Sunday, October 28, 2007

ததஜவின் அடிவருடிகள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


உண்மையை உரத்துக் கூறும் என்ற அடைமொழியுடன் பொய்யைப் பரப்புவது ஒன்றையே தொழிலாக கொண்டிருந்த உமர் என்பவரின் உளறல்களையும், திருகுதாளங்களையும் பொய்களையும் நாம் பட்டியலிட்டதன் பின்னால், பின்னங்கால் பிடரியில்பட ஓடியவர் இன்று வரை நெட் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க வில்லை.

ஒருவேளை நாம் நமது முந்தய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல் அவரது கபுரிலேயே சென்று சமாதி ஆகிவிட்டார் போலும்.

தீன் முஹம்மது, உ.உ.கூ.உமர் என பல பொய்யர்களின் (பொய் ஐடிகளின்) பொய் முகமூடிகளை நாம் தோலுரித்து காட்டியதன் பின், அந்த வரிசையில் புதிதாக ஒருவர் புறப்பட்டுள்ளார்.

அழைப்புப்பணியில் என்ற அடைமொழியுடன் பவனி வரும், இவர், தனது தலைவனான தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவைப் போலவே, பொய்யை உண்மையுடன் கலக்கும் கயமைத்தனம் செய்வதில் கெட்டிக்காரர்.

இந்தப் பூனையும் பால் குடிக்குமா எனும் ரீதியில் பத்துக்கு எட்டு ஆக்கங்களை சுத்த சுயப்பிரகாச குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் தந்துவிட்டு, பாக்கி இரண்டில் சமுதாய துரோகி பிஜேவின் வால் பிடித்து, கால் பிடித்து கட்டுரை வெளியிடுவார்.

இவரது பித்தலாட்டத்தைப் புரிந்து கொண்ட ஒரு சிலர், இனி உங்களின் கட்டுரையில் அழைப்புப்பணியில் என்ற அடைமொழிக்குப் பதிலாக, அண்ணனின் வழியில் என்று எழுதிக் கொள்ளுங்கள் என அறிவுரை சொல்லியதாகக் கூட நம்மிடம் தெரிவித்தார்.

இத்தகைய சிறப்புக்கு(?)ரிய இந்த அதிரை ஃபாரூக்கிடமிருந்து சென்ற வாரம் ஒரு மெயில் வந்தது. அதன் தலைப்பு 'புனித ரமளானில் முஸ்லிம் சமுதாயத்திற்கு மூன்று மகிழ்ச்சிகள்' எனக் காணப்பட்டது.

சரி, ரஸுல் (ஸல்) அவர்கள், இஃப்தாரின் போது – நோன்பு திறக்கும் பொழுது – ஒரு முஸ்லீமிற்கு இரட்டை மகிழ்ச்சி ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்களே அந்த ஹதீஸை அடியொற்றி தற்சமயம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தனி இட ஒதுக்கீட்டையும் இணைத்துத் தான் அவ்வாறு எழுதியுள்ளார் போலும் என நினைத்துக் கொண்டேன்.

ஆனால், அந்த மெயிலை வாசிக்க ஆரம்பித்த பொழுது தான், இந்த அதிரை ஃபாரூக் அழைப்பது அல்லாஹ்வின் வழியில் அல்ல. மாறாக அல்லாஹ்வின் எதிரியான அபூஜஹல் என தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்ட தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவின் அடியொற்றித்தான் என அறிந்து கொண்டேன்.

இன்னும் பலரால் புரியப்படாமல் உள்ள இவரது நயவஞ்சகத்தனத்தை நாடறியச் செய்யவே இந்த கட்டுரை.

சரி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்லாமல் அவர் குறிப்பிட்டிருந்த அந்த மூன்று மகிழ்ச்சிகள் தான் என்னவென்று கேட்கிறீர்களா?

1. தழிழக முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு கிடைத்தது.
2. ரியாத் வாழ் மக்களுக்கு, பிஜே எழுதிய நோன்பு எனும் புத்தகம் இலவச வினியோகத்தில் கிடைத்தது.
3. தினமணியில் பிஜேவின் பேட்டி வெளியானது.
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுவதில் ததஜ அடிவருடிகள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை என்று இதன் மூலம் பிஜேவின் அடிவருடி அதிரை ஃபாரூக் நிரூபித்து விட்டார்.

