Monday, November 12, 2007

பத்திரிக்கை பயங்கரவாதி பிஜே

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..
சமீப காலமாக தமிழக முஸ்லிம்களால் ஓரங்கட்டப்பட்ட ததஜவினர் தாங்கள் திருடிச் சென்ற பத்திரிக்கையில் எழுதிக் கிழிப்பதும், ஆங்காங்கே பேசிப் பழிப்பதுமான ஒரு விஷயம் வக்ஃப் வாரியம் சம்பந்தப்பட்டதாகும்.

ஆஹா.. .. சமுதாயத்தின் மீது இவர்களுக்கு அதீத அக்கறை வந்து விட்டது போலும் என எண்ணி விடாதீர்கள். ஏனெனில் இதற்கு முன்பு இவர்கள் நிம்மதியாக சுவாசித்தார்களே அந்த அம்மாவின் ஆட்சியிலே, அம்மாவின் அன்புத் தோழியின் அரவணைப்பில் வக்ஃப் வாரியம் செயலிழந்து கிடந்த பொழுது போயஸ் தோட்டத்து பொன் மகளிடம் அடங்கி கிடந்தார்கலோ என்னவோ அமைதியாகவே இருந்தனர்.

இன்று மட்டும் எப்படி வேகம் வந்தது.

காரணம், வக்ஃப் வாரிய தலைவராக தமுமுக வின் தலைவர்களில் ஒருவர் அமர்ந்திருப்பது தான் இவர்களின் கண்ணை உறுத்துகிறது.

போயஸ் தோட்டத்து சகவாசம் கிட்டியதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதிக்குரிய அனைத்து அம்சங்களையும் கற்றுக் கொண்ட கிரிமினல் பிஜே தனது அரசியல்வாத திறமையை பரீட்சித்துப் பார்க்க துவங்கி விட்டார் போலும்.

பதவிக்கு வர முடியாத அளவிற்கு மக்கள் செல்வாக்கு இழந்தவர்கள் பதவிக்கு வருபவர்கள் மீது பழி உரைத்து பதவி நீக்கம் அல்லது பதவி இறக்கம் செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபடுவர். அரசியல்வாதியின் இந்தச் செயலை அப்படியே அடியொற்றி தற்பொழுது தடுமாற்றத்தில் இருக்கும் ததஜ தலைவர் செய்ய ஆரம்பித்துள்ளார்.

ஊரார் உழைப்பிலேயே உல்லாசம் காணும் இயல்புடைய இவர், தான் களவாடிச் சென்ற பத்திரிக்கையில், ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதாவது வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து குற்றச்சாட்டுகளை அனுப்பித்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத் தொகுத்து முதலமைச்சர் மற்றும் பலருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே சமுதாய சேவையை நோக்கமாக இவர் கொண்டிருப்பாரேயானால், வக்ஃப் வாரியத்தில் ஏதேனும் குளறுபடிகள் காணக்கிடைத்தால், அதனை வாரியத்தின் தலைவர் அவர்களுக்கு, அதாவது தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களுக்கு மகஜர் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்திருப்பார்.

ஆனால் தன்னோடு ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தவர் இன்று பெருமதிப்புக்குரிய தலைவராக வலம் வருவதை பொறுத்துக் கொள்ள இயலாமல் பொறாமை தீயில் வெந்து துடிக்கிறார் பாவம். வெகு காலத்திற்குப் பிறகு, இப்பொழுது தான் வக்ஃப் வாரியம், ஒரு துடிப்பான தலைமையின் வழிகாட்டுதலில் செயல்படத் துவங்கியுள்ளது.

இதுவரை உறங்கிக் கிடந்த பணியாளர்களை, தட்டி எழுப்பி, தட்டிக் கொடுத்து, தகவல்களை திரட்டி வருவதால், பல இடங்களில் வக்ஃப் சொத்துக்களை மீட்டு எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புராதான கால வாடகை நிர்ணயத்தின்படி வசதிகள் அனுபவித்துக் கொண்டு, வக்ஃப் போர்டை வஞ்சித்து வந்த வாடகைதாரர்களிடமிருந்து சந்தை நிலவரப்படி வாடகை நிர்ணயித்து வசூல் செய்ய வழிவகை செய்யப்பட்டு வருகின்றது.

இப்படியாக, ஆக்கபூர்வமான வேளைகள் நடைபெற்று வரும் வேளையில், என்ன புகார் காண்டம் வாசிக்க இவர் காத்துக் கிடக்கிறார் என்றுதானே யோசிக்கிறீர்கள்.

