Tuesday, August 21, 2007

பொய்யே ததஜவினரின் மூலதனம்

பி.ஜெ. பாக்கர் ஆகியவர்களை இன்றே நாடு கடத்த உத்தரவு.


மலேசியா சென்ற பி.ஜெ. பாக்கர் கைது செய்யப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். குவாங் சிறையிலிருந்த பி.ஜெ. பாக்கர் கை விலங்குடன் இன்று காலை கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்கள். மலேசிய நாட்டின் சட்டம் தெரியாமல் தாங்கள் நடந்ததற்காக நீதிபதி முன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்கள். தாங்கள் தமிழகத்தில் பிரபலமான மத குருக்கள் என்பதால் அறியாமல் செய்த தவறுக்காக தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலை செய்ய வேண்டி நின்றார்கள்.

மலேசிய நாட்டுக்குள் இனிமேல் நுழையவே கூடாது எனும் நோ என்றிவ் முத்திரை இவர்கள் பாஸ்போர்ட்டில் குத்த வேண்டும். இன்றைய தினமே இவர்களை நாடு கடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தர விட்டார்.

தீர்ப்புக்குப் பின் பி.ஜெ. பாக்கர் ஆகியவர்களை புத்துராஜெயா இமிகிரேசன் சிறையில் கொண்டு போய் அடைத்தனர். இன்று mas விமானம் மூலம் ஏற்றி விடப்படுகிறார்கள். அந்த விமானம் இன்று இரவு 8.45 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் வந்து சேருகிறது.

மலேசியாவில் 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட பி.ஜெ, பாக்கர் ஜாமீனில் வந்ததும் கைது செய்தியை பொய் என்று கூறினார்கள் த.த.ஜ.வினர். 21 ஆம் தேதி ஜாமீன் ரத்து செய்யப்பட்டு குவாங் சிறையில் தள்ளியது. உடனே மலேசியாவில் பி.ஜெ, பாக்கர் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று மலேசிய சென்னை தூதராகம் முன் ஆர்ப்பாட்டம் செய்ய த.த.ஜ. அழைப்பு விடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்பியது.


நாங்கள் தமிழகத்தில் பிரபலமான மத குருக்கள் என்பதால் அறியாமல் செய்த தவறுக்காக தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலை செய்யுங்கள் என்று வேண்டி மன்னிப்பு கேட்டதால்
சிறை தண்டனை இன்றி இன்று நாடு கடத்தப்பட்டு சென்னை வருகிறார் என்றதும் கைது செய்தியை மீண்டும் பொய் என்று கூறுகிறார்கள். பொய்யர்களான த.த.ஜ.வினர்.


பஸ்லுல் இலாஹி

0 Comments:

Post a Comment

<< Home