Monday, December 25, 2006

உறக்கத்திலும் விழிப்பிலும் உளறும் ததஜ உமர்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

உறக்கத்திலும் விழிப்பிலும் உளறுவதை தவிர வேறொன்றும் அறியாத தறுதலை ஜமாதின் உ.உ.கூ.உமர், மீண்டும் தனது திருவாய் மலர்ந்துள்ளார்.

கடந்த வார கட்டுரையில் இவர் தக்லீதிலிருந்து விடுபட துஆச் செய்திருந்தோம். என்ன தான் துஆச் செய்தாலும், நான் இன்னும் தீவிரமான தக்லீதில்தான் இருப்பேன். தவ்ஹீத் சிந்தனையெல்லாம் தேவையில்லை என தெளிவுபடுத்தும் முகமாக இன்று மெயில் அனுப்பியுள்ளார்.

முன்பு இலாஹியின் பெயரைக் கேட்டாலே நடுநடுங்கியது போல், இன்று முகவைத்தமிழன் என்று பேச ஆரம்பித்தாலே வெளிறிப் போய் விடுகின்றார். காரணம் இலாஹி, பீஜேவுடன் நேருங்கி இருந்த காலத்தில் நடந்தவைகளை பதிவு ஆவணமாக பாதுகாத்து வருகிறார். எனவே உளறுவாய் உமர் போன்றவர்களிடம் பிஜே வுட்டு அடிப்பதைப் போல், எங்காவது ஒரு விஷயத்தை மாற்றியோ, கூட்டியோ குறைத்தோ சொன்னால் - இலாஹி பிடி பிடி என பிடித்து விடுவார்.

அதைப் போலவே இன்றய முகவைத் தமிழனும் தான் பணிபுரியும் இடத்தில் ததஜவினர் நடத்தும் கூத்துக்களையும், மிரட்டல்களையும், கெஞ்சல்களையும் பதிவு ஆவணமாக பாதுகாத்து வருகிறார். எனவே அவரது பெயரைச் சொல்லக் கேட்டாலே உளறுவாய் உமர் - ஹை வோல்ட்டேஜை தொட்டது போல் துடித்துப் போகிறார்.

டிசம்பர் 6 அன்று ராமநாதபுரத்தில் நடந்த விஷயங்கள் குறித்து நாம் எழுதிய போது, அன்று அங்கு ததஜவின் நிலை என்னவென்பதை முகவைத்தமிழன் ஆதாரத்துடன் வெளியிடத்தயார் என் மார்தட்டுவதாக குறிப்பிட்டிருந்தோம்.

இதற்கு பதில் எழுத முடியாத உளறுவாயன், அவரது பாஷையில் பதிலடியாக, 'அவர் மார்தட்டுவது இவருக்கு எப்படி தெரியும்' என கிறுக்குத்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரைப் போல் ஒரு கூட்டுக்குள் முடங்கி கிடப்பவரைப் போல் - கிணற்றுத் தவளையைப் போல் - நம்மையும் எண்ணி விட்டார் போலும். சுய சிந்தனை சக்தியற்றவர்களாக, தறுதலை ஜமாஅத்தின் தலைவன் கிரிமினல் பீஜேவின் வார்த்தைகளை மட்டுமே வாந்தி எடுக்கக் கூடிய வியாதியஸ்தர்களாக இவர்கள் திரிவதால் இஸ்லாமிய சகோதரத்துவம் பற்றி இவர்களுக்குத் தெரியவில்லை.

தனது தாயின் மறைவுக்கு ஆறுதல் சொல்லச் சென்றவர்களையே அவமானப்படுத்தி அதிலே இன்பம் கண்ட குரூர புத்தியுடைய தனது தலைவன் வழியை பின்பற்றுவதால், ஒரு சகோதரனின் திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்லும் இஸ்லாமிய நடைமுறை இவர்களுக்கு புரிவதில்லை. அச்சந்தர்ப்பத்தில் பேசப்பட்டவற்றில் இதுவும் ஒன்று என இவர்களுக்கு விளங்கப் போவதுமில்லை. முகவை ததஜ டிசம்பர் 6 நிகழ்ச்சி பற்றி இன்னும் சந்தேகமாக இருந்தால் அதில் கலந்து கொண்ட சிங்கமுடி பாக்கரிடமோ, அதை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்த திருட்டு பத்திரிக்கை ஆசிரியரிடமோ கேட்டு உளறுவாயன் தெளிவு பெற்றுக் கொள்ளட்டும்.

சிந்தனை தெளிவு இல்லாத உளறுவாயன் சென்ற ஜனவரி கும்பமேளாவைப் பற்றியும் எழுதியுள்ளார். பத்து இலட்சம், பல இலட்சம் என பல சுருதிகளில் பாடித் திரிந்தவர்கள், தனது கிரிமினல் தலைவன் போயஸ் தோட்டத்து பொன்மகள் முன் பொட்டிப் பாம்பாக சுருண்டு, கூனி குறுகி இலட்சம் பேர் என ஈனஸ்வரத்தில் முனகிய பிறகும், வெளியில் மக்களை மடையர்களாக்க கோயபல்ஸ் பாணியில் மீண்டும் மீண்டும் உளறியவர் தற்சமயம் உஷாராக எண்ணிக்கையை விட்டு விட்டார்.

