Friday, September 28, 2007

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று முதல் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துன் நாசர் மதனி உட்பட 8 பேருக்கு இன்று முறைப்படி விடுதலை வழங்கப்பட்டது.

மேலும் 41 பேருக்கு 5 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலத்தை முழுவதும் அவர்கள் அனுபவித்து விட்டதனால் தண்டனைக் காலம் கழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இன்று மட்டும் 49 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தீர்ப்புகள் தொடருகின்றன...

0 Comments:

Post a Comment

<< Home