அவர் குறிப்பிட்டுள்ளவற்றில் முதலாவது காரணத்தால் முஸ்லிம் சமுதாயம் முழுவதுமே மகிழ்ந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்திக்களில்லை.

ஆனால் முழு சமுதாயத்திற்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய இச்செய்தி வெளியான திருணத்தில், இவர் யாருடைய காலடியில் அடிவருடியாக வீழ்ந்து கிடக்கிறாரோ அந்த கிரிமினல் பிஜே, தான் களவாடிச் சென்ற பத்திரிக்கைக்காக நடத்தி வரும் இணையதளம் இருண்டு போயிருந்ததே. அது இந்த அடிவருடிக்குத் தெரியுமா. அல்லது தெரிந்தும் அவ்விஷயத்தை மறைக்கிறாரா.

முழு சமுதாயமும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன அவ்வேளையில், இவரின் தலைவருடைய சைட் மட்டும் முகாரி பாடிக்கொண்டிருந்தது.

முழு சமுதாயத்திற்கும் சந்தோஷமளித்த அந்த தருணம் இவர்களின் முகங்களை இருளடையச் செய்திருக்கிறதென்றால், இவர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் என்று தானே அர்த்தம்.

போயஸ் தோட்டத்து பொன் மகளிடம் சமுதாயத்தை அடகு வைத்து பொட்டி வாங்கிய காரணத்தால் படம் காட்டுவதற்காக, விண்டிவி காமிராக்களுடன், வயல்வரப்பெல்லாம் நடந்து சென்ற அன்றய தினத்தில் அடேங்கப்பா எத்தனை ஆர்ப்பாட்டம். ஏதோ, எலிசபெத் ராணியின் ஒட்டியானத்தை ஏலம் விடுவது போல் எடுத்த எடுப்பிலேயே இலட்சக்கணக்கில் எண்ணிக்கையைச் சொல்லி, நேரம் கடப்பதை விட வேகமாக எண்ணிக்கையை பொய்யாக உயர்த்திக் கொண்டு போனார்களே – அத்தகைய தொழில் நுட்பம் இப்பொழுது எங்கே போனது என்று சமுதாயம் கேள்வி எழுப்புகிறது.

தமுமுக இடைவிடாத நெருக்குதல் கொடுத்து தங்களது இரட்டைக் கோரிக்கையை வென்றெடுத்து விட்டதே என்ற பொல்லாங்கு. இதனால் தான் இஞ்சி தின்ற மந்திகளாய் செய்வதறியாது திகைத்துப் போய் விட்டனர்.

சமுதாயம் மொத்தமும் சந்தோஷத்தில் திளைத்த போது, அவர்களின் முகமும், முகாமும் முகாரி பாடியதிலிருந்தே இடஒதுக்கீடு கிடைத்ததற்கும், இவர்களின் இயக்கத்திற்கும் இம்மியளவும் சம்பந்தமில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

0.0001 சதவிகித பங்களிப்பேனும் இருந்திருந்தால் கூட இவர்கள் தலை கால் புரியாமல் கூத்தாடி இருப்பார்கள். இறுகிய முகத்தோடு இவர்கள் இருந்ததே, இவர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் என எண்ணப்படுவதற்கு போதுமானதாகும்.

என்றாலும், அறுவடை முடிந்து வெள்ளாண்மை வீடு வந்து சேர்ந்து விட்டதால், பங்காளிகளாக அல்ல, முழு உரிமைக்காரர்களாக ஆக முயற்சிக்கிறார்கள். ஆனால் சமுதாயம் மிகத் தெளிவாக இவர்களின் பித்தலாட்டங்களை புரிந்து கொண்டு வருகிறது.

இரண்டாவது மகிழ்ச்சியாக இவர் குறிப்பிட்டுள்ள விஷயத்தை படித்து சிரிக்காதவர்கள் இருக்க முடியாது.

ஏனெனில் இவரது தலைவரின் சிறு புத்தகம் ஒன்றை ரியாதிலுள்ள சிறு பகுதியில் இயங்கும் ஒரு அழைப்பு மையத்திலிருந்து இலவசமாக வினியோகித்து விட்டார்களாம். இவருக்கு தலை கால் புரியவில்லை. முழு சமுதாயமும் இதனால் மகிழ்ச்சியடைந்ததாக கண்கள் விரிய கற்பனை சிறகடிக்க மயக்கத்தில் உளறுகிறார்.