உளறலின் உச்ச கட்டமாக நீட்டி முழங்குவதும், எதார்த்தத்தை சுட்டிக்காட்டி நாமும், நம்மைப் போன்றவர்களும் அழகிய முறையில் பதில் கொடுத்த பின், தனது தலைமையிடம் குட்டுபட்டு மூடிக் கொண்டு அடக்கி வாசிப்பதும் உளறுவாயனின் வாடிக்கை. 'எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான' என பில்ட் அப் செய்து வந்தவர், நாம் சுட்டிக்காட்டியபின் ஏதோ கொஞ்சம் எதார்த்தத்தை புரிந்ததால், பல்லாயிரக்கணக்கான என்ற மாயையிலிருந்து விடுபட்டு, இப்பொழுதெல்லாம் 'எனது மெயிலை பார்வையிடும் சகோதரர்களுக்கு' என துவக்கி வருவதை நாம் அறிவோம்.

அதேபோல், கும்பமேளா விஷயத்திலும் இலட்சம் பேர் கூட கூடவில்லை என்ற உண்மையை உணர்ந்து உஷாராக எண்ணிக்கையை தற்சமயம் விட்டிருப்பாரேயானால், எதார்த்தத்தை புரிந்து கொண்டதற்காக பாராட்டுவோம். எமது நன்றிகளையும் கூறிக் கொள்கிறோம். இதேபோல் எதார்த்தமான தவ்ஹீதிற்கு எதிரான தக்லீதிலிருந்தும் விடுபட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

ஆனாலும் அது சந்தேகம் தான். ஏனெனில் உளறுவாயனின் தக்லீதின் தரம் அப்படிப்பட்டது. அதற்கு ஒரு உதாரணம் தான் ராஜ்மஹால் வைஸ் இலாஹி விஷயம். இன்று, 'மேலப்பாளையத்தில் வேறொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது' என ஒத்துக் கொள்ளும் உளறுவாயன் அன்று, இலாஹிக்காக பீஜே வெட்டித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார் என பரபரப்பான மெயில்களை தனது அடிவருடிகள் அனுப்பியிருந்தது நினைவு கூரத் தக்கது.

ரமளான் பற்றிய நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக வரும் பீஜேயிடத்தில் இங்குள்ள இலாஹி என்பவர் பிரச்சனை செய்வார் என் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே அங்கு அவர் நுழைந்துவிடாமல் காக்க வேண்டியது உங்களது கடமை என காவல் துறையினரிடம் எழுதிக் கொடுத்த கடிதத்தை இலாஹி ஸ்கேன் செய்து வெளியிட்டதன் பின்னும் மூதறிஞர் அபூஜெஹ்லின் கூற்றை நம்புவதற்கு நாம் ஒன்றும் உளறுவாயன் அளவிற்கு முட்டாள் இல்லையே.

நாம் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை தறுதலை ஜமாஅத்தினர் உதாசீனப்படுத்தி வருகின்றனர். நாம் குறிப்பிடுவது அவர்களது நன்மைக்காகத் தான் என்பதனை அறிந்து கொள்ள முடியாத அபூஜெஹ்ல்களாக இருப்பதனால் தான், உளறுவாய் உமரை தொடர்ந்து எழுத அனுமதிக்கின்றனர் போலும். அவரும் விடாமல் நம்மைக் காட்டிலும் அதிகமாக அவரது தறுதலை தலைமையின் தகிடுதத்தங்களை மக்களுக்கு நினைவூட்டி வருகின்றார்.

அந்த வகையில் ஆல்ஃப்ஸ் மலைத் தொடரின்.. .. .. முன்பு ஒற்றுமை இதழில் வெளியான கட்டுரை குறித்து எழுதியுள்ளார். ஒற்றுமையை சீர்குலைத்த கயவர் கூட்டத்திற்கு, ஒற்றுமையை முடக்கிய கிரிமினல்களுக்கு இதனை குறிப்பிட எந்த அருகதையும் இல்லை.

ஆனால் இதன் மூலம் தற்சமயம் களவாடிச் சென்றுள்ள உணர்வு பத்திரிக்கைக்கு பெயரளவில் ஆசிரியராக இருந்து கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்கிக் கொண்ட பீஜேயைப் பற்றி ஒவ்வொரு ரமளானிலும் முஸ்லிம் ட்ரஸ்ட்டில் பேசுவதற்கு பணம் வாங்கிக் கொண்ட மூதறிஞர்? பீஜேவைப் பற்றி .. ..
ஒவ்வொரு இடத்திலும் பேசுவதற்கு பணம் வாங்கிய பேச்சாளர் பீஜேவைப் பற்றி .. .. சுனாமி கணக்கில் கை வைத்து கிராபிக்ஸ் போட்ட தனது மகனுக்காக 65,000 ரூபாயை சுனாமி நிதியிலிருந்து சுருட்டிக்கொண்ட பீஜேவைப் பற்றி .. .. சுனாமியை காரணம் காட்டி, தனது பத்திரிக்கைக்கு ரூ 2 இலட்சம் சுரண்டிக் கொண்ட பீஜேவைப் பற்றி .. .. மக்கள் மத்தியில் நினைவூட்டி உள்ளார் என்றே பலர் கருதுகின்றனர்.

நாமே சொல்ல கூச்சப்படும் பீஜேவின் இத்தகைய தப்புத்தாளங்களை நினைவு படுத்திய உளறுவாயனுக்கு நன்றி.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 26.12.2006

Friday, December 15, 2006

உறக்கம் களையாத ததவின் உளறுவாய் உமர்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

உளறுவாய் உமர் தனது மூன்று வார உறக்கத்திலிருந்து மீண்டு வந்து தனது உளறல் திருப்பணியைத் துவக்கியுள்ளார். வாழ்த்துக்கள்.

