Monday, September 03, 2007

மலேசியா பயணமும் மறைக்கப்பட்ட உண்மைகளும்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..


900 பேர்(?) கலந்து கொண்ட பிஜேயின் மலேசியா நிகழ்ச்சி

சமீபத்தில் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் நிர்வாகிகள் மலேசியா சென்று, அங்கு விசாவை தவறாக பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டு இனி இங்கு நுழையவே கூடாது என்று சிவப்பு முத்திரையுடன் நாடு திரும்பியது நாடறிந்த விஷயங்களாகும். ஆனாலும், தாங்கள் ஏதோ அன்னிய நாட்டில் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டது போல் முழு நீள படமொன்றை தனது ஆதரவு தொலைக்காட்சியிலும், தான் நடத்தும் பிரைவேட் கம்பெனியான இணைய தளத்திலும் வெளியிட்டு தனது அரசியல்வாதி குணத்தை தறுதலை ஜமாஅத் தலைவர் கிரிமினல் பிஜே அம்பலப்படுத்தி உள்ளார்.

அண்ணன் சொல்றாரு, அத அப்படியே வழிமொழிவோம் என அறிவை அடகு வைத்து விட்ட அடிவருடி ரசிகர்கள் வாய் பிளந்து, பிஜேவின் வாக்கை வாந்தி எடுத்து வருகின்றனர். அவர்களுக்கு உறைக்கா விட்டாலும், மயக்கத்திலிருக்கும் ஒரு சிலராவது தெளிவடைவார்கள் என்ற எண்ணத்தில் பொது மக்கள் சுட்டிக்காட்டும் சில முரண்பாடுகளை முன் வைக்கிறோம்.

'மலேசியாவில் நடந்தது என்ன?' என்ற தலைப்பில் நவீன அரசியல்வாதி கிரிமினல் பிஜே சுமார் 20 நிமிடங்கள் உரையாற்றுகிறார்.

அதில் தாங்கள் 17 ஆம் தேதி மலேயாவிற்கு பயணமானதாகவும், 19 ஆம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக மலேசிய பத்திரிக்கைகளில் பல நாட்கள் விளம்பரம் வெளிவந்ததாகவும், அவ்விளம்பரங்களை தடை செய்யாததன் மூலம் மலேசிய அரசு தங்களது கூட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது எனவும் கூறுகிறார்.

பத்திரிக்கையில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்தும் அரசு அனுமதியோடு தான் வெளியிடப்படுகிறதா? ஒருவர் ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமானால் பத்திரிக்கையில் விளம்பரப்படுத்தினாலே போதுமென்கிறாரா? – என்ன செல்ல வருகிறார் அந்த அதிமேதாவி. பத்திரிக்கை (அ) சுவரொட்டி என எவ்வகையிலும் விளம்பரப்படுத்தினாலும், விளம்பரமே இல்லா விட்டாலும் அரசு (அ) காவல் துறை அனுமதித்தால் எந்த கூட்டத்தையும் நடத்தி விடலாம். என்ன தான் விளம்பரப்படுத்தினாலும், அனுமதி இல்லையேல் எவரும் எந்த கூட்டத்தையும் நடத்த முடியாது எனும் அரிச்சுவடி கூட அறியாதவரையா அறிஞர் என்று போற்றுகின்றனர்? வெட்கக்கேடு. தவிர, பிஜே அம்பாங் ரிஸ்டாவில் பேசுவதற்கு தடை என்று மலேசிய பத்திரிக்கையில் செய்தி 18 ஆம் தேதியே வெளியாகி விட்டது. மலேசிய பத்திரிக்கைகளை தமிழக முஸ்லிம்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என மனப்பால் குடிக்கிறாரா இந்த அரசியல்வாதி.. ..? என்று பொதுமக்கள் ஆத்திரப்படுகிறார்கள்.

'ஞாயிறன்று நிகழ்ச்சி நடப்பதாக அறிவித்திருந்த மண்டபத்தை மண்டப நிர்வாகிகள் தர மறுத்து விட்டனர். பின்னர் வேறொரு அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு அதுவும் கடைசி நேரத்தில் கேன்சல் ஆகி விட மூன்றாவதாக ஒரு ரெஸ்டாரெண்டில் ஹால் ஏற்பாடு செய்யப்பட்டது'. என தொடர்ந்து குறிப்பிடுகிறார்.

