Monday, November 13, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 9

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. ..)

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க உமர் பாய். என்ன சோகமா வர்றீங்க.

அப்படில்லாம் ஒண்ணுமில்ல அஹமது. இந்த மழ அடிச்ச அடியில கொஞ்சம் சிரமமாப் போயிடுச்சு. அதுதான் கொஞ்சம் சோர்வாயிட்டேன்.

உமர். உங்கள் உற்சாகப்படுத்துற மாதிரி ஒரு செய்தி எங்கிட்ட இருக்கு.

எது? வக்ப் வாரிய உறுப்பினர்களப் பத்துன செய்தியா.

இல்ல. இல்ல. அதுல நமக்கு என்ன சந்தோசமிருக்கு. நாம வலியப்போயி ஆதரவு குடுத்தப்பறமும் நம்மள கண்டுக்க மாட்டங்குறாங்க. திமுக அரசு அறிவிச்ச வக்ப் உறுப்பினர்கள் அடிப்படைல நம்ம தலைவர அவுங்க சான்றோர்களில் ஒருத்தராவும் நினக்கல.. .. .. மார்க்க அறிஞர்கள்ல ஒருத்தராவும் மதிக்கல.. .. .. நாம எப்படி இந்த செய்தில உற்சாகமா ஆக முடியும்.

நான் சொல்ல வந்ததே வேற.

அது என்னங்க அஹமது.

இல்ல. போன தடவ நாம பேசிக்கிட்ட போது, நெட்டுல போலி டோண்டுன்னு பல பேர் உலா வர்ற மாதிரி, இப்போ நம்ம பேர்லயும் சில போலிகள யாரோ உலவ விட்டுறுக்காங்க.

ஆமா. நானுந்தான் பார்த்தேன். ஒண்ணும் விசேஷமா இல்லியே. சும்மா உளறிக் கொட்டி கிளறி மூடியிருக்காங்க. எது ஒண்ணயும் தெளிவா எழுதாம கிடந்து பொலம்பி இருக்காங்க. இதுல நாம சந்தோசப்பட என்ன இருக்கு.

அதாவது உமர் பாய். பிரபலமான பிராண்ட் நேம்ல தான போலிகள் சந்தைக்கு வரும். நம்ம முல்லா நமக்குனு சந்தைல ஒரு இடத்தை புடிச்சு வச்சுட்டதுனால இப்போ போலிகளும் நுழைஞ்சுட்டாங்க. என்ன சரி தானே.

ஓ! நீங்க அப்புடி சொல்றீங்களோ!! அதுவும் சரிதான்.

ஆனா உமர் பாய். அதுல எளுதியிருக்குறத படிச்சா ஒரு பக்கம் கோபம் வந்தாலும், அவுங்க அறியாமைய நெனச்சு சிரிப்புதான் வருது.

எனக்கும் தான் சொல்லுங்களேன். நானும் சிரிச்சுட்டுப் போறேன்.

அதுல, யாரையோ முர்தத்னு சொல்றாரு. பெறகு, அவருக்கு முஸ்லிம் வீட்டுல பெண் கெடச்சுருக்குன்னு சொல்றாரு. எப்படி உமர் பாய். முர்தத்துக்கு எந்த முஸ்லீம் வீட்ல பொண்ணு குடுப்பாங்க. அதுவும் மடிமேல இலஞ்சமும் கொடுத்தாங்களாம். படிக்கிறப்பவே தல சுத்துது.

கேக்குற எனக்கும் தான் சுத்துது. அப்புறம்.

தமுமுக காரன்லாம் சேர்ந்து பிஜேவை தறுதலை ஜமாத் தலைவர் கிரிமினல் பிஜேன்னு சொல்லிக்கிட்டிருந்தாலும், நாம தான் விடாப்புடியா அவர தக்லீது செய்றதுக்காக எல்லாத்துக்கும் சப்பகட்டு கட்டிக்கிட்டு வர்றோம்னா, இதுல நம்மளயும் தூக்கி சாப்பிடுறாப்ல கத அளந்துரக்காங்க.

என்னது! அசலை மிஞ்சிய நகலா!!

ஆமாங்க.. .. அண்ணன் பிஜேவ எல்லாரும் கைகோர்த்து களமிறங்கி எதிர்க்குறதுக்கு காரணம் - அவர் மத்ஹப எதிர்க்கிறதுனால மட்டும் தானாம்.