ஆனால், சாதாரணமாகவே உளறக்கூடியவர், ஆழ்ந்த உறக்கத்தில் திடுக்கிட்டு விழித்தால் என்ன செய்வார். பாவம். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறி கொட்டியுள்ளார்.

நாம் பல முறை குறிப்பிடுவது போல், இவர் எழுதக்கூடிய குற்றச்சாட்டுகள் பலமுறை இவரது கூட்டத்தாருக்கே மீளக்கூடியதாக இருப்பதை நாம் சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.

அந்த வரிசையில் தற்சமயம் சுபுஹு தொழுகையைப் பற்றி குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தால், சுபுஹுமட்டுமல்ல, பல நேர தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழாமல் பீடி குடித்துக் கொண்டு உலவி வரும் தனது கிரிமினல் தலைவனைத் தான் சாடுகிறாரோ என உண்மை தவ்ஹீத்வாதிகள் தலையிலடித்துக் கொள்கின்றனர்.

அடுத்ததாக, தேர்தலில் தமுமுக பங்கேற்பது குறித்து விளாசியுள்ளார். தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் பேரியக்கமாக பவனி வரும் தமுமுக தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு எங்கு, எப்பொழுது என்ன தேவைப்படுகிறதோ அதை எப்பாடுபட்டாவது பெற்றுத் தரும் தன்னலமற்ற பேரியக்கமாகும்.

தமுமுகவின் பணிகளை (அ) சேவைகளை காப்பியடித்து வரும் பல போலிகள் ஒரே ஒரு எம்எல்ஏ தனது கட்சி ஆபீஸுக்கு வந்து சென்றதும் தலையும் புரியாமல் காலும் புரியாமல் தாங்களனைவருமே எம்.எல்.ஏக்களாகி விட்டது போல் புளகாங்கிதம் அடைந்து கொண்டார்கள் போலும். அதனால் தான் கவுஸ்பாஷா ததஜ அலுவலகத்திற்கு சென்றதால், தமுமுகவிலுள்ள தவ்ஹீத்வாதிகள் வெளியேறுவதாக மனப்பால் குடிக்கிறார் உளறுவாயன் உமர்.

ஒவ்வொரு ஸ்ட்டேட்மெண்டிலும் தானும் குழம்பி பிறரையும் குழப்பும் கலையில் பிரசித்தி பெற்ற உளறுவாயின் உளறலைப் பாருங்கள்.

தமுமுகவிலிருந்து தவ்ஹீத்வாதிகள் விலகுகிறார்கள்.
உளறல் உமரின் கிரிமினல் தலைவர், தான் பிரிந்து சென்ற நேரத்திலிருந்து இன்று உளறல் உமரின் இந்த ஈமெயில் வரை, பல்வேறு வகைகளில் அவர்களும் தத்தமது வாய் கை வலிக்க சொல்லியும், எழுதியும் தான் பார்க்கிறார்கள். அந்தோ பரிதாபம், மறுமையை நம்பக்கூடிய, ஸஹாபாக்களை மதிக்கக்கூடிய உண்மை தவ்ஹீத்வாதிகள் எவரும் தமுமுகவிலிருந்து விலகுவதாகத் தெரியவில்லை. எனவே செய்வதறியாது உளறல் உமர் வகையறாக்கள் கை பிசைந்து நிற்கின்றனர். எனவே தான் அடுத்ததாக அனைவரும் நகைக்கும் விதத்தில் ஒரு காரணம் கூறுகிறார் பாருங்கள்.

அதாவது, தமுமுகவிலிருந்த தவ்ஹீத்வாதிகள், கவுஸ் பாஷாவின் ததஜ அலுவலக விஜயத்தினால் மனம் வெறுத்து விலகுகிறார்களாம்.
இதன் மூலம் உளறல் உமர் தனது தலைமை மற்றும் தொண்டர்களின் தவ்ஹீதின் தரம் எப்படிப்பட்டதென தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். ஆக இவர்களது பார்வையில் அரசியல்வாதிகள் விஜயத்தினால் தான் இவர்களது ஈமான் கூடவும் குறையவும் செய்யும் போலிருக்கிறது. வெட்கம். வெட்கம்.

முகவை மாவட்டம் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள தமுமுக நிர்வாகிகளை எத்தனையோ ஆசை வார்த்தை கூறி வளைத்து விட தறுதலை ததஜவின் கிரிமினல் தலைவன் எத்தனையோ முயற்சி செய்தும் ஒன்றும் பலிக்கவில்லை. அந்த விரக்தியில் தனது தலைவனின் சுன்னத்தை விட்டு விடாமல் தமுமுகவின் மேல் தன்னால் முடிந்தவரை அவதூறு சுமத்தியுள்ளார்.

நிர்வாக வசதிக்காக, தனது பலத்தை அதிகரிப்பதற்காக கிளைகளை அதிகமாக்குவதற்காக மாவட்டங்களை பிரிப்பது வளர்ச்சிப் பாதையின் குறியீடு. இந்த வகையில் தான் இந்திய அளவில் புதிய மாநிலங்களே உருவாக்கப்படுகின்றன. தமிழக அளவில் புதிய மாவட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. தமுமுகவும் அதே போல் தனது வளர்ச்சிப் பாதையின் குறியீடாக முகவை மாவட்டத்தைப் பிரித்தது. இன்று அதன் காரணமாக முகவையின் மூலை முடுக்குகளிலெல்லாம் தமுமுகவின் புதிய கிளைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முகவை மக்களும் முழு மனதோடு ஆதரவளிக்கின்றனர்.

