பிஜேயின் இருபக்க வாதம்
தமுமுக என்ற மக்கள் இயக்கத்திடமிருந்து களவாடப்பட்டதும், ஏழைகளுக்காக வசூலிக்கப்பட்ட சுனாமி நிதியிலிருந்து பிராணவாயு செலுத்தப்பட்டு உயிர்பிக்கப்பட்டதுமான உணர்வு வார இதழ் 10:41 ல் 'காயிதே மில்லத்தை மறந்த கருணாநிதி' என்ற தலைப்பில் கீழ்கண்ட செய்தி வெளியிட்ப்பட்டுள்ளது.
'...ஆனால் தமிழக முதலமைச்சராக 5வது முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த முறை காயிதே மில்லத் சமாதிக்குச் செல்லவில்லை. (பெரியார், அண்ணா சமாதிகளுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.)
காயிதே மில்லத் பிறந்த நாளான ஜுன் 5ம் தேதி, காயிதே மில்லத் சமாதிக்குச் செல்வதை தவிர்க்கும் வகையில் திட்டமிட்டே ஜுன் 4-ம் தேதி டெல்லி பயணம் சென்றுள்ளார். இதற்கு என்ன காரணம் எனில், இந்த முறை அவர் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதி முஸ்லிம்கள் தேர்தலின் போது அவருக்கு அதிகளவில் வாக்களிக்க வில்லை என்ற கோபமே! என கூறப்படுகிறது. இதன் மூலம் கருணாநிதி தனது சுயரூபத்தை நிரூபித்துள்ளார் என்று அவரது அணியில் இடம் பெற்ற சிறுபான்மைப் பிரிவினர் புலம்புவதாகத் தெரிகிறது.'
முன்னுக்குப் பின் முரணான செய்தியை அருகருகே போட்டு மக்களை மடையர்களாக்குவதில் பிஜேக்கு நிகர் பிஜே தான்.
காயிதே மில்லத் சமாதியல் பகுத்தறிவுவாதிகள் மலர்வளையம் வைக்கக்கூடாதாம். அரசியல்வாதிகள் மலர் வளையம் வைக்க வேண்டுமாம்.
காயிதே மில்லத் பெயரை மாவட்டத்திற்கும் தெருக்களுக்கும் வைத்து விடுவதாலும் காயிதே மில்லத் சமாதிக்கு வந்து மலர் வளையம் வைத்து விடுவதாலும் காயிதே மில்லத்திற்கு மணிமண்டபம் கட்டுவதாலும் மட்டும் முஸ்லிம்களை கவர முடியாது, முறையாக அவர்களுக்குரிய உரிமைகளை கொடுப்பதற்கு எந்த கட்சி முன்வருகிறதோ அந்த கட்சிக்கே முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்கும் என்று சொன்ன அந்த பிஜேயின் நாக்கு, இப்பொழுது வேறு விதமாக பேச ஆரம்பித்துள்ளது.
காயிதே மில்லத் பெயரை மாவட்டத்திற்கும் தெருக்களுக்கும் வைக்காமல் இருப்பதும் காயிதே மில்லத் சமாதிக்கு வந்து மலர் வளையம் வைக்காமல் இருப்பதும், காயிதே மில்லத்திற்கு மணிமண்டபம் கட்டாமல் இருப்பதும் நல்ல செயல்கள் தானே, இதனைச் செய்வதால் முஸ்லிம்களுக்கு ஏதேனும் நன்மையுண்டா?
இப்படிப்பட்ட செயல்களை கருணாநிதி செய்யாமல் நழுவி விட்டார் என்று சொல்வது எந்த அளவுக்கு மடத்தனம் என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
'என கூறப்படுகிறது' - 'புலம்புவதாகத் தெரிகிறது' என்று எழுதுவதெல்லாம் ஆதாரமற்ற செய்தியை எழுதுவதற்கும் ஆதாரம் கேட்டால் எழுதியவர் எளிதாக தப்பித்துக் கொள்வதற்குமே இந்த வாசகங்கள் பயன்படுத்தப்படும்.