முன்பதிவு செய்யப்பட்ட அரங்கங்கள் பின்னர் கேன்சல் செய்யப்படுகிறது என்றால் அரசு அனுமதி மறுத்ததனால் தானே அரங்கங்களும் அனுமதி மறுத்திருக்கின்றன என்ற எதார்த்தம் புரியாதவரா இந்த ஏகத்துவ அறிஞர். எதார்த்தம் புரியவில்லையாயின் இவர் எந்த வகையில் சமகால பிரச்சனைகளை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்க முடியும்? என்றும் பொது மக்கள் வினவுகின்றனர்.

'பெரும் அலைக்கழிப்புக்குப் பின் மூன்றாவதாக ரெஸ்டாரெண்டில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டு 900 நபர்கள் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சி 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடைபெற்றது' எனக் கூறுகிறார்.

ஆனால் இவரது அரசியல் கட்சியின் இணைய தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டபடி நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது என்று படம் காட்டினார்கள். ஏற்பாடு செய்திருந்த இடங்களில் எல்லாம் காவல் துறையின் துரத்தல்கள் காரணமாக ஒரு ரெஸ்டாரெண்டில் நடத்தினோம் என்று தானே குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தவிர அந்த ஹாலும் கூட அதிகபட்சமாக 300 பேருக்கு மேல் கொள்ளளவு உள்ளதாகத் தெரியவில்லையே. இதனை 900 பேர் என பில்ட்அப் செய்வது எதற்காக என்று பொதுமக்கள் வினவுகின்றனர்.

'பின்னர் திங்கட் கிழமை ஒரு வீட்டில் 20 – 28 நபர்களுடன் விருந்து உட்கொண்டிருந்த போது காவல்துறை சுற்றி வளைத்து எங்களை கைது செய்தனர்' என குறிப்பிடுகின்றார்.

எஸ்.டி.சி ரெஸ்டாரெண்டுக்கும், திங்கட்கிழமை விருந்துக்கும் இடைப்பட்ட சில செய்திகளை மறைத்துள்ளார். எஸ்.டி.சி. யிலிருந்து போலீஸார் அழைத்துச் சென்றதையும் அங்கு தமிழக வம்வாவளியைச் சேர்ந்த ரஃபி என்கிற துணை ஆணையாளர் தமது சொந்த ஜாமீனில் இவர்களை விடுவித்ததையும், ஜாமீனில் இருக்கும் பொழுதே மீண்டும் கூட்டம் கூட்ட முயற்சித்ததால் தான் திங்கள் இரவு மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பதனை பாதியைச் சொல்லி மீதியை முழுங்கும் களவாணித்தனத்தை ஏன் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கேட்கிறார்கள்.

மாத்திரமில்லாமல் தனது சொந்த செலவில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது போல் ஒரு விளம்பரத்தை கொடுத்து விட்டு, அதனை மக்கள் ஓசை எனும் பத்திரிக்கையில் வெளியான செய்தி என பொய்யாக சுயவிளம்பரம் தேடியதன் சூட்சுமம் என்ன? ஒரு பத்திரிக்கையில் வெளியாகும் செய்தி எப்படி இருக்கும், விளம்பரம் எப்படி இருக்குமென்ற அடிப்படை அறிவு இல்லாத மடையர்களாக பொதுமக்களை இவர் எண்ணிக் கொண்டாரா, என பொதுமக்கள் ஆவேசப்படுகின்றனர்.

'இது சும்மா ஒரு விருந்து நிகழ்ச்சி தான். இவர் பேசுகிறார் என அறிவித்திருந்தால் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருப்பார்கள்' என்று அந்த வீட்டின் பெண்மணி கூறியதாகவும் சொல்கிறார்.