இதனை காண சகிக்காத தறுதலை ததஜவினர் எதையும் உடைத்தே பழக்கப்பட்ட தங்களது இயல்பு படி முகவை சின்னாபின்னமாகி விட்டதாக மனப்பால் குடிக்கின்றனர்.

அதனால் தான் முகவையில் நடந்த டிசம்பர்-6 போராட்டத்தை சிறுமைப்படுத்தி எழுதியுள்ளார். என்ன செய்வது தனது தலைவன் சரணடைந்த போயஸ் தோட்டத்து பொன்மகளை எதிர்த்து தமுமுக வீறுகொண்ட வீடு முற்றுகை போராட்டம் நடத்த புறப்பட்டதை இந்திய ஊடகமே வியந்து பாராட்டிய வேளையிலும், களவாடிச் சென்ற உணர்வில் சிறுமைப்படுத்தியே செய்தி வெளியிட்டார்கள்.
அத்தகைய சிறுமதியாளர்களின் சீரிய வழிகாட்டுதலில் செயல்படுவதால் உளறல் உமரும் முகவை மாவட்ட தமுமுகவின் டிச-6 போராட்டங்களை சிறுமைப்படுத்தியுள்ளார்.

இதே முகவையில் இவர்களது (அ)சிங்க குரல் பொதுச் செயலாளரின் டிச-6 போராட்டத்திற்கு வந்தவர்கள் மொத்தமாக மூன்று இலக்கத்தை தொட முடியாத அளவிற்குத்தான் இருந்ததாக தகவல்கள் வருகின்றன. ஆதாரத்துடன் வெளியிடத் தயார் என முகவைத் தமிழன் மார்தட்டுகிறார். முகவைத் தமிழன் வெளியிட்டுவிட்டால் தறுதலை ஜமாஅத் ததஜவினரின் முகமூடிகள் கிழிந்துவிடும்.

இலாஹி குறித்து நாம் எழுதியிருந்ததற்கு பதிலளிப்பதாக நினைத்துக் கொண்டு 'ஒப்பந்தம் அவசியம் என்பது மனிதர்களுக்குப் புரியும், பிராணிகளுக்குப் புரியாது' என் உளறியுள்ளார். ஒருவேளை இவர்கள் புரியாத பிராணிகளுடன் பேசும் பழக்கம் உள்ளவர்கள் போலும்.

நாம் குறிப்பிட்டிருந்தது, இலாஹி குறித்து காவல் துறையினரிடம் கம்ப்ளெய்ண்ட் கொடுத்ததோடு, அவரை ராஜ் மஹால் பக்கம் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் பொறுப்பு என கையை காலைப் பிடித்து கெஞ்சி எழுதிக் கொடுத்த கடிதத்தின் காப்பியை வெளியிட்டதைத்தான். இதற்கு பதில் எழுத வேண்டுமானால், அப்படி எழுதவில்லை என அவர்களது வழமைப்படி பொய் சத்தியமோ அல்லது அது ஒரு ஃபோர்ஜரி லட்டர் என்றோ உளறியிருக்கலாம். ஆனால் அதற்கும் மேலாக அவரை பேமானி என வசை பாடியிருப்பதிலிருந்தே ஓடிப்போனது பிஜே தான், இலாஹி அல்ல என விளங்க முடிகிறது.

சென்ற வருட ஹஜ்ஜில் தமுமுக தொண்டரணியின் சேவையை இந்திய தூதர் அவர்களே சிலாகித்து சொல்லியிருப்பதால் தறுதலை ஜமாஅத்தினருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அந்த வயிற்றெரிச்சலில் தான் தமுமுக ஏற்பாடு செய்யும் இவ்வருட ஹஜ்ஜையும் விமரிசித்துள்ளார் திருவாளர் உளறுவாய் உமர் அவர்கள். தனது வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாக, சுனாமி நிதியில் தனது தலைமை தறுதலை ததஜ தனது தொண்டர்களுக்கு சீருடை வாங்கித் தந்த சிந்தனையிலேயே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் போலும்.

கருணாநிதி அமைத்த கமிஷனுக்கும், ஜெயலலிதா அமைத்த கமிஷனுக்கும் வித்தியாசம் தெரியாத புத்திசாலிகளாக உளறல் உமர் வகையறாக்கள் இருப்பதால் தான் கமிஷன் பெற்றுக் கொண்ட அவர்களது கிரிமினல் தலைவர் தாராளமாக ஏமாற்றிக் கொண்டுள்ளார். வித்தியாசத்தையே புரிந்து கொள்ள இயலாதவர்களால் செல்வியின் ஆணை ஒரு செல்லாக்காசு - வேஸ்ட் பேப்பர் - டாய்லெட் பேப்பர் என்பதனை எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும்.

அதுதான் உளறல் உமர். அவரிடம் புரிதலை எதிர்பார்ப்பது நமது தவறு. என்றாலும், ஒரு காஃபிர் கூட இஸ்லாத்தை புரிந்து உண்மை முஸ்லிமாக மாற வேண்டும் என்ற பேராவல் கொண்டுள்ள உண்மை தவ்ஹீத் வாதிகளாகிய நாம் இந்த உளறல் உமரும் தெளிவு பெற்று உண்மை தவ்ஹீதை விளங்கி தக்லீதிலிருந்து விடுபட துஆச் செய்வோம்.

