Thursday, September 13, 2007

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு - சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு: சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு


சென்னை: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.


கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்த அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்



குறிப்பு:


தமுமுகவின் இரட்டை கோரிக்கைகளில் ஒன்றான சிறைவாசிகளின் விடுதலை கடந்த வாரம் நிகழ்ந்தது. இப்பொழுது ரமளான் பரிசாக பிராதான கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டிற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமுமுகவின் முயற்சிகளுக்கு வெற்றியளித்த வல்ல ரஹ்மானுக்கே புகழனைத்தும்.

அல்ஹம்துலில்லாஹ்....

1 Comments:

At 3:53 AM, Blogger Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

தமிழக முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு ரமளான் மாதத்தில் கிடைத்திருக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

தமிழக முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு மிக மிக குறைவுதான் இருந்தாலும் இந்த முதல் நடவடிக்கையை தமிழக முஸ்லிம்கள் குறை சொல்லாது பாராட்ட வேண்டும். அல்லாஹ்வின் அருளால் நம் முஸ்லிம் சமுதாயத்தில் இருக்கும் அனைத்து அமைப்புகளின் அயராத முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதற்காக பாடுப்பட்ட நம் முன்னோர்கள், நம் முஸ்லிம் சமுதாயத்தில் இருக்கும் அனைத்து அமைப்புகளின் காலம் சென்ற தலைவர்கள், முன்னால் தலைவர்கள், தற்போதைய தலைவர்கள், அமைப்புகளை சார்ந்தவர்கள், தனிப்பட்ட முறையில் முயற்சி மேற்கொண்டவர்கள் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவரையும் விருப்பு, வெருப்பின்றி, தன்னால்தான் என்றில்லாமல் சுயநலமின்றி அனைவரையும் நாம் பாராட்டுவோம். அனைவர்களுக்காகவும் இந்த ரமளான் மாதத்தில் அல்லாஹ்விடம் நாம் துஆ செய்வோம். புனிதமான ரமளான் மாதத்தில் நாம் பெற்றிருக்கும் இந்த இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெறும் அளவிற்கு யா அல்லாஹ் எங்கள் சமுதாயத்தில் குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சியைத் தருமாறும், அரசாங்க வேலைத்தானே என்றில்லாமல் படைத்தவனாகிய (அல்லாஹ்வுக்கு) உனக்கு பயந்து வேலைசெய்யும் பக்குவத்தைத்தருமாறும் இந்த புனிதமான ரமளான் மாதத்திலே அல்லாஹ்விடம் இருகரமேந்தி துஆ செய்வோம்.

சமுதாயத்தில் இருக்கும் அனைத்து அமைப்புகளின் தலைவர்களே! சமுதாயத்தில் இருக்கும் கொடை வள்ளல்களே! ஆர்வலர்களே! கண்ணியமான பெற்றோர்களே!
இடஒதுக்கீட்டிற்கு தகுதியான குழந்தைகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமோ அதை துரிதமாக செய்ய வேண்டும். இந்த கல்வி படித்தவர் நம் சமுதாயத்தில் இல்லையே என்று கையை பிசைந்துகொண்டு, அந்த இடத்தை நழுவ விடாமல் அதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இடஒதுக்கீட்டை முறையாக பயன்படுத்துவோம். இடஒதுக்கீடு அதிகமாக அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

வஸ்ஸலாம்
சகதுல்லாஹ்
துபை

 

Post a Comment

<< Home