தமிழ் முஸ்லிம் சமுதாயம் உலகமெங்கும் பரந்து விரிந்து வியாபித்து நிற்கிறது. அதில் ரியாத்தில் அதிலும் குறிப்பிட்ட அந்த சென்டரைச் சுற்றியுள்ள வெகு சில தமிழ் முஸ்லிம்கள் மட்டுமே இலவச வினியோகத்தை பெற்றிருப்பர். மீச்சிறுபான்மையினரான இவர்கள் வேண்டுமானல் 2 அல்லது 3 ரியால்கள் மதிப்புள்ள ஒரு புத்தகம் இலவசமாக கிடைத்ததனால் மகிழ்ந்திருப்பார்கள். அதுவே சந்தேகம் தான்.

ஆனால், இந்த இலவச வினியோகத்தால் முழு சமுதாயமுமே மகிழ்ந்து போனதாக – ஓவர் பில்ட் அப் செய்கிறார்.

என்ன செய்வது. கும்ப மேளாவிற்கு பிறகு, பில்ட் அப் செய்தே பழகிப் போய் விட்டதால், அதிலும் ஓவராக இவர் கதையளந்துள்ளார்.

நாமறிந்தவரை, சவுதியில் செயல்படும் அழைப்பு மையங்களில் இலவச வினியோகம் என்பது பலகாலமாக நடைபெற்று வருகிறது. பல அறிஞர்களின் ஆக்கங்கள் இதுவரை இலவசமாக வினியோகிக்கப் பட்டுள்ளன. மவ்லவி கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் எழுதிய (அ) மொழிபெயர்த்த பல நூல்கள் பல சென்டர்கள் மூலமாக வினியோகம் செய்யப்பட்ட பொழுது ஜாக் அமைப்பைச் சேர்ந்த எவரும் இது போல் பைத்தியக்காரத்தனமாக உளறவில்லை.

மஸ்தான் அலி பாகவியின் புத்தகங்கள் வினியோகிக்கப்பட்ட பொழுது, ஜமாஅத்துல் இஸ்லாமி இயக்கத்தவர்கள் இதுபோல் குதியாட்டம் போடவில்லை.

ஆனாலும், இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்?

என்ன செய்வது.. குறைகுடம் கூத்தாடத்தானே செய்யும். அதனால் தான் இந்த குறைமதியாளர் கூத்தாடுகிறார். ஆனால் முழு சமுதாயமும் இவரைப் போன்ற முட்டாள்களில்லை.

இவரும் இவரைப் போன்ற சில அடிவருடிகளும் வேண்டுமானால் மகிழ்ந்திருக்கலாம். காரணம் கிரிமினல் பிஜேவின் அனைத்து ஒலி – ஒளி நாடாக்களும், கு றுந்தகடுகளும், புத்தகங்களும் சவுதியின் அழைப்பு மையங்களின் ஊடாக தடை செய்யப்பட்டிருக்கும் வேளையில், எங்கோ ஒரு மூலையில் இயங்கும் அழைப்பு மையத்தில் எப்படியோ சரிகட்டி செய்யப்பட்ட வினியோகம் அல்லவா. எனவே தான் இத்தனை தூரம் பூரித்துப் போகிறார் போலும்.

மூன்றாவது மகிழ்ச்சியாக இவர் குறிப்பிடுவது, இவருடைய தானைத் தலைவனின் பேட்டி தினமணியில் வெளியானதை குறித்தாகும்.

இதிலும் முழு சமுதாயமும் மகிழ்ந்து போவதற்கு என்ன இருக்கிறது. தனது தலைவனின் மீது இவருக்குள்ள மட்டற்ற பக்தியின் வெளிப்பாடு தான் இது. என்ன செய்வது. போயஸ் தோட்டத்து பொன்மகளின் சகவாசம் ஏற்பட்டதிலிருந்து ததஜவின் தொண்டர்கள் கூட அதிமுக தொண்டர்கள் போலவே நடந்து கொள்கின்றனர். இவரது செய்கையும் அப்படித்தான் உள்ளது.