ராவுத்தர் (16.12.2006)

Monday, December 11, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 13

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. ..)

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய் எங்க ரண்டு வாரத்துக்கு மேலா காண முடியலியே.

என்ன அஹமது நக்கல் பண்றீங்களா. நாம தான் போன வாரம் சந்திச்சு பல விஷயங்கள பத்தி பேசிக்கிட்டமே.

நான் ஏன் ஒங்கள நக்கல் பண்ணப்போறேன். நீங்க தான் மக்களயே நக்கல்னு எளுதுறவுங்களாச்சே. நான் கேக்க வந்தது கடந்த 2 வாரத்துக்கும் மேலா நீங்க எளுதி எதுவுமே மெயில் அனுப்பலியே அதச் சொன்னேன்.

ஓ. அதுவா. என்னத்த அஹமது எளுதுறது. எத எளுதுனாலும் வாங்கி கட்டிக்க வேண்டியதிருக்கு. அதுதான் யோசனயாயிருக்கு.

அதுசரி. அப்புடி இப்புடின்னு நம்மள சந்திக்கிறதயும் நிறுத்திடாதீங்க. ஆமா. போனவாரம் இந்த ஹஜ்ஜ பத்தி பேசிக்கிட்டோமே அது சம்பந்தமா எதாவது லேட்டஸ்ட் நியூஸ் இருக்கா.

சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும் இல்ல. ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். எந்த அளவுக்கு சரின்னு தெரியல. அதாவது நம்ம தலவர நம்பி யாருமே கூட வராததுனால, அவரு மட்டும் கேரளாவில இருந்து ஹஜ்ஜுக்கு போகப் போறதா தகவல் கிடச்சிருக்கு.

எங்க இருந்து போனாலும் பரவாயில்ல. முதல்ல ஹஜ்ஜ முடிக்கச் சொல்லுங்க. மொதல்ல தான் ஹஜ்ஜு பண்ண காசில்லன்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. இப்பத்தான் தனக்கு மட்டும்னு இல்லாம குடும்பத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிஸினஸ்னு எல்லோருமே வளமாக்கிக்கிட்டாங்கல்ல. அதுனால முதல்ல ஹஜ்ஜ முடிக்கச் சொல்லுங்க ஒமர் பாய்.

எல்லாம் சரிதான் அஹமது. ஆனா நாம போன வாரமே சொன்னா மாதிரி போனா வருவாராங்கிற டவுட்டு இன்னும் அதிகமாகி கிட்டே போவுதே.

ஏன். இப்ப என்ன புதுசா மொளச்சிருக்கு.

என்னத்த சொல்றது அஹமது. நம்ம ஆளு இந்த ஜெயலலிதா கிட்ட பெட்டி வாங்கி எப்ப கூட்டு வச்சாரோ அப்பவுல இருந்து அந்த அம்மா மாதிரியே எதையாவது சொல்லி வச்சு வம்புல மாட்டிக்கிறாரு. அந்த வகையில போன ஏகத்துவம் பத்திரிக்கைல, 'நாம் பின்பற்றுவது தூதரைத் தான் யூதரை அல்ல' ன்னு எளுதி அதுல சவுதி அரசாங்கத்த தாக்கி இருந்தாங்கல்ல,

அதத்தான் போன வாரமே பேசிக்கிட்டோமே, இப்ப கூடுதலா என்ன வந்திருக்கு? அதச்சொல்லுங்க.

அவசரப்படாம கேளுங்க அஹமது. அதத்தான் சொல்ல வர்றேன். இப்ப என்னடான்னா நிகாப் பத்தி எளுதி அது குர்ஆன்லயோ ஹதீஸ்லயோ சொல்லப்படலன்னு எளுதி இருக்காரு. இதப்படிச்சு பார்த்தா போன மாச ஏகத்துவம் சவுதில தடை செய்யப்பட்ட மாதிரி இந்த வார உணர்வும் தடை செய்யப்பட்டுப் போயிடும்னு பயப்படுறேன்.

அப்புடியெல்லாம் ஆகாது. பயப்படாதீங்க. நம்மாளு என்ன அவ்வளவு வௌரமில்லாதவரா. ஏகத்துவம் பத்திரிக்கைல 'நாம் பின்பற்றுவது தூதரைத் தான் யூதரையல்ல' ன்னு மவ்லவி சம்சுல்லுஹாவ வச்சு எளுதி வுட்ட மாதிரி, இந்த நிகாப் விஷயத்தையும் குவைத் ஃபைஸல் ங்கிற பேர்ல தான் வெளிவுட்டு இருக்காரு. அப்புடி ஏதாச்சும் பிரச்னை வந்தா, இவுங்கள தள்ளி வுட்டுட்டு தப்ச்சுக்குவார்ல.

அட, ஆமா. இத நான் யோசிக்காம போய்ட்டேனே. இப்புடி ஒரு சிக்கல் இருக்குறதுனால தான் இந்த மாச ஏகத்துவத்துல அப்புடி ஒரு பதில் வெளியாகி இருக்கோ.

அது என்னங்க ஒமர் பாய்.

அதாவது அஹமது, முன்னால ஒரு சமயத்துல பிஜே ஒரு தலாக் விஷயமா கேட்ட கேள்விக்கு பதில் சொல்றப்போ, 'பிரசுரமாக இருந்தால் நீங்கள் குறிப்பிடுவது போல் தான் உள்ளதா என சரி பார்த்து பதிலளிக்க முடியும். இது ஓர் உரை என நீங்கள் குறிப்பிட்டிருப்பதால், சரி பார்க்க இயலவில்லை' ன்னு எளுதியிருக்காங்க.

