Sunday, July 15, 2007

சுயநலமே பிஜேக்கு பிரதானம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அரபியில் 'முனாபிக்' என்று ஒரு வார்த்தை உண்டு. அதற்கு, நயவஞ்சகன், இரட்டை நாக்கு உடையவன், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவன் என்று தமிழில் பொருள் சொல்வார்கள்.



இந்த முனாபிக் என்ற பெயர் பிஜேக்கு ரொம்பப் பிரமாதமாக பொருந்திப் போகிறது.

'அந் நஜாத்' என்ற பத்திரிக்கை தவ்ஹீதை சொல்லும் பத்திரிக்கையாக வலம் வந்த போது, தன்னை மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்வதற்காக அதில் எழுத ஆரம்பித்தார் பிஜே. அதற்கு முன் அவர் யாரென்றே எவருக்கும் தெரியாது.

அந்த பத்திரிக்கையின் நிர்வாகத்திற்குள் ஊடுறுவ முடியாத நிலை ஏற்பட்ட பொழுது, பிஜே அதன் நிறுவனர் அபூஅப்துல்லாஹ் மீது மோசடி குற்றச்சாட்டை சுமத்தி அதிலிருந்து விலகிக் கொண்டார்.

தான் விலகியதற்குரிய உண்மையான காரணத்தை மறைத்து அதன் நிறுவனர் மீது மோசடி பழி சுமத்தி, அவர் மோசடி செய்து விட்டதால் தான் விலகுகிறேன் என்று கூறியதால் பிஜேயை முனாபிக் என்கிறோம்.

அவர் செய்த முனாபிக்தனம் இது மட்டுமா, இன்னும் ஏராளம் இருக்கின்றன.

முதன் முதலாக தவ்ஹீதை சொல்வதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான் ஜம்இய்யத்து அஹ்லே குர்ஆன் வல்ஹதீஸ் (ஜாக்), ஏகத்துவ எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்ட பொழுது, சிறுசிறு குழுக்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் செயல்பட்ட கொள்கைவாதிகளை ஒருங்கிணைத்து துவக்கப்பட்டதே இந்த ஜாக் ஜமாத். இந்த பிஜே அதில் இணைந்து பிரபல பிரச்சாரகராக தன்னை பிரபல்யப்படுத்திக் கொண்டதோடு, அந்த அமைப்பின் பத்திரிக்கையான 'அல்ஜன்னத்' ஏட்டிற்கும் ஆசிரியராகவும் பொறுப்பேற்றார்.

ஜாக்கின் தலைவரைக் கூட பலருக்கு தெரியாது, ஆனால் பிஜே பலருக்கும் நன்கு தெரிந்தவராக ஆனார். தான் ஜாக்கிற்குள் வந்த வேலை முடிந்து விட்டதால் அந்த அமைப்பின் தலைவர் மீது மோசடி குற்றச்சாட்டுகளை சராமாரியாக சுமத்தி விட்டு அதை விட்டும் விலகிக் கொண்டார்.

சொக்கத் தங்கமான அதன் தலைவர் எஸ்.கமாலுத்தீன் மதனி, மோசடி செய்து விட்டார் என்று கூறிக்கொண்டும், தான் எந்த மோசடியும் செய்யாதவன் போல் நாடகமாடிக் கொண்டும், மோசடி எனும் சந்தேக வித்தை மக்கள் மனதில் விதைத்தும் ஷைத்தானுக்கு நிகராக வேலை செய்தார். தான் ஜாக்கை விட்டு விலகுவதற்கு தலைவரின் மோசடிகள் தான் காரணம் என்றும் பொய் கூறினார்.

உண்மையாக காரணங்களை மக்களிடமிருந்து மறைத்து ஜாக்கிலிருந்து விலகுவதற்கு பொய்யான காரணங்களை கற்பித்து விலகியதால் நாம் அவரை முனாபிக் என்கிறோம்.

பிறகு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அப்போது புகழின் உச்சகட்டத்தை அடைந்து விட்டதாக உணர்ந்தவர், 'மனம் திறந்த மடல்' மூலம் தனது நயவஞ்சகத்தை ஆரம்பத்தில் வெளிக்காட்டி விட்டு, பின்னர், 'முக்கிய அறிவிப்பு' ஒன்றை வெளியிட்டு விட்டு தமுமுகவிலிருந்தும் கழன்று கொண்டார்.

இங்கேயும் உண்மையை மறைத்து, எந்த வகையிலும் சம்பந்தப்படுத்தவே முடியாத ஒன்றை சம்பந்தப்படுத்தி, தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது என்ற பொய்யை பரப்பி விட்டு, அதையே தான் விலகுவதற்கு காரணமாகவும் சொல்லிக் கொண்டார்.