இவருக்கு இஸ்லாமிய இயக்கங்களின் வரலாறு மட்டுமல்ல, தினமணியின் வரலாறு கூடத் தெரியவில்லை. ஒருவகையில் தினமணியும் கூட இவரது இனம் தான். அதாவது நடுநிலை நாளிதழ் என்று சொல்லிக் கொண்டு, இருப்பதில் நல்லதாக நாலு விஷயங்களை வெளியிட்டு வரும் அதேவேளையில், வாழைப்பழத்தில் ஊசியாக – விஷ ஊசியாக – அவ்வப்போது டி.கே.ஜார்ஜ் போன்ற புல்லுருவிகளைக் கொண்டோ, அல்லது குருமூர்த்தி போன்ற இஸ்லாமிய எதிரிகளைக் கொண்டோ இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி, இஸ்லாமியர்களை ரணகளப்படுத்தி கட்டுரை வெளியிட்டு தனது உண்மையான முகத்தை வெளிக்காட்டிக் கொள்ள தவறியதில்லை.

இந்த ஃபாரூக்கும் அதே ரகம் தான். நல்ல விஷயங்களாக குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் நாலு மெயில் அனுப்பினாரானால், தனது தலைவரை திருப்திப்படுத்த ஓரிரு மெயில்களை கலந்து விடுவார். அதனால் தான் இனம் இனத்தை பாராட்டுகிறது போலும்.

தினமணியின் நிலையாக நாம் சுட்டிக் காட்டியுள்ளது கூட கொஞ்ச காலத்துக்கு முந்தய நிலை தான். அதிலும் கூட பத்திரிக்கை பயங்கரவாதி சோவின் செல்லச்சீடர் திரு. வைத்தியநாத அய்யர் பொறுப்பாசிரியராக பதவி ஏற்ற பின் இந்த விகிதம் இன்னும் கூடிவிட்டது.

அதனால் இந்த பேட்டி எந்த வகையில், முழு சமுதாயத்திற்கும் மகிழ்ச்சியை கொண்டு வந்ததோ ஃபாரூக்கிற்கே வெளிச்சம்.

ஆக, வரம்பு மீறுவதிலும் கூட வரம்பு மீறுபவர்கள் தான் தறுதலை ஜமாஅத்தின் அடிவருடிகள் என்று இந்த ஃபாரூக்கும் நிரூபித்துள்ளார்.

இவர் குறிப்பிட்டிருந்த இவை மூன்றும் முன்னுரைதான்.

இவர் இத்தோடு நிறுத்த வில்லை.

தனது தலைவனின் அடியொற்றி காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்ய வேண்டுமல்லவா. அதனால், தினமணி ஆசிரியருக்கு யாரென்றே அறியப்படாத ஃபள்லுல் இலாஹியைப் பற்றி எழுதியுள்ளார்.

பாவம். ஃபள்லுல் இலாஹி என்பவர், இன்று இந்த அடிவருடி ஃபாரூக் எவரை உயர்த்திப் பிடிக்கிறாரோ அந்த பிஜேவை, அவரது கிரிமினல்தனங்களை அறியாமல் தலை மேல் வைத்துக் கொண்டாடி, அவருக்காக தனது நேரத்தை, பொருளாதாரத்தை எல்லாம் செலவழித்து விட்டு, இன்று அதே பீஜேவால் டிசம்பர் திருடன் என நாமகரணம் சூட்டப்பட்டு ஓரங்கட்டப்பட்ட விஷயம் இந்த அடிவருடி ஃபாரூக்கிற்கு தெரியாது போலும்.

அதனால் தான், பிஜேவின் பழைய பாடலுக்கு இன்று இவர் பின்பாட்டுப் பாடியுள்ளார்.

ரதிமீனா புகழ் பாக்கர் மட்டும் தான் இதுவரை பிஜேவின் சதிவலையிலிருந்து தப்பியுள்ளார். அதற்கு அவர்களுக்கிடையில் உள்ள வியாபார ஒப்பந்தம் அல்லது அதனையும் தாண்டி புனிதமான ஏதோ ஒன்றாக இருக்க வேண்டும். இதே போன்ற சலுகை ஃபாரூக்கிற்கும் கிடைக்குமா எனத் தெரியாது. விரைவில் இந்த ஃபாரூக்கின் சேவை பிஜேவுக்கு தேவையில்லாமல் போகலாம். அப்பொழுது இந்த ஃபாரூக்கிற்கும் மனநோயாளி பட்டமோ, ஏதோ ஒரு திருடன் பட்டமோ, அல்லது ஓம்னி பஸ் புகழோ கிட்டலாம். எனவே ஃபள்லுல் இலாஹி மீது ஓவராக பாய வேண்டாம் என்று மட்டும் சொல்லி வைக்கலாம்.