இது என்னங்க இது. புது விளக்கமா இருக்கு. அட அப்புடியே இது ஒரு இடத்துல பேசுன பேச்சுன்னா, தமுமுகவோட உபகாரங்கள வச்சு நடக்குற பாக்கர்ர மீடியா வெர்ல்ட்லயோ அல்லது நம்ம தலவரு ஆரம்புச்ச மூன் மீடியாவுலயோ கேட்டு வாங்கி செக் பண்ண வேண்டியது தான. இல்லாட்டி அவரு கிட்டயே ஃபோனப் போட்டு கேக்க வேண்டியது தானே. செக் பண்ண முடியலைன்னு சொன்னா அதுல என்னமோ வில்லங்கம் இருக்குதுன்னு வெளங்குது.

அதே தான். இதப் படிச்ச ஒவ்வொரு தமுமுக காரனும் இப்புடி வெளங்கிக் கிட்டதுனாலதான ஃபோன் போட்டு நம்மள்ட்ட குசலம் விசாரிக்கிறானுக. இவரு இப்புடி ஹதீஸ வெளங்கப் படுத்துறேன்னுட்டு வலிஞ்சு என்னத்தயாவது சொல்லி வாங்கி கட்டிக்கிறாரு. ஏகத்துவத்துல அந்த வாசகர் குறிப்பிட்டிருந்த ஹதீஸ்ல நம்மாளு மேலதிகமாகச் சொன்ன, 'ஆண்மை இல்லாதவர்னுலாம்' குறிப்பிடப்படல. இவரா சொன்னதுனால இப்ப வந்தது வென.

ஒமர் பாய். அதவிட சம்சுல்லுஹா இந்த விஷயத்த இப்போ வெளியிட்டு இருக்குறது தான் முக்கியமானதுன்னு நான் நெனக்கிறேன். ஆக ஒருத்தரோட குடுமி இன்னொருத்தர் கைல மாட்டிக்கிட்டிருக்குற மாதிரி தெரியுது.

ஆமாங்க அஹமது. இப்புடித்தான் முன்னால ஒரு தடவ கூட லுஹாவுக்கு எதிரா பிஜே சொன்ன ஒரு விஷயத்துக்காக அப்போ இருந்த அல்முபீன்ல பிஜேவை மறைமுகமா தாக்கி ஒரு கட்டுரை எளுதுனாரு.

என்னமோ நடக்குது போங்க. அது கெடக்கட்டும். தமுமுகவ பத்தி உணர்வுல ஏன் மறுபடியும் உண்மய மறச்சு எளுதியிருக்காங்க.

என்ன இப்புடி கேட்டுட்டீங்க அஹமது. எந்த காலத்துல தமுமுக சம்பந்தப்பட்ட விஷயங்கல்ல முழு உண்மையையும் நாம எளுதியிருக்கோம். இப்போ நீங்க வருத்தப்படுறா மாதிரி என்னத்த எளுதி இருக்காங்க.

அந்த புதுப்பேட்டை சமாச்சாரத்தப் பத்தித்தான் சொல்றேன். புதுப்பேட்டைல தமுமுக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சேதி கெடச்ச உடனேயே மற்ற நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லாம் சேர்ந்து பொதுமக்களோடய முழு ஆதரவோட சாலை மறியல்ல ஈடுபட்டு, காவல் துறை கவனத்த ஈர்த்ததுனால, போலீஸும் உடனடியா செயல்பட்டு அந்த ரவுடிகள புடிச்சுட்டாங்க. இந்த நெலமைல எதுக்காக தமுமுக, அரசாங்கத்த எதுத்து போராட்டம் நடத்தனும்னு நம்மாளு பொலம்புறாரோ தெரியல.

இது புரியலயா ஒங்களுக்கு. இதுலாம் அவரே சொல்றமாதிரி அண்ணன் எப்போ போவான் திண்ண எப்ப காலியாகும்கிற கத தான். இவரு முத்துப்பேட்டை ததஜ நிர்வாகி மேல் திமுக அரசு போட்ட கேஸையே, 'கேஸ் போடக்கூடாதுங்குறதுக்காக போட்ட கேஸ்' னுலாம் சொல்லிப் பார்த்து, தன்னோட நிர்வாகிய பலி கொடுத்தாவது திமுகவோட நெருங்கிறனும்னு முயற்சி பண்ணுனாரு. கலைஞரு கண்டுக்கல. அந்த எரிச்சல்ல இப்புடி கிண்டி வுடறாரோ என்னமோ.

ஆமாமா. அப்புடித்தான் இருக்கும். இந்த வார கேள்விபதில்ல வந்திருக்குற கேள்விகள எளுதுனவங்களப் பார்த்தாலே இத தெரிஞ்சுக்கிறலாம். ஜாக் பத்துன கேள்விய ஜித்தா ஷிப்லி பேர்லயும், பித்ரா பத்துன கேள்விய ஜுபைல் அப்துல் காதர் பேர்லயும், புதுப்பேட்டை சமாச்சாரத்த ஒரு மெட்ராஸ்காரரு பேர்லயும் போட்டிருக்கிறத பாத்தாலே இது செட்டப்பு கேள்வி பதில்னு வெளங்கிப் போச்சு. தவிர செய்திகளும், சர்குலேசன் மாதிரியே கொறஞ்சு போய்ட்டதுனால இந்த மாதிரி செட்டப்புகளையும், படங்களையும் போட்டுத்தான் பக்கத்த நெரப்ப வேண்டியதிருக்கு. வேற என்ன பண்றது.

