Saturday, October 20, 2007

முத்துப்பேட்டை விவகாரம் - தமுமுக ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை வன்முறைச் சம்பவம் காவல் துறையைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்


திருவாரூர், அக். 20: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வன்முறைச் சம்பவம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆசாத் நகர் பள்ளிவாசலில் காவல் துறையினர் காலணியுடன் நுழைந்ததைக் கண்டித்து தமுமுக சார்பில் திருவாரூர் அஞ்சல் நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கடந்த 17-ஆம் தேதி முத்துப்பேட்டையில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், முத்துப்பேட்டையில் மதக்கலவரங்கள் ஏற்படாத வகையில் நிரந்தர நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


அமைப்பின் மாவட்டச் செயலர் எம்.முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.


மாவட்டத் தலைவர் கே.எச்.நூர்தீன் முன்னிலை வகித்தார்.


மாநிலச் செயலர் எஸ்.தமிமுன் அன்சாரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.


நாகை (தெற்கு) மாவட்டத் தலைவர் ஜபருல்லா, நாகை (வடக்கு) மாவட்டத் தலைவர் ஆரிப், தஞ்சை மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான், காரைக்கால் மாவட்டத் தலைவர் லியாகத் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நன்றி: தினமணி

0 Comments:

Post a Comment

<< Home