இந்த ததஜ அடிவருடிகள் அனைவருமே கோயபல்ஸின் சீடர்கள் என்பதை அவ்வப்போது வெளிகாட்டுவார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள் தான் ஃபள்லுல் இலாஹி மேட்டரும், கும்பகோணம் மேட்டரும்.

ஃபள்லுல் இலாஹியை டிசம்பர் திருடன் என பட்டம் சூட்டியது குறித்து, இலாஹி பலமுறை நேரடி விவாதத்திற்கு அழைத்தும், பிடி கொடுக்காமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் மாவீரர் தான் இந்த கிரிமினல் பிஜே.

இதனை அறிந்தும் அறியாத அப்பாவி அடிவருடி ஃபாரூக் போன்றவர்கள் கொஞ்ச கொஞ்ச இடைவெளியில் மீண்டும் மீண்டும் இதனை சொல்லி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தான் கும்பகோணம் கும்பமேளாவைப் பற்றியும் ஃபாரூக் எழுதியுள்ளார்.

10,12,15,18 இலட்சம் என்று மனம் போனபடி கூவி வந்த ததஜ குஞ்சுகள், தனது தானைத் தலைவன் கும்பகோணத்தில் ஒரு இலட்சம் பேரை கூட்டினோம் என சுரதி குறைந்து, தலை குனிந்து சொல்லிய விபரம் அறிந்ததும் அடங்கி விட்டனர்.

இது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டதால், இப்பொழுது மீண்டும் கச்சேரியை ஆரம்பித்துள்ளனர் போலும். ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வது, குட்டு உடைந்து விட்டால் அமுக்கி வாசிப்பது, மீண்டும் ஒரு இடைவெளி விட்டு அதையே சொல்லித் திரிவது, இதுதானே கோயபல்ஸ்ஸின் டெக்னிக். இதனை தவறாமல் செய்து வரும் இவர்கள் தான் கோயபல்ஸ்ஸின் உண்மையான வாரிசுகள்.

இந்த ஃபாரூக் கனவில் மிதப்பவர் போலும்.

அதனால் தான் வளர்ச்சி ததஜவிலும், வீழ்ச்சி தமுமுகவிலுமாக மாறிவிட்டது என மனப்பால் குடிக்கிறார்.

2004இல் விரட்டப்பட்ட ஷைத்தான், வெருண்டோடியதன் பின்னால் தான் தமுமுக தனது சக்தியை உணர்ந்து கொண்டது. அதுவரை தமிழகத்திற்கு உள்ளேயே கூட குறிப்பிட்ட வட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த தமுமுக தடை பல தாண்டி இந்திய தலைநகரிலேயே தடம் பதித்தது.

இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. டிசம்பர் 6, 2004 அன்றய தினம் ஆங்கில அலைவரிசை இல்லாத அல்ஜெஸிரா அரபி அலைவரிசையில், அழகு தமிழ் கொஞ்சியது.

அன்றிலிருந்து அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் தமுமுக பெருவளர்ச்சி கண்டு வந்துள்ளது என்பது அனைவரும் அறிந்து ஒன்று. இதனை கூட மாற்றிச் சொல்ல துணிகிறார் எனில், இவர் எப்படிப்பட்ட பொய்யராக இருக்க வேண்டும்.

தமுமுக நடத்திய டெல்லி பேரணியின் தாக்கம் பலரையும் பாதித்துள்ளது. இந்த தறுதலை ஜமாத்தினரையும் அது பாதித்துள்ளது போலும். தமுமுக தஞ்சைப் பேரணியின் இறுதியில் என்ன பிரகடனம் செய்தது என்பதனையே மறந்தவர்களாக பேரணிக்குப் பின் ஓடிப்போனவர்கள் இருக்கின்ற காரணத்தால் தான் இப்படி கேள்வி எழுப்புகின்றனர்.

