Sunday, September 02, 2007

ஒற்றுமைக்கு எதிரி பிஜே தான், ததஜ நிர்வாகி வாக்கு மூலம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..


ஒற்றுமைக்கு எதிரி யார் எனும் தலைப்பில் நாம் இந்த வலைத்தளத்தில் ஒரு கட்டுரை பிரசுரித்திருந்தோம்.

அதில் சமுதாய ஒற்றுமையை குலைப்பது திருவாளர் பிஜே தான் என்று குறிப்பிட்டு இருந்தோம். அதனை உறுதி செய்யும் விதமாக ததஜ நிர்வாகி அபுல் காசிம் என்பவர் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மக்கள் தொலைக்காட்சியில் நீதியின் குரல் எனும் நிகழ்ச்சி இஸ்லாமிய கிருத்தவர்களின் இடஒதுக்கீட்டுக்கு தடை கல்லாக இருப்பது எது எனும் தலைப்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ்வும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிஜே பாஸ்கர் அவர்கள் இடஒதுக்கீடு விஷயத்தில் முதலில் இஸ்லாமிய இயக்கங்கள் (அ) கட்சிகள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றதா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், ஆம் - அனைத்தும் ஒரே நேர்கோட்டில் தான் பயனிக்கின்றன என்று சமுதாயத்திற்கு சாதகமான பதிலைக் கூறினார்.

ஆனால் இதே நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக இடை புகுந்த நேயர் அபுல்காசிம் தானொரு ததஜ நிர்வாகி என்று கூறிக் கொண்ட இவர் தெரிவித்த ஒரு கருத்து மிகவும் அபாயகரமானதாகும்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இவரிடம் எந்த கேள்வியும் கேட்பதற்கு முன்பே தானாகவே வலிந்து, இடஒதுக்கீடு விஷயத்தில் எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வில்லை என கூறி சமுதாயத்தை தலைகுனிய வைத்து விட்டார்.

வேறொரு நேயரும் கூட இதனை கண்டித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக, இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமைக்கு மாத்திரமல்ல, முழு சமுதாயத்திற்கும் முதல் எதிரி ததஜவும் அதன் தலைவர் பிஜேயும் தான் என மக்கள் சபை முன்பாக அவர்களாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.

சமுதாயத்தினர் புரிந்து கொண்டு ததஜவை முற்றிலுமாக புறக்கணிக்க இது ஒன்றே போதுமே.

இப்னு ஹஸன் 02.09.2007

0 Comments:

Post a Comment

<< Home