அதனால் தான் அவரை முனாபிக் என்கிறோம்.

தமுமுகவிற்கு நிரந்தர வருமானத்திற்காக சொத்துக்கள் வாங்க வேண்டும் என்று கடிதம் எழுதி தனது கையெழுத்தையும் போட்டு விட்டு, அந்த சொத்துக்கள் தனி டிரஸ்ட்டில் தான் இருக்க வேண்டும், அதுதான் பாதுகாப்பானது என்று சொன்ன பிஜே, அந்த சொத்துக்களையும் பத்திரிக்கையையும் தமுமுகவிலிருந்து விலகும் போது ஒப்படைக்காமல் இன்று வரை தன் கைவசத்தில் வைத்திருக்கும் பிஜே நயவஞ்சகத்தினத்திலிருந்து முன்னேறி மோசடிக்காரனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே ஜாக் என்ற அமைப்பு தவ்ஹீதுக்காக இருக்கும் நிலையிலேயே அனைத்து தவ்ஹீது கூட்டமைப்பு என்ற ஜமாஅத்தை ஏற்படுத்தி, அதையே ததஜ என்று பெயர் மாற்றி தமிழக முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினார் பிஜே. இதற்காக தமிழக முஸ்லிம்கள் இவரை மன்னிக்கவே மாட்டார்கள்.

ததஜ ஆரம்பித்தவுடனேயே வந்த தேர்தலின் போது பெட்டியை வாங்கிக் கொண்டு ஜெயலலிதா எனும் சங்பரிவார கும்பலுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவித்தார். அதற்கு ஜெ அமைத்த வேஸ்ட் பேப்பர் ஆணைய அறிவிப்பு தான் காரணம் என்று வாய் கூசாமல் அல்லாஹ்வை மறந்து பொய் கூறினார்.

10 லட்சம் மக்களை கும்பமேளாவில் ஒன்று கூட்டியதாக பொது மக்களிடமும், ஒரு லட்சம் பேரை கூட்டியதாக ஜெயலலிதாவிடம் நேரடியாகவும் கூறி தனது நயவஞ்சகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டார்.

இப்படியே தொடரும் நயவஞ்சகத்தனத்தில் லேட்டஸ்ட் நயவஞ்சகத்தனம் தான், இடஒதுக்கீட்டிற்காக பிஜே நடத்திய ஜுலை 4, சிறை நிறப்பும் நாடகம். 15 லட்சம் மக்களை திரட்டப் போவதாக பினாத்திக் கொண்ட பிஜே, சில ஆயிரம் பேர்களாக மக்கள் செல்வாக்கை இழந்து முடங்கிப் போயுள்ளார்.

இந்த லட்சணத்தில் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை பார் என்ற பழமொழிக்கு ஒப்ப விண் டிவியில் வெற்றி வெற்றி என்று வெற்றி முழக்கம் வேறு. தெண்டம்.

இவற்றுக்கெல்லாம் காரணம், மார்க்க விஷயத்தில் முன்னுக்குப்பின் முரணாக தந்த ஃபத்வாக்கள்.
பாக்கர் விஷயத்தில் அவர் அடித்த அந்தர் பல்டிகள்.
மற்றும் கடலூர் மாவட்ட ததஜவும் அதன் அத்தனை கிளைகளும் கலைக்கப்பட்ட விவகாரம்.
ஒன்றும் அறியா தனது மனைவி மக்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை இறக்கி வைக்குமாறு நெல்லிக்குப்பத்தில் வேண்டிக் கொண்டது.

இடஒதுக்கீடு சம்பந்தமாக அரசாங்கத்தை நெருக்குதலுக்கு உள்ளாக்க தமுமுகவால் முடியுமா? ததஜவால் முடியுமா?

நட்சத்திர நடன தாரகையும், உடலெல்லாம் இந்துவெறி எனும் விஷக்குருதி ஓடிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவிடம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் விலை பேசி விற்றுவிட்டு, இந்த தமிழக அரசுக்கு எதிராக வாக்குச் சீட்டுக்களை திருப்பி விட்டு, இடஒதுக்கீட்டிற்காக போராடுகிறோம் என்று சொல்வதற்கு பிஜேக்கும் ததஜவினருக்கும் என்ன அருகதை இருக்கிறது.

இடஒதுக்கீடு கிடைத்து விட்டால் அது தான் நடத்திய போராட்டங்களினால் தான் கிடைத்தது என்று பீற்றிக் கொள்வதற்காகவே தவிர, வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது.

பிஜேயின் முனாபிக்தனம் இத்தோடு முடிந்து விடப்போவதில்லை. தொடரும், தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா

0 Comments:

Post a Comment

<< Home