Wednesday, June 27, 2007

சிறுபான்மையினருக்கு தனி இயக்குநரகம் அமைப்பு

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு தனி இயக்குநரகம் அமைப்பு

சென்னை, ஜூன் 27: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு தனி இயக்குநரகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் துறை இயக்குநர் இனி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல இயக்குநர் என்று அழைக்கப்படுவார்.

அதே போன்று மாவட்ட அளவிலான அதிகாரிகளும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைநல அதிகாரிகள் என்றே அழைக்கப்படுவர்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்காக பிரதமமந்திரியின் 15 அம்ச திட்டங்களை இத்துறை தீவிரமாக செயல்படுத்தும்.

சிறுபான்மையினருக்கு தனி நலவாரியம் ஊருவாக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் விடுத்த கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில் சிறுபான்மையினர் நலன் காக்கும் வகையில் இத்துறை செயல்படும்.

புதிதாக ஊருவாக்கப்பட்ட இத்துறையின் செயல்பாடுகளுக்கென இயக்குநருக்கு தனி நேர்முக ஊதவியாளர், மூன்று அலுவலக ஊதவியாளர்கள் ஆகியோரை ஓராண்டுக்கு நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிரைவரை டெக்ஸ்கோ மூலம் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி

இது தொடர்பான முந்தைய நமது போஸ்ட்டிங்கை காண இங்கே சொடுக்கவும்.

0 Comments:

Post a Comment

<< Home