Saturday, June 16, 2007

'அம்மா' வழியில் 'அண்ணன்'..?

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் தலைவர் திருவாளர் பீஜே ஒரு காலத்தில் பலரால் அண்ணன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.
ஆனால், என்று போயஸ் தோட்டத்து பொன்மகளிடம் பெட்டியை பெற்றுக் கொண்டு சமுதாயத்தை பிளக்க எண்ணி சரணடைந்தாரோ, அன்று முதல் இன்று வரை அம்மாவின் பாணியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்.

ஜெயலலிதா கோபித்துக் கொள்வாரோ என்பதற்காக அப்ஸல் குரு விஷயத்தில் தாறுமாறாகப் பேசினார். அப்ஸல் குருவிடம் நியாயமான விசாரணை நடை பெற வில்லை என தமுமுக போன்ற சமுதாய சிந்தனையாளர்கள் போராடிக் கொண்டிருக்க, அப்ஸல் குருவிற்கு நியாயமான வாய்ப்பளிக்கப்பட்ட பின்னரே அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என திருவாய் மலர்ந்தருளினார்.

பலரும் சுட்டிக்காட்டியும் தன்னை திருத்திக் கொள்ள வில்லை.

அவரின் அரசியல் குரு செல்வி ஜெயலலிதாவைப் பின்பற்றி தற்சமயம் தன்னுடைய அரசியல் கட்சியின் நிர்வாகிகளின் மேல் பழிபோட்டுள்ளார்.

அதாவது, ஜெயலலிதா தன்னுடைய ஆட்சி காலத்தில் இணைந்து பணியாற்றிய இன்னும் சொல்வதானால் அவரோடு இசைந்து பணியாற்றிய அன்றய கவர்னர் திரு சென்னாரெட்டியை பற்றி அவதூறாக குற்றம் சுமத்தினார். தன்னை மானபங்கப்படுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டினார்.

அத்தகையவரிடம் கைக்கூலி பெற்று சமுதாயத்தை பிளக்க நினைத்த பிஜே, தற்சமயம் முன்னாள் கடலூர் ததஜ நிர்வாகிகளைப் பற்றி செவிடர் என்றும் பொருளாதார மோசடியாளர்கள் என்றும் கூற ஆரம்பித்துள்ளார்.

20 இலட்ச ரூபாயை வெளிநாடுகளிலிருந்து வசூல் செய்து ஏமாற்றி விட்டதாக கூசாமல் புளுகியுள்ளார். எந்தெந்த நாடுகளிலிருந்து எவ்வளவு தொகை அவ்வாறு கையாடல் செய்யப்பட்டது. விளக்கமளிக்க முடியுமா இந்த வாய்ச்சொல் வீரரால். முடியாது என்பதால் தான் கொடுத்த வக்கீல் நோட்டீஸை திரும்ப பெற்றுக் கொண்டார்.

உண்மையை சொல்லப் போனால் 2004 இல் தனது பருப்பு இனி தமுமுகவில் வேகாது என்றாகியவுடன் தனி அமைப்பு கண்டவுடன், பல்வேறு காரணங்களைச் சொல்லி உழைப்பாளிகளின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் உறிஞ்சி கொளுத்தவர் இந்த பீஜே தான்.

மறுமையை நம்பும் பலர், இவரிடம் மறுமையில் தங்களது கோரிக்கையை எழுப்ப காத்துள்ளனர். இவருக்கோ மறுமையைப் பற்றிய அச்சமில்லாததால் எந்தெந்த வகைகளில் எல்லாம் பொதுமக்களை ஏமாற்ற முடியுமோ அந்தந்த வழிகளில் ஏமாற்றி வருகிறார்.

இப்பொழுது கூட தன்னுடைய சொத்து விபரங்களை குறிப்பாக 2004 க்குப் பின் சேர்த்தவைகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட இவரால் முடியுமா?

முடியவே முடியாது. காரணம் எப்படி ஜெயலலிதாவால் தன்னுடைய சொத்துக்களை மதிப்பிட முடியாதோ, அவ்வாறே அவரிடம் கைக்கூலி பெற்ற பீஜேவாலும் முடியாது. காரணம், எவ்வாறு ஜெ.ஜெ ஒரு மன்னார்குடி மாஃபியா கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளாரோ அவ்வாறு தான் பீஜேயும் பாக்கரெனும் பிஸினெஸ் காந்தத்திடம் மாட்டிக் கொண்டுள்ளார். எனவே தான் இவரால் பாக்கரையும், ஜெயலலிதாவால் மன்னார்குடி மாஃபியாவையும் உதற முடியவில்லை.

சமுதாய சொந்தங்களே விழித்துக் கொள்ளுங்கள்.

ராவுத்தர் 13.06.2007

0 Comments:

Post a Comment

<< Home