என்ன செய்வது, ஜெயலலிதாவிடம் சேர்ந்ததனால், தமிழகத்தில் ஒரு பழமொழி சொல்வார்களே எதனோடோ சேர்ந்த கன்றும் மலத்தைத் தின்னும் என்பார்களே அதைப்போல, கருணாநிதியையும் திமு கழகத்தையும் எதிர்ப்பது மட்டுமே தனது கொள்கையாக ஜெயலலிதா கொண்டுள்ளாரோ அதேபோல், தமுமுகவையும், அதன் தலைவர்களையும் எதிர்ப்பது மட்டுமே தனது சமுதாய சேவை என்று இவர் செயல்பட்டு வருகிறார்.

அதனால் தான் தஃவாவின் பெயரால் வசூல் செய்து ஃபித்னாவை விதைத்து வருகிறார்.

தமுமுகவின் தலைமை நிர்வாகியான ஹைதர் அலி அவர்கள் வக்ஃப் வாரியத்தின் தலைவரானதிலிருந்தே பிஜே தனது உறக்கத்தை தொலைத்து விட்டு, ஹைதரின் பதவிக்கு வேட்டு வைக்க ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்து வருகிறார்.

வேட்டு வைப்பது, வெடி வெடிப்பது, வெட்டிச் சாய்ப்பது எல்லாம் இந்த கிரிமினல் பிஜேவுக்கு கைவந்த கலைதானே. சந்தேகமிருப்பவர்கள் நாகூர் பார்சல் குண்டு மற்றும் ஆலிம் ஜார்ஜ் கொலையில் கைதாகி உள்ளவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம்.

இத்தகைய சிறப்பம்சங்கள் பொருந்திய இவரது எண்ணத்திற்கு மாற்றமாக, கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் வந்த பாராளுமன்ற இணைக்குழு தனது கருத்தை பதிவு செய்துள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களின் வக்ஃப் வாரிய செயல்பாடுகளை ஆய்வு செய்து வரக்கூடிய இக்குழு கடந்த அக்டோபர் 24 அன்று தமிழகம் வந்து சேர்ந்து முறையான ஆய்வை நடத்திய பின், இந்திய துணைக்கண்டத்திலேயே தமிழக வக்ஃப் வாரியம் தான் மிகச்சிறப்பாக செயல்படுகிறது என்ற நற்சான்றிதழை அளித்துச் சென்றுள்ளது.

நியாயமான அதிகாரிகள் அதிலும் முஸ்லிம் அதிகாரிகள் அல்லது நிர்வாகிகள் மீது சேறு பூசி அபாண்டமாக எழுதுவது ஜுனியர் விகடன் போன்ற பார்ப்பனர்களின் பணி மட்டுமல்ல, பாப்பாத்தி என அறிவிப்பு செய்த செல்வியுடன் சேர்ந்து கொண்டதால் அத்தகைய பத்திரிக்கை பயங்கரவாதத்தை தன்னாலும் பரப்ப முடியும் என கிரிமினல் பிஜே இதன் மூலம் நிரூபித்து வருகிறார்.

எனவே, இஸ்லாமிய சமுதாயம் பார்ப்பனர்களிடமிருந்து மட்டுமல்ல, பத்திரிக்கை பயங்கரவாதி பிஜேவிடமிருந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

ராவுத்தர் 12.11.2007

1 Comments:

At 1:20 AM, Anonymous Anonymous said...

gp.N[ czh;T %yk; jdJ juk; jho;e;j Gj;jpia ntspgLj;jpAs;shh;. ,thpd; ,e;j mwptpg;G tf;/g; thhpaj;ij ,d;Dk; ftdKld; gzpaw;w J}z;Lk;. NkYk; gpN[ mth;fis nghWj;jtiu mtiug; gw;wp mtNu njspTgLj;J jhd; ,iwar;rKs;s> jj[tpdiu jpUj;jp tUfpwJ. eLepiyah;shfis mthplk;,Ue;J md;dpag;gLj;jp tUfpwJ. mth; ,d;Dk; epiwa vOjp> Ngrp mtiug; gw;wp njspTgLj;j Ntz;Lk;. fPof;fiu ghf;fh; Nghy; khdq;nfl;ltuhf midtUk; ,Uf;fkhl;lhh;fs;.

 

Post a Comment

<< Home