அல்லது தவ்ஹீது என்ற பெயருக்கும், ஏகத்துவம் என்ற பெயருக்கும் சொந்தக்காரரான பிஜேக்கு தனிப்பட்ட முறையில் வந்த வஹியாகக்கூட கீழ்காணும் வாசகங்கள் இருக்கலாம். அதாவது,
'இதற்கு என்ன காரணம் எனில், இந்த முறை அவர் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதி முஸ்லிம்கள் தேர்தலின் போது அவருக்கு அதிகளவில் வாக்களிக்க வில்லை என்ற கோபமே! என கூறப்படுகிறது. இதன் மூலம் கருணாநிதி தனது சுயரூபத்தை நிரூபித்துள்ளார் என்று அவரது அணியில் இடம் பெற்ற சிறுபான்மைப் பிரிவினர் புலம்புவதாகத் தெரிகிறது.'
அவர் சொல்லும் கருணாநிதியின் கோபத்தையும், அவர் சொல்லும் சிறுபான்மைப் பிரிவினரின் புலம்பலையும் எவ்வாறு தெரிந்து கொண்டார்? இவர் நெருங்கவே முடியாத இவ்விருவரின் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள இவருக்கு வஹீயா வந்தது?
இன்னும் என்னென்ன வஹீ அவருக்கு இதுபோன்று வரப்போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.
அதே உணர்வு (வார) வாத இதழில் இப்படிச் சொல்லப்படுகிறது.
காயிதே மில்லத் நினைவிடத்திற்கு வந்து போனல் மட்டுமே
முஸ்லிம்கள் இவர்களை ஆதரித்து விட மாட்டார்கள். முஸ்லிம்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு உரிய
பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். இதை கொடுக்கும் கட்சியைத் தான் முஸ்லிம்கள் ஆதரிப்பார்கள்.
'...எனவே காயிதே மில்லத்தின் நினைவிடத்துக்கு மலர்ப் போர்வை
போர்த்தி, முஸ்லிம்களின் காதில் பூச்சுற்றும் நாடகத்தை மறந்து விட்டு, முஸ்லிம்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றி முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதற்கு அரசியல் கட்சிகள் முனைய வேண்டும்....'
காயிதே மில்லத் சமாதிக்கு கருணாநிதி வந்திருந்தால், சிறுபான்மையினரை கருணாநிதி ஏமாற்றிவிட்டார் என்று உணர்வில் செய்தி வந்திருக்கும்.
காயிதே மில்லத் சமாதிக்கு கருணாநிதி வராமல் போனதால், சிறுபான்மையினரை கருணாநிதி மறந்து விட்டார் என்று செய்தி ஆக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்கும் போது பிஜேக்கு மறை கழன்று போய் விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
இஸ்லாமிய மார்க்கத்தில் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும் சமாதி வழிபாட்டை ஒருவர் (எவராக இருந்தாலும் சரி) செய்தால் எப்படி அதை தடுக்க முடியுமோ அப்படி தடுக்க வேண்டியதை விட்டு விட்டு, கருணாநிதி சமாதி வழிபாட்டுக்கு வரவில்லை அதனால் அவர் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கிறார் என்று எழுதுவதற்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும்.
இவர்கள் தான் தவ்ஹீதைச் சொல்பவர்களாம், இவர்கள் தான் மார்க்கத்தை நிலை நிறுத்தப்போகிறவர்களாம்.
யாரையோ விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக மார்க்கத்திற்கு விரோதமான செயலைக்கூட செய்ய வேண்டும் என்று சொல்லத் துணிந்தவர்கள் இந்தப் பிஜேயும் அவரின் அடிவருடிகளும் என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டப் போதுமானவன்.
இப்னு பாத்திமா 29.06.2006