ஏன் இந்த சினிமாத்தனமான பில்ட்அப்? பல நாட்கள் விளம்பரப்படுத்தியே 900 நபர்களை (உண்மையில் 300 தான்) மட்டுமே கூட்டியதாகச் சொன்னவர், இங்கே ஆயிரக்கணக்கில் என ஜம்பம் அடித்துக் கொள்வது என்? ஓ இவர் முழு நேர அரசியல்வாதியோ என்று பொதுமக்கள் ஆச்சரியத்தோடு வினவுகின்றனர்.

'கைது செய்த போலீஸ் இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக குற்றம் சுமத்தி விசாரித்தனர். ஷரீஅத் கோர்ட்டில் ஐவர் குழவின் முன் தௌ;ளத்தெளிவாக பதில் அளித்தேன். நான் கைது செய்யப்பட்டதும், விசாரிக்கப்பட்டதும் ஷிர்க், பித்அத்தை நியாயப்படுத்தும் மாநிலங்கள் என்றாலும் நான் குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரங்களை அள்ளிப்போட்டவுடன் என்னை உடனடியாக விடுவித்து விட்டார்கள்' என ஆவேசமாக உரை நிகழ்த்தியுள்ளார்.

குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை அள்ளிப் போட்டிருந்தால், 'நீங்கள் பொதுக்கூட்டம் நடத்துவதில் தவறில்லை' எனக்கூறி தடையில்லா சான்றிதழ் அளித்து உடனே பொதுக்கூட்டம் அல்லவா ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அப்படியில்லாமல் லாக்அப்பிற்கு ஏன் அனுப்பினார்கள்? என்று பொதுமக்கள் வினவுகின்றனர்.

(இந்த ஒரு கேள்வியை மட்டும் பொதுமக்களிடமிருந்து கிரிமினல் பிஜே எதிர்பார்த்தாரோ என்னவோ அதற்கு பதிலளிப்பது போல் அமைந்துள்ள அவரின் தொடர் உரையைப் பாருங்கள்.)

'ஷரீஅத் கோர்ட்டில் என்னை விடுதலை செய்த பின்பு, அந்த காவல் துறை அதிகாரிகளால் என்ன செய்வதென்று புரியாமல் என்னை மத்திய சிறையில் அடைக்கும் திட்டத்தோடு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த சிறை அதிகாரி கோர்ட் ஆர்டர் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடியாது என மறுத்ததனால் சார்ஜ் ஷீட் இல்லாமல் கஞ்சா, வழிப்பறி கேஸ்களை அடைத்து வைப்பார்களே அப்படியான ஒரு லாக்அப்பில் கொண்டு தள்ளி விட்டார்கள். ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள். சார்ஜ் ஷீட் இல்லையானால் என்னை விடுவிப்பது தானே முறை என கேள்வி எழுப்பிய போது அவர்கள் தமீம் அன்சாரி கொடுத்த 1 கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்ட விபரமும், அதற்கு விசுவாசமாக என்னை லாக்அப்பில் தள்ளியதும் வெளிச்சத்துக்கு வந்தது' எனக் குறிப்பிடுகிறார்.

(மற்றவர்களின் கண்ணியத்தை காவு வாங்கியே பழக்கப்பட்ட கிரிமினல் பிஜே இங்கு சம்பந்தமில்லாத தமீம் அன்சாரியை வம்புக்கு இழுப்பதை கவனியுங்கள்.)

ஜகாத் போன்ற விஷயங்களைப் பற்றி இங்கே நான் பேச வரவில்லை என்று அந்தர்பல்டி அடித்ததனால், சரி பிழைத்துப்போ என ஷரீஅத் கமிட்டி வெளியில் விட்டதும், டூரிஸ்ட் விஷாவில் வந்து அனுமதியின்றி கூட்டம் போட்ட குற்றத்திற்காக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. விசாவை தவறுதலாக பயன்படுத்திய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டதை மறைத்து, போலீஸ் இலஞ்சம் பெற்றுக் கொண்டு சிறையிலடைத்ததாக அபாண்டமாக புளுகுவது ஏன்?