ஹா.. .. ஹா.. .. ஹா. அஹமது. இது உண்மையிலேயே மிகப்பெரிய ஜோக்தான். அவரு, மத்த இமாம்கள திட்டி, ஸஹாபாக்கல நையாண்டி செஞ்சு, நபி தாவூத் (அலை) அவங்க பேர்ல இட்டுக்கட்ற வேகத்தப் பார்த்து தமுமுக காரன் பிஜே வேறொரு மத்ஹப உருவாக்கிகிட்டு போறார்னு சொல்லிக்கிட்டு திரியிறாங்க. அத எல்லாம் மறைக்கிறதுக்காக இப்ப அவரு மத்ஹப எதுக்கிறார்னு சொல்றாங்களோ.

இதவிட பெரிய ஜோக். மத்ஹபின் அடித்தளங்கள் மவ்லூதுகளாம். அப்துல் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி மவ்லூதை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறாராம். எனவே தான் அவர் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிறதாம்.

அது சரி. கைப்புண்ணுக்கு கண்ணாடி கேட்கிறார்களாக்கும். ஃபிர்தவ்ஸி, கோவை ஜாஃபர், பாக்கர் போன்றோரின் லீலைகள் பலரும் அறிந்த பரம ரகசியம். அதனையே இவர்கள் மறுக்க துணிகிறார்கள் என்றால், நம்மையும் விட தக்லீதில் இவர்கள் முந்திச் சென்று விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நமக்கு இப்படி ஒரு போட்டியா?

அப்படியெல்லாம் கவலப்படாதீங்க உமர் பாய்! இவுங்க போற வேகத்துல அண்ணன் பிஜே மேலேயே சேத்த வாரி பூசிட்டுப் போயிடுவாங்க போல இருக்கு.

அப்புடி என்ன செஞ்சாங்க அஹமது.

ரமளான் மாசத்துல கட்டுக்கடங்காம அவதூறு சொன்ன முனாஃபிக்னு ஒருத்தரப் பத்தி எழுதியிருக்காங்க. 2005 ரமளான்ல, ஸஹாபா பெருமக்கள் மேலேயே அண்ணன் பிஜே வண்டி வண்டியா அவதூறு சொன்னாரே அத எவனாவது சுட்டிக்காட்டி பிஜே ஒரு முனாஃபிக்னு சொல்ல மாட்டானா. இதுக்கும் முன்னால ஜாக் நிர்வாகிகள் மேல அவதூறு சொல்றதுக்காக வீடியோவோட ஊர் ஊராக அண்ணன் பிஜே ஆளனுப்புச்சாரே அத சுட்டிக்காட்டி பிஜே - ஒரு முனாஃபிக் தான்னு எவனும் சொல்ல மாட்டானா.

இதுனாலயிலாம் ஒரு பிரச்சனையும் இல்ல அஹமது பாய். இது நமக்கு குலத்தொழில் மாதிரி தானே. எல்லாவகையான தப்பு தண்டாவையும் நாம செய்யலாம். அதே வேலைய மத்தவன் செஞ்சா மட்டும் தான அத இஸ்லாமிய ஷரீஅத்படி தப்புனு ஃபத்வா குடுப்போம்.

ஷரீஅத் தீர்ப்புன்னு சொன்னப்பறம் தான் ஞாபகம் வருது. நம்ம கச்சியில ஷரீஅத் தீர்ப்பாயம்னு ஒண்ணு இருக்கோ.

என்ன அஹமது இப்புடி கேட்டுட்டீங்க. நம்மள்ட்ட இருக்கிற பல லட்டர் பேடுல இது ஒண்ணு.

என்ன இப்புடி சப்புனு சொல்லிட்டீங்க. ஷரீஅத் தீர்ப்பாயம்னா, குர்ஆன் ஹதீஸ எல்லாம் அலசி ஆராஞ்சு, ஒரு பிரச்சனைக்கு தீர்ப்பு சொல்றதில்லையா. நம்மள்ட்ட இருக்குற லட்டர் பேடுல ஒரு லட்டர் பேடுன்னா எத வேணாலும் எளுதி அனுப்பலாமா.

இதுல ஒங்களுக்கு என்ன சந்தேகம். நாம எளுதுற பதில் கடிதங்களுக்கு அப்பப்ப எந்த லட்டர் பேடு கிடக்கிதோ அதுல தான எளுதுவோம்.

