தா மறுமைநாள நம்பாத மாதிரி தெரியுது. அதுனால மறுமைய நம்பாத அவரு அல்லாஹ்வின் சாபத்த கேக்கக்கூட தயங்க மாட்டாருன்னு சொல்றாங்க.

அப்புடிப்போடுங்க. சரி சரி நேரமாயிடுச்சு. பெறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்

முல்லா 09.06.2007

0 Comments:

Post a Comment

<< Home