உண்மையில், மத்திய காங்கிரஸ் அரசுக்கு நாமும் சேர்ந்து ஆதரவளித்தோமே, அவர்களிடத்திலும் இடஒதுக்கீடு கோரிக்கையயை வைத்தோமே அதனைப் பெறுவதற்காக நாம் முயற்சிகள் செய்ய வேண்டுமே என்ற எண்ணம் எதுவும் இல்லாத காரணத்தால் தான் தமுமுகவின் டெல்லி பேரணி பற்றி கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால், அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் டெல்லிப் பேரணியை கண்டவர்கள், அதற்காக தமுமுக எடுத்த முயற்சிகளை அறிந்தவர்கள், தமுமுகவை தங்களது முன்னோடி ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு, தமுமுகவிடம் பயிற்சி பெற பல மாநிலங்களிலிருந்தும் ஓடோடி வருகின்றனர். இந்த சிறப்பை அறியாதவர்களை நினைத்தால், கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

இறுதியாக ததஜவின் மாநிலம் தழுவிய போராட்டமே இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது என ஃபத்வா கூறி முடித்து வைத்துள்ளார்.

மாநிலம் தழுவி எத்தனை முறை போராடினார்கள்? இடஒதுக்கீடு பெற்றுத்தர என்னென்ன வழிகளில் போராடினார்கள் என்று சமுதாயத்தவரிடம் கேட்டால் சிரித்துக் கொண்டே போய் விடுவார்கள். இவர்கள் இடஒதுக்கீட்டிற்காக எந்த ஒன்றும் செய்யவில்லை என்பதற்கு அவர்களே சாட்சிகளாக உள்ளனர்.

இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகி ஐந்து நாட்கள் வரை அமைதியாக இருந்ததில் இருந்தே இவர்களுக்கும் இடஒதுக்கீட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர்.

பெரிய அறிவாளியாக தன்னை எண்ணிக் கொண்டு இறுதியில் 4 கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

(1) பிஜே தீவிரவாதத்தை ஆதரித்தாரா?
அடிவருடி ஃபாரூக் அவர்கள் ஏர்வாடி காஸிம் போன்றோரை அவசியம் சந்தித்தால் இதற்கான பதில் கிடைக்கும்.
(2) ஜிஹாத்
ஜிஹாத் குறித்த பிஜேவின் கருத்துக்கள் நிலையானதல்ல. ஆளுக்கு ஏற்றார்போல் சமயத்திற்கு ஏற்றார்போல் பேசுவார் என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்.
(3) பதவி ஆசையும் விளம்பரமும்
பதவி ஆசை இல்லாதவர் தான் எஸ்.எஸ்.யூ வை கீழிறக்கி தானே தலைவராகிக் கொண்டாரோ என்றும் விளம்பர ஆசை இல்லாதவர் தான் காசு கொடுத்து மலேசிய பத்திரிக்கையில் விளம்பரம் செய்து அதனையே பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டாரோ என பொதுமக்கள் வினவுகின்றனர்.
(4) தீவிரவாதத்தால் தான் நாடுகடத்தப்பட்டாரா?
இதற்கான பதிலை ஃபாரூக் தான் நிரூபிக்க வேண்டும். தீவிரவாத குற்றச்சாட்டினால் நாடு கடத்தப்பட வில்லையானால் ஏன் அவரது பாஸ்போர்ட்டில் ரெட் எக்ஸ் முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்? ரெட் எக்ஸ் இல்லை என வாதிடுவாரேயானால் அதே பாஸ்போர்ட்டில் மீண்டும் அவரால் அந்நாடுகளுக்குச் செல்ல முடியுமா - ஃபாரூக் விளக்குவாரா?

அரைவேக்காட்டு அடிவருடி ஃபாரூக்கிற்கு இதெல்லாம் தெரியுமா அல்லது தெரியாதது போல் நடிக்கிறாரா.

ஆக மொத்தத்தில் இதற்கு பிறகும் ஃபாரூக் ஏதாவது மெயில் அனுப்புவாரானால் ஷைத்தானின் வழியில் அழைக்கும் அதிரை ஃபாரூக் என எழுதி அனுப்புவதே பொருத்தமானதாக இருக்கும்.

அல்லாஹ் ஃபாரூக் உள்ளிட்ட அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக. வஸ்ஸலாம்.

ராவுத்தர் 28.10.2007

0 Comments:

Post a Comment

<< Home