தமிழக முஸ்லிம்கள் மலேசிய போலீசாரிடம் போய் கேட்கவா போகிறார்கள் என்கிற தெனாவட்டா? அல்லது இது உண்மையாகவே இருந்திருந்தால் அங்கு இருக்கும் பொழுதே ஏன் எவரிடமும் புகார் அளிக்க வில்லை? அட குறைந்தபட்சம் அவரது சொந்த சைட்டில் கூட வெளியாக்கவில்லையே ஏன்? அப்படி ஒருவேளை செய்திருந்தால், போலீஸ் மீது பொய்யான புகார் அளித்த குற்றத்திற்காக மேலும் அதிகமான சிறை தண்டனை கிடைத்துவிடும் என்கிற அச்சமா?

தவிர தமீம் அன்சாரி இலஞ்சம் கொடுத்ததாக கூறுகிறாரே. தமீம் யாரிடம் எப்பொழுது எவ்வளவு கொடுத்தார் என ஆதாரங்களை வெளியிடத் தயாரா. அல்லது கடலூரில் யா அல்லாஹ் பாக்கர் நந்தினியோடு அப்படி இப்படி இருந்தார் என சோ அன்ட் சோ சொன்னதாகத்தான் சொன்னேனே அல்லாமல் நான் உறுதிபடச் சொல்லவில்லை எனக்கூறி கேட்ட அனைவரையும் முட்டாளாக்கியது போல் இப்பொழுதும் சொல்லப் போகிறாரா?

மேலும் மலேசியா போலீஸ், மற்றவர்களிடம் அதுவும் டூரிஸ்ட்டாக வரும் வெளிநாட்டவரிடம் இலஞ்சம் வாங்கித்தான் வாழ்க்கை நடத்திக் கொண்டுள்ளனரா?

தவிர, இவர் மலேசியாவிற்கு பயணம் செல்வார் என தமீமுக்கு எப்படி தெரியும்?

இப்படி ஏகப்பட்ட கேள்விகளை பொதுமக்கள் கேட்கின்றனர்.

இறுதியாக, தனது கைதை கண்டித்து ததஜ விசிலடிச்சான் குஞ்சுகள் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், அதனை கண்டு தமிழக, இந்திய மைய அரசுகள் செய்வதறியாது மலேசியா மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும், மலேசியா மத்திய அரசு அம்மாநில அரசை கண்டித்து உடனடியாக விடுவிக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்ததால் 22 ஆம் தேதி காலை 7:00 மணிக்கு (இந்திய நேரம் காலை 4:30 மணி) லாக்அப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்.

22 ஆம் தேதி காலை 4:30 மணி (இந்தியநேரம்)க்கு விடுவிக்கப்பட்ட கிரிமினலை 'விடுவிக்கக் கோரி' ததஜ ஆர்ப்பாட்டம் நடத்திய நேரம் 22 ஆம் தேதி மாலை 5:00 மணி. அதாவது மாலையில் விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டமாம். ஆனால் அவர் விடுதலையானதோ காலை 4:30 மணிக்கு. எந்த ஒரு அரசியல் கேனக்கிறுக்கனும் அடிக்காத ஸ்டண்ட் அல்லவா இது..

இதில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு என்ற புகழாரம் வேறு. இது எதற்கு?

தேர்தல் களம் இறங்க ஒத்திகையா? ஏன் இந்த அளவிற்கு கேடு கெட்டு, தரம் தாழ்ந்து செல்ல வேண்டும்? போராட்டம், மத்திய மாநில அரசுகளின் அழுத்தம் என்பது போன்ற கற்பனை கதைகளை சொல்லாமல் விட்டிருந்தால் கூட ஒருவேளை இவர் சொல்லியது அனைத்தும் உண்மையாகவே நடந்திருக்குமோ என எண்ணத் தோன்றி இருக்கும். இப்படி சாத்தியமே இல்லாத அக்மார்க் கற்பனையை கூறியதன் மூலம் இவர் இதுவரை கொண்டிருந்த செல்வாக்கை சுத்தமாக இழந்து விட்டார்.

ஒரு தலைவன் எனும் தகுதியோ, அறிஞன் எனும் கண்ணியமோ கூட இல்லை ஒரு சராசரி நியாயவான் என்ற தகுதிகூட இவருக்கு இனி மிஞ்சாது என்றே பல பொதுமக்கள் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளனர்.

வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 03.09.2007

0 Comments:

Post a Comment

<< Home