இதுல இன்னொரு காமெடியும் இருக்கு கவனிச்சீங்களா. அரசியல் சமுதாயம் ஆன்முகம் சம்பந்தமான கேள்விகளுக்கு பிஜே பதிலளிக்கிறார் போட்டுட்டு, ஜாக் சம்பந்தமான பதில்ல '.. .. பிஜே உண்மையைப் போட்டு உடைத்ததில்.. ..' ன்னு யாரோ 3ஆவது நபர் எளுதுற மாதிரி எளுதியிருக்கிறத சுட்டிக்காட்டி ஜனங்க சிரிக்கிறாங்க. கூடவே பிஜே காட்டிக் கொடுக்க தயங்காதவர்னு பிஜேவே பதிலளிச்சு இருக்கிறதாவும் பேசிக்கிறாங்க போங்க.

சரி உமர் பாய். ஒங்களோட பேசிக்கிட்டிருந்தா நம்ம கத நடக்காது. என்ன தான் இடிச்சாலும் ததஜவோட தலமைக்கு புத்தியே வராது. நான் போய் என்வேலய பாக்கணும். வர்றேன்.

வஸ்ஸலாம்
முல்லா 11.12.2006

Tuesday, December 05, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 12

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். என்ன போன தடவ அவசரமா ஓடிப்போயிட்டீங்க.

கொஞ்சம் வேலையிருந்துச்சு. அதான் அவசரமாப் போனேன். ஏன் எதாவது சேதி கலந்துக்குறதுல விடுபட்டுப் போச்சா.

அது வேற ஒண்ணுமில்ல. நம்ம உணர்வு பத்திரிக்க சம்பந்தமா ஒரு டவுட்டு.

கேளுங்க அஹமது.

அதாவது ஒமர் பாய். உணர்வுல தமுமுக ஆளுங்கள பாராட்டிலாம் இப்ப சேதி வருதே என்ன சமாச்சாரம்.

என்ன சொல்றீங்க. அஹமது! எப்ப அப்புடி ஒரு சேதி வந்துச்சு. சான்ஸே இல்லயே. வழமையா நாம தமுமுக காரன் செய்ற எந்த நல்ல செயலையும் ஏத்துக்கவே மாட்டோமே. அதுல எதாவது நொட்டு, நொள்ள சொல்ல முடியுமான்னு தானே பார்ப்போம். நீங்க வேற எதயோ பாத்துட்டு தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க போல.

சே.சே. அப்புடிலாம் கெடயாது. நான் சொல்றது நெசம் தான். போன வார உணர்வுல ஒரு சின்ன பையன் தஜ்வீது முறைப்படி ஓதி குர்ஆன் மனனப் போட்டியில முதல் பரிசு வந்ததா ஒரு நியூஸ் போட்டிருந்தாங்களே அதத்தான் சொல்றேன்.

ஹ்ஹாஹா.. ..அதுக்கும் தமுமுகவுக்கும் என்னங்க சம்பந்தம். ஏன் இப்புடி கெடந்து கொளப்புறீங்க.

அதுசரி. அப்ப ஒங்களுக்கு விஷயமே தெரியாதா. அந்த சின்ன பையன் சவுதில உள்ள அல் அஹ்ஸாங்குற பகுதி தமுமுக கிளை நிர்வாகியோட பையனாம். மக்கள் உரிமைல போட்டிருந்தாங்களே பாக்கலியா.

அப்புடியா சேதி. நம்மாளுங்க இந்த விவரத்த மறைச்சுட்டாங்களா. இப்புடித்தான் முன்னால ஒரு தடவ தமுமுக கார வக்கீல் ஒருத்தரோட ஆர்க்யூமெண்ட்டால, முஸ்லிம்களுக்கு சாதகமா ஒரு தீர்ப்பு வந்தப்ப விஷயத்தை மட்டும் எளுதிட்டு, யாரால அப்புடி ஒரு சாதகமான தீர்ப்பு வந்துச்சோ, அதுக்கு காரணமானவரு தமுமுக காரருங்குறதுனால மறைச்சாங்க.

அப்புடியா. இதுக்கு முன்னாலேயும் இதே மாதிரி நடந்துருக்கா. பேசாம தமுமுக காரங்க சம்பந்தபட்ட விஷயங்கள எளுதாம இருந்தாலே நல்லதுன்னு நெனக்கிறேன். அவுங்களோட சின்ன, சின்ன தவறுகளய்லாம் ஊதி பெருசாக்க நெனச்சு எளுதுறாங்க. அப்புறமா அது வெடிச்சு சுயிங்கம் மாதிரி நம்ம மூஞ்சிலேயே ஒட்டிக்கிறுது. அத தொடக்கிறதுக்கே நமக்கு போதும் போதும்னு ஆகிடுது. இந்த நெலமைல தமுமுகவோட நல்ல வெசயத்த எளுதி அதுலயும் கொஞ்சம் மறைக்கப்பட்டிருக்குனு மக்கள் புரிஞ்சுக்கிடணுமா.