அதுவுஞ்சரி தான். ஸஹாபாக்கள கீழ்தரமா விமரிசிச்சதுனால நாம ஹதீஸுகளுக்கோ, ஸஹாபாக்களுக்கோ முக்கியத்துவம் தரமாட்டோம்னு வெளங்கிப் போச்சு, குர்ஆன் தர்ஜமாவுல இஷ்டத்துக்கு எளுதுனதுக்கப்புறமா நாம குர்ஆன்லயும் கொஞ்சத்த ஏத்துக்கிட்டு கொஞ்சத்த தூக்கி எறிஞ்சிடுவோம்னு புரிஞ்சு போச்சு. இந்த லட்சணத்துல குர்ஆன், ஹதீஸ ஆராஞ்சு நாம தீர்ப்பு சொல்ல மாட்டோம்னு தெரிஞ்சு யாரும் இப்பல்லாம் சட்ட சிக்கல்கள் பத்தி நம்மள்ட்ட கேக்குறதே இல்ல. அதுக்காக அடிச்சு வச்ச லட்டர் பேட தூக்கிப்போட முடியுமா. அதுனால அந்த லட்டர் பேடுல நம்மளோட கட்ட பஞ்சாயத்து, அவதூறுக்கு அப்ரூவல்னுலாம் எளுதிட்டாங்க போல இருக்கு.

அதே தான். இப்பத்தான் கரெக்டா புரிஞ்சிருக்கீங்க. ஆனா இதச் சொல்ல முடியாதே அதுனால தான் பிஸ்மில்லாவ அரபியில எளுதுறதா, தமிள்ல்ல எளுதுறதான்னு மயிர் பிளக்கும் ஆராச்சில எறங்க வேண்டியதாப் போச்சு.

அரபி, தமிழ்ன்னு மொழிப் பிரச்சனய உடுங்க. முன்னுக்குப்பின் முரணா மாத்தி எழுதுறது என்ன நமக்கு புதுசா. ஆனா இப்ப புதுசா அட்ரஸயே மாத்தியிருக்காங்க தெரியுமா.

என்ன சொல்றீங்க அஹமது. எனக்குத் தெரியாதே.

அதத்தான் சொல்லப் போறேன். கொஞ்சம் தலமயிலே விசாரிச்சு நீங்க தான் உமர் சொல்லனும்.

என்னத்த விசாரிக்கணும்னு சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்க.

அதாவது உமர் பாய், நம்ம அண்ணன் தமுமுகலயிருந்து ஓடி வந்தப்போ சும்மா வரலியே அங்க இருந்த பத்திரிக்கய தூக்கிக்கிட்டு தான ஓடியாந்தாரு. அப்பறமா அவரோட கைத்தடிகள் பாக்கரயும், அன்வர்பாயயும் வச்சு தமுமுகவோட ராயப்பேட்ட பில்டிங்லயிருந்து வந்த பணத்த வச்சு அரமணகாரன் தெருவுல வாடகய்க்கு வீடு புடிச்சு அதயே ஆபீஸாவும், பள்ளியாவும் மாத்துனாரு.

ஏங்க அஹமது இதயா ஒரு செய்தின்னு சொல்ல வர்றீங்க. இது தான் எல்லாருக்கும் தெரியுமே. தமுமுக காரன் நம்மள பாக்கும் போதுலாம் சொத்த கொள்ள அடிச்சுட்டீங்களேன்னு தான கேக்குறான்.

சரியாத்தான் சொன்னீங்க. அப்பலயிருந்து இப்ப வரய்க்கும் உணர்வு பத்திரிக்க முகவரின்னு, 7 வடமரக்காயர் தெரு, இரண்டாம் தளம்னு தான போட்டுக்கிட்டு வந்தோம். ஆனா இப்போ ஒரு அறிவிப்புல தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி - உணர்வு, 30, அரண்மனைக்காரன் தெரு, சென்னைன்னு போட்டிருக்கு. அதுனால தான் கேட்டேன். அட்ரஸ் மாத்தியாச்சான்னு.

ஓ! இது ரொம்ப புதுசா இருக்கே. சரி சரி நேரமாயிடுச்சு. இத விசாரிச்சுட்டு பெறகு ஒங்கள சந்திக்கிறேன். வர்றேன்.

வஸ்ஸலாம் - முல்லா (14.11.2006)

0 Comments:

Post a Comment

<< Home