நீங்க தான் தப்பா புரிஞ்சுகிட்டீங்க அஹமது. குர்ஆனையே தனக்கு சாதகமா வளைச்சவுங்க, ஹதீஸையே தனக்கு சாதகமாக மறைச்சவங்க நம்ம தலைவரு, இத மறைச்சதப் பத்தி ஏன் ஃபீல் பண்றீங்க. தனக்கு சாதகமா குர்ஆனையும் ஹதீஸையும் மறைக்கும் போது இதச் செய்ய ஏன் கூச்சப்படப் போறாரு.

அதுவுஞ் சரிதான் ஒமர் பாய். இப்போ ஹஜ் சீஸன் ஆரம்பிச்சுடுச்சே. இதுல போன தடவ நம்ம தலைவரு ஒரு ஃபத்வா குடுத்தாரே அதனோட நெலம என்ன தெரியுமா.

முதல்ல ஃபத்வாவே என்னன்னு மறந்து போச்சு. இந்த லட்சணத்துல அதனோட இப்போதய நெலம என்னன்னு கேட்டா நா என்ன சொல்றது.

அதாவது கடந்த மொற ஹஜ்ல, ஜம்ரத்துக்கு பக்கத்துல ஏற்பட்ட நெரிசல்ல பல நூறு ஹாஜிகள் வஃபாத்தானாங்கல்ல, அப்போ அந்த மாதிரி விபத்துகள் ஏற்படாம தடுக்கணும்னா என்ன செய்யனும்னு நம்ம தலைவரு உணர்வுல எளுதுனாருல அதப்பத்தி தான் கேக்குறேன்.

ஓ அதுவா. அது சம்பந்தமா அப்பவே பலபேரு அந்த கருத்த எதுத்ததுனால, நம்மாளு மூச்சடைச்சு போயிட்டாரே, ஜம்ரத்ல கல்லெறியுறதுக்கு தேச வாரியாக நேரம் ஒதுக்கி ஆளுங்கள அனுப்பனும்னும், கல்லெறியத் தேவை சைகை செஞ்சா போதும்னும் இவரு சொன்ன ஒடனேயே ஆளாளுக்கு பிச்சு எடுத்துட்டாங்களே.

அத எப்படி ஒமர் பாய். ஒத்துக்க முடியும். ஜகாத் விஷயத்துல இவரு ஒரு பொருளுக்கு ஒரு தடவ குடுத்தால் போதும்னு சொன்னத கொஞ்ச போராவது ஏத்துக்கிட்டாங்க. அதுக்கு கூட அவுங்க அவுங்களோட சுய நலமும், தன்னோட பொருள் மிச்சமாவுதுன்னு சிலர் நெனச்சாரோ என்னவோ. ஆனா இது இபுறாஹீம் (அலை) நபி காலத்துலருந்து வர்ற வழக்கமாச்சே. அப்புடி இவரு இத மாத்தனும்னு நெனச்சாரோ தெரியல.

அதவிட கூத்து என்ன தெரியுமா. இவரு இப்புடி எளுதுன ஒடனேயே ஒரு ஸைட்டுல உணர்வு ஆசிரியரின் அறியாமைன்னு போட்டு நாமெல்லாம் முதறிஞர்னு சொல்றவரு சரியான அபூஜெஹல்னு எளுதி நார்நாரா கிளி கிளின்னு கிளிச்சுட்டாங்க. கூடவே இதுக்குலாம் என்ன காரணம்னா இவரு உம்ராவுக்கோ, ஹஜ்ஜுக்கோ வராதது தான் காரணம்னும் எளுதி இருந்தாங்க.

அதுதானா விஷயம் இந்த வருசம் நம்ம தலவரு தலமையில ஹஜ்ஜுக்கு ஆள கூப்பிட்டுக்கிட்டு போறதா கேள்விப்பட்டேனே.

நானுந்தான் கேள்விப்பட்டேன். ஆனா, ஜம்ரத்து விஷயத்துல இப்புடி தன்னோட இஷ்டத்துக்கு ஃபத்வா குடுத்ததுனால, நம்மாளுங்கலே கூட ஹஜ் கமிட்டி மூலமாவோ, வேற ஏஜென்ஸி மூலமாவோ ஏற்பாடு செஞ்சுட்டதாவும் கேள்விப்பட்டேன்.

அப்ப நம்ம தலைவரு இப்பமும் ஹஜ்ஜுக்கு போகலியா.

என்ன செய்றது. குர்ஆன் தர்ஜமாவுல பண்ணுன கொளறுபடியினால சவுதில இருந்து கூட விசாரிக்கிறதுக்கு கூப்டாங்க. அப்ப போகாம டபாய்ச்சுட்டாரு. இப்போ ஹஜ் விசாவுல போனா திரும்பவும் புடிச்சுக்கிட்டுப் போயி விசாரிப்பாங்களேன்னு பயம். இது தவிர இப்போ லேட்டஸ்ட்டா இந்த ஜம்ரத்து விஷயமும், கூடவே ஏகத்துவத்துல 'நாம் பின்பற்றுவது தூதரைத் தான், யூதரை அல்ல' என்று சவுதியை விமரிசித்து எளுதுன விஷயமும் சேர்ந்துக் கிட்டதுனால அங்க போனா திரும்ப இந்தியாவுக்கு வர முடியாதுன்னு பயமும் சேர்ந்திருக்காம். அதுனால போறது டவுட்டு தான். ஒருவேள போனா திரும்பறது அதவிட டவுட்டு தான்.

ம். அப்புடியா சேதி.

சரி சரி, வாய மூடுங்க ஈ நொளஞ்சிடப் போகுது. நான் வர்றேன். பிறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்

முல்லா 06.12.2006